துர்காவிற்கு இது விபத்து என்று தான் நினைத்துக் கொண்டிருக்கிறாள். அங்க நடந்து அவளிற்கு தெரியவில்லை. மேலும் தெரிந்து கொள்ள அவள் விழயவில்லை.
அதனால் இரவில் இது ஒரு விபத்து என்றே போலீசிடம் கூறி இருந்தாள். காலை 10 மணி போலே போலீஸ் வந்தது விசாரிக்க. அகில் மட்டும் தான் இருந்தான். மகியின் ரூமின் வெளியே, நித்யாவும் துர்காவும் வெளி வராண்டாவில் இருந்தனர்.
மகி இப்போதான் நினைவு வந்திருப்பதால் அவனிடம் தான் விசாரிக்க சென்றனர். மகி தன்னிடம் கேட்ட எல்லா கேள்விக்கும் “இது ஆக்சிடென்ட்“ என்னும் பதிலையே திரும்ப திரும்ப சொன்னான்.
அருகில் இருந்த அகிலிற்கு தான், சந்தேகம் வந்தது. வந்த போலீஸ் சென்றவுடன் “என்ன மகி, உண்மைய சொல்லமாட்டியா, யார காப்பாத்திற” என்றான்.
மகி சோர்ந்து போனான், “போ“ என்னும் விதமாக கையை காட்டி கண்ணை மூடிக் கொண்டான். மனது அவன் வசம் இல்லை. உடல் வலி தாங்க முடியவில்லை.
மருந்தின் உதவியால் வலிகள் சில சமயம் தெரிவதில்லை, ஆனாலும் விழிப்பு வரும் போதெல்லாம் ஏதேதோ வேண்டாத யோசனை, எதையோ தேடுகிறான். பின் சோர்ந்து கண்ணை மூடிக் கொள்கிறான்.
மகியின் அருகில் யாரையும் நெருங்க விடுவதில்லை. அதனால் அகிலும் கிளம்பிவிட்டான்.
அகில், இப்போது துர்காவிடம் வந்தவன் “என்ன ஆச்சு, மகி எதுவும் சொல்ல மாட்டேன் என்கிறான், நீங்க ஏதாவது சொல்லுங்க அங்க என்ன நடந்தது” என கறார் குரலில் தான் கேட்டான் அகில்.
துர்காவிற்கு இப்போது தான் வேறு விதமாகவே சிந்தனை சென்றது, தாங்கள் வரும் வழியில் நடந்தை சொன்னாள், பின் தானே அகிலிடம் கேட்பது போல் “ஒரு வேளை இது அந்த விவேகனின் வேலையாக இருக்குமோ “ என்றாள் பதட்டத்துடன். முகம் அவ்வளவு வெளிறி போனது.
இதனை பார்த்த அகில் “அப்படியான்னு பார்ப்போம் நீங்க தைரியமா இருங்க” என்றான். அகிலிற்கு யோசனை வினோ வேறு ஒதுங்கியே இருந்தான், இப்போது துர்கா வேறு இப்படி சொல்லவும் ‘கேட்க வேண்டும் வினோவிடம், கண்டிப்பாக அவனிற்கு தெரியும் என்று நினைத்துக் கொண்டிருந்தான்.
இந்த நிலையில் சாமிக்கு நேற்று இங்கு வருமாறு சொல்லியிருந்ததால், அவர் 10 மணிக்கெல்லாம் மகியின் ஷோ ரூமிற்கு வந்துவிட்டார்.
இன்று காலையிலேயே, மகியை யார், எப்படி தட்டியது என தெரிந்து கொண்டான் வினோ. மேலும் இது துர்காவிற்கு போட்ட திட்டம் என்றும் தெரிந்துக் கொண்டான் அதை கேட்டதிலிருந்து இன்னும் பற்றியது அவனுள், எதுவும் செய்ய தோன்றவில்லை, மகியை தாண்டி இன்னும் அவனால் யோசிக்க முடியவில்லை.
