அத்தியாயம் 5
காதல் என்ற
தடம் பதியாத
என் இதயத்தை திருடி
செல்லும் காதல் தீ நீ!!!
அவனை நான்கு அடி போட்டு எழுப்பிய வேணி “டேய் எந்திரி டா”, என்று கத்தினாள்.
“என்னமா? காலைலே எழுப்புற?”, என்று கேட்ட படி எழுந்தான் கதிர்.
“டேய் உன் அத்தை மகளை காணுமாம் டா”
“என்னமா சொல்ற? அந்த வாயாடியையா?”
“ஆமா டா பால் கரக்குற சிதம்பரம், இப்ப தான் சொல்லிட்டு போனான். எங்க போனான்னே தெரியலையாம்? உங்க அப்பா கிட்ட இன்னும் சொல்லலை”
“எனக்கென்னமோ அவ அந்த ராஜேந்திரனை கல்யாணம் செய்ய பிடிக்காம ஓடி போயிருப்பாளோன்னு தோணுது”, என்று மெதுவாக பற்ற வைத்தான் தீயை.
பின் அன்னையின் முகத்தில் குழப்பத்தை கண்ட கதிர் “நீ அப்பா கிட்ட போய் சொல்லுமா. நான் பல் விளக்கிட்டுப் போய் என்னன்னு விசாரிக்கிறேன்”, என்றான்.
“சரி டா, ஆனா உங்க அப்பா கிட்ட சொல்லவும் பயமா இருக்கு டா”
“ஏன்மா?
“இல்ல டா, தங்கச்சி மகன்னு நினைச்சு துடிப்பாரா? இல்லைன்னா எதிரி மகன்னு நினைச்சு சந்தோஷ படுவாறான்னு தெரியலையே”
“அதை நீயே போய் டெஸ்ட் பண்ணு”
[the_ad id=”6605″]“ஆமா கேக்க மறந்துட்டேன், உன் பாட்டி எங்க டா? ஆளையே காணும். பண்ணை வீட்டுல விட்டுட்டு வந்துட்டியா? நீ எப்ப வந்து படுத்த? உனக்கு யாரு கதவை திறந்து விட்டா?”
“இந்த அம்மா இப்படி போட்டு வாங்குதே”, என்று எண்ணிக் கொண்டு “நம்ம செல்வா தான் மா திறந்து விட்டான். பாட்டிக்கு தாத்தா நினைவு வந்துருச்சாம். நாளைக்கு வரேன்னு சொல்லிருச்சு. அதான் நான் மட்டும் வந்தேன்”, என்றான்.
“காலம் போற கடைசில காதல் நினைவுகளா? சரி டா நீ ஊருக்குள்ள போய் என்ன நிலவரம்னு பாரு. நான் உன் அப்பாகிட்ட போய் சொல்றேன்”, என்று சொல்லி விட்டு வேணி நகர்ந்ததும் “அப்பாடா”, என்று மூச்சு விட்டான்.
பல் விளக்குவதற்கு முன்பு அவனுடைய கடைசி தம்பி செல்வா அறைக்கு சென்றவன் அவனை எழுப்பினான்.
“ஏண்டா அண்ணா, இப்படி சாகடிக்கிற? இன்னைக்கு காலேஜ் லீவுன்னு நானே சந்தோஷமா தூங்கிட்டு இருக்கேன். நீ வேற? அதுவும் விடிய கூட இல்லை. நீயெல்லாம் அண்ணனா டா”, என்று புலம்பினான் செல்வா.
“டேய், உன்னை நம்பி தான் செல்லம் என் வாழ்க்கையே இருக்கு. நைட் நான் வீட்டுக்கு பத்து மணிக்கே வந்துட்டேன்னும், நீ தான் கதவை திறந்து விட்டேன்னும் யார் கேட்டாலும் நீ சொல்லணும் சரியா?”
தூக்கத்தில் இருந்து அதிர்ந்து விழித்தவன் “நான் ஒன்பது மணிக்கே தூங்கிட்டேனே? நீ அப்ப வரலையே. அப்ப எப்படி நான் கதவை திறந்து விட முடியும்?”, என்றான்.
