கஷ்டங்கள் மட்டுமே
கண்ட என் வாழ்வில்
எனக்கு கிடைத்த
முதல் பொக்கிஷம்
அது நீயே ??…!!!!
“நந்தினியே இந்த வீட்டை விட்டு கண்டிப்பா போய்டுவா ..,, நீங்க போக தேவையில்லை “என்று கோபக்குரல் ஒன்று வீட்டின் வாசலில் முன் இருந்து வந்தது.
அதை கேட்ட அனைவரும் திரும்பி பார்க்க வாசலின் முன் தனது இரு கரங்களையும் கட்டிக் கொண்டு நின்றிருந்தான் ஜீவா. இதனை கண்ட அனைவரும் அதிர்ந்து நின்றனர்.
ஒவ்வொருவர் மனதிலும் ஒவ்வொரு எண்ணங்கள் அவனது பதிலை கேட்டு ஆட்கொண்டது. இதில் கங்காவின் மனது மட்டும் குத்தாட்டம் போட்டு கொண்டு இருந்தது.
தனது மகன் தனக்காக பேசினதில் சந்தோஷம் அடைந்தவள் ,,அதை வீட்டாரின் முன் காட்டிக்கொள்ள வில்லை.
எப்படியாவது நந்தினியிடமிருந்து ஜீவாவை பிரிக்க வேண்டும் என்ற எண்ணம் அவள் மனதில் இருந்து கொண்டே இருந்தது. தான் எவ்வளவு செய்து அவர்களது உறவை மட்டும் பிரிக்க இயலவில்லை கங்காவால். ஆனால் இன்று அவள் அறியாமையாலே பிரிந்து விட்டது என்று கங்காவே ஒரு மன கணக்கு போட்டு கொண்டு இருந்தாள்.
“நீங்க இந்த வீட்ட விட்டு போக தேவையில்லை . என்னோட அம்முவே இந்த வீட்ட விட்டு ஒரு பாதுக்காப்பான இடத்துக்கு போவா . நானே அவள அனுப்பி வைப்பேன் ” என்றான் தன் அன்னையை கூர்மையான பார்வை பார்த்த படி…
” டேய் ஜீவா என்னடா பேசிட்டு இருக்க..?? நீ அவள எங்கேயும் தனியா அனுப்ப முடியாது. அவ கொஞ்சம் பயந்த பொண்ணு டா. நம்மல மட்டுமே உலகமா நினைச்சி வாழ்ந்துட்டு இருக்கா . அவள என்னால எங்கேயும் அனுப்ப முடியாது ” என்று சிவசங்கரன் கேள்வியில் ஆரம்பித்து அவரது பதில்லை திட்டவட்டமாக கூறினார்.
” நான் எல்லாம் யோசிச்சு தான் பேசுறேன் பா. அவளுக்குன்னு ஒரு பாதுகாப்பான இடம் இல்லாமையா பொய்டும். எதுக்கு அவ இங்க இருந்துட்டு கெட்ட பேர் வாங்கிட்டு இருக்கனும் சொல்லுங்க..??” என்று கேள்வி துளைகளை அனைவரையும் முன் நிறுத்தி ஒரு ஆழ்ந்த பார்வை பார்த்தான்…
அனைவரும் அவனது இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் அமைதி காத்தனர்.
[the_ad id=”6605″]
” நான் எப்படி நம்புறது ஜீவா. நீ இப்போ அனுப்புறேன்னு சொல்லிட்டு நாளைக்கு நீ அனுப்பாம பொய்ட்டா..??? என்னால உன்னோட வார்த்தைய நம்ப முடியாது டா ” என்று கங்கா எங்கே நந்தினி இங்கேயே இருந்திடுவாளோ என்று பயத்தில் அவனிடம் கேட்டாள்.
” நான் சொன்ன வார்த்தைய கண்டிப்பா காப்பாத்துவேன் மா ” என்றான் கராராக .