மகியை பாராமல், அவனின் நிலை தெரியாமல் கிட்ட தட்ட தவித்துக் கொண்டிருந்தான். அவனை பார்த்தாள் கத்தி தீர்க்கும் வெறி வந்தது வினோவிடம்
அலுவலகம் சென்ற வினோவிற்கும் ஒன்றும் ஓடவில்லை. ஏதோ அமர்ந்திருந்தான். சாமி வேறு வந்தததும் தான் “மகிக்கு அக்சிடென்ட்” என்றான் அவரிடம்.
அவருக்கு இது எல்லாம் யார் செயல் என புரிந்தது. இருந்தும் வினோவிடம் வறுத்துக் கொண்டிருந்தார். ‘ஏன் இவ்வளவு அஜாக்கிரதை’ என. அதற்கே வினோ தளர்ந்து போனான்.
ராஜேஷ் வேறு அலுவலகம் வந்திருந்தான் இப்போது தான். வினோவின் நிலை பார்த்து ஏதும் கேட்க தோன்றவில்லை, அனாலும் அவனின் சந்தேகம் மட்டும் போவதாக இல்லை ‘எப்படி வினோவிடம் கேட்பது’ என நேரம் பார்த்துக் கொண்டிருந்தான்.
வினோ ஒரு கட்டத்தில் “நாம, ஹோஸ்ப்பிட்டல் போலாம்“ என்று கிளம்ப, மற்ற இருவரும் அவனுடனே கிளம்பினர்.
காரில் வர வர ராஜேஷ் “ண்ணா, என்ன நடக்குது இங்க, நீங்க ஏதாவது சொன்னாதானே தெரியும்” என்றான் தன்மையாகவே.
வினோ தன் கோவத்தை அடக்கிய குரலில் “கேளுடா, அங்க படுத்திருக்கான்ல, அவன கேளு, அவன்ட்ட யாரும் வாய திறந்திராதீங்க.” என்றவன் கொஞ்சம் தணிந்தான்.
“எல்லோரும் என்னைய போட்டு குடைய வேண்டியது, யாரவது சொன்னா அவன் கேட்கணும், போய் படுத்துக்கிட்டான், இங்க என்னை என்னமோ எல்லாரும் கேள்வி கேட்கிறாங்க” என்று தன் போல் முனு முனுத்தான்.
அதை கேட்டு அடங்கிவிட்டான் ராஜேஷ். தான் நினைத்தது போல் விஷயம் பெரிது என்ற எண்ணம் வந்தது அவனுள், இவர்கள் மூவரும் மருத்துவமனை வர, அங்கு அகில் துர்கா இருவரும் ஒரு யோசனையில் இருக்க, வந்தவர்கள் சென்று தனியே அமர்ந்தனர். யாரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.
இப்போது யாரிடம் யார் எது கேட்டாலும் உடனே அது வெடிக்கும் நிலை, யாரும் தன் நிலையில் இல்லை, ‘தெரிந்தே இப்படி விட்டு விட்டோமே’ என்ற நினைப்பு தான் எல்லோரிடமும் இருந்தது.
அங்கு விவேகனுக்கு, அழகான காலை எல்லாம் இன்ப மயமாக இருந்தது. தான் நினைத்ததை சாதித்த கர்வம், அவன் முகம் முழுவதும் நிரம்பி வழிந்தது.
நல்லதோ, கேட்டதோ நாம் நினைத்து நடந்தால் ஒரு நிறைவு தான். இதற்கு வயது ஒரு அளவு கோல் அல்ல. ஒவ்வொரு வயதில், ஒவ்வொன்று பெரிதாக தெரியும், அது போல் இப்போது விவேகனின் மத்திம வயதில் ‘என்னை எதிர்க்க யாரும் இல்லை, எனது தொழிலில் நான் மட்டுமே என்ற எண்ணம், அப்படி எதிர்த்தால் யாராக இருந்தாலும் என்ன நடக்கும் என்று தான் செய்த செயல்’ என அவனை அவனே மெச்சிக் கொண்டான்.