“டேய் உன் தலைல இடி விழ. அதையெல்லாம் அப்புறம் சொல்றேன். நான் சொல்ற படி செய் டா தம்பி”
“அது சரி இன்னைக்கு என்ன? செல்லம் தம்பின்னு உருகுற? சரியில்லையே”
“அதெல்லாம் அப்புறம் சொல்றேன். பிளீஸ் டா”
“சரி சரி உன் உதவி பின்னாடி எனக்கும் தேவைப்படும். அப்ப பாத்துக்குறேன். இப்ப யார் கேட்டாலும் நீ பத்து மணிக்கு தான் வீட்டுக்கு வந்த. நான் தான் கதவை திறந்து விட்டேன்னு சொல்லணும். சரி தானா?”
“ஆமா டா தம்பி”
“சரி சொல்றேன்”, என்று செல்வா சொன்னதும் அங்கிருந்து வேகமாக நகர பார்த்தவனை “ஒரு நிமிஷம் இருண்ணா. எனக்கு ஒரு சந்தேகம்”, என்று சொல்லி நிறுத்தினான்.
“இன்னும் என்ன டா?”
“ஆமா, பூட்டுன வீட்டுக்குள்ள நீ எப்படி வந்த?”
“உனக்கு மட்டும் டவுட் எப்படி டா வருது? இதை வச்சு தான்”, என்று சொல்லி சட்டை பையில் இருந்த ஒரு சாவி கொத்தைக் காட்டினான்.
“திருட்டு சாவியா அண்ணா? சரி அதை அப்புறம் விசாரிக்கிறேன். இப்ப நீ எங்க வேகமா போற?”
“ஆன்…கல்யாணம் பண்ண போறேன். படுடா மூடிட்டு”, என்று சொல்லி விட்டு அங்கிருந்து பறந்து விட்டான்.
தூக்கம் பறந்தோட எழுந்து அடுப்படிக்கு சென்ற செல்வா “அம்மா காப்பி தா மா”, என்றான்.
அங்கே ஒருவரும் இல்லை என்றதும் “இந்த அம்மா எங்க போச்சு?”,என்று எண்ணிக் கொண்டே அங்கிருந்த சேரில் அமர்ந்தான் செல்வா.
[the_ad id=”6605″]அப்போது பதட்டமாக உள்ளே வந்தான் அவனுடைய அண்ணன் தினேஷ். “இன்னைக்கு என்ன எல்லாரும் பதட்டமா இருக்காங்க?”, என்று எண்ணிக் கொண்டு “டேய் அண்ணா, என்ன டென்சனா இருக்க?”, என்று கேட்டான் செல்வா.
“நம்ம தேன்மொழியை காணுமாம் டா. எங்க போனான்னே தெரியலை”
“என்ன டா சொல்ற?”, என்று கேட்ட செல்வாவுக்கும் அதிர்ச்சி தான். “இந்த விசயத்துல நம்ம கதிர் அண்ணாவோட சித்து விளையாட்டு எதுவும் இருக்குமோ?”, என்று எண்ணிக் கொண்டிருந்தான்.
வேணியோ தூங்கிக்கொண்டிருந்த மதியழகனை எப்படி எழுப்புது என்று குழப்பத்தில் இருந்தாள். எழுப்பாமல் விட்டால் அது அதற்கு மேல் பெரிய ஆபத்து என்பதால் அவர் அருகே சென்றவள் “என்னங்க என்னங்க”, என்று எழுப்பினாள்.
கண்ணை கசக்கிய படியே எழுந்த மதி “என்ன மா?”, என்று கேட்டார்.
“உங்க தங்கச்சி மக தேன்மொழியைக் காணுமாங்க. நம்ம வீட்டுல பால் கறக்குறவன் சொன்னான்”
அடுத்த நொடி எழுந்து நின்ற மதி “என்ன மா சொல்ற?”, என்று அதிர்ச்சியாக கேட்டார்.
“ஆமாங்க, அவளைக் நைட் முழுக்க காணுமாம்”
“ஐயோ, அந்த பச்ச புள்ளை எங்க போச்சுன்னு தெரியலையே. அந்த சட்டையை எடு. நான் ஒரெட்டு போய் பாக்குறேன்”,என்று சொல்லி விட்டு வெளியே சென்று விட்டார்.
