பெண் இல்லாத ஊரிலே அடி ஆன் பூ கேட்பதில்லை
பெண் இல்லாத ஊரிலே கொடிதான் பூ பூப்பதில்லை
உன் புடவை முந்தானை சாய்ந்ததில் இந்த பூமி பூ பூத்தது
இது கம்பன் பாடாத சிந்தனை உந்தன் காதோடு யார் சொன்னது
புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்த கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூட குளிர்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது
நதியே நீயானால் கரை நானே
சிறு பறவை நீயானால் உன் வானம் நானே
அடுத்த நாள் காலையில் இருந்து ஒரே பரபரப்பாக இயங்கி கொண்டு இருந்தனர் அனைவரும்
ஒரு புறம் திருமணம் ஆனா பின்னர் குல தெய்வம் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்பதால் சகுந்தலா, மீனு சுந்தர், விக்கி காயு என அனைவரும் கிளம்பி கொண்டு இருக்க
“ஆமாம் பொண்ணுக்கு துணையாக அவ வீட்டு ஆளுங்கன்னு யாராவது வரணும் இல்ல… அண்ணன்கள்ல ஒருத்தரையாவது வர சொல்லுங்க” என்றார் சகுந்தலா, இனியாவின் அக்கா, மாமா வந்த பின் அவருக்கு மரியாதை குறைந்து விட்டதாக நினைப்பு அவருக்கு
அவ்ளோதானே… இதோ இருமா.. இலக்கியனை அனுப்பிவெக்குறேன் என்ற படி அவனை அழைத்து கோவிலுக்கு சென்று வரும் படி கூற… முனகி கொண்டே சரி என்றான்
மறுபுறமோ, நாளை நிச்சயம் என்பதால் மோதிரம் வாங்க..துணிகள் வாங்க என்று ஆளுக்கொரு வேலையுடன் ஒவ்வொரு பக்கம் பறந்து கொண்டு இருந்தனர்
முதலில் இருவருக்கும் மோதிரங்கள் எடுத்து விடுவோம்.. பிறகு துணி கடை செல்லலாம் என்று முடிவாக
மொத்தம் நான்கு வாகனங்கள் ஒரே நேரத்தில் வீட்டில் இருந்து கிளம்பியது.. ஒன்று கோவிலுக்கும்..மற்றொன்று கடைக்கும் சென்றது
செல்லும் போது சுந்தர் வண்டி ஓட்ட.. சகுந்தலா அவர்க்கு பக்கத்தில் அமர்ந்து கொண்டார்… அடுத்து மீனு, காயு, விக்கி அமர்ந்து கொள்ள.. அதற்கும் பின்னால் இருக்கும் சீட்டில் இலக்கியன் அமர்ந்து கொண்டான்
[the_ad id=”6605″]
“இதுக்கு தான் கல்யாணம் ஆணவனை நம்பவே கூடாதுனு சொல்லுறது.. நம்பன் பாவமாச்சே… பின்னாடி தனியா, பேச்சு துணைக்கு கூட ஆள் இல்லாமல் இருக்கானே.. அவன் கூட உக்காருவோம்னு இருக்கா பாரு” விக்கியை கரிந்து கொண்டே இருந்தவன் பார்வை எதிர்ச்சியாக முன்னால் இருக்கும் கண்ணாடியில் பட… அதில் மீனு அவனையே பார்த்து கொண்டு இருப்பது போல் தெரிய…
கண்ணை கசக்கி… மறுமுறை பார்க்க.. அவள் வெளியில் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தாள்..
