ஏற்காட்டில், புதிதாக இங்கிருந்து ஒரு மனேஜரை நியமனம் செய்திருந்தான்.
இன்னும் சீசன் தொடங்க ஒரு மாதமே உள்ள நிலையில், இந்த ஏற்பாடு தேவையாக இருந்தது. ஏற்காடு பொறுத்தவரை, பெரிதாக கூட்டம் எல்லாம் வராது. ஆனால், பெரிய தலைகளின் வரவுகள் அதிகம் இருக்கும்.
மார்ச்சிலிருந்து ஜூன் வரை தான் ஜனத்திரள் அதிகம் இருக்கும். மராமத்து பணிகள் என அவனை அடுத்த ஒரு வாரமும் பிசியாக வைத்திருந்தது.
அவன் தன் பணிகளை எண்ணிய படியே, சரியான நேரத்தில் முடித்து இதோ இப்போது தான் இறங்கிக் கொண்டிருக்கிறான்.
ஆயிற்று துர்கா சென்று, உமா அவர்களை பார்த்து வந்து ஒரு வாரம் முடிந்தும் இருந்தது. அவளை ஷோ ரூம் போவதை நிறுத்தவில்லை மகி.
வினோ கூட “ஏன் டா, அதான் வேலை முடிந்துவிட்டதே, ஏன் அவர்களை கஷ்ட்ட படுத்த வேண்டும்” என்றான்.
மகி ”பராவயில்லை டா பார்த்துக்கலாம்” என்றான் யோசனையாக. என்னமோ கூடவே வைத்துக் கொள்ள தோன்றியதோ துர்காவை. இப்போது கொஞ்சம் ஓபன் டாக் சென்று வரவும் சொல்லியிருந்தான் துர்காவிடம்.
வினோவிடமும் மகி எப்போதும் எச்சரித்துக் கொண்டே ‘கேர் புல் டா, துர்க்காவ உன் கண் பார்வையிலேயே வை, எங்கயும் தனியே அனுப்பாதே” என்பான்.
ஆம், துர்காவிடம், அவ்வபோது போன் செய்தும் பேசியிருந்தான் மகி. தேவையானவை மட்டும் என்ற வகையிலாவது அவர்களிடம் பேச்சு வந்தது.
விவேகனின் ஆட்கள் வினோ, மற்றும் உமா அவர்களின் மீது கண் வைத்திருந்த போதிலும், இவர்களின் செயலை கண்டு பிடிக்க முடியவில்லை.
ஏனெனில் துர்கா அவர்களின் கண்காணிப்பு வட்டத்திற்குள் இல்லை. அதனால், அவள் சென்று பேசிய போது அவள் யார் என்று தெரியவில்லை அவர்களுக்கு.
அன்று, விவேகன் அவசர வேலைகள் எல்லாம் முடிந்து, ஏதோ யோசனையில் இருந்தான். அப்போது உள்ளே வந்த கதிர் அடுத்த மீட்டிங்க பற்றி சொல்ல.
விவேகன் “என்னண்ணா, மகேஷ்வரன் பற்றி ஏதாவது நியூஸ் இருக்கா” என்றான்.
“என்னப்பா, எல்லாம் நம்ம கையில் ரெடியா இருக்கு நீ சொல்லு தட்டிடலாம்” என்றார்.
விவேகன் தன் கைகளை தூக்கி நெட்டி முறித்தவாறே “ரொம்ப நாளாச்சுன்னா, ம்…. ஏதாவது செய்யணும்” என்றான் ஆசுவாசமாக.
எனவே விவேகன், “கதிர்ன்னா, பேசாம வைபவ கூப்பிடுங்க, ம்…. இந்த மகேஷ்வரன் கணக்கை முடிச்சிடலாம்.
முதலில் வைபவ கம்பளைன்ட் கொடுக்க சொல்லி, ஷோ ரூம முதலில் மூடிவிடுவோம்.
அப்புறம் கம்பெனிகாரனுக்கு ஆபிஷியல், mail போடுங்க, இவர்கள் இடம் பிரச்சினைக்கு உரியது என, கூடவே கம்ப்ளைன்ட் காபியையும் அனுப்புங்க” என மூச்சு கூட விடாமல் கண்ணில் வன்மத்துடன் தான் சொல்லிக் கொண்டிருந்தான் விவேகன்.
