வராதராஜன்-விஜயலட்சுமி தம்பதியின்…. முதல் புதல்வி தான் துர்காஸ்ரீ…. அவளிற்கு அடுத்து, ஒரே தம்பி கீர்த்திவாசன்…
சென்னையில் படித்துக் கொண்டிருந்த துர்காவை, படிப்பை பாதியில் நிறுத்தி திருமணம் செய்து வைத்தனர் மகேஷ்வரனுக்கு.
மகேஸ்வரனுக்கு அப்போது வயது 28.. அவர்கள் இனத்தில் நல்ல பெயர் அவர்கள் குடும்பத்திற்கு. கந்தசாமி, வைதேகி தம்பதியின் முதல் மகன் தான் மகேஷ்வரன்.
இவர்களின் இரண்டாவது மகன் அகிலேஷ்வரன். அவரின் மனைவி நித்யா. அவர்களுக்கு இரண்டு பையன்கள். ஆம் இவர்களுக்கு முதலில் திருமணம் முடிந்து விட்டது.
அப்போது, அவர்களின் தாத்தா, அவருக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால், தனது பேரன்களின் திருமணம் பார்க்க ஆசைப்பட்டு, கடைசி ஆசையாக முன் வைக்க..
மகி என்பவன் அதற்கு இடமேக் கொடுக்கவில்லை. மகி திருமணமே செய்து கொள்ள மாட்டேன் என ஒரே பிடிவாதம் ‘அது தாத்தா கேட்டாலும் சரி, சாமி கேட்டாலும் சரி’ என ஒரே வார்த்தையைத் திரும்ப திரும்ப… சொன்னான். எவ்வளவு கேட்டும் ‘முடியாது’ என்பதுதான் அவனின் பதிலாக இருந்தது.
அப்போது சிக்கினான் அகில், 26 வயதிலேயே அகிலுக்கு முடிந்தது. மகிக்கும், அகிலுக்கும் ஒன்றரை வயது தான் வித்யாசம். தூரத்து சொந்தம், என பார்த்து நித்யாவை முடித்து விட்டார் கந்தசாமி.
நித்யா அனைத்து உறவுகளையும் தாங்கி, இன்றும் குடும்பம் உடையாமல் இருப்பதற்கு இவள் முக்கிய காரணம்.
மகி, அகிலுக்கு, அடுத்து ராஜேஷ்வரன். திருமணத்திற்கு இப்போது தான் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
மேட்டூர் தான் அவர்களின் பூர்விகம். இப்போதும் அங்குதான் இவர்களின் தொழில்.
விவசாயம், அவர்களின் தாத்தா காலத்துடன் முடிந்து போக, அவரின் அப்பா காலத்திலிருந்து வண்டி உதிரிபாகங்கள் கடை. சார்வீஸ் ஸ்டேஷன் என வைத்திருந்தார் கந்தசாமி.
இப்போது புதிதாக மகி, தொழிலுக்கு வந்த பிறகு தொடங்கியது தான், டூவீலர் ஷோரூம். அதை, தன் தம்பி வசம் பொறுப்பை கொடுத்தவன், தனக்கென கார் சேல்ஸ் ஷோரூம் தொடங்கி இருக்கிறான் மேட்டூரில்.
அதுபோக இப்போது புதிதாக. ஒரு கார் ஷோ ரூம் சேலத்தில். கொஞ்சம் பெரிதாக, பல லட்சங்களைத் தொடும் கார்களின் ஷோ ரூம் அது.
ஏற்காட்டில் ஒரு காட்டேஜ், அப்புறம் தன் நபர்களுடன் சேர்ந்து ‘ஓபன் டாக்’ என ஒரு செல்போன் டீலர் ஷிப் என பல வியாபாரம் மகிக்கு.
தன் தந்தை மேல் மிக்க பாசம் கொண்டவன். நிறைய நண்பர்கள் கொண்டவன்.
மலையேறுதல், காட்டாற்று வெள்ளத்தில் படகு பயணம், ம்… ஒரு கும்பலாக டூ வீலரில் மலையேறுதல், என சாகசம் செய்வதில் பிரியம் கொண்டவன்.
பழைய காலத்து புல்லட், யமஹா முதல்…. இப்போதைய pmw பைக்குக்கு முன் பதிவு வரை செய்தது வைத்திருக்கிறான்.
பிர்ண்டாட் பைக், கார் என்றால்…. அதில் இவனிடம் ஒன்று நிச்சையம் இருக்கும்.