” டேய் ஜீவா…!!! என்னடா பேசிட்டு இருக்க..???”என்று கோபமாக சூர்யா கேட்க
” நீயெல்லாம் வாயவ்வே தொறக்காத சூர்யா அண்ணா .உன்ன போய் அண்ணாண்ணு சொல்லவே எனக்கு ரொம்ப அசிங்கமா இருக்கு. என்னோட அம்முக்கு இப்படி ஒரு நிலம வந்ததுக்கு நீ தான் காரணம் ” என்றான் பல்லை கடித்து கொண்டு
“அப்படில்லாம் சொல்லாத டா . நான்…” என்று பேச வருவதற்குள் “போதும் சூர்யா அண்ணா நீ பண்ணது இதுவே போதும்” என்றான் கைகளை கும்பிட்ட படி…
“என்னால அவ இந்த வீட்ல இருக்கிற வரைக்கும் நான் இந்த வீட்ல இருக்க மாட்டேன். அதுனால நான் என்னோட அக்கா வீட்டுக்கு போறேன் .அவ எப்போ இந்த வீட்ட விட்டு வெளியே போறாளோ அப்ப தான் நான் இந்த வீட்டுக்கு திரும்பி வருவேன் ” என்று நந்தினிக்கு கேக்கும்மாறு சத்தமாக பேசினாள் கங்கா.
இதை எதுவும் கேட்கும் நிலையில் நந்தினி இல்லை என்று பாவம் அந்த அகம்பாவம் பிடித்த கங்காவிற்கு தெரியவில்லை. அழுது அழுது சோர்ந்து போய் தன் தாய் தந்தையின் படத்திற்கு முன்பு மயங்கி சரிந்தாள்.
கங்கா சொன்னதிற்கு யாரும் எந்த ஒரு பதிலும் சொல்லாமல் இருக்க..,, கங்கா வேகமாக அவளது அறைக்கு சென்று பெட்டியில் அவளது துணிகளை எடுத்து அடைத்து கொண்டு அதை வெளியே எடுத்து வந்தவள்,, நேராக சூர்யாவை நோக்கி சென்று
” நான் இல்லாத இடத்துல உனக்கு என்ன வேல போ போய் உன் துணிமணிகளை எடுத்துட்டு வா ” என்றாள் கர்ஜிக்கும் விதமாக
அவனும் எந்த ஒரு பதிலும் சொல்லாமல் அவனது துணிகளை எடுத்து கொண்டு கீழே வந்தான்.
” போ போய் காரை எடு ” என்று கங்கா கட்டளை இட
அவனும் வேகமாக சென்று கார் எடுத்தான்….
கங்கா எல்லாரையும் பார்த்து “நான் இப்போ போறேன் நீங்க எல்லாம் நந்தினிய அனுப்பினா மட்டும் தான் நான் இனி இங்கே வருவேன் “என்று சொல்லிவிட்டு வெளியே சென்று காரில் ஏறினாள்.
அவள் ஏறின அடுத்த நொடி கார் புறப்பட்டு சென்றது.
சங்கரன் இடிந்து அங்கே இருந்த சோஃபாவில் அமர்ந்தார்.
“சுஜி கவிய ரூம்க்கு கூட்டிட்டு போ ” என்று சொல்ல அவளும் கவியை அழைத்துக்கொண்டு சென்றாள்.
வெங்கட் மீண்டும் தனது நண்பனான உதய்க்கு அழைப்பு விடுக்க ,, கடவுளின் புண்ணியமோ என்னவோ அவன் அழைத்த அடுத்த நொடியே உதய் எடுத்து பேசினான்.
” சொல்லு வென்கி ” என்றான் உயிர்பித்த போஃனை காதில் வைத்துக்கொண்டு
” டேய் மச்சி..!!! நீ கெஸ் பண்ணது கர்ட் தான் டா ” என்றான்.