கதிர் அப்படியே ஏதோ அருள்வாக்கு கேட்பவன் போல், பரவசத்துடன் நின்றிருந்தான். அடுக்காடுக்கான திட்டங்கள், எங்கும் எந்த தாமதமும் இல்லாமல் செய்து முடிக்கும் வேலையாட்கள் என விவேகனை சுற்றி இப்படி ஒரு வட்டம் எப்போதும் இருக்கும்.
இப்போது கதிர் ”தம்பி அந்த மகி வீட்டில் விசேஷம் வேற இருக்குப்பா, இப்போவே ஆரம்பிக்கனும்மா” என்றார்.
“அதெல்லாம் பார்த்தா முடியுமா, அது அவன் கவலை“ என்றான். வைபவ் இங்கு வருவதற்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டது.
%%%%%%%%%% %%%%%%%%%
துர்காவின் தம்பி கீர்த்திவாசனின் திருமணம் நாளை மறுநாள் என்ற நிலையில், இங்கு சேலத்தில் மகியின் வீடு நிறைந்தது. ஆம், வீடு குழந்தைகளால் கலைகட்டியது. மேட்டூரிலிருந்து அகிலின் குடும்பம் சேலம் வந்தது.
ராஜேஷ் மறுநாள் காலை வரவிருந்தான். இதோ இப்போது மகி வந்து விடுவான்.
துர்காவின் அப்பா வரதராஜன் நேற்றே அனைவருக்கும் போன் செய்து சொல்லி இருந்தார். ‘நாளை காலை மண்டபத்துக்கு போகிறோம் அனைவரும் வரவேண்டும்’ என.
அதனால் அகில் வந்துவிட்டான். மகிக்கும் அழைத்து சொல்லிவிட்டார்.
துர்காவிற்கு மகி, தன்னுடன் வருவானா தெரியாது. அதனால், நாளை காலை அம்மா வீடு செல்வதாக இருந்தது. அதற்கு தேவையானது எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.
நித்யா, குழந்தைகளை அங்கேயே உறங்க வைத்துக் கொண்டிருந்தாள். மகி அப்போது தான் வந்தான். வைதேகி அவனை கவனித்தார்.
மகி “வாடா அகில், என்ன தீடின்னு வந்திருக்க” என்றான்.
அகில் சுற்றும் முற்றும் பார்த்தான். “என்ன மகி, அண்ணியோட தம்பி கல்யாணம் நாளை மறுநாள்” என்றான். ரகசிய குரலில்.
“ஓ மறந்திட்டேன்” என்றான், அவ்வளவே. “சரி, நான் போய் பிரெஷ்ஷாகி வரேன்” என சொல்லி சத்தமில்லாமல் மேலே சென்றுவிட்டான். இப்போது தான் அவனிற்கு நியாபகம் வந்தது. தனது மாமனார் போன் செய்ததை மறந்துவிட்டான்.
நித்யாவும் துர்காவும் வெளியே வர, அகில் யோசனையுடன் அமர்ந்திருப்பதை பார்த்தனர். துர்கா தான் “வாங்க சாப்பிடலாம்” என்றாள் அகிலை பார்த்து.
“இல்ல அண்ணன் வரட்டும், மேலே தான் இருக்காங்க” என்றான். இவர்களுக்கு மகி வந்தது தெரியாது. எனவே துர்கா “ஓ” என்றாள்.
வைதேகி உறங்க சென்றுவிட்டார், நாடகன் ப்ரியன் மட்டும் பெரியம்மா அறையில் தன் பணி செய்துக் கொண்டிருந்தான். கொஞ்ச நேரம் சென்றது காணம் மகியை. தானே போய் அழைத்து வந்தாள் துர்கா.
அவனும் போன் பேசியபடியே இறங்கி வந்தான். அகிலுடன் அமர்ந்து உண்டான், அகில் உண்டு முடித்து எழுந்து, படுக்க சென்றுவிட்டான். ஆம், மகி இன்னும் உண்டு கொண்டிருக்கிறான்.
மணி 10:30 நித்யாவும் இவளும் நின்றுக் கொண்டிருந்தனர். இவனும் பேசிக் கொண்டே இருந்தான். நித்யாதான், செய்கையில் மணி பாருங்க என்றாள். பின் தான் உணர்ந்தவன் எழுந்து கொண்டான்.
பேசியை கையில் வைத்துக் கொண்டே “ஸ்ரீ சாப்பிட்டு மேலே வா” என சொல்லி சென்றான். இன்னும் அவன் பேசி முடிக்கவில்லை. அப்போதே நித்யா, துர்காவை பார்த்து கண் சிமிட்ட, சற்று நெளிந்தாள் துர்கா.