ஆரவாரமாக, தன் பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தான். 9 வயதில் ஒரு மகன், 3 வயதில் ஒரு மகள் என அழகான அளவான குடும்பம்.
ஏதோ பேச்சும் சிரிப்புமாக அந்த இடமே நிறைந்திருந்தது, அங்கு வந்த விவேகனின் மனைவி இதனை பார்த்துக் கொண்டு கொஞ்சம் தள்ளி நின்றுக் கொண்டாள்.
இப்படி இருந்த நேரத்தில் தான் கதிரிடமிருந்து போன் “சொல்லுங்கண்ணா” என்றான், குரலில் ஒரு சந்தோஷம் இருந்தது.
“இல்ல தம்பி இன்னைக்கு கமிஷனர் இல்லை, நாளைக்கு தான் பார்க்க முடியுமாம், அதான் சொல்லலான்னு “ என இவர் இழுக்க.
அதை பொருட்படுத்தாமல் “அங்க எப்படிண்ணா இருக்கான் அவன்” என்க. மகியின் விவரமெல்லாம் சொன்னார்.
கேட்டுக் கொண்டவன் “சரிண்ணா, நாளைக்கே பார்த்துக்கலாம், அந்த வைபவ்வ ஜாக்கிரதையாக பார்த்துக்கோங்க” என்றான்.
அந்த மருத்துவமனையின் உள்ளே வந்தான், ஆவேசமாக, யாரையோ அடிக்க வரும் ஆவேசம் நடையில், மனதில் ‘என்னை என்ன சுயநலவாதின்னு நினைச்சிட்டாளா, என்கிட்டே சொல்ல வேண்டாமாம், நான் என்ன யாரோவா,’ என தனக்குளே பொங்கிக் கொண்டே வந்தான்.
பின்னாலே அவனின் புத்தம் புது மனைவி கிட்ட தட்ட ஓடி வந்தாள். மறுவீடு செல்ல வேண்டியவர்களுக்கு இப்போது தான் விஷயம் தெரிந்தது. உடனே வந்துவிட்டான் கீர்த்தி இங்கு.
icu வராண்டாவிற்கு வந்தவன், துர்காவை ஒரு பார்வை பார்த்தான், அவளின் தோற்றம் ஏதோ செய்ய, இதுவரை அவள் மேல் இருந்த கோவம் போக,
அவளின் காலின் கீழே அமர்ந்து கொண்டான், ‘”என்னக்கா, மாமா சரியாகிடுவார் க்கா, நீ தான் தைரியமா இருக்கேன்னு அம்மா சொன்னாங்க” என்றான் இப்போது தான் திருமணம் ஆணவன், அந்த எண்ணமே இல்லாமல், தன் அக்காவை தேற்றிக் கொண்டிருந்தான்.
மற்ற யாரையும் பார்க்கவில்லை அவன், அங்கு அத்தனைபேரும் இருந்தனர். இவன் நிலை பார்த்து, நித்யாவும் அகிலும் “என்ன கீர்த்தி நீ எதுக்கு இங்க வந்த, எல்லாம் நாங்க பார்த்க்கிறோம் நீ கிளம்பு முதலில்” என்றனர்.
“இரவே என்னிடம் சொல்லல இப்போதும் கிளம்புன்னா, நான் என்ன மனுஷன் தானே, மாமாக்கு அடிப்பட்டு கிடக்கு நான் வந்து பார்க்க கூடாதா, எல்லோருக்கும் என்னை பார்த்தா.” என இன்னும் என்ன சொல்லியிருப்பானோ அங்கே வந்த நர்ஸ்
“ஏன் இப்படி சத்தம் போடறீங்க, அமைதியா இருங்க, உள்ள இருக்கிறது உடம்பு முடியாதவங்க, நீங்க இப்படி கத்தரீங்க” என அமைதியாக சொன்னார்.