இது, இப்படி.. என கோடுப் போட்டு வாழ்பவன் இல்லை. எதையும் செய்யும் துணிவுள்ளவன் அதில் வெற்றியும் பெறும் வல்லவன்.
மாநிறம், ஆறடி உயரம், அலட்சியமான கண்கள், அவனின் முகத்தை பாதி மறைத்திருக்கும் தாடி. புதிது, புதிது என தேடுவதில் ஆர்வமுள்ளவன். மொத்தத்தில் அவனை புரிந்து கொள்வது துர்க்காக்கு சற்று சிரமமே.
பெரிதாக பெண்கள் மேல் விருப்பமெல்லாம் இல்லை, திருமணம், குடும்பம் என்ற கட்டமைப்பின் மேல் அவனுக்கு பிரியம் என்பதே இல்லை. அதை ஒரு தடைக்கல்லாக நினைப்பவனும் கூட.
திருமணத்தை… தன் அப்பா சொன்ன ஒரே காரணத்திற்காக செய்துக் கொண்டவன்.
அவனின் அப்பா கந்தசாமி, மகியிடம் வேண்டியது, இது ஒன்றாக தான் இருந்தது. எனவே அவர் சொல்லைத் தட்ட முடியாமல். திருமணத்திற்கு சம்மதம் சொன்னான்.
எனவே, அவன் பெண்ணின் அழகையோ, படிப்பையோ பார்க்கவில்லை. ஏன், கேட்க கூட இல்லை. பெண் வீடு தங்களை ஒத்த இடமாக உள்ளதா, எனக்கு… அதனால் மதிப்பு வருமா என, திருமணத்தை ஒரு வியாபாரியின் கண் கொண்டுதான் பார்த்தான், அந்த வகையில் பரம திருப்தி மகிக்கு.
தொழிலும், சாகசமும் அவனிரு கண்களாகின. எனவே பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை எதற்கும், ‘கல்யாணம் தானே செய்து கொண்டால் போகிறது’ என கடமையாக கருதி திருமணத்திற்கு சம்மதித்தான்.
கந்தசாமி, மகியின் தந்தைக்கு பயம் தன் மகனின் நிலை குறித்து ‘எங்கே சாமியாராக போய் விடுவானோ’ எனதான். அதனால் விரைவாக திருமணம் முடிக்க எண்ணி, செய்தும் வைத்து விட்டார்.
ஆனால் 7 வருடம் கழித்து அவனின் வாழ்வில் இப்படி ஒரு நிலை வருமெனத் தெரிந்திருந்தால், அப்போதே அவன் போக்குக்கு விட்டிருப்பார் போல.
ஆம்… இப்போது அவனால், அவன் செய்யும் காரியத்தால், 3 ஜீவன் அல்லவா பாதிக்கப்படும். ம்கூம்….. நினைப்பதில்லை அதனை. மகி… கட்டுகளை கடக்கும் காற்றாக சுழன்றுக் கொண்டிருக்கிறான்.
துர்கா திருமணம் செய்து வரும் போது 20 வயது. சிறு பெண்ணாக மருண்ட விழிகளுடன் எல்லோரிடமும், அவர்களை ஒட்டியேப் பேசி…. தனக்குள் இழுத்துக் கொள்ளும் வெகுளி பெண்.
மகியிடமும் அப்படியே…. அவனின் வாய் பேசா ஆளுமையில் பெண்ணவள் மயங்கி தான் போனாள். எனவே மகி, துர்காவை கையாளுவது எளிதாக இருந்தது.
எனவே ‘காதல், நேசம், கனவு’ என பெரிய எதிர்பார்ப்பெல்லாம் இல்லாமல் இருவரும் இருந்ததால், திருமணம் என்பது, ஒரு இயல்பான நிகழ்வாக இனித்தது அவர்களுக்கு.
மகியும், தனது மனதை திறக்கவில்லையேத் தவிர, எதிலும் எங்கும்… குறை வைக்கவில்லை அவளுக்கு, ஹனிமூன் ட்ரிப்க்கு வெளிநாடு பயணம் அதே வருடத்தில் முதல் மகன் என சரியாக இருந்தது எல்லாம்.
அதன்பின் அவளிற்கு நேரமில்லை…. மகனுடன் ஓடினாள். அவ்வபோது மகி அவளை தேடும் போதும், மகனை தாண்டியே கணவன் தெரிந்தான் அவளிற்கு.
