இரு நாட்கள் வேகமாக செல்ல ஊட்டி வந்து சேர்ந்தனர். அவரவர் வீட்டிற்கு அனைவரும் சென்றனர். ரசிகா மகிழ்ச்சியுடன் தமிழரசனிடம் விவாகரத்து பத்திரத்தை கொடுக்க, கோர்ட்டின் மூலம் அவர்களுக்கான நேரத்தை கொடுத்தனர்.
சென்னையில் அர்னவின் அம்மாவும், அப்பாவும் பிறந்த வீட்டில் செய்யும் அனைத்தையும் தாருண்யாவிற்கு செய்தனர். ஏற்கனவே வீட்டிற்குள்ளே வளைகாப்பு செய்திருப்பர். தினமும் ஒரு முறையாவது அவளை பார்க்க வந்தனர்.
நாட்கள் கடந்தது. ரசிகா அண்ணன் வீட்டில் ஒரு வாரமும் தமிழரசன் வீட்டில் ஒருவாரமும் இருந்து வந்தாள். அகரனும் அவன் வீட்டை வாடகைக்கு விட்டு தமிழரசன் வீட்டில் அவருடைய உண்மை மகனாகவே வாழ ஆரம்பித்திருந்தான்.
தாருண்யாவிற்கு ஆப்ரேசன் செய்யும் நாளும் வந்தது. அர்னவ் வீட்டினரும் பிரபாகரன் மட்டும் ஊரிலிருந்து வந்திருந்தனர். பிரபாகரன், சவிதா, துகிலன், அர்னவ் எல்லாரும் தாருண்யாவை ஹாஸ்பிட்டலில் சேர்த்தனர்.
ஆண் குழந்தை பிறந்தது. அனைவரும் மகிழ்ந்தனர். சவிதா, அர்வின் அம்மாவும் அவளருகிலே இருந்தனர்.
ஒன்றுமில்லை. சற்று நேரத்தில் விழித்து விடுவாள். ஆனால் இன்று யாரும் அதிகமாக பேச வேண்டாம். அவளுக்கு ஓய்வு முக்கியம் என்றனர்.
அவள் விழித்த பின் அவளை வந்து பாரு. வெளியே இரு என்று அவனை வெளியே அனுப்பினார் சவிதா.
தாருண்யா விழித்து குழந்தையை பார்த்து தாய்ப்பால் கொடுத்து விட்டு துகிலனை தேடினாள். துகி, வா..என்று சவிதா அவனை அழைத்து வந்து அவனை உள்ளே விட்டு இரு பெண்களும் வெளியேறினர்.
ஆமா துகி, எதையும் அசைக்கவே முடியலை. குழந்தையை நான் தூக்க கூட இல்லை என்று கண்ணீர் வடித்தாள். அவன் அவள் கையை பிடித்துக் கொண்டு ஏதும் பேசாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
என்ன? அவள் கேட்க, அவன் கண்ணீருடன் எழுந்து அவளது நெற்றியிலும் கன்னத்திலும் இதழ் பதித்தான். அவளை பார்த்தான். அவள் கண்ணீரை பார்த்து துடைத்து விட்டு, நீ அழவே கூடாது என்று ஆறுதலாக பேசினான்.
அன்றிரவு ஆதி, மெல்லினா, அகரன், திரிவேஷ், விபுதன், ரசிகா, அவளோட அண்ணா அண்ணி பசங்க எல்லாரும் குழந்தையையும் தாருண்யாவையும் பார்க்க வந்தனர். இரு நாட்கள் இருந்து விட்டு அவர்கள் சென்றனர்.
சவிதாவுடன் அர்னவ் அம்மாவும் அவளை நன்றாக பார்த்துக் கொண்டார்கள். துகிலனும் அருகேயே இருந்து தாருண்யாவையும் தன் குழந்தையையும் பார்த்துக் கொண்டான்.
(ஒரு மாதம் ஓடியது)
குழந்தைக்கு பெயர் சூட்டு விழாவை தாருண்யா உடல்நலம் கருதி சென்னையிலே வைத்துக் கொண்டனர். இரு குடும்பம் மட்டும் பங்கேற்றார்கள். ஆனால் துகிலன், தாருண்யா, ரசிகா பற்றியும் செய்தியாக ஏற்கனவே பரவி இருந்தது. ஆனால் யாரும் பெரியதாக கண்டுகொள்ளவில்லை. ஷேர் இறங்கிய போதும் அதை சமாளித்து தன்னுடைய அனைத்தையும் சரியாக கவனித்து வந்தான் ஆதிரேயன்.
விழாவில் வைத்து, துகிலன் – தாருண்யாவின் செல்வ புதல்வன் “யுகன்” என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர். பின் ஒரு மாதம் கழித்து தாருண்யாவையும் யுகனையும் வீட்டிற்கு அழைத்து வந்தனர்.
ரசி, இன்னும் நான்கே மாதம் தான் ஆதி சொல்ல, அவள் புன்னகைத்தாள்.
மாமா, சின்னப்பையன் பள்ளி விடுப்பு நாட்களை எண்ணுவது போல் எண்ணிக்கிட்டு இருக்கீங்க? என விபுதன் கேட்டான்.
