அத்தியாயம் – 6.1
“என்னடா சொல்றான் இவன்?” புலம்பி முடித்து ஆதி நிம்மதியாக உறங்க, சென்றிட தமிழ் ஒன்றும் புரியாமல் அகன்ற விழிகளுடன் கௌதமை பார்த்து கொண்டு இருந்தான்.
“அவன் போதைல இருக்கானா இல்ல நான் போதைல இருக்கேனான்னு தெரியலடா, ஆனா பெருசா பிரச்னை நடந்துருக்கு” கெளதம் பயத்துடன் தூங்கி கொண்டிருக்கும் ஆதியை பார்த்து கூறினான்,
“முழுசா சொல்லு டா அவனை மாதிரியே அரையும் குறையுமா போதைல பேசாத” கோவமாக தமிழ் கூற, தமிழிடம் கெளதம் நடந்த அனைத்தையும் கூறினான்,
“இவன நெனச்சா எனக்கு ரொம்ப பயமா இருக்கு மச்சா… ஏதாச்சும் லூசு மாதிரி பண்ணிட போறான் கோவத்துல”
Advertisement
“டேய் இன்னோன்னு மறந்துட்டியா நாங்க ரெண்டு பேரும் அவன்ட்ட தான்டா ஒர்க் பண்றோம். இவன் எதாவது பண்ணி எல்லாரோட வேலையும் போய்ட போகுதுடா. அப்றம் உங்க வீட்டுல எனக்கு பொண்ணு தர மாட்டாங்க”
ஆம் ஆதி, கெளதம் இருவரும் பனி புரியும் இடம் உதய் மாதவனின் அலுவலகத்தில் தான், கல்லூரியில் நடந்த கேம்பஸ் இன்டர்வியூல் தேர்வாகி வந்தவர்கள் தான். எனோ அந்த கம்பெனி நடந்தும் நேர்காணலிற்கு கட்டாயம் செல்ல வேண்டும் என்று ஆதி அன்று கூறியபொழுது அவனை வித்யாசமாக பார்த்தவர்கள், நாள் போக்கில் அதை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டனர். சிறிது காலம் அவர்களுடன் பணிபுரிந்த தமிழ் மேற்படிப்பு படித்து கல்லூரியில் இப்பொழுது ஆசிரியராக பணிப்புரிகிறான்.
“ஐயோ இப்ப சார்கு யாரு பொண்ணு தரேன்னு சொன்னது? இன்னும் பேசி முடிக்கல” கௌதமின் காலை வாரினான் தமிழ்.
Advertisement
“டேய் நாமெல்லாம் அப்டியா பழகிருக்கோம்”
Advertisement
“இல்லடா நீ யாருன்னே எனக்கு தெரியல. மூடிட்டு தூங்கு இவன வேற காலைல சமாளிக்கணும்”
போர்வையை தூக்கி தலையை மட்டும் தமிழை நோக்கி பார்த்தவன் ஒரு கெஞ்சலாடு கண்களை சுருக்கிய கெளதம், “உன் தங்கச்சி நான் இல்லாம வாழ மாட்டா டா பாத்துகோ”
“மச்சான் நீ மட்டும் இப்ப தூங்கலானு வை, யோசிக்காம செருப்பாலயே அடிப்பேன்”
Advertisement
“தூங்கி தொலையிறேன் காலைல வேகமா எந்திரிச்சு இவன் ஒடச்சு வச்ச பாட்டில்ல பொறுக்கி வச்சிரு. குட் நைட்”
“உங்கள வீட்டுக்குள்ள விடுறது மட்டும் இல்லாம உங்களுக்கு வேலைகாரன் வேலை வரைக்கும் என்ன பாக்க வக்கிறீங்கடா” புலம்பியவன் உறங்கியும் விட்டான்.
முகத்தில் தண்ணீர் பீச்சி அடிக்க தலை தெறிக்க எழுந்த மூவரும் சந்தித்தது கோவமாக நிற்கும் ஷீலா… தமிழின் தாயார் தான், கையில் துடப்பக்கட்டை, தலையில் கொண்டை, இடுப்பில் எடுத்து சொருகி இருந்த சேலை, கண்கள் சிவக்க சிவக்க நின்றவரை பார்த்த மூவருக்கும் தெளிவாக தெரிந்தது ஒரு சிறிய போர் நடக்க போகிறது என்று. கெளதம் அவர்களை சுற்றி பார்த்தவன் ஆதி உடைத்து வைத்திருந்த கண்ணாடி துகள்கள் எதுவும் இல்லை. அனால், அவர்கள் உண்டு மிச்சம் வைத்து இருந்த எலும்பு துண்டுகள் மட்டுமே இருந்தது.