“அதானே.. அவளாவது என்னை பாக்குறதாவது… பாத்துட்டாலும், பூகம்பமே வந்துடும் பாரு” என்று அவன் சலித்து கொண்டாலும்
“அப்போ அவ நம்மளை பாக்கணும்னு நாம ஆசை படுறோமா.. அவ ஏன் நம்மளை பாக்கணும்… நாம ஏன் அதை எதிர் பார்க்கணும்” என்ற யோசனை அவனுள் எழாமல் இல்லை
வழி முழுக்க ஒரு மூன்று, நான்கு முறை மீனுவின் பார்வை அவன் மேல் வந்து செல்வதை கவனித்து கொண்டு தான் இருந்தான்… ஆனால் வெளியே காட்டிக்கொள்ள வில்லை.. கள்வன்
“பதிலாக.. தன்னுள் என்ன இது மாற்றம்.. எப்போதில் இருந்து… இது சரியா.. அதுவும் சகுந்தலாவின் மகள் வேறு… அண்ணனுக்கு முடிவு செய்யும் நிலையில் வேறு இருந்தவள்.. தன்னை ஏற்பாலா” என்ற பல கேள்விகள் அவனுள் ஓடி கொண்டு தான் இருந்தது
முதல் முறை அவனின் விழியை சந்தித்தவளுக்கு, மறுபடியும் அந்த வாய்ப்பு கிடைக்குமா என்று இலக்கியனையே அடிக்கடி பார்க்க… அவன் எதோ ஒரு யோசனையில் வெளியே பார்த்து கொண்டு இருந்தான்
கோவில் வர இறங்கியவர்கள்… முதலில் பொங்கல் வைக்க பெண்கள் எல்லாம் செல்ல.. மறந்தும் கூட இலக்கியன் மீனு அருகில் செல்ல வில்லை… அவளை பார்க்கவும் இல்லை
விக்கியூடன் அந்த குளத்தருகே அமர்ந்து கிண்டவனுக்கு.. மீனுவை பற்றிய குழப்பம் தான்
தூரத்தில் பொங்கல் வைத்து கொண்டு இருக்கும் தன் மனைவியையே கண் கொட்டாமல் பார்த்து கொண்ட விக்கியை கண்ட இலக்கியன்…
“எப்படி இவனால இப்டி காதலிக்க முடியுது… இப்டி உருகுரானே எப்படி” என்ற கேள்வி வர
“மச்சா..நீ காயுவை விரும்புறேன்னு எப்போடா கண்டு பிடிச்ச” என்றான் விக்கியை பார்த்து
“என்னடா புதுசா கேக்குறே… அவ சின்ன புள்ளைல இருந்தே எனக்கானவ தானேடா” என்றான் மிகவும் கூலாக
“அப்டி இல்லடா.. ஒரு நேரத்துல தோணி இருக்கும்ல.. இப்போல இருந்து நாம அவளை காதலிக்குறோம்னு, அது எப்போல இருந்து, எப்படினு கேக்குறேன்” என்றான் தெளிவாக
காதலுக்கு இந்த நேரம் வரணும்.. இந்த நேரம் வர கூடாது.. இப்டி வரணும்.. அப்டி வரணும்னு எல்லாம் கிடையாதுடா.. எந்த ஒரு நிமிஷத்துல உன்னால இவ இல்லாம இருக்க முடியல..அவளை தவற விட்ட செத்துடனும்னு தோணுதோ.. அப்போவே உன் மனசுல அவ ராஜ்யம் பண்ணிக்கிட்டு இருக்கானு அர்த்தம்
அப்டி இல்லடா.. காயுகும் உனக்கும் அப்டி கல்யாணம் ஆகும்னு நீ நம்பின.. ஏன்னா.. மீனுக்கும் அன்புக்கும் கல்யாணம் பேசி கை கூடமா போனதுலயே அதை செம கோவத்துல இருந்தாக.. எப்படி தைரியம் வந்துது உனக்கு “என்றான் வியந்த படி
அந்த தைரியத்தை காதல் தான் மச்சான் குடுக்கும்..எந்த நொடில அவுங்கள நமக்கு பிடிக்கும்னே நமக்கு தெரியாது.. எல்லாரும் சொல்லுவாங்க இல்ல..அழகுல தான் காதல் வரும்னு
அதை நான் ஒதுக்கவே மாட்டேன்.. சிலரோட அழுகைள நமக்கு அவுங்க மேல காதல் வரும், சிலரோட கோவத்தை பார்த்தா புடிச்சி போகும், சிலரோட திமிரு, சிலரோட வெக்கம்ல கூட பிடிச்சி போகும்… அதுக்கு அப்றம் அசுர பலமும் தைரியமும் வரும்.. அதுல நீ யாரை வேணும்னாலும் எதிர்க்குற தெம்பு கிடைக்கும்…
என்னையே எடுத்துக்கோ…எலிக்கு பயப்படுற ஆளு..எலி மருந்து குடிச்சிட்டு சாக போகல…வேற ஒரு நேரத்துல என்னை எலி மருந்து குடித்து சாக சொல்லி இருந்தா.. முடியாது போடானு போயிட்டே இருந்து இருப்பேன்.. ஆனால் இது காதல்.. வாய்ப்பில்லாது எல்லாமே இதுல சத்தியம்”என்று கூறி கொண்டே இலக்கியனை பார்க்க.. அவன் முகத்தில் குழப்பம் தெரிய