உன்னோட அத்தை எங்காவது ஓடி விட்டால் உன்னை விட நான் தான் கஷ்டப்படணும்? ஆதி சொல்ல, என்ன மாமா இப்படி சொல்றீங்க?
ஆமா, உனக்கு தான் ஆள் இருக்கே? என்று ஆதி அகரனை பார்த்தான். அகரன் இருவரையும் முறைத்தான்.
அவ்வப்போது ரசியும் துகிலனும் கோர்ட் படி ஏறி இறங்கினார்கள்.
இரண்டு மாதங்கள் கழிந்தது.
அகரா, மீட்டிங்கிற்கு தயார் செய். துகியை வரச் சொல்லு என்றான் ஆதி போனில்.
ஓ. கே பாஸ் என்று அவன் குழுவினரின் பிராஜெக்ட்டை முதலில் ஆதியிடம் காட்ட சொல்லி விட்டு, மீட்டிங்கிற்கு தயார் செய்து விட்டு ஆதி அறைக்கு வந்தான்.
செட்..ரசி..என்று ஆதி கத்தும் சத்தம் கேட்டு, பாஸ் என்னாச்சு? என்று அகரனும் அவன் குழுவினரும் வந்தனர். ஆதி கோபமாக எல்லாத்தையும் உடைத்து விட்டு அழுது கொண்டிருந்தான்.
பாஸ்..என்று அவனிடம் செல்ல, உனக்கு தெரியாமல் ரசி எதையும் செய்ய மாட்டா? இது என்ன? போனை அகரனிடம் தூக்கி போட்டான்.
ரசிகா வீடியோ அனுப்பி இருந்தாள். கல்யாண பொண்ணாக ஓர் அறையில் தனியாக அமர்ந்து ஆதியிடம் மன்னிப்பு கேட்டு பேசிக் கொண்டிருந்தாள்.
அகரன் தலையில் கை வைத்து சிந்தித்தான். மீண்டும் அதை ப்ளே செய்தான். அதில் பாதி தான் இருந்தது. அவள் வார்த்தைகளில் தடுமாற்றம் இருந்தது. கொஞ்சம் இடைவெளி விட்டு ரசிகாவின் கோபமாக வார்த்தைகள் அதில் கேட்டது.
பாஸ்..இதை கேளுங்க என்று அகரன் மீண்டும் ப்ளே செய்தான். அதில் அவள் பேசும் போது யாரோ உள்ளே வரும் சத்தம் கேட்டு போனை ஓரிடத்தில் மறைத்து வைத்திருந்தாள்.
என்னால வர முடியாது. அவங்கள ஏதும் செய்யாத. நான் சக்தியை திருமணம் செய்து கொள்கிறேன். ஆனால் வீடியோ காலாவது செய்து கொடு. நான் அவங்க எல்லாரும் நல்லா இருக்காங்கல்லான்னு பார்க்கணும் என்று கத்தினாள்.
நான் பாஸிடம் போயிட்டு வந்திருவேன். இவ நகராம பார்த்துக்கோங்கடா. இவள் தப்பிக்க பார்த்தால் உடனே கால் பண்ணு. அவளோட குடும்பம் மொத்தத்தையும் காலி பண்ணிடலாம் என்று அவன் வெளியேறினான். ரசிகா அழுது கொண்டே அமர்ந்தாள்.
ஏய், எதுக்கு அழுற? மேக் அப் இல்லாமல் போனால் சக்தி சார் ரொம்ப வருத்தப்படுவார் என்று ஒரு பொண்ணை அழைத்து ரசிகாவிற்கு மேக் போட, இந்தா பேசு என்று ரசிகாவிடம் போனை காட்டினர்.
அத்தை, வேண்டாம். எங்களுக்காக கல்யாணம் பண்ணாத என்று விபுதன் கத்தினான்.
ரசி எங்களுக்காக நிறைய செஞ்சிட்ட. உன்னோட வாழ்க்கையை அழிச்சுக்காதம்மா..கிரி சொல்ல, ப்ளீஸ் அமைதியா இருங்க. எனக்கு ஒன்றுமில்லை. எல்லாரையும் காட்டுங்க என்ற ரசிகா, அவள் அண்ணியை பார்த்து, எல்லாரையும் நல்லா பார்த்துக்கோங்க. விபுவை தனியா விட்றாதீங்க. ஏற்கனவே அவன் பட்ட கஷ்டம் போதும் என்று ரசிகா அழுதாள்.
போதுமா? காட்டி விட்டோம் வா..என்று அவர்கள் அழைக்க கண்ணீருடன் ரசிகா எழுந்தாள்.
உன்னை எப்படி பாஸூக்கு பிடித்ததோ? ஒருவன் கேட்க, பாஸா? சக்தி சார் தான கல்யாணம் பண்ணிக்கப் போறாரு.
லூசாடா? அவரெல்லாம் வொர்த்தேயில்லை. நம்ம பாஸூக்கா தான் இவளை தயார் செய்திருக்காங்க. ஏற்கனவே ஒருவன் கையால் தாலியை வாங்கியவள் தானே? சக்தியிடமிருந்து தாலியை வாங்கிக் கொள்ளட்டும். மீதியை நம்ம பாஸ் பார்த்துப்பார். அவருக்கு என்ன? பணம் ஆஸ்தியெல்லாம் இருக்கே? பின் என்ன?