நித்யாவும் அவளும் உண்டு முடித்து, எல்லாவற்றையும் ஒதுங்க வைத்து, அவனிற்கு, பழம் எடுத்து மேலே சென்றாள் துர்கா. நித்யா அவளை பார்த்து கள்ள சிரிப்பு சிரிக்க, துர்கா அவள் தலையில் வலிக்காமல் கொட்டினாள்.
நித்யா ‘ம் ம்” என்றாள். அப்போதும் வெட்க சிரிப்பு வந்தது தான், ஆனாலும் தன் நிலை தனக்கு தானே தெரியும் என துர்கா சிரித்தே கடந்துவிட்டாள்.
மேலே அங்கு இன்னும் பேசிக் கொண்டிருந்தான். துர்கா கதவை தட்ட அவனை காணும், தானே திறந்து கொண்டு உள்ளே சென்றாள். அவன் பால்கனியில் நின்று பேசிக் கொண்டிருந்தான்.
கிட்ட தட்ட ஒன்றரை மணி நேரமாக பேசிக் கொண்டிருக்கிறான். ‘அவன் முன் போய் நின்றாள்’ அவளை பார்த்ததும், அவன் கண்கள் அதிசையமாக பார்த்ததோ, ஒரு நிமிடம் ஒளிர்ந்ததோ, என்னவென தெரியவில்லை ஆனால் கண்டிப்பாக அவன் கண்கள் ஏதோ பேசியது, அதை துர்கா உணரும் முன் சட்டென மாறினான்.
போனில் ‘வைக்கிறேன்’ என ஏதோ சொல்லி பேச்சை முடித்துக் கொண்டான். தன் கைகட்டி அவளையே பார்த்தான், ஏதும் பேசாது. அந்த பார்வையை எதிர் கொள்ள முடியாமல் துர்கா, அவனிடம் கொண்டு வந்த பழத்தை நீட்ட…
அவள் கையிலிருந்து பழத்தை வாங்கி கொண்டவன். நேரடியாக கேட்டான் ”ஏன் உன் தம்பி கல்யாணம்னு சொல்லமாட்டியா, என்ன செய்யணும் நாம்” என்றான் பார்வையில் இருந்த நேசம் வார்த்தையில் இல்லாமல்.
துர்காவிற்கு செம கோவம். என் தம்பி கல்யாணத்தை கூட நான் தான் சொல்லணும் என கோவம். என்ன சொல்ல முடியும் இந்த நிலையில் சண்டையா போடா முடியும். சற்று நேரம் அமைதியாக இருந்தாள். தன் நிலை குறித்து அவளிற்கே வருத்தம் வந்தது.
நீண்ட நாள் திருமண வாழ்க்கையில், இப்போது தான் பேச்சுகளே தொடர்கிறது. அதற்குள் சண்டையிட அவளிற்கு மனமில்லை, இந்த சுமுக நிலையையும் கெடுத்துக் கொள்ள அவள் விரும்பவில்லை. நாளை தம்பியின் திருமண வேறு, எனவே எப்போதும் போல், தனது கோவம் மறைத்தாள்.
இவன் இப்படி தான் தெரியும், என்ன செய்ய முடியும் என நினைத்துக் கொண்டாள். அவன் தன் பதிலை எதிர்பார்த்து நிற்பது தெரிந்து “எனக்கு தெரியலை, அத்தையை கேட்கவா” என்றாள்.
மகி ”வேண்டாம், ஒரு ஐந்து பவுண்ல ஏதாவது செய்திடு” என்றான்.
இப்போது தம்பியின் ஆசை நினைவு வந்தது. இவனிடம் கேட்க கொஞ்சம் தயக்கமாகவும் இருந்தது. ஆனாலும், தன் தம்பியை மனதில் கொண்டு “தங்கத்துக்கு என்ன குறை. அங்கு நிறையவே இருக்கு, நீங்க, உங்களுது மாறி வண்டி ‘ராயல் எனபீல்டு’ வண்டி தான் கேட்டான்.” என்றாள்.
தனது கட்டிலில் அமர்ந்து அவள் பேசுவதை சுவாரசியமாக பார்த்துக் கொண்டிருந்தான் கணவன். இப்போது கொஞ்சம் அமைதியானான், லேசாக சிரித்த வண்ணம் ‘நான் கேட்டப்போ எதுவும் சொல்லல’ என நினைத்தவன் வாக்கு வாதம் செய்யாமல்.