“இப்போ உனக்கு புரியாதுடா.. புரியுற நாள் வரும் போது..அலையில் அடிச்சிக்கிட்டு போகுற சங்கு மாதிரி ஸதம்பிது போய்டுவா” என்றான் அவனின் கையை பற்றி உறுதியாய்
“அதற்குள் அங்கு வந்தா மீனு.. அண்ணா வாடா.. பொங்கல் வெச்சாச்சு.. சாமி கும்பிட கூப்டாக” என்றதும் விக்கி எழுந்து சென்று விட
அப்போதும் காதில் விழாமல் குழம்பியே இருக்கும் இலக்கியனை பார்த்தவள் “இளா மாமா.. உங்களையும் தான்.. எழுந்து வாங்க.. சாமி கும்பிடனும்” என்றாள் லேசாக சிவந்த கன்னத்தோடு
[the_ad id=”6605″]
அவள் இளா மாமா என்று அழைத்தது… சிறிது நேரம் கழித்தே அவனின் மரமண்டைக்கு உரைக்க… கால் அதுபோக்கில் மீனுவின் பின்னால் சன்னிதானத்திற்கு செல்ல
“இவ என்ன புதுசா மாமான்னு கூப்டுறா… அம்பை கூட மாமான்னு கூப்பிட்டது இல்லையே” என்று குழம்பிய படியே பூஜைக்கு போய் நிற்க
அவனுக்கு நேர் எதிரில் நின்றாள் மீனு.. அவன் கண் மூடி சாமி கும்பிடும் நேரம் தன் மனதை எதோ உறுத்துவதை போல் தோன்ற.. ஒற்றை கண்ணை மட்டும் திறந்த்து பார்க்க…மீனு அவனையே பார்த்து கொண்டு… இவன் கண் திறந்த நேரம் அவனை பார்த்து கண்ணடித்து வைக்க
ஒரு நிமிஷம் நிலை தடுமாறி நின்றான் என்று தான் கூற வேண்டும்.. அதன் பின்னர் மீனு சகஜமாக இருந்து விட… தன்னுடைய மன பிரமை தானோ என்று வேறு குழம்ப ஆரம்பித்தான்
“இதுக்கு மேல இங்க இருக்க கூடாதுப்பா… விட்டா கிறுக்கன் ஆகிடுவாங்க போல” என்ற படி அருகில் இருக்கும் கொடி கம்பத்தின் கீழ் நின்று கொண்டான்
“நமக்குள்ள என்ன நடக்குதுனே நமக்கு புரியலையே..அதுக்கு தான் காதலிக்காம இருக்கணும்னு சொல்லுவாங்க போல… எவ்வளவு பாடா படுத்துது” புலம்பிய படியே அங்கு நின்று இருந்தவனை தூரத்தில் ஒருத்தி பார்த்து சிரிக்க
“அட நம்மளை கூட பார்த்து சிரிக்குறாளே” என்ற படி அவளை பார்த்து சிரிப்பதும்.. வெக்க படுவதும்.. கை காட்டுவதுமாக இருக்க
இவை அனைத்தையும் கவனித்தவன்.. காயவை அழைத்து… “அங்க பாரு உன் அண்ணனை..கோவிலுக்கு பயன் சாமி கும்பிட வரான்னு பாத்த.. இங்க வந்தும் நாயி என்ன வேலை பாக்குது பாரு… இவனை எல்லாம்” என்று தலையில் அடித்து கொண்டு… சிரித்த படியே பிரகாரத்தை சுற்றி வர கிளம்ப..
சகுந்தலாவும், சுந்தரும் கோவிலை சுற்ற சென்று விட… தீயென வந்த கோவத்தில்… படபடவென இலக்கியனை நெருங்கிய மீனு
மாமா..மாமா என்று இருமுறை அழைக்க.. இலக்கியன் அந்த பெண்ணோடு கொஞ்சி கொண்டே நிற்க… இறுதியில்
“டேய் எரும” என்றான் சற்று சத்தமாக..
அதில் திடுக்கித்து திரும்பிய இலக்கியன்… மீனு நிற்பதை பார்த்தவுடன் இதயம் பல மடங்கு வேகமாக துடிக்க…வயிற்றில் எதோ ஒரு சொல்ல முடுயாத உணர்வு வர… அதை அனைத்தையும் மறைத்தவன்
“உங்க அண்ணன் அங்க இருக்கான் மீனு.. அங்க போய் தேடு” என்றான் வெலந்தியாக
நான் உன்னை தான் கூப்பிட்டேன்… என்றாள் உக்கிர கோவத்தில்
என்னையா.. யு மீன் மீ என்றான் கொஞ்சம் திமிராகவே
அதில் இன்னும் கடுப்பான மீனு.. “இதோ பார்.. இன்னொரு வாட்டி எல்லாம் சொல்ல மாட்டேன்.. ஒரே தடவை தான் சொல்லுவேன்..