“பரவால்ல, அந்த பிள்ளை மேல இவருக்கு இன்னும் பாசம் இருக்க தான் செய்யுது. நல்ல படியா அந்த பிள்ளை வந்துரனும்”, என்று எண்ணிக் கொண்டே வெளியே வந்தவளின் கண்ணில் பட்டார்கள். தினேஷும் செல்வாவும்.
“நீங்க என்ன டா இன்னைக்கு சீக்கிரமே எந்திச்சிட்டீங்க?”, என்று கேட்டாள் வேணி.
“ஏம்மா, எங்க முறைபொண்ணைக் காணும்னு நாங்க பதறிப் போய் எந்திச்சிருக்கோம். நீ இப்படி சொல்ற?”
“ஆமா டா, பதறிப் போய் உங்க அத்தை மவளை தேடி போயிருக்கீங்க பாரு. வேடிக்கை பாத்துட்டு இருக்கீங்க? போய் தேடுங்க டா. அவ எங்க போனாளோ என்ன ஆனாளோ? அந்த நாதரிப் பயலுக்கு அவளை நிச்சயம் பண்ணும் போதே என் மனசு கிடந்து அடிச்சது. வீட்ல சிங்கம் மாதிரி என் மகன் இருக்கும் போது அந்த குள்ளநரிக்கு போய் கொடுக்குறாங்களேன்னு சாபம் விட்டேன். பாத்தா இப்படி நடந்துருச்சு. அவ நல்ல படியா வீட்டுக்கு வந்துரனும் டா”
“எம்மாவ், உனக்கு அவுக குடும்பத்து மேல எந்த கோபமும் இல்லையா மா?”, என்று கேட்டான் தினேஷ்.
“எனக்கு என்ன டா கோபம்? பாசம் இருக்குற இடத்துல பகை எங்க இருந்து வரும்? நீங்க போய் தேடுங்க டா”, என்று சொல்லி விட்டு உள்ளே சென்று விட்டாள்.
அண்ணனும் தம்பியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்கும் போது சாவகாசமாக அங்கே வந்தான் கதிர். அவனைப் பார்த்ததும் இருவரும் மீண்டும் ஒருமுறை பார்த்துக் கொண்டார்கள்.
“என்ன டா நடுவீட்ல நின்னுக்கிட்டு ரெண்டு பேரும் லவ்வர்ஸ் மாதிரி லூக்கு விடுறீங்க?”, என்று கேட்டான் கதிர்.
“உன் லவ்வரைக் காணும்னு தான் ஊரே அல்லோலப் படுது. நீ என்ன கூலா இருக்க? எங்கயோ இடிக்குதே, அப்படி தான தினேஷ் அண்ணா?”, என்று கேட்டான் செல்வா.
அவன் வாயை மூடிய கதிர் “டேய் தம்பிங்களா காரியத்தைக் கெடுத்துராதீங்க டா. உங்களை நம்பி தான் என் வாழ்க்கையே இருக்கு. நடந்ததை நான் அப்புறம் சொல்றேன். இப்ப ஏதாவது நாருதர் வேலையை செஞ்சி வச்சிராதீங்க”, என்றான்.
“அப்ப அந்த பொம்பளை ரவுடி இருக்குற இடம் உனக்கு தெரியும் அப்படி தான?”, என்று கேட்டான் தினேஷ்.
“கடத்துனவனே நான் தான? அப்ப எனக்கு தெரியாதா?”
[the_ad id=”6605″]“அடப்பாவி அண்ணா என்ன டா சொல்ற?”, என்று கேட்டான் செல்வா.
“உன் ஷாக்கை கொஞ்சம் குறை டா. அவ பத்திரமா நம்ம பாட்டி கூட தான் இருக்கா. காட்டிக் கொடுத்துறாதீங்க டா”
“ஓஹோ, இதுல அந்த கிழவியும் கூட்டா? சரி சரி நாங்க வாயை கொஞ்ச நேரத்துக்கு மூடிக்கிறோம். அப்புறம் வட்டியும் முதலுமா எங்க ரெண்டு பேரையும் கவனிக்கணும்”, என்று தினேஷ் சொன்னதும் “கண்டிப்பா டா”, என்று சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பி இருந்தான் கதிர்.