” எப்படி சொல்ற டா . என்னோட கெஸ் கரட்ன்னு..??? ” என்று கேள்வி எழுப்ப
சிறிது நேரத்திற்கு முன்பு கார்த்திக்குடன் நடந்த பேச்சு வார்த்தையை ஒன்னு விடாமல் அவனிடம் கூறினான்.
இதை கேட்ட உதய்க்கு கார்த்திக்கை கொல்ல வேண்டும் என்று தோன்ற ,, கடினப் பட்டு தன்னை சமன் படுத்திக்கொண்டான்.
[the_ad id=”6605″]
“டேய்….டேய்…!!! லைன்ல இருக்கியா..??? இல்லையா டா..?? “என்று வெங்கட் ஃபோனில் கத்த
” டேய் இப்போ எதுக்கு கத்துற ” என்றான் சிறு கோபத்துடன்
“மச்சி நந்தினிய எப்படியாவது காப்பத்துனும் டா. அந்த பொண்ணு ரொம்ப அப்பாவி . அவளுக்கு இந்த விஷயம் தெரிஞ்சா உயிரோட இருப்பாளான்னே சந்தேகம் டா ” என்றான் உண்மையான அக்கறையுடன்
” டேய் மச்சி..!!! அவள நான் இருக்கிற வரைக்கும் சாக விட மாட்டேன் டா ” என்றான் அழுத்தம் திருத்தமாக
இதை கேட்ட வென்கி வெகுவாக குழம்பி போனான்.
ஆனால் உதயோ அவனிடம் அவளுக்கு எதிரான ஏதோ ஒன்று கார்த்திக்கிடம் உள்ளது. அது என்னவாக இருக்கும் என்று யோசனையில் மூழ்கி போக லைன் கட் ஆனது.
ஜீவா வேகமாக நந்தினியின் அறையை நோக்கி செல்ல ,,அங்கு அவள் மயங்கி இருந்ததை பார்த்து பதறி அடித்து ” அம்மு ” என்ற கூவளுடன் அவளை நோக்கி ஓடினான்.
” அம்மு …அம்மு ” என்று என்று அவள் கண்ணத்தை தட்டி எழுப்ப முயற்சி செய்ய..,,நந்தினியிடமிருந்து எந்த ஒரு அசைவும் இல்லாமல் போக
வேகமாக அறையை விட்டு வெளியே வந்தவன் ,, “சுஜித்ரா ” என்று மாடியிலிருந்து கத்த
அவள் மட்டும் அல்லாது வீட்டில் இருந்த அனைவரும் அவனது சத்தத்தில் ஹாலிற்கு வந்து பார்க்க
ஜீவாவோ ” சுஜி சீக்கிரமா தண்ணி எடுத்துட்டு மேல வா ” என்று கட்டளையிட்டுட்டு அறைக்குள் சென்று நந்தினியை மடியில் தாங்கினான்.
வீட்டில் இருந்த உதய்க்கு ஏதோ சரியாகவே பட வில்லை .தன்னை சார்ந்த யாரோ ஒருவருக்கு ஏதோ ஆபத்து என்று தோன்ற உடனே தன் மொபைலை எடுத்து தன் வீட்டிற்கு அழைப்பு விடுத்தான்.
இரண்டு முறை அழைத்தும் ஃபோன் எடுக்காமல் இருக்க ,, சுமித்ராவிற்கு அழைத்தான்.
ஒரே ரிங்கிள் சுமி அட்டன் செய்து விட ,, ” ஹலோ சுமித்ரா..!!! சுமித்ரா ” என்று அழைத்தும் அந்த சைட் எந்த ஒரு பதிலும் வராமல் போக ..,,சிறிது பதற்றத்துடனே ” சமி” என்று கத்த
“ஹான் சொல்லு புருஷா..!!! எனக்கு நல்லாவே காது கேக்குது . எதுக்கு இப்படி கத்துற..?? உங்க அம்மாக்கு தான் காது கேக்காது. எனக்கு நல்லாவே கேக்கும் சரியா ” என்று அலட்சியமாக பதில் அளித்து கொண்டு இருந்தாள்.