வயதானவர் எப்படிடா? அவன் கேட்க, யார் அவர்? நான் தெரிந்து கொள்ளலாமா? ரசிகா கேட்டாள்.
இவள் தான் பார்க்க போகிறாளே? சொல்றதுல்ல என்ன? என்று அவன் அவனுடைய பாஸ் பெயரை சொல்ல, அனைவரும் திகைத்து விட்டனர்.
ரசி எங்க இருக்க? பதறினான் ஆதி.
மண்டபத்துல்ல வச்சி கல்யாணம் பண்ணலாமே? அமைதியாக ரசிகா கேட்க, உன்னோட வாழவா இதை செய்யப் போகிறார் என்னோட பாஸ். அந்த ஆதி உன்னை நினைச்சு நினைச்சு கதறணும். அவனும் சாகணும் அதுக்கு தான் எல்லாமே? என்றான் அவன்.
இது என்ன பேக்டரி?
இது பழைய சாக்லெட் பேக்டரி. என் பாஸோடது. அவருடைய அனைத்தையும் ஆதி தான் தட்டி பறித்து விட்டானே? அதான் இவ்விடத்திலே..என்று சொல்ல வருபவனை நிறுத்தி, எதுக்கு இதெல்லாம் கேட்கிறாய்? என்று மற்றொருவன் கேட்டான்.
எந்த இடம்ன்னு தெரிந்தால் தானே நல்லது என்றாள்.
பேசியது போதும். வா..என்று அவளது கையை பிடித்து இழுத்தனர். இன்னும் கால் மணி நேரம் தான். எல்லாம் முடியப் போகுது என்று கண்ணீர் வழிந்தது ரசிகா கண்ணில்.
அகரா, கிளம்பு..கால் மணி நேரத்தில் போக முடியாது. எப்படியாவது போகணும்? என்று ஆதிரேயனும் அகரனும் எழுந்தனர். துகிலனும் அனைத்தையும் கேட்டிருப்பான்.
என்னது? அதிர்ந்து சக்தி கேட்க, கண்ணா..என்று அழைத்துக் கொண்டே சக்தியிடம் வந்தார் சாவித்ரி.
அம்மா..சக்தி அழைக்க, அம்மாவா? அப்படி ஏதுமில்லை. இதோ இருக்கிறாளே? இவள் யார் தெரியுமா? நான் காதலித்த சுதாகரின் மகள். அதை விட “இவர் என் அண்ணன்” என்று சொல்ல ராஜபாண்டி வந்து நின்றார்.
என்னடா குழப்பமா இருக்கா? இவன் யாரு தெரியுமா? “கிரிக்கு அடுத்ததாக பிறந்தவன் சக்தி”. இவனுக்கு முகுந்தன் என்று தான் லேகா பெயரிட ஆசைப்பட்டாள். அவளுக்கு பிடித்த எதுவுமே எனக்கு பிடிக்கலை அவளை தவிர என்ற ராஜபாண்டி
அவர்களை பிரிக்க இவனை பயன்படுத்தலாம் என்று தான் இவனை கடத்தி வளர்க்க ஆரம்பித்தோம். ஆனால் இவன் காணாமல் தவித்து இருந்தாலும் இருவருமே பிரியலை. பின் அவர்களுக்கு உன் மகன் இவன் தான் என்று சக்தியை காட்டினோம்.
ஆனால் அவர்கள் இவனை நீயே வச்சுக்கோ. நாங்க மத்த பசங்க நாங்க பார்த்துக்கிறோம் என்று இவனை பணயம் வைத்தார்கள். ஆனாலும் தாய் மனம் கல்லாக இருக்குமா? யாருக்கும் தெரியாமல் இவனை பார்க்க வந்து மாட்டிக் கொண்டாள் லேகா. வேறு வழியில்லாமல் சுதாகரை விபத்து என்ற பெயரில் கொல்ல வேண்டியதாயிற்று. ஆனால் எங்களிடமிருந்து தப்பி அவனை பார்க்க வந்து லேகாவும் அவனுடன் அங்கேயும் என்னை விட்டு சென்று விட்டாள்.
அதான் உங்க எல்லாரையும் கண்காணித்தேன். நீ என் கண்ணில் அதிகம் பட்டதில்லை. ஆனால் உன் அக்கா அருந்ததியை நிறைய முறை பார்த்திருக்கேன். பேசி கூட இருக்கேன். அவள் பார்க்க லேகா மாதிரி இருந்தாலும் அவள் குணம் சுத்தமாக இல்லை. ஆனால் நீ அன்று பிரபா குடும்பத்துடன் கோவிலில் வைத்து பார்த்த போதே நாங்கள் கண்டு கொண்டோம்.
அன்றிலிருந்து நீ தான் எங்களுடைய..இல்லை என்னுடைய இலக்காக இருந்த? உன்னை அடைய நினைத்தேன். ஆனால் அந்த ஆதி உன்னையும் பறித்து விடுவானோ? என்று தான் அவனை கொல்ல நான் முயன்றேன். ஆனால் அந்த பருவதி பொண்ணை அமைதியா இருக்க சொன்னேன். அவ கேட்கலை..
ஆனால் இன்று நீ எனக்காக என் லேகாவிற்கு பதில் திருப்தி படுத்தப் போற..
