Skip to content
Post Views: 2,848
18
“தம்பி… தம்பி…” என்ற குரல் தடுக்க கடைக்குள் நுழையச் சென்றவன் திரும்பி பார்த்தான். அங்கிருந்தவரை எங்கோ பார்த்தது போல இருந்தது.
Advertisement
“என்ன தம்பி என்னை அடையாளம் தெரியலையா??”
Advertisement
“பார்த்தா மாதிரி இருக்கு, சாரிங்க ஞாபகமில்லை…”
Advertisement
“நான் உங்களுக்கு தூரத்து சொந்தம் தான் தம்பி, மாமா முறையாகணும். உங்க பெரியம்மா எனக்கு அக்கா முறையாவுதுங்க…”
Advertisement
“ஓ!!”
“என்ன தம்பி இப்படி பண்ணிட்டீங்க??”
“என்ன பண்ணேன்??”
“திடுதிப்புன்னு கல்யாணம் பண்ணிட்டு வந்து நின்னுட்டீங்க??”
“அதுல உங்களுக்கு என்ன கஷ்டம்??” என்றான்.
“எனக்கொண்ணும் கஷ்டமில்லை தம்பி, உங்களை எங்க வீட்டு மாப்பிள்ளையாக்கிகணும்ன்னு ரொம்ப ஆசைப்பட்டேங்க… உங்க வீட்டில கூட வந்து பேசினேன்…”
“இதை எதுக்கு என்கிட்ட சொல்லிட்டு இருக்கீங்க??”
“அதுக்கில்லை தம்பி, அப்போ நீங்க கல்யாணம் பண்ணிக்க விரும்பலைன்னு சொல்லிட்டீங்கன்னு சொன்னாங்க. அதனால உங்களுக்கு கல்யாணமே பண்ணுற ஐடியால இல்லைன்னும் வீட்டில சொன்னாங்க…”
“அதான் தம்பி கஷ்டமா போச்சு. அதுக்கு பொறவு நானும் ஒண்ணும் கேட்டுக்கிடலைங்க…” என்றார்.
‘என்ன நான் கல்யாணம் பண்ணிக்க விரும்பலைன்னு சொன்னேனா?? அப்படி நான் வீட்டில என்னைக்குமே பேசலையே??’
‘அம்மா என் கல்யாண விஷயம் பேசினப்போ கூட சரின்னு தானே சொன்னேன். வீட்டில ஏன் அப்படி சொன்னாங்க…’ அவனுக்குள் பெரும் குழப்பம் வியாபித்தது.
“என்ன தம்பி அமைதியாகிட்டீங்க?? நீங்க காதலிச்சு கல்யாணம் கட்டிக்கிட்டீங்களா தம்பி. அதான் அப்போ கல்யாணம் வேணாம்ன்னு சொல்லியிருப்பீங்க போல…” என்று அவரே பதிலும் சொல்லிக்கொண்டார்.
“சரிங்க தம்பி நான் கிளம்புறேன். வீட்டில எல்லாரையும் கேட்டதா சொல்லுங்க…”
“சரிங்க மாமா…” என்றவன் “ஒரு நிமிஷம் மாமா…”
“சொல்லுங்க தம்பி…”
“கடைக்கு வாங்க அப்படியே வெளியவே பேசி அனுப்பின மாதிரி இருக்கு…”
“பரவாயில்லைங்க தம்பி. உங்களை பார்க்கவும் ஒரு ஆதங்கத்துல கேட்டுட்டேன். நீங்க வேலையா இருப்பீங்க, அதை நான் கெடுக்க விரும்பலைங்க… நீங் போங்க, இன்னொரு நாள் பார்ப்போம் தம்பி…”
“சரிங்க மாமா போயிட்டு வாங்க… இன்னொரு நாள் நீங்க கண்டிப்பா வரணும்…” என்றான்.
“கண்டிப்பா வர்றேங்க தம்பி…” என்றுவிட்டு அவர் கிளம்பினார்.