அந்த நர்ஸ்சிடமே “நான், அவங்கள பார்க்கணும்” என இறங்காத குரலில் கீர்த்தி சொல்ல.
“இன்னும் 2 மணி நேரத்தில் ரூமுக்கு மாத்திடுவாங்க, அப்போ போய் பாருங்” என்று கட் அண்ட் ரைட்டாக சொல்லி சென்றார் அந்த பெண்.
இதெல்லாம் துர்கா பார்த்துக் கொண்டிருந்தாள், வாயே திறக்கவில்லை. அவளிற்கு தன் தம்பி வந்தது சந்தோஷமாக தான் இருந்தது. ஆனாலும், பாவமாக கூடவே வந்த அந்த பெண்ணை பார்க்க ‘அய்யோ’ என்றானது.
இப்போது இவனிடம் சொன்னாலும் கேட்கமாட்டான், என நினைத்தவள் அமைதியாக ஏதும் பேசாமல் அமர்ந்திருந்தாள்.
இப்படி இவர்களை எல்லாம் அங்கு தவமிருக்க வைத்த மகி, உள்ளே எந்த வித நினைவும் இல்லாமல் சமர்த்தாக உறங்கிக் கொண்டிருந்தான்.
கமலிற்கு காய்ச்சல் குறைந்து உடல் நன்றாக இருந்தது. அவன் தான் தனது புது அத்தையிடம் ஒட்டிக் கொண்டான். சந்தோஷியை நன்றாக வேலை வாங்கினான் அதை பார்த்த துர்காவிற்கு ‘வந்த அன்னிக்கே எங்க ஜோதியில் கலந்துட்ட’ என நினைத்துக் கொண்டாள்.
சாமி அப்போதே கிளம்பி இருந்தார், வினோவிடம் “எதுவா இருந்தாலும் கூப்பிடுங்க“ என சொல்லி கிளம்பினார்.
துர்காவிற்கு நேரம் செல்ல செல்ல தாயை தேடும் குழந்தையின் நிலையில் இருந்தாள், அவனை icu வில் சென்று பார்க்க முடியவில்லை, அங்கு போகவும் இல்லை அவள், ஆனால் மனது கிடந்து அடித்துக் கொண்டது. எப்படி இருப்பானோ வலிக்குமோ, எதுவும் சாப்பிட குடுக்கமாட்டார்கள் வேறு’ என மகி மயம் தான், தன் மக்களை கூட நினைக்கவில்லை.
இப்படி அப்படி என மகி ரூம் வர மாலை 6 மணியானது. அதுவரை எல்லோரும் கையை கட்டிக் கொண்டு அமர்ந்திருந்தனர். என்ன செய்வது என புரியவில்லை.
அந்த விவேகனை சும்மா விடும் எண்ணமும் இல்லை. ஆனால் மகி சொல்லாமல் என்ன செய்வது என தெரியவில்லை ஒரு கையறு நிலையில் இருந்தனர்.
மகி அறைக்கு வந்தவுடன், யாரும் உள்ளே செல்லவில்லை, துர்கா மட்டுமே சென்றாள்…. மகியை பார்த்தவள் அதிர்ந்தாள் கதவினை தாண்டி கால்கள் செல்ல மறுத்தது.
‘தாடியை களைந்திருந்தனர், உதடுகள் உலர்ந்து பார்க்கவே ஓய்ந்து போய் இருந்தான், மகிக்கு இப்போது முழுவதுமாக நினைவு வந்திருந்தது. வலியின் சாயல் மட்டுமே முகத்தில் கொண்டு தன் மனையாளை அவன் பார்க்க
என்ன தான் அவன் முன் அழுது, அவனை பயம் செய்ய கூடாது என நினைத்தாலும் துர்கா சத்தமின்றி விம்மவும், அவளையே கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான் மகி.