ச்சீ..நாயே, உன்னை என்னவென்று நினைத்தேன்? என்று பதில் வந்தது. ரசிகா அண்ணன் இமயன் சத்தமிட்டான்.
ரசிகா மற்றும் பிரபாகரனின் மொத்த குடும்பத்தையும் பிடித்து வந்திருந்தனர்.
அவன் மனைவியோ..யோவ், யாரும் என்னமும் செய்யுங்க. என்னை விடுங்க. உனக்கு என்ன வேண்டுமோ நான் தாரேன் என்றாள்.
அடியேய், என்ன பேசுற? இமயன் கத்த, சாதாரண குடும்பமா வாழ்ந்து சலித்து விட்டது அவள் சொல்ல, எம்மா, சுதாகரன் பற்றி உனக்கு என்ன தெரியும்? பிரபாகரன் சத்தமிட்டார்.
அங்கிள். எங்க அப்பாவை உங்களுக்கு தெரியுமா? ரசிகா அதிர்வுடன் கேட்டார்.
நல்லா தெரியும் ரசிம்மா. நீ தான் அவனோட பொண்ணுன்னு எனக்கு தெரியாது.
ரசிம்மா, உன் அப்பா சுதாகரன் பணக்காரனாக வாழ்ந்தவன். ஆனால் உன் அம்மா அப்படியில்லை. ஏழ்மையான நிலைதான். அவங்க காதலித்து திருமணம் செய்து கொண்டாங்க. இதோ இந்த பாவியால தான் உன்னோட அம்மா, அப்பா எல்லாத்தையும் இழந்தாங்க. ரொம்ப கஷ்டப்பட்டாங்க. அவனோட அம்மா, அப்பாவை இவன் சுதாகரனிடமிருந்து பிரிச்சுட்டான். ஆனால் கொலை செய்யும் அளவிற்கு செல்வான் என்று நான் நினைக்கவில்லை.
சுதாவோட அப்பா சில வருடங்களுக்கு முன் அவரோட சொத்துகளை சுதாகரின் பெயரில் மாற்றி எங்களிடம் கொடுத்து சென்றார். அதன் பின் அவரை பார்க்கவில்லை.
தன் மகன் விட்டு போனதில் வருத்தமாக உங்க தாத்தா அப்பொழுதில் இருந்த போது சொத்துக்களை விற்று விட்டார். மீதியை தான் எங்களிடம் கொடுத்து சென்றார். சேமிப்பு பணத்தையும் சுதாகரின் பெயரில் விட்டு சென்றுள்ளார். நாங்கள் பார்த்துக் கொள்ளும் ஹோட்டல் அவனோடது தான். வீடு கூட இருக்கு. ஆனால் நீங்க எல்லாரும் சேர்ந்து ஒத்துமையாக இருந்தால் தான் எல்லாவற்றையும் என்னால் உங்களுக்கு ஒப்படைக்க முடியும் என்றார் பிரபாகரன்.
அங்கிள், நீங்களும் அப்பாவும்?
ப்ரெண்ட்ஸ் மா. அவன் அப்பா சொத்துக்களை கொடுத்த பின் அவனை தேடினேன். ஆனால் அவன் கிடைக்கவில்லை. அதான் அவனது சொத்துக்களை நான் பாதுகாத்து வருகிறேன் என்றார்.
சொத்தும் பணமும் இருக்கா? என்று ரசிகாவின் மூத்த அண்ணி கேட்க, “விடுங்கடா என்னை” என்று இமயன் அவனை பிடித்திருந்தவர்களை தள்ளி விட்டு, தன் மனைவியிடம் வந்து அவரது தாலியை பிடித்து இழுத்தான்.
என்ன பண்றீங்க? விடுங்க என்று ரசிகா அண்ணி, அவளது கணவனை தள்ளி விட்டாள்.
என்னடி சொன்ன? அவன் என்ன சொன்னாலும் செய்வாயோ? போடி..இத்தனை நாள் அமைதியா இருந்துட்டேன். நான் கட்டிய தாலியை கொடுத்துட்டு போயிருடி என்று இமயன் கத்தினான்.
பணம் இருக்கு என்றவுடன் என்னை போக சொல்றேல்லடா. நான் போகமாட்டேன் என்று அவளும் கத்தினாள்.
சரி, உன்னை நான் கோர்ட்டில் பார்த்துக்கிறேன். ஏற்கனவே நம் அனைவர் பற்றியும் வெளியே வந்துருக்கு. “அது நாம் தான்” என்று யாருக்குமே தெரியாது. நானே தெரியப்படுத்திடுறேன். அதற்கான தண்டனையை நான் ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கேன்.
உனக்கு என்ன லூசா பிடிச்சிருக்கு? அவன் பொண்டாட்டி கத்த, ஆமாடி, இத்தனை நாள் கழன்று தான் இருந்தேன். எங்க அப்பா சொத்துல்ல எனக்கு எதுவுமே வேண்டாம் என்று பிரபாகரனிடம் வந்து, என்னோட தம்பிகளுக்கும் தங்கைகளும் கொடுத்திருங்க என்றார்.
அண்ணா, என்ன செய்யுற? என்று ரசிகாவின் அக்கா அருந்ததி சத்தமிட்டார்
“முதல்ல இங்கிருந்து எல்லாரும் உயிரோட போறீங்களான்னு பார்ப்போம்” என்று ராஜ பாண்டி சத்தமிட்டார்.
