வீட்டிற்குள் வந்தவுடன் முகுந்துக்கு கொடுக்க வேண்டிய மருந்தை கொடுத்து முடித்து.. ஓய்ந்து சரிந்த ரியானை காணக்காண அனைவரின் மனதிலும் சொல்லொண்ணா துயர் வாட்டியது.
‘தன் தம்பியின் வாழ்க்கை மட்டும் ஏன் இத்தனை பிரச்சனைகளோடு இருக்க வேண்டும்..?
Advertisement
மொத்த குடும்பமும் போன போது கூட.. அவன் இப்படி கலங்கி போக வில்லையே..!
Advertisement
அவனுக்கு உயிரான ஒரு ஜீவனும், இனி.. அவனுடையது இல்லை.. என்றால், அதை அவனால் எப்படி தாங்க முடியும்..?’ என பரிதவித்தது சந்தீப்பின் உள்ளம்.
Advertisement
ஆளாளுக்கு அவரவர் சிந்தனையில் உறைந்திருக்க,
Advertisement
நேராக அமிழ்தினியாளிடம் வந்த தனம்,
“ஒருத்தனால வஞ்சிக்கப்பட்டு.. இப்போ, இந்த குழந்தையோட உயிருக்காக என்னை காப்பாத்துங்க.. ன்னு என் முன்னாடி நின்னையே..
அப்போ, அந்த ஆள் யார்.. இந்த தம்பியா..?” என ரியானை கை காட்ட,
ஒரு நொடி அனைவருமே ஜர்க் ஆகி போயினர் தனத்தின் கேள்வியில்.
ரியானுக்கு.. அமிழ்தினியாள் சொல்லப்போகும் பதில் தான் தெரியுமே..!
அதனால் அவன் நிலை மாறாமல் அமைதியாக இதுவரை இருந்த நிலையிலேயே தொடர்ந்தான்.
‘இல்லை..’ என மறுப்பாக தலையசைத்தாள் இனியாள்.
“அப்போ.. உன்னை ஒருத்தன் ஏமாத்திட்டான்னு சொன்னது பொய்.. அப்படி தானே..?” என்று தனம் அவளை கேட்க.
“இல்லம்மா.. நான் ஏமார்ந்தது நிஜம்.. ஆனால், அது இவரால அல்ல..” என்ற அமிழ்தினியாள்..
இதுவரை தனத்திடம் மறைத்த எல்லாவற்றையும் சொல்லத்தொடங்கினாள்.
*********
“பணம்.. அது இந்த மனுஷங்கள படுத்தற பாடு.. அந்த பணத்துக்காக பொண்டாட்டி.. புள்ளை.. ன்னு விட்டுட்டு அதை தேடி ஓடற எத்தனையோ பேர்ல என்னோட அப்பாவும் ஒருத்தர்.
என்னோட அப்பா ராஜசேகர்.. அம்மா அமிர்தவள்ளி.
அம்மாவ அப்பா கல்யாணம் பண்ணும் போது அப்பா ஒரு சின்ன கம்பெனில சாதாரண வேலைல தான் இருந்தாங்க.
அம்மாவும் பெரிய வசதி வாய்ப்பு உள்ள குடும்ப பொண்ணு இல்லை.
வசதி இல்லைன்னாலும்.. நிம்மதி இருந்தா போதுமுன்னு வாழ்ந்தவங்க வாழ்க்கைக்கு அச்சாரமா நான் பிறந்தேன்.
எனக்கு ஆறு வயசு ஆகற வரை எல்லா குழந்தைங்க மாதிரியும் அன்பு, பாசமுன்னு எல்லாம் அனுபவிச்சு தான் வாழ்ந்தேன்.
அப்ப தான் எங்க அப்பாக்கு துபாய் போற வாய்ப்பு அமைஞ்சது.
அம்மாக்கு அப்பாவ பிரிஞ்சு தனியா இருக்க விரும்பமில்லாம.. அவரை போக வேணாமுன்னு தடுத்தாங்க.
அதுக்கு அப்பா, “பொண்ணை பெத்து வச்சிருக்கோம்.
ஒரு அஞ்சு வருஷம் அங்கே இருந்தா போதும்.. ஓரளவுக்கு பணத்தை சேர்த்துட்டு வந்திடுவேன்.
அப்புறம் நம்ம நல்லா வாழலாம். பொண்ணையும் நல்ல இடத்துல கட்டிக்கொடுக்கலாம்..” ன்னு அம்மாகிட்ட பேசி பேசியே சம்மதம் வாங்கிட்டு அடுத்த ரெண்டு மாசத்துல வெளிநாடு போயிட்டார்.
அதுக்கு அப்புறம்.. நானும், என் அம்மாவும் தான்.
இதுவரை எங்கேயும் தனியா போயே பழகாத என்னோட அம்மா, இனி தனியாவே எல்லாத்தையும் சமாளிக்கனும்.. அப்படிங்கற நிலை வர தடுமாற ஆரம்பிச்சாங்க.
அப்பா போன் பண்ணும் போதெல்லாம்.. அம்மா, ‘நீங்க விட்டுட்டு போய் இப்போ ஒவ்வொரு விசயத்துக்கும் நான் தனியா அல்லாடுறேன்..’ ன்னு ஓயாம சண்டை தான் போடுவாங்க.
நாளாக.. நாளாக அவர் போன் பண்ணறது கூட குறைஞ்சு போச்சு.
எப்பவாச்சும் பண்ணாலும், வேலை அது இதுன்னு.. சொல்லி, என்ன.. எது.. பணம் இவ்வளவு அனுப்பறேன்.. இப்போ என்ன தேவை..? அப்படிங்கறதோட அவர் பேச்சு வார்த்தைய முடுச்சுக்குவார்.
இப்படியே ரெண்டு வருஷம் போயிருக்கும்.
அப்பா அனுப்புன பணத்தை வச்சு.. கூட பேங்க் ஈஎம்ஐ போட்டு, வீடு ஒண்ணு வாங்கி, அந்த புது வீட்டுக்கு குடி போனோம்.
அந்த வீடு ரெஜிஸ்ட்ரேஷன், கிரகப்பிரவேசம் பங்ஷனுக்கு ன்னு மட்டும் அப்பா வந்துட்டு ஒரு மாசம் இருந்துட்டு போனாங்க.
அந்த வீட்டுக்கு குடி போய்.. சில மாசத்துல எங்க அம்மா நடவடிக்கையில சில சேன்ஜஸ் நான் பார்த்தேன்.
யாரோ ஒருத்தரோட வெளியே போறதும் அவரை வீட்டுல கூப்பிட்டு சாப்பிட வைக்கவும் இருந்தாங்க.
நான் யார்ன்னு கேட்டதுக்கு, “புது இடமில்லையா.. எனக்கு இங்கே எது எங்கே கிடைக்குமுன்னு தெரியாதே..!
அதான் இவர் எனக்கு ஹெல்ப் பண்ணறார்..” ன்னு சொன்னாங்க.
எனக்கு அப்ப எதுவும் தப்பா தெரியவும் இல்லை.
ஒரு நாள் நான் தூங்கி எழுந்து பார்க்கும் போது.. வீட்டுல அம்மா இல்லை.