‘என்னை சுத்தி என்ன தான் நடக்குது, யார் யாரோ என்னை வைச்சு விளையாடுறாங்க… யாரு தான் எனக்கு உண்மையானவங்க, கட்டின பொண்டாட்டில இருந்து யாருமே உண்மையானவங்க இல்லை. கடவுளே கண்ணை கட்டி காட்டில விட்ட மாதிரி இருக்கு இப்போ’
‘வீட்டில எல்லாரும் பணத்தாசை பிடிச்சவங்கன்னு தெரியும். ஆனா எவ்வளவு மோசமா யோசிக்கறாங்க, நினைச்சுக்கூட பார்க்க முடியாத அளவுக்கு இருக்கு அவங்க பணப்பைத்தியம்”
ஒரு மாதிரி சோர்ந்த மனநிலையோடு இருந்தான் அவன்.
“ஹலோ ரேகா…”
“அம்மா எப்படிம்மா இருக்கீங்க??”
“நல்லா இருக்கேன்டா, பாட்டி நல்லாயிருக்காங்களா?? மாப்பிள்ளை எப்படி இருக்காங்க??”
“எல்லாரும் நல்லாயிருக்காங்கம்மா…”
“கேளு… அவகிட்ட சொல்லு…” என்று பின்னால் இருந்து செந்தில்வேலின் குரல் கேட்பது மறுமுனையில் இருந்த ரேகாவிற்கு தெளிவாய் கேட்டது.
“என்னாச்சும்மா அப்பா என்கிட்ட என்ன கேட்க சொல்றாங்க??”
“அது ஒண்ணுமில்லைம்மா, உங்க கடை பத்தி தான்…”
“அதுக்கென்ன இப்போ??”
“இல்லை மாமா உங்க கடையை நம்ம கடையோட சேர்த்திடலாம்ன்னு பிரியப்படுறாங்க… தவிர இங்க நம்ம கடைக்குன்னு ஒரு மரியாதை இருக்கு இல்லையா… சென்னையில நமக்கும் ஒரு கடை இருந்தா நல்லது தானே…”
“அப்போ சென்னையில கடை ஆரம்பிக்க போறீங்களா??”
“அதில்லைடா… புதுசா ஆரம்பிக்கறதை விட உங்க கடையை நம்ம கடையோட இணைக்கலாம்ன்னு…”
“யாருக்கு வந்த ஐடியா இது??”
“அதான் சொன்னேனே தாத்தா…”
“அதெல்லாம் ஏன் நீ சொல்றே?? நீ கேக்குற மாதிரியே கேட்க வேண்டியது தானே…” என்று செந்தில்வேல் பேசுவது கேட்டது இவளுக்கு.
“அம்மா போனை ஸ்பீக்கர்ல போடுங்க” என்றாள்.
“ஹ்ம்ம்…” என்றவர் மகள் சொன்னதை செய்தார்.
“வீட்டில வேற யாரும் இருந்தா எல்லார் முன்னாடியும் போன் எடுத்திட்டு போங்க. நான் தனித்தனியா யாருக்கும் சொல்ல விரும்பலை, எல்லாருக்கும் சேர்த்தே சொல்லிடறேன்…” என்றாள்.
“ரேகா என்ன இதெல்லாம், எதுவா இருந்தாலும் எங்கிட்டவே சொல்லுமா…” என்றார் செந்தில்வேல் இப்போது.
“அப்பா சொன்னதை செய்ங்க…” என்றாள் அவள் கட்டளையாக.
அதை இரவு உணவருந்தும் வேளை என்பதால் கனகவேல், ரத்தினவேல் உட்பட அனைவருமே அங்கிருந்தனர்.
“எல்லாரும் இருக்காங்களா…” என்று கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டாள்.
விஸ்வாவும் கூட அங்கு தானிருந்தான். அவனுக்கு என்ன ஏதென்று புரியவில்லை. ஆனாலும் ஏதோ நடக்கிறது என்று அமைதியாயிருந்தான்.
“எல்லாரும் நல்லா கேட்டுக்கோங்க… இவரோட கடையை நம்ம கடையோட சேர்க்கறது எல்லாம் நடக்காது…”
“ஏன்?? ஏன் நடக்காது??” என்றது கார்த்திக்.
‘ஓ!! இது தான் சங்கதியா!! நான் அவ்வளவு தூரம் அன்னைக்கு சொல்லியிருக்கேன், அப்புறமும் அவகிட்ட கேட்டா என்ன அர்த்தம்…’ என்று கனன்றுக் கொண்டிருந்தான் விஸ்வா.
இறுகிய அவன் முகமே சொன்னது அவன் கடுங்கோபத்தில் இருக்கிறான் என்று.
“ஏன் நடக்கணும்??” என்றாள் அவள் பதில் கேள்வியாக.