எழ முடியாமல் சுவற்றில் சாய்ந்து அமர்ந்திருந்த சக்தியிடம் சென்றாள் ரசிகா. அவளால் நிற்க முடியவில்லை. சக்தி அருகே அமர்ந்து, அவன் தலையில் கை வைத்தாள்.
சக்தி, நீ என்னோட அண்ணனா? அவள் கேட்க, “எனக்கு ஒன்றுமே புரியல” சக்தி சொன்னான். அந்நேரம் ஆதி அங்கே வந்தான். எல்லாரையும் ஆட்கள் பிடித்து இருந்தனர். அப்பா..என்று லிதுவும் நிதுவும் சத்தமிட்டனர். மெல்லினாவும் அங்கே தான் திகைப்புடன் அவள் அப்பாவையும் ராஜ பாண்டியையும் பார்த்துக் கொண்டிருந்தாள். இமயனையும் அவன் மனைவியையும் ஆட்கள் பிடித்திருந்தனர்.
ரசிகாவும் சக்தியும் நெருக்கமாக அம்ர்ந்திருப்பதை பார்த்து, ரசி..என்று சத்தமிட்டான் ஆதி. ரசிகா ஆதியை பார்த்து எழ தடுமாறினாள்.
ஏய், என்னாச்சு? உன்னோட கண்கள் சுருங்குது? என ரசிகாவை பார்த்து கேட்டுக் கொண்டே பின் தலையை பிடித்துக் கொண்டே தடுமாறி எழுந்தான் சக்தி.
ஆதி என்று ரசிகா கண்ணீருடன் கையை நீட்டினாள். சக்தி கையில் இரத்தமாக இருந்தது. ஆட்கள் தலையில் அடித்ததில் இரத்தம் வந்திருக்கும் சக்திக்கு.
ஆதி இருவரையும் பார்த்து ரசிகாவிடம் வர, டேய் அவனையும் பிடிங்கடா. எல்லாரையும் கட்டிப் போடுங்க ராஜபாண்டி கத்தினார்.
ரசிகா தள்ளாடிக் கொண்டே வேகமாக ஆதியிடம் வந்து அவனை அணைத்து, ஆதி நான் தப்பு செஞ்சுட்டேன். அவசரப்பட்டுட்டேன்.
என்ன சொல்ற ரசி? ஆதி கேட்க, ஆதி நான் பாய்சன் சாப்பிட்டேன்.
என்ன? சக்தி கேட்க, இந்த ஆளாட ஆட்கள் பேசியதை கேட்டேன். ரொம்ப கஷ்டமா இருந்தது. என்னை நான் காப்பாற்ற என் உயிர் வேண்டாம் என முடிவெடுத்து விட்டேன். அவள் சொல்ல, சக்தியும் அவளிடம் வந்தான். “அண்ணா” என்று சக்தியை பார்த்தாள் ரசிகா.
ரசி, சக்தி அண்ணாவா? பாய்சனா? ஆதி அதிர்ந்து கேட்க, ஆமா சக்தி என்னுடன் பிறந்தவன் ஆதி.
என்ன செஞ்சுட்ட ரசி? ஆதி அமர்ந்து கதறி அழுதான். அவனை ஆட்கள் பிடிக்க, ரசிகா அவனை விடாமல் பிடித்து அவன் மார்பில் சாய்ந்து, ஆதி பசங்கல்ல பார்த்துக்கோங்க. எனக்கு அதிக நேரமில்லை என்று பேசிக் கொண்டிருந்த ரசிகா வாயிலிருந்து இரத்தம் வழிந்தது. அனைவரும் அழுதனர். அகரனும் திரிவேஷூம் ஒன்றாக வந்தனர். ஆதியை பிடித்திருந்தவர்களை ஓங்கி உதைத்தனர்.
அது எப்படிடா? லேகா மாதிரி இவளை விடுவேன் என்று ஆதியிடம் ராஜபாண்டி கோபமாக வந்தான். ஆதி கோபமாக எழுந்தான். அகரனும் திரிவேஷூம் ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு ஆட்களுடன் சண்டையிட்டுக் கொண்டே இமயன், கிரி, விபுதனையும் அவிழ்த்து விட்டான்.
வாயில் வழிந்த இரத்தத்தை துடைத்து மயக்கநிலையில் ஆதியிடமிருந்து ரசிகா இறங்கவும் ராஜபாண்டி இடுப்பிலிருந்து உருவிய கத்தியை ஆதியை நோக்கி வீச, அது ரசிகா மீது படும் முன் ஒருவன் வந்து ஆதி, ரசிகாவை தள்ளி விட்டான். கத்தி அவன் கையில் கத்தி பட்டது.
ரஞ்சித் சார்.. என்று அகரன் இன்பெக்டர் ரஞ்சித்திடம் வந்தான். ரஞ்சித் கோபமாக ராஜபாண்டி கழுத்தை பிடித்தான். ஆதி ரசிகாவை தூக்கிக் கொண்டு எழ, ரசி எனக்கு தெரியும். உன்னோட குழந்தை பத்தோடு பதினொன்றாக பிறக்காது என்றான்.
ஆதி..என்று அவன் தோளில் கையை போட்டுக் கொண்டே அவன் மீது மயங்கினாள்.
