மகிக்கு, இன்று சங்கத்தின் ஆண்டு விழா, அதை தொடர்ந்து புதிய பொறுப்பாளர்கள் பதவி ஏற்பு விழா என இன்று சங்கத்திற்கு சென்றே ஆக வேண்டிய நிலை அவனிற்கு.
மேலும், மகி இப்போது அங்கு பொருளாலர் என்னும் பொறுப்பை ஏற்க உள்ளான். அதனால் கொஞ்சம் நிமிர்வுடனே சென்றான்.
தலைவர் என்பது எப்போதும் போட்டியில்லாமல் விவேகனே தேர்வாகிவிடுவான். அதில் எந்த மாற்றமும், அவன் வந்த நாட்களில் இருந்து இல்லை.
மற்ற பதவிகளுக்கு தான் தேர்தல், எனவே மகி அதில் கணிசமான வாக்குள் அடிப்படையில் பொருளாலர் பதவி பெருகிறான்.
மகி, தன் எதிரிலேயே வளர்கிறான் என விவேகனுக்கு கொஞ்சம் ஆற்றாமையே. ஆனாலும், மொத்தமாக சாய்த்து விடலாம் என எண்ணிக் கொண்டான் விவேகன்.
மாலை விழா இனிதாகத் தொடங்கியது. விவேகன் தான் ஏற்பாடு என்பதால், ஆடம்பரங்களுக்கு குறைவில்லை.
மாநில அளவிலான சங்கம் என்பதால், வெளியூரிலிருந்து வருபவர்களுக்கு தேவையான வசதி, விழாவை தொகுத்து வழங்க, காம்பெயர்ரிங் செய்வதற்கு பொருத்தமான மாடல் பெண்கள், விழாவை மேலும் சிறப்பு செய்ய, ‘கலக்க போவது யார்’ குழுவினர் என கிட்ட தட்ட ஒரு பிரம்மாண்ட விழாவாக நடத்தி இருந்தான் விவேகன்.
பதவி ஏற்பை மகிக்கு செய்து வைக்கும் போது, மகியையும் பகைத்துக் கொள்ள முடியாதே, அவனும் கிட்ட தட்ட அவனிற்கு நிகரான பதவி அல்லாவா… எனவே, எதையும் முகத்தில் காட்டாமல் மகியை பார்த்து “சிறப்பா செய்திடலாம் மகேஷ்வரன்” என்றான் விவேகன்.
மகியும் புன்னகை மாறாமல் “அதற்கு தானே வந்திருக்கோம்” என கை கூப்பி பதில் தர. அயர்ந்தே போனான் விவேகன். முகம் மாறாமல் காக்க வேண்டி இருந்தது அவனிற்கு.
விழா முடிந்து அனைவரும் கிளம்ப, மகியின் குரூப் அவனை பிடித்துக் கொண்டது. நண்பர்களை விரும்புபவன் மகி எனவே நண்பர்களுடன் ஐக்கியமாகிவிட, வீட்டிற்கு அழைத்து சொல்லும் பழக்கமெல்லாம் இல்லாத மகி, தன் போல் நண்பர்களுடன் இருந்து விட்டான்.
அவனிற்கு இது புதிதல்ல, வீட்டில் இருப்பவர்க்கும் இது பெரிதாக தெரியாது தான்…. ஒரு பத்து நாட்களுக்கு முன்பு வரை.
ஆனால், துர்கா தன்னிடமிருந்து அவன் எப்போது விலக நினைதானோ அப்போதிலிருந்து மகியை கவனிக்கத் தொடங்கி இருந்தவளுக்கு, இன்று பதை பதைத்தது. ‘ஏன் இன்னும் வரவில்லை, ஏதேனும் ஆகி இருக்குமோ, இல்லை அந்த நபர் மூலம் ஏதேனும் நடந்திருக்குமோ என ஒரே யோசனை.
ஹாலிலேயே அமர்ந்திருந்தாள். டிவி பார்க்கப் பிடிக்கவில்லை, கொஞ்ச நேரம் தோட்டத்தில் நடந்தாள். இப்படியே மணி 12ம் ஆகிவிட்டது. யாருக்கு போன் செய்ய முடியும். துணிந்து தன் கணவனுக்கே அழைத்து விட்டாள்.