அவன் அருகே வந்தவள் அந்த கட்டிலின் கீழ் அமர்ந்து அவன் கைகளை பிடித்து கொண்டாள், ‘சாரியாகிடும் பாவா ‘ என சொல்லத்தான் நினைக்கிறாள்.
கண்களை துடைத்துக் கொண்டு தனது அழுகையை தொண்டையில் விழுங்கிக் கொண்டு அவனை பார்க்க, அவனின் தேடும் பார்வையை அவளால் எதிர் கொள்ளவே இயலவில்லை. திரும்பவும் கண்ணீர், உதடு துடிக்கிறது.
மகிக்கு வார்த்தை வரவில்லை, அசைவு கூடாது என தெரிகிறது. அவள் அழுவதை பார்க்க முடியவில்லை, அவள் பற்றியிருந்த அவளின் விரல்களை எடுத்து, தனது காய்ந்த உதடுகளில் வைத்து கொண்டான். அந்த உதடுகளில் அசைவில்லை, அதனால் அது முத்தமில்லை என எப்படி சொல்வது,
அவனின் இந்த செய்கையில் அவளின் தலை நிமிர்த்தி அவனை பார்க்க அந்த காய்ந்த உதடுகளை வருடுகிறது அவளின் மென்மையான விரல்கள், இத்தனை நாள் தோன்றாத உரிமை தோன்ற, அவன் உதடுகளை சிறிதாக தீண்டி வலிக்குமோ என லேசாக முத்தமிட்டாள், மேலே நெற்றியில் ஒரு முத்தம் வைத்தவள் அவனின் தலை கோதி “சரியாகிடும் பாவா, பீ ஸ்ட்ராங்” என்றாள்.
அவனும் புரிந்தவன் போல் சரியென்னும் விதமாக கண் மூட கண்ணின் ஓரத்தில் சிறு நீர் வழிகிறது. அவளை தவிர யார் தரக்கூடும் இந்த ஆறுதலை.
அவன் கண்ணீர் பார்த்தவள் அதனை பொறுக்க முடியாது சிரித்துக் கொண்டே “நீங்க ஸ்ட்ராங்கா தான் இருக்கீங்க என் கை வலிக்குது விடுங்க” என்க, அவள் அவனின் விரல்களுடன் தன் விரல்களை கோர்த்திருந்ததை இப்போது இன்னும் அழுத்தினான், அவனும் கண்ணில் சிரிப்புடன்.
இவளும் வேண்டுமென்றே சிறுபிள்ளையாய் சிணுங்கிக் கொண்டே “ஆ வலிக்குது பாவா பாருங்க சிவந்து போச்சு” என்றாள் கொஞ்சலாய் இன்னுரு முறை அவள் விரல்களை இறுக்கி பின் விடுவித்தான்.
பின் அவளின் தாடையை பிடித்து இழுத்து அவளின் நெற்றியில் தன் வறண்ட உதடுகளை லேசாக ஒற்றி எடுத்தான். பின் தான் அவளை எழவே விட்டான்.
துர்கா “இருங்க, அவர்களை எல்லாம் கூப்பிடறேன்” என வெளியே சென்றாள்.
பெரிய ஷுட் ரூம் அது, வரவேற்பறை போல் ஒன்று, பெரிய அறை ஒன்று தேவையான இருக்கைகள் என வசதியாக இருந்தது.
வெளியே துர்கா செல்லவும், வைதேகி, பெரியம்மா, சர்வேஷ், துர்காவின் தாய் தந்தை, சந்தோஷியின் தாய் தந்தை என பெரிய கூட்டமே நின்றது.
கீர்த்தி தான் முதலில் சென்றான், “பாவா” என்றவன். கொஞ்ச நேரம் அமைதியாக பார்த்திருந்தான். “பின்பு என்ன செய்யணும் பாவா” என கேட்டுக் கொண்டிருக்கும் போது தான் அனைவரும் உள் வந்தனர்.