அடுத்த 3 வருடத்தில்…. இரண்டாவது மகனை சுமந்தாள் துர்கா. அப்போதிலிருந்து அவளின் நேரம், அவள் வசம் இல்லை. போகிற போக்கில் ஒரு வாழ்க்கை வாழ்ந்தனர் இருவரும், அப்படி தான் சொல்ல வேண்டுமோ. ஆனால் காலம் அவர்களை இப்படியே விட்டு விடவில்லை.
திருமணம் ஆனதிலிருந்து மேட்டூரில், கூட்டு குடும்பம் தான் அவர்களது. அதனால் துர்கா எப்போதும் சற்று ப்ரீ.
சமையல் எல்லாம் தெரியவே, தெரியாது. அது, அவள் இருக்கும் பக்கம் கூட வராது.
பிறந்த இடத்தில், அதற்கு அவசியம் இல்லாமல் ஆயிற்று.
புகுந்த இடத்தில் ‘மாமியார், நித்யா மற்றும் வேலையாட்கள்’ என எல்லாம் திடமாக இருந்துச் செய்தார்கள். அதனால் தேவை இருக்கவில்லை கற்றுகொள்ள.
போததற்கு திருமணம் முடிந்து ஒரு மாதம் ட்ரிப். அப்புறம், என்ன.. ஏது.. என பார்க்கும் முன்… பிள்ளை வந்து விட்டது. அப்புறம், அனைவரும் சீராட்ட, சொந்தம் வர, போக, விருந்து… விழா… அம்மா வீடு…. என தன்னை எல்லோரும் தாங்குவதால், தான், அவனின் ராணி எனவே உணர்ந்தாள், உணரவும் வைத்தான்.
அவள் கேட்டால் கேட்டது கிடைத்தது. எல்லாம் இம்போர்டட் ஐட்டம் தான். எதிலும் ப்ரண்ட் நேம் பார்த்து தான் வாங்குவான். அவன் ஒரு ப்ரண்ட் பிரியன். ஆக எல்லாம் நன்றாக சென்றது.
அப்போது கந்தசாமி இருந்தார். அதனால், வீடு எப்போதும் சொந்தம் பந்தம் வந்து போகும் ஆளும் பேருமாக இருப்பார். எப்போதும் ஜே ஜே வென இருக்கும் வீடு.
மகியும், தொழில் வியாபாரம் என சுறு சுறுப்பாக இருந்தான். அவன் தலையெடுத்த பிறகு தான், அந்த வீட்டில் டெக்னாலஜி உள் வந்தது.
சிரியவன்… ‘அப்பாக்கு பிடிக்காது’ என ஒதுங்கும் விஷயங்களை எல்லாம்… அவரின் அனுமதியுடன் செய்தான் மகி.
வீட்டை மாற்றி…. பாத்ரூமை… வீட்டினுள் வைப்பது…. பெரிய பிரிட்ஜ் வாங்குவது, அம்மா முதற்கொண்டு அனைவருக்கும் செல் பேசி, வாங்கி தருவது என அனைத்தையும் செய்தான்.
அகிலுக்கு, அண்ணன் எது சொன்னாலும், செய்தாலும் சரியே. அப்படி தான் சொல்லி தந்தார், அவனின் அப்பா. எனவே, வீட்டில் மகி குரலே ஓங்கி ஒலிக்கும்.
ராஜேஷ் தான் சற்று மகிக்கு, ஒத்து வர மாட்டான். ஆனால் அப்பாவிற்கு பயந்து பேசாமல் போய் விடுவான். எனவே வீடு அவன் இஷ்டப்படி தான் சுழலும். எனவே யாரும் அவனை கேள்வி கேட்டதே இல்லை, இவனும் பதில் சொன்னதே இல்லை.
அந்த பழக்கமே துர்காவிடமும் வந்தது. பெரிதாக அவளிடம் பேசவும் மாட்டான். காலையில் இவள் எழும் முன்பேக் கிளம்பி விடுவான். இரவு இவளாக விழித்திருப்பாள், இவன் வொர்க் ஷாப் எல்லாம் அடைத்து வர 11 மணிக்கு மேல் தான் ஆகும்.
வருவான் “நான் போட்டு சாப்பிட்டுக்குவேன், நீ தூங்கு” என்பான் வேறு பேச்சு கூடப் பேச மாட்டான். இவளும் கொட்ட கொட்ட அவனையே பார்ப்பாளே தவிர, தானே வேறு பேசுவும் இல்லை. ஒரு கட்டத்தில் அதுவே பழகியது. அதன் பிறகு பிள்ளைகள் வந்ததும் அதுவும் நின்று போனது.