“சரி எடுத்துக்கலாம்” என்றான். திரும்பவும் போன் வர ”வேற, ஏதாவது இருக்கா” என்றான் போனை பார்த்த படி.
துர்கா “நாளைக்கு காலையில் நான் அம்மா வீட்டுக்கு போறேன், அங்கிருந்து மண்டபம் போகணும். அம்மா வர சொல்லி இருந்தாங்க” என்றாள். அவன் எதிரில் நின்ற படி ஸ்கூல் படிக்கும் பிள்ளை போல்.
மனதை இப்போது தான் என்னமோ செய்தது மகிக்கு, கொஞ்சம் இப்போது தான் நேசம் கலந்த பார்வையே பார்க்கிறான், ஆனாலும் அவள் தன்னிடம் நெருங்கவில்லை என தோன்றியது அவனிற்கு.
கொஞ்சம் எதிர்பார்க்க தொடங்கினான் மகி, ஆனால் அவள் பார்வை, ஒரு ஆசிரியருக்கும் பதில் சொல்லும் மாணவி போல் அவளின் தோற்றம் தெரிய, நான் என்ன செய்யவில்லை இவளிற்கு, வெளியே நன்றாக தானே பேசுகிறாள். இங்கு வந்தால் மட்டும் முகம் அப்படியே மாறிவிடும், ஏதோ என்னை கொடுமைகாரன் போலவே பார்ப்பது. என தோன்றியது.
இவள் வருடகானக்காக அவன் முகம் பார்த்தது எல்லாம் இப்போது வசதியாக மறந்தது. ஏதோ, நேற்று இன்று தான், இவள் முகம் பார்த்து பேசுபவனுக்கு, தன் மனைவி தன்னிடம் ஒன்றும் கேட்டகவில்லை, சிரிக்கவில்லை என ஆற்றாமை.
சுறுசுறுவென கொஞ்சம் பற்றியது அவனுள். “ஏன், நான் வர வேண்டாமா, உன் அப்பா எனக்கு போன் செய்து சொல்லியிருந்தார், நீ வேண்டாங்குற” என்றான் சற்று ஆற்றாமையாய்.
துர்கா பதறிவிட்டாள் “அய்யோ பாவா, நான் அப்படி சொல்லல, நீங்க வருவீங்கன்னு தெரியல, அதான் சாரி “ என ஏதோ உளறி “காலையில்“ என தொடங்கி எப்போது போக வேண்டும் என சொல்லிக் கொண்டிருந்தாள்.
மகி ‘ம், சரி’ என கேட்டுக் கொண்டான். இவள் போய் படுக்கலாம் என நினைக்க, அவனிற்கு அவளை அனுப்பவே மனதில்லை போல் “அப்புறம், அந்தம்மா என்ன சொன்னாங்க” என்றான் பேச்சை வளர்க்கும் விதமாக.
இப்போதும் பொறுமையாக, நின்றுகொண்டே சொல்ல தொடங்க, “உட்கார் எனும் விதமாக’ கண் காட்ட, அமர்ந்து கொண்டு இப்போது சற்று திடம் வர பெற்றவளாக அனைத்தையும் சொல்லிக் கொண்டிருந்தாள்.
மகி அதையெல்லாம் கேட்டது போல் தெரியவில்லை, ஒரே பார்வையாக பார்த்திருந்தான். அவளை பார்க்க கூடாது என தான் நினைக்கிறான். முடியவில்லை.
ஏதோ அவனை ஈர்ப்பது போல் இருந்தது. அதே ஒடிசலான தேகம் தான், அடர்த்தியான அளவான கூந்தல் தான், காலையில் கட்டியிருந்த புடவையே தான் இன்னும், கொஞ்சம் கலைந்து இருந்தது வேலை செய்ததால். கையில் செல்லுடன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
இவள் எல்லாம் சொல்லி முடித்து. ‘என்ன’ எனும் விதமாக, கண்ணால் கேட்க, என்ன சொல்வான் இவன், “இல்ல போதும் நீ கிளம்பு” என்றான். விரட்டுவது போல.
அப்பா, விட்டால் போதுமென இவளும் வந்து விட்டாள். ஏதோ லேசாக சிரிப்பு வந்தது அவள் முகத்தில். தன்னை தேடுகிறான் என்ற எண்ணம் வந்தது.
மகியும் தன்னை நினைத்தே சிரித்துக் கொண்டான் விரைவிலேயே உறங்கி விட்டான்.