என்னை தவிர வேற ஏவலயாச்சும் காதலிக்க நீ ட்ரை பண்றே.. இல்ல பின்னால போகுறனு தெரிஞ்சது… அதுக்கு அப்றம் போக கால் இருக்காது… பாக்க கண்ணும் இருக்காது… நியாபகம் வெச்சிக்கோ” என்றாள் கிட்ட தட்ட மிரட்டும் தோணியில்
அவள் கூறியது புரிய சில வினாடி ஆகி இருக்க…அதன் பின் தான் புரிந்தது இலக்கியனுக்கு…புரிந்த பின் திடுக்கிதவன்
என்னாது.. வேற பொண்ணை பார்க்க கூடாத.. தோடா.. மேடம் சொன்ன உடனே நாங்க கேட்கணுமா… அதெல்லாம் முடுயாது முடியாது என்றான் கையை ஆட்டி கொண்டே
ஆட்டிய அதே கையை முறுக்கும் விதத்தில் பிடித்த மீனு… லேசாக வலியில் அவன் துடிக்கும் வண்ணன் அழுத்தத்தை கூடியவள்…
“முடுயாதா..அப்போ கை கால் இல்லாமல் முடமா சுத்த தயாரா இரு… கடைசியா சொல்லுறேன்.. உன்ன எனக்கு பிடிச்சி இருக்கு.. நான் வாழ்ந்தா உன்னோட தான் வாழ்வேன்..ஒழுங்கா உன்னோட வாலை எல்லாம் சுருட்டிக்கிட்டு ஒழுங்கா நடந்துக்கோ… சொல்லிட்டேன்” கையை விட்டவள் தன் ஒற்றை விரலால் எச்சரித்தே சென்றாள்
செல்லும் அவளை பார்த்த படி.. தன் கையை நீவி விட்டவன்… இதழில் சிறு புன்னகையுடன் “ரவுடி” என்னமா கோவம் வருது…
“போடி போ.. நானும் பாத்துக்குறேன்..அவ்வளவு சுலபமா நான் ஒதுக்க மாட்டேன்..ஏன் கையை முறிச்ச இல்ல…இதுக்கு நீ அனுபவிப்ப மகளே..” என்றவன்
தனக்கு நேரே வரம் அருளும் வகையில் அமர்ந்து இருந்த அந்த அம்மன் கண்ணில் பட
“இவ இல்லாம என்னால இருக்க முடியாதுனு புரிய வெச்சது நீங்க தான் தாயி.. அவ காதலையும் உங்க முன்னாடி தான் சொல்லி இருக்கா…எங்க விஷயம் மத்தவங்கள மாதிரி அவ்வளவு சுலபமா நடக்க கூடிய காரியம் இல்லை… நெறைய பிரெச்சனைகள் வரும்.. கஷ்டங்கள் வரும்…அதை தாங்குற சக்தியை ரெண்டு பெருகும் குடு தாயி” என்று மனதிலேயே பிராத்தனையும் செய்து கொண்டான்
அதற்குள் கிளம்பலாம் என்று அனைவரும் முடிவு செய்ய..பொருட்களை வண்டியில் எடுத்து வைத்து கொண்டு இருக்கும் காயுவை நெருங்கிய இலக்கியன்
“காயூ.. நான் சப்போஸ் காதலிக்குறேன்னு ஒரு பொண்ணோட வந்து நின்னா நீ என்ன பண்ணுவ.. அது உனக்கு சுத்தமா பிடிக்காதா பொண்ணா இருந்தா? ” என்றான் உள் அர்த்தத்தோடு
செய்யும் வேளையை விடுத்து… இலக்கியனை இரண்டு நொடி பார்த்தவள்..
[the_ad id=”6605″]
“கிளம்பலாம் அண்ணா… வெயில் ஏறுது பாரு… வீட்டுக்கு போகலாம் கிளம்பு” என்று விட்டு வண்டியில் ஏறிக்கொண்டாள் காயூ
அவள் பார்த்த பார்வையின் அர்த்தத்தை எவ்வளவு முயற்சித்தாலும் புரிந்து கொள்ள முடுயவில்லை இலக்கியனால்…
“எதுக்கு இவ இப்டி சொல்லிட்டு போறா.. இதுக்கு என்ன அர்த்தம்….நான் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்லையே.. அதுக்கு தான் இந்த பொண்ணுங்க கூட சாவகாசமே வெச்சிக்காம நிம்மதியா இருந்தேன்… இப்போ பாரு.. ஆளுக்கொரு பக்கம் புலம்ப விட்டுட்டாங்க” புலம்பிய படியே அவன் வண்டியில் ஏறினான்
மாயம் தொடரும்……