” வீட்ல யாருக்கும் ஒன்னும் ஆகலையே..?? எல்லாரும் நல்லா இருக்காங்க தான..??? அம்மா ,ஜான்வி குட்டி அப்பறம் அங்கில் இவுங்க யாருக்கும் எதுவும் பிரச்சினை இல்லையே” என்று பதற்றத்துடனே கேட்க
” என்ன தவிர மத்த எல்லாரும் நல்லா தான் இருக்காங்க புருஷா ” என்று நக்கலடிக்கும் விதமாக கூற
உதய் இருந்த பதற்றத்தில் இவளது நக்கல் தெரியாமல் போக ,,” சுமி உனக்கு என்ன ஆச்சி..??? டேப்லெட்ஸ் லாம் கரக்டா போட்டியா டா ” என்று அக்கறையுடன் கேட்க
” ஹே ஹே..!!! கூல் மேன் . நான் ஜஸ்ட் ஃபன்னுக்கு தான் சொன்னேன். நான் உன்ன ரொம்ப மிஸ் பன்றேன் புருஷா . சீக்கிரம் வந்துரு ” என்க
” நான் எதுக்கு இங்க வந்துருக்கேன்னு உனக்கு தெரியாதா என்ன..??” என்றான்.
” சரி சரி சீக்கிரம் வேலைய முடிச்சிட்டு வா டா ” என்றாள்.
” சரி நீ போய் ஃபோன அங்கில் கிட்ட குடு ” என்க
” என்னால போய் லாம் தர முடியாது .இரு வேலைக்காரிக்கிட்ட கொடுத்து விடுறேன் ” என்றாள் திமிராக.
” சரி” என்று அவன் முடிச்சிக் கொள்ள….
சுமியும் அவளது அறையிலிருந்து வெளியே வந்து ” சுந்தரி சுந்தரி ” என்று கத்த
[the_ad id=”6605″]
அவள் வராமல் போகவே கோபமாக ஹாலிற்கு வந்தவள் ,,” சுந்தரி ” என்று கோபமாக கத்த
அந்த சத்தத்தில் வேகமாக அவள் முன்னே வந்த சுந்தரி ” சின்னம்மா ” என்று சொன்ன அடுத்த நொடி பலார் அறை விழுந்தது சுந்தரிக்கு.
கண்ணத்தை பற்றி கொண்டு அவள் முன்னே நின்ற சுந்தரியை பார்த்து சுமிக்கு கோபமாக வர மீண்டும் மற்றொரு கண்ணத்தில் அறை விட்டாள்.
” எங்கடி போய் தொலஞ்ச…??? உன்ன எவ்வளோ நேரமா கூப்பிட்டுட்டு இருக்கிறது ” என்று கத்த
சுந்தரி அமைதியாகவே இருக்க….,, “வாயில என்ன கொழுக்கட்டையா வச்சிருக்க ..,,வாய திறந்து சொல்லி தொழ இல்ல உன்ன என்ன பண்ணுவேன்னு எனக்கு தெரியாது ” என்று கோபக்குரலில் கரஜித்தாள்.
” ஆமா பதில் சொன்னாலும் அடி விலும் ..,,அமைதியா இருந்தாலும் அடி விலுகும் என்ன தான் பண்றதோ ” என்று மனதிடம் புலம்பி கொண்டு இருக்க
” இங்க என்ன நடக்குது..?? ” என்று கேட்டுக்கொண்டே அவர்கள் பக்கத்தில் வந்தார் மஹாலிங்கம் .
அவர் வரவும் நினைவுக்கு வந்த சுந்தரி ” அய்யோ போச்சி இன்னைக்கு நான் இந்த சின்னம்மா கிட்ட செத்தேன் . இன்னைக்கு யார் மூஞ்சில முழிச்சேன்னோ தெரியலையே ” என்று மனதில் புலம்பிக் கொண்டு இருந்தாள்.