தன் வியாபாரத்திலும் அப்படியே, தன் தம்பி வசம் இருக்கும் வியாபாரமெல்லாம் கணக்கு பார்ப்பது இவன் தான். எங்கு, எங்கு.. என்ன நிலம் குத்தகைக்கு விட்டது. சிலதின் வாடகை கணக்கு, சொத்து விவரம் எல்லாம் இவன் பொறுப்பு தான். தந்தை சொல் அவனிற்கு மந்திரமே…. எப்போதும் அவரையே… ஒத்து போவான்.
நல்ல உணவிற்கு அவன் அடிமை…. அம்மா என்றால் அவனிற்கு அவரின் சமையல் மட்டுமே நியாபகம் வரும். வேறு எதற்கும் அவன் அம்மாவை தேடியதில்லை மதித்ததும் இல்லை.
எல்லோரிடமும் காட்டும் அலட்சியம் தான் அவரிடமும் காட்டுவான். சொந்தங்களிடமும் அவனிற்கு தான் நல்ல மரியாதை. எப்போதும் அவன் பிஸி அது கொடுத்த கர்வம் துர்காவிடம் அதிகமாக தெரியும் அப்போது.
இப்படி அனைவரிடமும் நின்று பேச நேரமில்லாதவன் இரவில் தன்னை தேடுவது குறித்து துர்காவிற்கு சற்றுப் பெருமையே.
இது தான் நேசம் என புரிய வைத்திருந்தான் மகி.
துர்காவை பொறுத்தவரை அவன், அவளின் ஹீரோ. எந்த தூசியும் துரும்பும் அண்டாதவன் அவன் என்ற எண்ணம் தான்.
மகியும் அப்படி தான் மிகவும் நேர்மையானவன். தவறு என்பதே அவன் அகராதியில் இல்லை. அதனால்… யார்க்கும் அவன் தலை வணங்கியதில்லை.
சூரியன் போல்…. கலங்கமில்லாதவனாக…. கம்பீரமாக… துக்காவின் வானவெளியில் வலம் வந்து கொண்டிருக்கிறான்.
#####@ #####@ #####@
துர்கா திரும்பவும் காலையில் 9 மணிக்கு தான் எழுந்தாள். ப்ரஷாகி… இட்லி சாப்பிட்டு அமர்ந்திருந்தாள். ரௌண்ட்ஸ் வந்த சீப் டாக்டர் ‘இன்று ஒரு நாள் இருந்து விட்டு, நாளை டிஸ்சார்ஜ் செய்யலாம்.’ என்றுவிட்டு சென்றார்.
இப்போது தான் வலி தெரிந்தது….. துர்காவிற்கு, அவளின் நித்யா அக்கா ஆம் அப்படி தான் அழைப்பாள் துர்கா, நித்யாவை… இவளை விட 2 மாதம் பெரியவளாம் நித்யா.
அளிடம் பேசிக் கொண்டிருந்தாள். நித்யா, கோவமாக “என்ன துர்காம்மா, இப்படி செய்துட்ட…. பாரு, பிள்ளைகள் ரெண்டும் எப்படிப் பயந்து போச்சு. அந்த பிள்ளைங்க நினைப்பு கூட வரவில்லையா உனக்கு.” என தன் கண்ணில் கசிந்த நீரை…. துடைத்துக் கொண்டே கேட்டாள்.
துர்காவின் அம்மா, அதையும் கேட்ட சக்தியற்று இருந்தார். அவளையே பார்த்தவாறு அமர்ந்திருந்தார் அந்த அறையில்.
எங்கோ வெறித்து பார்த்து…. அமர்ந்திருந்தாள், மறு பேச்சு பேசவில்லை, நித்யா கேட்டது அவள் காதில் விழ தான் செய்தது. தான் செய்தது எவ்வளவு பெரிய தவறு எனவும் புரிகிறது.
ஆனால் அவனிடம் சரணடைந்த இந்த மனதிற்கு புரியவே இல்லையே, எங்கும், எதிலும் அவனை தேடியே தொலைகிறதே, தோற்கிறதே’ என அவள் கண்ணில் நீர் வழிய, அமர்ந்திருந்தாள்
அவன் நேற்று மாலை தன்னிடம் தன் ஈஷ்வர், கேட்டது மட்டுமே அவள் காதில் இப்போதும் ஒலித்தது.