“என்ன ஆச்சு டார்லிங் இம்புட்டு கோவம்? பாருங்க மூஞ்சி செவக்குது” தன் மேல் எந்த வாடையும் வரவில்லை என்று உறுதி செய்த பின்னரே ஆதி அவரை சுற்றி கை போட்டு அவரிடம் சென்றான்.
அவன் கையை உதறி விட்டவன், “கை எடுடா. திருட்டு பசங்க, எப்டி டா ஒன்னுமே தெரியாத மாதிரி நடிக்கிறிங்க” ஒரு அடி துடப்பத்தை கொண்டே அத்தியின் காலில் வைத்தார்.
“என்ன ஷீலா கை நீளுது?” காலை தடவி கொண்டே கேட்ட ஆதி, வலி பொறுக்க முடியாமல் குத்த வைத்து காலை ஆராய்ந்து கொண்டு இருந்தான்.
கௌதமின் பார்வை தமிழை பார்க்க அவன் பீதியுடன் ஆதியையும் தன் தாயையும் பார்த்து கௌதமிடம் திரும்பினான், ‘பாட்டில எடுத்துடல?’ வாயை அசைத்து கேட்டவனுக்கு தலை அசைவை பதிலாக அளித்த மறு நொடி அவனுக்கும் ஒரு அடி, “ஐயையோ அம்மா எதுக்கு அடிக்கிறீங்க?” தமிழ் படியை நோக்கி ஓட அடுத்த அடி கௌதமிற்கு விழுந்தது.
“என்ன அத்தை மருமகனையே அடிக்கிறிங்களா?” வெட்டி வீராப்போடு கெளதம் ஏகுற,
“தண்ணி அடிச்சிட்டு உனக்கு என்னடா மரியாதை, உனக்கு பொண்ணு இல்ல போ” அடுத்து விழ இருந்த அடியை கையால் தடுத்தவன், “உங்களுக்கு எப்படி தெரிஞ்சது அதான் எல்லாத்தையும் எடுத்துட்டோமே”
“அட பாவிகளா எத்தனை பாட்டில்டா குடிச்சீங்க?” அடுத்த அடி மறுபடியும் தமிழுக்கு.
“ஐயோ அம்மா ஒன்னு தான். அதையும் அந்தா நல்ல குடி நாணயம் மாதிரி இருக்கான்ல அவன் தான் குடிச்சான்… நாங்க வெறும் சிக்கன் தான் சாப்பிட்டோம். மொத நீங்க சொல்லுங்க எப்படி கண்டு புடிச்சீங்க நா தா எல்லாத்தையும் எடுத்துட்டேனே”
“என் பையன் தான் எதையுமே ஒழுங்கா பண்ண மாட்டானே அவன்ட்ட ஏண்டா இந்த மாதிரி வேலை எல்லாம் குடுத்தீங்க வீட்டுக்கு சைடுல இருந்த கண்ணாடி பீஸ் எல்லாம் எடுக்காம விட்டுட்டான்”
கெளதம் தமிழிடம், “ஒரு வேலையும் உருப்படியா பண்றது இல்ல?”
தமிழ் பல்லை காட்டி, “மாப்பிள்ளை தூக்கம் ரொம்ப வந்துச்சா அதான் படுத்துட்டேன்”
தமிழ் கன்னத்தை விளையாட்டாக அறைந்த ஆதி, “பல்ல… பல்ல காட்டாத. பாக்குற எல்லா வேலையும் அர குறை தான் ”
“ஏன்டா அவன் தான் தண்ணி அடிச்சானா நீங்க என்னடா அவனை குடிக்காதான்னு சொல்ல மாட்டிங்களா? வீட்டுல இப்புடி ரெண்டு பொம்பள பிள்ளையை கீழ வச்சிக்கிட்டு வெட்ட வெளில இப்டி பண்ணா யாராச்சும் பாத்தா என்ன நெனப்பாங்க? கொஞ்சம் கூட யோசிக்கிற பழக்கம் எல்லாம் இருக்காதா? ஏண்டா ஆதி மூளையை கழட்டி எங்க வச்ச எத்தன தடவ சொல்லிருக்கேன் இந்த பழக்கத்தை விடு விடுன்னு நான் சொல்றத எப்ப தான்டா கேக்க போற?”