” சொல்லு சுந்தரி ” என்று மீண்டும் அவர் கேட்க
” அது வந்து ஐயா..!!! ஜான்வி பாப்பாக்கு சாப்பாடு கொடுத்துட்டு இருந்தேன். அப்ப சின்னம்மா கூப்பிட்டது எனக்கு காதுல விழுகாம போசிங்கயா ” என்றாள் சிறிது தயங்கிய படியே
” ஏன் டி இங்க ஒருத்தி ஒரு முக்கியமான விஷயத்துக்காக கூப்பிட்டா ..,,நீ என்னனென்னா ஜான்விக்கு சோறு உட்டுனேன் அது ஊட்டினேன்னு சொல்லிகிட்டு இருக்க ” என்று மீண்டும் கை ஓங்க
” சுமித்ரா” என்ற மஹாலிங்கம் அதட்டலில் ஓங்கின கையை கீழே இறக்கினாள்.
” ஜான்வி உன்னோட பொண்ணு .அத ஞாபக வச்சிக்கோ .நீ தான் அவள பார்த்துக்குறது இல்ல இந்த பொண்ணையாவது அந்த வேலைய செய்ய விடு ” என்றார் கோபமாக .
ஃபோனிலிருந்து இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த உதய்க்கு இப்போது அங்கு இல்லாததை நினைத்து வருந்தினான்.
” இந்தா இத உங்க ஐயா கிட்ட கொடு ” என்று சுந்திரி கிட்ட மொபைலை கொடுத்துவிட்டு விருட்டென்ன அந்த இடத்தை விட்டு சென்றாள்.
மொபைலை சுந்தரி மஹாலிங்கத்திடம் கொடுத்துவிட்டு ஜான்வி அறைக்கு சென்றாள்.
“ஹலோ அங்கில்..!!!” என்றான்.
” சொல்லுப்பா உதய்…??? நீ என்கிட்ட பேசனும்னா என்னோட மொபைலுக்கு கூப்பிட்டிருக்கலாமே ” என்க
” இல்ல அங்கில் உங்க நம்பர்க்கு கூப்பிட்டேன். நீங்க எடுக்கவே இல்ல அதான் சுமிக்கு கூப்பிட்டேன் ” என்றான்.
” அங்கில் வீட்ல உளவுங்கல கொஞ்சம் கவனமா பாத்துக்கோங்க. எனக்கு ஏதோ தப்பா படுது . அதான் கொஞ்சம் சேஃப்டியா இருக்க சொல்ல தான் அங்கில் கால் பண்ணேன் ” என்க
” சரி பா நாங்க பாத்து இருக்கோம். நீயும் பாத்து பத்திரமா இரு ” என்று சொல்லிவிட்டு சிறிது நேரம் ஹாஸ்பிடல் விஷயமாக பேசிவிட்டு ஃபோனை கட் செய்தனர் .
சுஜித்ராவும் வேகமாக தண்ணி கொண்டு வந்து ஜீவாவிடம் தர ,, அவனும் அதை வாங்கி நந்தினியின் முகத்தில் தண்ணீர் தெளிக்க நந்தினியிடம் இருந்து எந்த ஒரு அசைவும் இல்லாமல் போகவே
ஜீவா பயத்துடனே நந்தினியின் கண்ணத்தை தட்டி எழுப்ப முயற்சி செய்ய அது தோல்வியில்லே முடிந்தது.
அவளது உடலும் சில்லுன்னு ஆகிவிட ,, வேகமாக அவளை தூக்கிக்கொண்டு சுஜியுடன் மருத்துவமனைக்கு சென்றான்.
மருத்துவமனையில் நந்தினியை அட்மிட் செய்ய,, மருத்துவர்கள் அவளுக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.
[the_ad id=”6605″]
இதை எதுவும் அறியாத உதய் ,,தன் குடும்பத்தினர் அனைவரும் நலமாக உள்ளனர் என்ற நிம்மதியில் சாப்பிட்டு விட்டு துயில் கொண்டான்.
தேடல் தொடரும்….