ரஞ்சித், “யாரையும் சும்மா விடாத!” ஆதி கத்திக் கொண்டு, என்னை பாரு பாரு என அழுதான். குழந்தைகள் அழுது கொண்டே நின்றனர்.
ஆதியும் ரஞ்சித்தும் சிறுவயது தோழர்கள். அகரா, மாமா எங்க? ஆதி மீண்டும் கத்தினான்.
சாவித்ரி பயங்கரமாக சிரித்தார். எப்படியும் அவள் லேகா மாதிரி போகப்போறா? ரொம்ப சந்தோசம்.
வாய மூடுடி என்ற சவிதா, ரசிம்மா..கண்ணை விழித்து பாரு. ஆமா ரசி..எங்களை பாரு என்று மெல்லினாவும் அழுதாள்.
துகிலன் போலீஸூடன் வந்தான். அவர்கள் அனைவரையும் பிடித்தனர்.
சாவித்ரி ஓரிடத்தில் மறைந்து கொள்ள, விபுதன் அவரை கண்டிபிடிக்க இமயனும் அவ்விடம் வந்து சாவித்ரியை இழுத்து வந்தனர்.
மற்ற எல்லாரும் ஹாஸ்பிட்டலுக்கு ரசிகாவுடன் கிளம்பினர். நானும் அத்தையை பார்க்கப் போறேன் என்று விபுதன் சொல்ல, விபு நேராகுமா? ரசிகாவின் அக்கா புருசன் சத்தமிட்டார்.
“வாரேன் மாமா” என்று விபுதன் செல்ல, “என்னை மன்னிச்சிருப்பா” என்று விபுதன் கையை அவன் அப்பா இமயன் பிடித்தான். விபுதன் அவன் அம்மாவை பார்க்க, வேகமாக மனைவியிடம் சென்று, இனி உனக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று விபுதனுடன் செல்ல, விபுதன் அம்மாவோ தேற்ற ஆளில்லாமல் கதறி அழுதாள்.
ஹாஸ்பிட்டலில் ரசிகாவிற்கு சிகிச்சையை முடித்து மருத்துவர்கள் கிளம்ப தமிழரசன் கண்ணீருடன் தன் நண்பன் பிரபாகரனை அணைத்து அழுதார்.
ரசிக்கு ஒன்றுமில்லையே? ஆதியும் மற்றவர்களும் பதற, தமிழரசன் எல்லாரையும் பார்த்து விட்டு ஒன்றுமில்லை. ஆனால் மாப்பிள்ளையை பார்க்க மாட்டேன்னு சொல்றா என்று அவர் சொல்ல,
எதுக்கு மாமா? என்று மெல்லினா கேட்க, ஆதி கதவை திறந்து உள்ளே சென்றான்.
ஆதி…வராதீங்க..என்று ரசிகா அழுதாள்.
என்னோட உயிரே போச்சு “ப்ளாக் மூன்” என்று ஆதி அழ, வராதீங்க ஆதி. நான் உங்களை பயன்படுத்திக் கொண்டேன் என்று அவன் கண்டறிந்து விட்டானே? வெறுத்து விடுவானோ? என பயந்து ரசிகா அழுதாள்.
எனக்கு அன்று நடந்த எல்லாமே தெரியும் ரசி. நான் வாமிட் செய்த பின் எனக்கு தெளிவு பிறந்தது. முழுதாக இல்லை தான். ஆனால் நீ என் விருப்பமில்லாமல் என்னை தொடலை ரசி. அதான் கல்யாணம் கல்யாணம் என கேட்டுக் கொண்டே இருந்தேன் என்றான் ஆதி. ஆதியை அணைத்து அழுத ரசிகா ஆதியின் கையை பிடித்து அவளது வயிற்றில் வைத்தாள்.
ரசி..ஆதி அதிர, ஆமா ஆதி. நம்ம குழந்தை தான்.
விசத்தால் பாதிப்பு இருந்திருக்குமே? அவன் கேட்க, இல்ல ஆதி. நான் சாப்பிட்டது பாய்சன் இல்லையாம். அது ஒருவகை போதை மருந்தாம். பழக்கமில்லாததால் தான் உடலுக்கு சேராமல் இரத்தம் வந்திருக்கு.
அப்ப குழந்தை? ஆதி கேட்க, அது உண்மை தான். ஆனால் பலவீனமாக குழந்தை இருக்காம். கவனமாக இருக்கணுமாம் ரசிகா சொல்ல, ரசிகா முகமெங்கும் முத்த சாரலை வீசினான் ஆதிரேயன்.
வெளியே தமிழரசன் ரசிகா சாப்பிட்டது போதை மருந்து என்று சொல்ல, அனைவரும் “அப்பாடா” என்றனர்.
இன்னொரு விசயம்டா பிரபா? என்று தமிழரசன் “ஆதிரேயன்- ரசிகா” குழந்தையை பற்றி சொல்ல, அனைவரும் அதிர்ந்தனர்.
“இதுக்கு வாய்ப்பேயில்லை” விபுதன் சொல்ல, அகரன் அவன் தலையில் தட்டினான்.