“வாங்கி கொடுத்ததே அவனுக தான்” ஆதி தமிழையும் கௌதமையும் போட்டு குடுக்க இருவரும் கண்கள் வெளி வரும் அளவிற்கு அவனை வெறித்து பார்த்தார்கள்.
“மச்சான் என்ன… என்ன டா சொன்ன?” கெளதம் அதிர்ந்து கேட்க,
“எம்மா இவன் என்ன சொன்னாலும் கேக்குறத நிறுத்துங்க வேணா வேணான்னு சொல்ல சொல்ல கேக்காம இவன் தான் குடிச்சான்” கூறினான் தமிழ்.
ஆதியிடம் வந்தவர் அவன் கன்னத்தை அன்பாக வருடி, “ஏண்டா இப்புடி குடிச்சு ஒடம்ப கெடுத்துக்குற, வர வர நீ ரொம்ப இப்புடி பண்ணுறன்னு தமிழ் கூட சொல்லி கவலை பட்டான் பா. அம்மா சொல்றத கேப்பல அம்மாகாக இத விற்று பா”
‘இத விட பல செண்டிமெண்ட் சீன்ன நாங்க பாத்துட்டோம்’
அவரை ஒரு நிமிடம் கண்களை சுருக்கி ஆராய்ந்தவனின் முகத்தில் தானாய் ஒரு நமட்டு புன்னகை வந்து மலர்ந்தது, “ஓ ஹோ அப்டி?” என்றவன் அவரை தாண்டி படியில் இறங்கி சென்று விட்டான்.
அவன் சென்ற வழி பார்த்தவரின் பார்வையில் ஒரு கவலை இருந்தது, “அத்தை என்ன புதுசா நடக்குற மாதிரி பாக்குறீங்க அவன் அப்டி தாணு தெரியும்ல போய் ஸ்டராங்கா ஒரு காபி போடுங்க அப்புடியே ஒத்தனம் வைக்க கொஞ்சம் ஐஸ் கட்டி, துணி”
“மாப்பிள்ளை எனக்கு…” தமிழ் கௌதமை பார்த்து கேட்க, “நாம ஷேர் பணிக்கலாம்டா”
“இனிமேல் இவிங்கள தண்ணி அடிக்கு இங்க கூட்டிட்டு வா சோத்துல வெஷத்தை வச்சு தான் குடுப்பேன் உனக்கு. உங்க அப்பா வரதுக்குள்ள போய் அந்த கருமத்தை எல்லாம் பொருக்கி தூக்கி போடுங்க டா அவரு பாத்தா கோவ படுவாரு”
“மம்மி சூது வாது தெரியாமலே வளந்துருக்க அவரு கோவ பட மாட்டாரு ஷேர்கு தா வந்துருப்பாரு”
அவனை முறைத்த ஷீலா, “என் வீட்டுகார பத்தி என்கிட்டயே தப்பா பேசுறியாடா? அவர் அந்த பழக்கத்தை போன வருஷமே விட்டுட்டார். சரி அத விடு ஆதி என்ன சொன்னான்? அவனுக்கு பொண்ணு பாக்க ஆரமிக்கவா”
கெளதம் தமிழ் இருவரும் தோல்வி என்று சைகை செய்ய, “ஏண்டா இவன் இப்புடி பண்ணுறான் அவனுக்கும் பொண்ணு பாக்க வேணாம்னு சொல்றான் சஹானாவுக்கும் பாக்க ஆரமிக்கலாம்னு சொன்னா பிடி குடுத்தே பேச மாட்டிக்கிறான். அவ படிப்பு முடிய போகுது இப்ப பாக்க ஆரமிச்சா தான் அடுத்த ஒரு வர்சதுக்குள்ள மாப்பிள்ளை அமையும்” இவர் பேசியது ஒரு பக்கம் ஓட, அவன் அடுத்து என்ன செய்ய போகிறான் என்று தமிழும் கௌதமும் முழித்து கொண்டு இருந்தனர்.
கீழே இறங்கிய ஆதி வேகமாக அவன் தங்கை சஹானாவிடம் தமிழுடன் கல்லூரிக்கு போகும்படி கூறி தனக்கு ஒரு முக்கியமான வேலை இருப்பதாக தன்னுடைய வண்டியை வேகமாக வீட்டிற்கு செலுத்தினான், வீட்டிற்கு சென்று அவனுடைய பழைய பையை எடுத்து ஒவ்வொன்றாக பார்த்து கொண்டிருக்கையில் அவன் தேடி கொண்டிருந்த அந்த பழைய நாளிதழ் அவன் கண்ணில் பட்டது.