“அப்படி நடந்தா உங்களுக்கும் நல்லது தானே. நம்ம கடைக்குன்னு ஒரு தனி மவுசு இருக்கு, அது உங்களுக்கும் கிடைக்கும் தானே… அதுக்கு என்ன வேணுமோ அதை வாங்கிக்க வேண்டியது தானே…” என்று சரவணன் பதில் கொடுத்தான் இப்போது.
“நான் ஒண்ணு சொல்லவா, உங்க கடையோட பேரை எடுத்திட்டு இனி கேஎம் ஜுவல்லர்ஸ்ன்னு வைச்சிடுவோம். அதுக்கு என்ன காசு வேணுமோ அதை நீங்க வாங்கிக்கோங்க சரியா…” என்றாள் அவளும் பதிலுக்கு.
“என்னது உங்க கடையா இந்த பேச்செல்லாம் எப்போல இருந்து நீ பேச ஆரம்பிச்சே ரேகா??” என்று செந்தில்வேல் மகளை கண்டித்தார்.
“அப்பா எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு. இது என்னோட புகுந்த வீடு இனி இது தான் என் வீடு. சோ உங்க கடைன்னு தான் இனிமே நான் சொல்லணும், நீங்க என்ன எனக்கு அந்த கடையில பங்கா கொடுக்க போறீங்க…” என்றாள் அவள்.
“ஏன் வாங்காமயா போய்ட போறே நீ??” என்றார் செந்தில்வேல்.
“அதெப்படி அவளுக்கு கடையில பங்கு கொடுக்க முடியும்” என்றான் கார்த்திக்.
“நல்லா கேட்டுச்சாப்பா உங்க அண்ணன் புள்ளை சொன்னதை. ஓகே அந்த கதை எல்லாம் எனக்கு வேணாம், இந்த கடையை அந்த கடையோட சேர்க்கற எண்ணம் எல்லாம் வேணாம்… இது மாதிரி நீங்க என்கிட்ட கேட்கிறது இதுவே கடைசியா இருக்கட்டும்…” என்று சொல்லி போனை வைத்துவிட்டாள் அவள்.
“ஏன் விஸ்வா நீ ஒரு வார்த்தை அவகிட்ட பேசியிருக்கலாம்ல, உன் பொண்டாட்டியாச்சும் பேசலாம்ல அவ தம்பிகிட்ட” என்றார் ரத்தினவேல் சற்றே கோபத்தோடு.
அவனுக்கு இருந்த ஆத்திரத்தில் அமர்ந்திருந்த இருக்கையை பின்னே தள்ளிவிட்டு அவன் எழ அந்த இருக்கை சற்று தள்ளிப் போய் விழுந்தது.
“என்னை எதுக்கு பேசச் சொல்றீங்க?? சொல்லுங்க என்னை எதுக்கு பேசச் சொல்றீங்க??” என்று அந்த வீடே அதிர கத்தினான்.
“இதென்ன கேள்வி உன் தங்கச்சி, உன் மச்சினன் நீங்க ரெண்டு பேரும் பேசினா தானே எடுபடும்”
“உங்களுக்கு ஒரு முறை சொன்னா புரியாதா?? அவங்க கடை நமக்கு எதுக்கு நமக்கு வேணும்ன்னா இன்னொரு கடையை அங்க திறக்க நம்மாள முடியாதா…”
“அதுக்கெல்லாம் யாரு இன்வெஸ்ட் பண்ணுவா, இதுன்னா நாம வெறும் நேம் போர்ட் மட்டும் மாத்தினா போதும்…” என்று சொன்ன சரவணனை அடித்துவிடும் ஆத்திரம் தான் வந்தது விஸ்வாவிற்கு.
“நம்ம வசதிக்கு என்ன குறைச்சல். இன்வெஸ்ட்மென்ட் எல்லாம் பெரிய விஷயமா நமக்கு. சொல்லுங்க பெரிய விஷயமா நமக்கு…”
விஸ்வா என்றும் இல்லாமல் இன்று இவ்வளவு குரல் உயர்த்தி பேசுவது அனைவருக்குமே புதிது. யார் மனதும் புண்படாது பேசுபவன் அவன். அவ்வளவு பேச்சு நடந்துக் கொண்டிருந்த போதிலும் கனகவேல் எதுவுமே பேசவில்லை.
error: Content is protected !!