நினைச்சேன். அவ சாப்பாடு செய்யாமல் இருக்கவே மாட்டா. ஆனால் இந்த ஒரு வாரம் ரொம்ப சிம்பிள் டிஸ்ஸா தான் செய்தாள். நான் கூட பெரியதாக நினைக்கவில்லை என்று சின்ன அண்ணி சொல்ல, அங்கே வந்தாள் விபுதனின் அம்மா. எல்லாரிடமும் மன்னிப்பு கேட்டார். அனைவரும் அமைதியாக இருக்க, விபுதனும் அவன் அப்பாவும் ரசிகாவை பார்க்க உள்ளே சென்றனர் லிது நிதுவுடன்.
அத்தை, “வாழ்த்துக்கள்” என்று விபுதன் ரசிகாவிடம் கையை நீட்ட, அவள் முகத்தை தொங்கவிட்டாள்.
ஒன்றுமில்லை ரசி, நீ தவறு செய்தாலும் இதுவும் நல்லதுக்கு தான். நான் செய்த தவற்றால் உன் வாழ்க்கை அழிந்து போயிருக்கும். ஆனால் என்று ஆதியை கண்கலங்க பார்த்த இமயன், ரொம்ப தேங்க்ஸ் மாப்பிள்ள. இவருடன் சந்தோசமா இரும்மா. நானும் விபுதனும் இங்கிருந்து கிளம்பலாம் என்று இருக்கோம்.
அண்ணா, நீ எப்படி இங்க வந்த? எங்க போகப் போறீங்க? என்று கண்ணீருடன் ரசிகா விபுதனை பார்த்தாள்.
நான் எங்கே வந்தேன்? அவனுக தான் மயங்கவச்சி எங்க எல்லாரையும் தூக்கிட்டு வந்துருக்கணும். எங்களுக்கு சென்னையும் வேண்டாம். ஊட்டியும் வேண்டாம்.
“என்னை மன்னிச்சிருங்க” என்று இமயன் காலில் வந்து விழுந்தார் விபுதனின் அம்மா.
போயிருடி. உனக்கு தான் எத்தனையோ சொந்தங்கள் இருக்காங்க. அப்புறம் நான் இல்லைன்னா நீ சாகவா போற? உன்னை இப்ப கூட கட்டிக்க ஆள் இருக்குன்னு அடிக்கடி சொல்வேல்ல..போ. இதுவரை எங்க வாழ்க்கையை கெடுத்தது போதாதா? என்று இமயன் சத்தமிட்டான்.
அத்தை, இவங்களுக்கு வாய்ப்பு கொடுத்தாலும் திருந்தாத ஜென்மம் என்றான் விபுதன்.
விபு, நான் இனி யாரையும் கஷ்டப்படுத்த மாட்டேன். நானும் உன்னை மிஸ் பண்ணேன். எல்லாம் பணத்துக்காக தான் செய்தேன்.
ஓ..அதனால் தான் இப்பவும் வர்றீங்களோ? விபுதன் கேட்க, விபு என்ன பேச்சு இது? ஆதி சத்தமிட்டான்.
தம்பி என்று ஆதியிடம் வந்து, இனி யாரையும் நான் கஷ்டப்படுத்தினால் நானே வெளியே போயிடுறேன். இது சத்தியம் என்றாள் விபுதனின் அம்மா.
ரசி, உங்க சின்ன அண்ணி மாதிரி இவங்களுக்கும் மாற வாய்ப்பிருக்கு. கொடுக்கலாமா? ஆதி கேட்க, மாமா..என்று சீறிக் கொண்டு விபுதன் வந்தான்.
டேய் நிறுத்துடா, நீ உன்னோட அம்மா இல்லாம கஷ்டப்பட்டேல்ல. தெரியாதுன்னு நினைக்காத…ஆதி சொல்ல. ஆமா மாமா. என்ன இருந்தாலும் அம்மா. எனக்கு அவங்க நினைப்பு இருக்க தான் செய்யுது. அதே போல் நம்ப முடியவில்லை.
ஒரே ஒரு வாய்ப்பு குடுடா அவள் கெஞ்ச, எல்லாரும் இமயனை பார்த்தனர். ஆனால் ரசி வீட்டுக்கு நீ செல்லக்கூடாது என்றார்.
நீ இங்கே இருந்தால் ரசி சந்தோசமா இருப்பா. உங்களுக்கான ஷேரில் இருக்கும் ஹோட்டலை அண்ணன், தம்பி பார்த்துக்கோங்க என்றான் ஆதி.
சக்தி? ரசிகா கேட்க, ஆமா, அவன் எங்கே போனான்? இமயன் வெளியே வந்தான். ஹாஸ்பிட்டலுக்கு வெளியே உடைந்து அமர்ந்திருந்தான் சக்தி. அவன் அம்மா, அப்பா உண்மையானவர்கள் இல்லை. தம்பி போல் பழகிய செக்கரட்டரியும் அவனுக்கு துரோகம் செய்து விட்டான். விரும்பிய ரசிகாவும் அவனுக்கு தங்கையாகி விட்டாள். என்ன வாழ்க்கை இது? என்று நொந்து இருந்தான்.
இமயன் பின்னே வந்த ஆதி, என்னடா அவ்வளவு தானா? டி குரூப் சேர்மனாக விருப்பமில்லையா? என்று கேட்டான். இமயன் இருவரையும் பார்த்தான்.