ஒரு வலியுடன் அதை பார்த்தவன் கண்களில் இருக்கும் ஈரத்தை தாண்டி வந்த வேலையை பார்க்க ஆரமித்தான். ஏதோ முன் பின் தெரியாத ஒரு நபரின் பேச்சை கேட்டு ஒருவர் மேல் பகை வளர்க்க அவன் விரும்பவில்லை, அது மட்டும் இன்றி அவர் கண்ணில் இருக்கும் அந்த அளவெடுக்கும் பார்வை அவனை ஒரு முறை மீண்டும் சிந்திக்க கூறியது. அந்த நாளிதழில் தட்டச்சு செய்திருந்த குறிப்பில் இருந்த அலுவலகரின் பெயரை பார்த்தவன் வண்டியை ஆட்சியர் அலுவலகம் நோக்கி விரைந்தான். அங்கு அவனுடைய கல்லூரி நண்பன் ஒருவனின் தந்தையின் உதவியோடு அந்த நாளிதழில் குறிப்பிட்டிருந்த நபரின் முகவரியை வாங்கியவன் அவர் இல்லத்திற்கு சென்றான்.
“சொல்லு பா யார் நீ?”
அவன் சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த அந்த துண்டு நாளிதழை அவரிடம் காட்டினான். அதை பார்த்தவர் அவனை உள்ளே அழைத்து, “ஆமா தம்பி நான் தான் அந்த கன்ஸ்டருக்ஷன் கம்பனிக்கு சீல் வைக்க உத்தரவு போட்டேன், ரொம்ப பெரிய திருட்டு பயலா இருந்தான் தம்பி அந்த ஆளு. கட்டுன ஒரு பில்டிங் கூட சரி இல்ல எல்லாமே ரெண்டு மூணு வர்சதுக்குள்ள இடிஞ்சு விழுந்துருச்சு”
அதற்கு மீறி கேட்க பொறுக்காதவன் அவர் முன் சில ஐநூறு ரூபாய் நோட்டுகளை வைத்தான். அதை கவனித்தனர் பேச்சை நிறுத்தி, “எதுக்கு இத்தன வருஷம் கழிச்சு அந்த கேச பத்தி விசாரிக்கிற?”
எதுவும் பேசாமல் மீண்டும் சில ஆயிரத்தை வைத்தான், “இப்ப நான் இத பத்தி சொன்னா என்ன ஆக போகுது?” பண காகிதங்களை பார்க்க பார்க்க அவரின் பேச்சும் மாறிக்கொண்டே சென்றது.
மீண்டும் சில நோட்டுகளை அவர் முன் வைத்தான், “ஒரு நாலு ஒரு பையன் வந்தான் என்ன பாக்க ஒரு இருவது, இருவதியொரு வயசு இருக்கும். அவன் சொல்றத அப்புடியே மீடியால சொன்னா எனக்கு பத்து லச்சம் தரேன்னு சொன்னான். எனக்கு அப்ப இருந்த பிரச்சனைக்கு அந்த காச வாங்கிட்டு அவன் சொன்ன மாதிரி அப்டியே செஞ்சேன்”
அவரை பார்த்து சிரித்தவன், “ஏன்யா ஒடம்பு நல்லா பன்னி மாதிரி பெருத்து தான வச்சிருக்க… கேவலம் ஒரு பத்து லட்ச ரூபாய்க்காக ஒரு குடும்பத்தோட மாணத்தையே வாங்கிட்டியே. உன்ன பத்தி மட்டுமே யோசிச்ச நீ, பலி போட்ட குடும்பம் அடுத்த வேலை சோத்துக்கு என்ன பன்னிருபாங்கனு யோசிச்சியா?”
அவன் பேச்சில் கோவம் வந்தவர் குனிந்து பணத்தை எடுக்கும் முன், ஆதி அவர் முன் வைத்த அத்தனை பணத்தையும் எடுத்து தன் சட்டை பாக்கட்டில் வைத்தான், “டேய் என்னடா காச குடுடா” அவர் கண்கள் எல்லாம் அவன் பாக்கெட்டில் மட்டுமே.
அவரை பார்த்து சிரித்தவன், “அண்ணே இது உங்க ரேஞ்சுக்கு ரொம்ப கம்மி, வாயேன் நடந்துட்டே பேமன்ட் பத்தி பேசலாம்”