இப்படி அவள், இத்தனை வருடங்களில் செய்ததே இல்லை. முதல் முறையாக, கொஞ்சம் பயம் வந்து, எப்படி அவனை இத்தனை நாளாக இல்லாமல், ஒரு உரிமையுடம் அழைப்பது என.
முதலில் இது தனக்கே கூட சங்கடமாக தெரிந்தது. பின்பு ஒரு வீம்பு, ‘ஏன் நான் அழைக்க கூடாதா’ என எண்ணம், பின் அதுவே பிடிவாதாமாக மாறி ஒரு பனிரெண்டரை மணிக்கு மேல், தாங்க முடியாமல் அழைத்தேவிட்டாள் அவனை.
மகியின் செல் திரையில் ஒளிர்ந்தது ‘மனைவி’ என அவளின் முகம்….. நீண்ட, மிக நீண்ட மாதங்களுக்கு பிறகு, அவன் செல் திரையில் தெரியும் பிம்பம். கையில் கண்ணாடி டம்பளருடன் வெறித்துக் கொண்டிருந்தான் அதனையே.
அவர்களின் நண்பர்கள் அனைவரும்… ஒரே சத்தம் ‘குழந்தையை வீட்டில் தேடறாங்க’ என…. மகியிடம் அசைவே இல்லை.
ஏனோ அந்த அழைப்பு அவனுள், ஏதோ ஒன்றை தேடிக் கொண்டிருந்தது. என்னை தேடும் ஒரே ஜீவன் என் அப்பா மட்டுமே…. என ஓரிரு நிமிடங்களில் அது அவனை வந்தடைந்தது.
ஆம், இப்படி தான், தன் தந்தையும் அழைப்பார். ‘என்ன சொல்லி விட்டு வந்தாலும்’ தன்னை, 12 மணிக்கு மேல் அழைத்தே தீருவார். என நினைவுகள் வந்தது.
ஒரு சின்ன புன்னகை வந்தது அவன் முகத்தில், இதுவும் மிக நீண்ட நாட்கள் கழித்து வந்து சேர்ந்தது அவன் முகத்தில். ‘எதோ ஒரு ஆசுவாசம், ஒரு அமைதி’ என, எங்கோ அவன் மனதின் அடியாழத்தில், ஒளிந்திருந்த ஒரு நிம்மதி இப்போது வந்தது அவன் முகத்தில், மனது கொஞ்சம் விளையாட சொல்லியது அவளிடம்.
திரும்பவும் அழைப்பு அவளிடமிருந்து, அனைவரும் “டேய் , நீ கிளம்பு டா” என கோரஸ்ஸாக சத்தமிட.
மகி “ஷ்” என அதை அடக்கியவன், அமைதியானான். ஒரு கால் முழுவதும் அழைத்து ஓய்ந்து முடிந்தது. சிறிது இடைவெளி விட்டு திரும்பவும் ‘மனைவி’ என அடுத்த அழைப்பு.
சைலண்டில் போட்டு அதனையே பார்த்திருந்தான் மகி. நீண்ட நேரம் கிட்ட தட்ட ஒரு அறை மணி நேரம் அழைத்து முடித்தது செல்பேசி. இப்போது தான் ஓய்ந்தது.
இப்போது தனியே வந்திருந்தான் மகி, ஹோட்டலில் ஒரு ரூம் எடுத்து தான், இந்த கச்சேரி நடந்து கொண்டிருந்தது. யாரும் வீட்டிற்கு செல்லும் நிலையில் இருப்பார்களா என தெரியாது, ஒரு ஆறு மாதத்திற்கு ஒரு முறை இப்படி நண்பர்களுடன் நிகழும் நடப்பிதுதான்.
மகிக்கு, அதிகமாகவெல்லாம் உள்ளே செல்லவில்லை இப்போது தான் இரண்டு ரௌண்டு சென்றிருந்தது. போன் அடிக்க, அடிக்க அங்கே அமர முடியாமல் அந்த ரூம் பால்கனியில் வந்து நின்று கொண்டான். போனும் கையுமாக.
‘தேடுகிறாள் என்னை’ என நினைத்துக் கொண்டிருந்தான். தன் அப்பாவிற்கு அடுத்து ஒரு ஜீவன் தன்னை தேடுகிறது என கர்வம் வந்தது. அதில், முகம் கனிந்து இருந்தது. ஏற்கனவே போதையில் இருப்பவன் இப்போது இன்னும் போதையாகினான்.