சாரிடா ஆதி, உன்னுடன் போட்டியிட்டு போட்டியிட்டு நான் முட்டாளாக இருந்திருக்கேன். பாரேன் அவங்க என்னோட அம்மா, அப்பாவே இல்லையாம் என்று ஆதியை அணைத்து அழுதான் சக்தி.
சரி, நீ இப்ப என்ன சொன்ன? நான் சேர்மனா? நான் அவன் குடும்பமே இல்லையே?
ஆமா, ஆனால் நீ உழைத்த “டி குரூப்”பை இழக்கணுமா? அதற்கென இப்ப யார் இருக்கிறார்கள்? நான் உனக்கு உதவுகிறேன். நீ அங்கேயே முழுப்பொறுப்பையும் உன் குடும்பத்தினருடன் சேர்ந்து நடத்தலாமே?
மாப்பிள்ள என்ன சொல்றீங்க? இமயன் கேட்க, உங்களோட ஹோட்டலையும், இவனோட ஹோட்டலையும் நீங்க பொறுப்பெடுத்துக்கோங்க. உங்க தம்பி கிரியும், மூன்றாவது தம்பி சக்தியும் நல்லா படிச்சிருக்காங்கல்ல. அவங்க மற்ற எல்லாத்தையும் பார்த்துப்பாங்க என்றான் ஆதி.
ஆதி, இதை எடுத்து நடத்தலாமா? கேஷ் ஆகாதா? சக்தி கேட்க, நடத்தலாம். ஏன்னா..இதனுடைய உண்மையான ஓனரே நீங்க தான்.
என்ன? இமயனும், அங்கு வந்த கிரி, அருந்ததி, அவர் கணவர் ஷியாம் அதிர்ந்தனர்.
ஆமா, இதுவும் உங்களுடைய சொத்து தான். விவரம் தெரியாமல் உங்க தாத்தா தான் ராஜபாண்டி பெயருக்கு மாற்றி கொடுத்திருக்கார். இப்ப தான் என் அப்பா என்னிடம் எல்லா விவரத்தையும் சொன்னார். ஷியாம், நீங்களும் இவர்களுடன் சேர்ந்து கொள்ளுங்கள். ஆனால் ஒத்துமை தான் அவசியம். மற்ற எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன் என்றான் ஆதி.
ரசிகா- துகிலன் இருவருக்கும் விவாகரத்து கிடைத்து விட, ஆதிரேயன்- ரசிகா, தாருண்யா-துகிலன் திருமணம் நடந்தது. மெல்லினா- அகரன், திரிவேஷ்- சுரேகா காதலர்களாக வலம் வந்தனர்.
அகரா, இந்த விபுவை அண்ணியிடம் போட்டுக் கொடுக்கணும். சும்மா என்னை தூது அனுப்புறான் மெல்லினா அகரனிடம் சொல்ல, என்னறிவு ஜீவியே? என்னோட அக்காவுக்கு பிரணி- விபு விசயம் தெரியும் என்றான்.
நீ தான் என்னை கவனிக்கணும்? அடுத்த மாதம் ஆண்டு வருடத் தேர்வு நடக்கப் போகுது. மித்திரனும் விபுவும் தான் முன்னிலையில் இருக்காங்க. எனக்கு படிக்க நீ தான் உதவணும்.
என்னது? எனக்கு வேலை இருக்கு. “பை” என்று அகரன் நழுவ, மெல்லினா அவனை விரட்டிக் கொண்டு வீட்டிற்குள் ஓடினாள்.
ஒரு வருடம் கழித்து திரிவேஷ் திருமணம் நடந்தது.
ரசி, நம்ம பையன் என்னை போலவே இருக்கான்ல்ல? ஆதி கேட்க, ஆதி அமைதியா இருங்க. அவன் விழித்தால் நான் காலி என்றாள்.
சர்வேஷ் கண்ணா..எழுந்திரு “அம்மா கூப்பிடுறாங்க” என ஆதி வேண்டுமென்றே தன் ஆறு மாதக்குழந்தையிடம் சென்றான்.
ஷ்..”வெளிய வாங்க” என்று ஆதியை பிடித்து ரசிகா வெளியே இழுக்க, அம்மா என்று லிதுவும் நிதுவும் வந்தனர்.
லிதும்மா, “பாட்டி உங்களை கூப்பிட்டாங்கடா” ஆதி சொல்ல, அப்பா பாட்டி கோவிலுக்கு போயிருக்காங்க.
ஆதியை பார்த்துக் கொண்டே பிள்ளைகள் செல்ல, ஹே ப்ளாக் மூன், வா என்னோட ஆபிஸ் அறைக்கு போகலாம் ஆதி அழைக்க, பையன் தூங்குறான்.
ஆமா, அப்ப தான ரொமான்ஸ் பண்ண முடியும். நீ வர்றீயா? இல்லை நான் தூக்கி செல்லவா? ஆதி கேட்க. இருங்க என்று ஆதியை ரசிகா தள்ள,
என்னையவே தள்ளுறீயா? என்று அவனது வலிமையான கரங்களால் அவளை தூக்கி, என் விடியலை திரும்ப கொடுத்த என் கருப்பு நிலாவிற்கு என்னோட பரிசை அள்ளித் தர வேண்டாமா? என ஆதி ரசிகாவை தூக்கிச் சென்று அவன் அறைக்கதவை தாழிட்டான்.