“ம்ஹூம்! உங்களுக்குப் புரியாது வாசன். எனக்கது வேணும். அ..அது நீங்க வாங்கித் தந்த ஃபர்ஸ்ட் கிப்ட்! என்னை பொறுத்தவரை ரொம்ப ரொம்ப ப்ரீசியஸ். அப்போ சொன்னீங்களே என்ன கொடுக்கறோம்னு முக்கியம் இல்ல, யார் கொடுக்கறான்னது தான் முக்கியம்னு. அது எனக்கான உங்க அன்புல்லப்பா?!” வழிந்த கண்ணீரைத் துடைத்தபடி கேட்டாள்.
மனைவியின் இந்த அலைப்புறுதலிலும்,கண்ணீரிலும் நிலை கொள்ளவில்லை வாசனுக்கு.
அவனோ சாதாரண ஜிமிக்கி என நினைத்திருக்க, இப்படி பொக்கிஷமாய்ப் பாதுகாப்பவளின் அன்பில் நெஞ்சமெல்லாம் கலங்கிட கரைந்து தான் போனான்.
அதிலும் இதற்கே இத்தனை வருந்துபவள், அன்று சஞ்சனா பற்றி தான் சொல்லும் போது எப்படி அவளையே அவள் வருத்திக் கொண்டிருப்பாள் என நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை இவனால்.
தான் கொடுத்த பொருளைக் கூட தன்னுரிமையாய் வைத்திருப்பவள், அந்நேரம் அவளுக்கே உரிமையான தன்னை, பேச்சுக்காக கூட வேறு ஒருவருக்கு விட்டுக் கொடுக்க விரும்பாது எப்படி தவித்திருக்க கூடும்?
அன்று தன் கதையைக் கேட்டு அழுதவள்,அதன் பின் எத்தனை கலங்கியிருப்பாள்.?
அன்றைக்குப் பிறகான அடுத்த வந்த நாட்களில் சாதாரணமாக வளம் வந்தாளே என எண்ணியிருக்க இப்போது தான் அவளை அனைத்தும் புரிவதாய். இத்தனை நேசிப்பவளிடம் எதைக் கொண்டு நிறைப்பதாம்.. அவன் நேசத்தை தவிர?!
“வேதா”என முனகியவன் அவளையே இமைக்காமல் பார்த்திருக்க, இதற்கிடையில் சங்கரி வீட்டிற்கு அழைத்திருந்தவள், விடயத்தை சொல்லிக் கேட்க, இவள் புடவை உடுத்தவற்காக சுடிதாரைக் களைகையில் அதில் கொழுவிப் பட்டதென அங்கேயே கழட்டி வைத்து வந்து விட்டதாக கூறிய சங்கரி, சுடிதாரோடு பத்திரப் படுத்தி வைப்பதாக சொல்லி அழைப்பை துண்டித்தார்.
“ஜிமிக்கி அங்க தான் இருக்காங்க!”என அதுவரையிலிருந்த அலைப்புறுதல் நீங்கி, ஆசுவாச மூச்சுடன் மனம் லேசாக, இதழில் புன்னகையுமாய் நிமிர்ந்தவளை.. என்னவென உணர்வதற்கும் முன் தன் இறுகிய அணைப்பினுள் கொண்டு வந்திருந்தான் கீர்த்தி வாசன்.
தன் முகம் பார்க்க முயற்சித்தவளின் தலையை தன்னோடு அழுத்திய வாசன் அவள் உச்சியில் அழுந்த முத்தமிட்டான்.
உடல் சிலிர்க்க, கண் மூடியவளின் மூளை விலகச் சொல்லி கட்டளையிட்டாலும் அதற்கெதிராய் அழுத்தமாய் கணவனின் கழுத்தில் முகம் புதைத்துக் கொண்டாள் வேதவி.
தவிப்பில் ஏறி இறங்கிய அவன் ஆடம்ஸ் ஆப்பிளில் மோதியது, அவளின் மூச்சுக் காற்று.
இருவருக்கும் இதயம் உயர் வேகத்தில் படபடவென அடித்துக் கொள்ள,தம் இணையின் இதயத்தை துடிப்பை இருவருமே உணர்ந்து கொண்டிருந்தனர்.
“வா..ஸ்.. வாசா”என்றவளின் இதழ்களும்,மூச்சும் அவன் கண்டக்குழிக்குள் உரசி நின்று கண்டமாக்கின!
குறையும் தவிப்போடு முகம் முழுவதும் விரிந்து விட்ட புன்னகையுடன் அவள் முகத்தை தன்னிலிருந்து விலக்கி.. நிமிர்த்தியவன், மூடிய அவள் விழிகளைக் கண்டு, அனிச்சையாய் அதிகரித்த புன்னகையின் பரபரப்பளவை உணர்ந்து முன்பை விட அழுத்தமாய் நெற்றியில் முத்தம் வைத்தான்.
பட்டென விழி திறந்தவள் மையலேறிய அவன் விழிகளைக் கண்டு விட்டு படக்கென கண்களை மூடிக் கொண்டாள்.
உடல் குலுங்க அப்படியொரு சிரிப்பு வாசனிடம்.
இரு பெருவிரலாலும் அவளிருபக்கக் கன்னங்களை வருடிக் கொடுத்தவன், வேதவியின் கண்கள், கன்னங்கள், மூக்கு என முத்தி விட்டு அவளிதழை மிச்சம் வைத்தான்.
இது தான் சமயமென, Jugular notch -இல் தன் nose பதிய முகம் அழுத்த முயற்சித்தவளை தடுத்து.. மீண்டும் தன் முகம் காணச் செய்தான் இவன்.
“லுக் அட் மை ஐஸ் வேதா!” மென்மையான குரலும், கன்னத்தை தீண்டும் விரல்களும் அவள் கண்களின் இறுக்கத்தை இன்னுமே கூட்டின.
“இப்படியே கண்ணை மூடிட்டிருந்தா.. நான் எப்படி உன்னை கிஸ் பண்ண?” சிரித்தபடி அவள் காதருகில் கேட்டான் வாசன்.