விடிந்தும் விடியாமலும் இருக்கும் போது தேன்மொழி வீட்டுக்கு சென்றான் ராஜேந்திரன். ஏற்கனவே இரவு முழுவதும் தேன்மொழியைக் காண வில்லை என்ற கலவரத்தில் இருந்தவர்கள் அவன் வரவைக் கண்டு அஞ்சினார்கள்.
“அண்ணே மாப்பிள்ளை இந்நேரம் வந்துருக்காரு. நம்ம மகளை காணும்னு தெரிஞ்சிருக்கும் போலவே? என்ன சொல்லுவாரோ? எனக்கு பயமா இருக்கு”, என்றார் ராஜதுரை.
“பொறுப்பா, என்ன சொல்றாருன்னு பாப்போம்”,என்று சொன்ன தர்மதுரை “உள்ள வாங்க மாப்பிள்ளை. என்ன இப்படி விடியுறதுக்கு முன்னாடி வந்துருக்கீங்க?”, என்று கேட்டார்.
அவர்களையே பார்த்துக் கொண்டிருந்த ராஜேந்திரனுக்கு அவர்கள் முகத்தில் இருந்த கலவரம் பிடித்திருந்தது. தன்னுடைய பிளான் வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது என்று எண்ணி உள்ளுக்குள் புன்னகைத்துக் கொண்டான்.
“இல்லை அது வந்து எப்படி சொல்றதுன்னு தெரியலை. தேன்மொழி வீட்ல இல்லை தான?”, என்று நல்லவனாய் கேட்டான் ராஜேந்திரன்.
“அது வந்து…”,என்று இழுத்தார் தர்மதுரை.
“நிஜமாவே தேனு எங்க போனான்னு தெரியலை தம்பி. நீங்க அவளை எங்கயாவது பாத்தீங்களா?”, என்று கேட்டுக் கொண்டே அங்கு வந்தாள் சகுந்தலா.
“உங்க பொண்ணை உங்க பண்ணையில பாத்ததா நம்ம ஆள் ஒருத்தன் சொன்னான்”
தேன்மொழி இருக்குமிடம் தெரிந்து நிம்மதியானாலும் “எங்க பண்ணைலயா? அங்க எதுக்கு போனா? டேய் தம்பி வா. ஒரு எட்டு போய் பாத்துட்டு வருவோம்”, என்று சொல்லி தர்மதுரை கிளம்பினார்.
“என் பிள்ளையை பாத்தா தான் எனக்கு நிம்மதியா இருக்கும்”, என்று சகுந்தலா சொன்னதும் செல்வியும் கிளம்பி விட்டாள். சண்முகம்மாளும் அவர்களுடன் சென்றாள்.
இவர்கள் கூட்டமாக செல்வதைப் பார்த்து மேலும் சில பேர் கிளம்பினார்கள். மொத்தத்தில் அங்கே கூட்டமே கூடி விட்டது.
“இது தான எனக்கு வேணும்”, என்று எண்ணிக் கொண்டே அந்த அறைக் கதவை தட்டினான் ராஜேந்திரன்.
“இந்த ரூம் சாவி எங்க வீட்ல இருக்கும், இல்லைனா முத்துகிட்ட இருக்கும் தம்பி”, என்றார் தர்மதுரை.
“இல்லை, இந்த ரூம் உள்ள தான் பூட்டிருக்கு. இங்க தான் தேன்மொழி இருக்கா”, என்று ராஜேந்திரன் சொன்னதும் “யார் சொன்னாப்பா உனக்கு?”, என்று கேட்டார் ஊர் பெரியவர்.
“முதல்ல, அந்த பொண்ணு உள்ள இருக்காளான்னு பாப்போம்”, என்று மற்றவர் சொன்னதும் அனைவரும் அந்த அறையைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
சிறிது நேரத்தில் கொட்டாவி விட்டுக் கொண்டே கதவை திறந்து வெளியே வந்தான் முத்து. அவனைப் பார்த்ததும் திகைத்து விழித்தான் ராஜேந்திரன்.