மகி தான், அந்த நிலையிலும் துர்காவை தன்னால் ஆனா மட்டும் முறைத்தான், ‘சொல்ல வேண்டாமா இவர்கள் எல்லாம் வந்திருக்கிறார்கள்’ என தான்.
அவளிற்கே தெரியாது அவள் என்ன செய்ய முடியும், நல்ல வேலை அவர்களிக்கு ஏதோ புரிந்தது போல இரண்டு நிமிடத்தில் சந்தோஷியின் பெற்றோர் கிளம்பினர்.
கீர்த்தி, ‘எங்கும் செல்ல மாட்டேன்’ என அமர்ந்து கொள்ள இப்போது துர்கா, மகியை ‘சொல்லுங்கள்’ எனும் விதமாக பார்க்க, கீர்த்தியை அழைத்தவன் துர்காவை காட்ட அவள் தான் பொறுமையாக சொன்னாள் “கீர்த்தி கமல கூட்டிட்டு வீட்டுக்கு போ, சந்தோஷி பாவம். நாளைக்கு காலையில் வா, கமல் பிள்ளைகளுடன் சேர்ந்தாள் திரும்பவும் காய்ச்சல் வரும் “ என ஏதோ கூறி அனுப்பினாள்.
அவர்கள் இருக்கும் வரை அமைதியாக இருந்த வைதேகி “மகிப்பா, நான் அன்னிக்கே சொன்னேன்ல்ல, இந்த கோவிலுக்கு நீ போல, நீ சரியான உடனே முதலில் அங்கு தான் போறோம் “ என்றார் கட்டளையாக.
மகி சரி என்னும் விதமாக தலையாட்டவும் தான் அமைதியானார். ராஜேஷை பார்த்த, மகி “எனக்கு ஒண்ணுமில்ல டா, நீ வேலைக்கு கிளம்பு “என்னும் விதமாக சைகை செய்ய
ராஜேஷ் “ஒரு மாதம் மெடிக்கல் லீவ் போட்டு இருக்கேன், எனக்கு ஒன்னும் பிரச்சனையில்லை, நீ முதலில் உன் உடம்பை பார்” என திட்டுகிரானா, கரிசனபடுகிரானா அங்கிருந்த யாருக்கும் தெரியவில்லை.
8:30மணி போல் வந்த நர்ஸ், இப்போது தான் மகிக்கு தண்ணீர் கொடுக்கலாம், கொஞ்சம் பால் கொடுக்கலாம் என கூறி சென்றார். டாக்டர் வரும் நேரம் கூட்டம் வேண்டாம் என்றார்.
சர்வேஷ் தான் சுறு சுறுப்பாக விளையாடிக் கொண்டிருந்தான். அவனிற்கு தாடியில்லாதா, ஒரு பக்கம் முழுவதும் காயம், ஆதலால் ஏற்பட்ட வீக்கம், என தன் தந்தையை அதற்கு அடையாளம் தெரியவில்லை.
எல்லோரும் கிளம்பினர், நம் நாடக ப்ரியன் மட்டும் அங்கு டிவி இருக்கவும் போட்டு அமர்ந்தவன், பெரியம்மாவுடன் செல்ல மறுத்துவிட்டான். நித்யா கிளம்பினாள் அவர்களுடன். தன் அண்ணாக்கள் வந்து அழைத்தும் செல்லவில்லை சர்வேஷ்.
இத்தனைக்கும் நடுவில் வினோ எதற்கும் உள்ளே வரவில்லை, ராஜேஷும் அகிலும் எவ்வளவு சொல்லியும் கேட்கவே இல்லை. அந்த விவேகனை ஏதேனும் செய்தே ஆக வேண்டும் என்று மனதில் வன்மம் மட்டுமே வந்தது அவனுள்.