தான், ‘அவளை பிடிக்கவில்லை,’ ‘நீ என்னை விட்டு போ’ என சொன்னதெல்லாம் வசதியாக மறந்ததோ, இல்லை உள்ளே சென்ற தங்க நிற திரவம் அனைத்தையும் மறக்க வைத்ததா, இல்லை அவளை பற்றிய நினைவை தட்டி எழுப்பியதா, தெரியவில்லை!
மனம் மட்டும் தள்ளாடியது நீண்ட நாட்களுக்கு பிறகு, ஒரு பத்து நிமிடம் போன் வரவில்லை, இங்கு மகிக்கு ‘அவ்வளவு தானா’ என கண்கள் வானத்தை வெறித்தது.
திரும்பவும் போன், ஒரு மோன புன்னைகையுடன், தன் தாடியை வருடிய படி மகி பார்க்க, இப்போது வினோவிடமிருந்து கால் வந்தது. கொஞ்சம் எரிச்சலுடனே எடுத்தான்.
“ஹலோ…” என்க.
வினோ “டேய், எங்க டா இருக்க…. வீட்ல துர்கா, எனக்கு கூப்பிட்டாங்க” என்க.
வினோ, ஏதோ சரியில்லை என புரிந்து கொண்டவன் “என்ன தண்ணில இருக்கியா, எங்க இருக்க சொல்லு, நான் வந்து கூட்டி போறேன்” என்றான்.
மகிக்கு கோவம் வந்தது “என்ன டா விஷயம் சொல்லு” என்றான் சற்று காரமாக.
வினோவும், துர்கா அழைத்த விஷயம் சொல்லவும்
மகி “சரி சரி நான் பார்த்துகிறேன்” என்றான்.
வினோ போனை வைக்கவும், திரும்பவும் துர்கா அழைக்க, முகத்தில் புன்னகையுடன் எடுத்தான் போனை… ஹலோ கூட சொல்லவில்லை.
அப்படியே காதில் வைத்து நின்றிருந்தான். ஏதோ ஒரு அமைதி அவனிடம் வந்தது.
துர்கா தான் “ஈஷ்வர்…… ஈஷ்வர், ஹலோ” என கிட்ட தட்ட நான்கு முறை அழைத்த பிறகு தான் லேசாக “ம்” என்றான்.
‘அப்பாடா…’ என துர்கா பெருமுச்சு விடும் சப்தம் அவனிற்கு நன்கு கேட்டது.
அடுத்து என்ன பேசுவது என தெரியவில்லை அவளிற்கு, அமைதியாக இருக்க, அவனும் அமைதியாக இருந்தான்.
ஏதோ அவன் அருகில் இருபது போல் உணர்ந்தாள் துர்கா… பேச்சே வரவில்லை.
துர்காவே “இல்ல, இன்னும் காணம். எப்… எப்போதும் 11 மணிக்குள்ள வந்துடுவீங்களே…. இன்…னும் காணோம்” என மென்று விழுங்கி கேட்டே விட்டாள்.
இதற்கு மேல் என்ன பேசுவது என தெரியாமல் துர்கா அமைதியாக. அவள் சொன்னதை கண் மூடி கேட்டிருந்தான். ஏதோ ஒரு பரவசத்தில் இருந்த மகிக்கும் ஏதும் பேச தோன்றவில்லை. “ம்…. வந்துடுவேன்” என ஆழ்ந்து ஒளித்தோ அவன் குரல். போனை கட் செய்தான்.
அவள் போன் வைத்த பிறகு, ‘ஈஷ்வர்’ சொல்லிக் கொண்டான் தனக்குள். எப்போதோ கேட்ட ஞபாகம் அவனுள்.
பொறுமையாக பதில் சொல்லிய மகியை நினைத்து துர்காவிற்கு பயம் வந்தது.. ‘அய்யோ வந்தவுடன் என்ன சொல்வானோ, என்ன கேட்பானோ..’ என அன்று ஹாஸ்பிட்டல் சென்று வந்த போது நடந்தது நினைவு வந்தது அவளிற்கு.
அமைதியாக வந்து தன் பசங்களுடன் படுத்துக் கொண்டாள். மகியும் நேரம் கடத்தாது அடுத்த அரை மணி நேரத்தில் வீடு வந்து சேர்ந்தான்.
வந்தவன், தன் சாவி கொண்டு கதவை திறந்து கொண்டு பார்க்க. ஹாலில் யாரும் இல்லை, ஒரு ஏமாற்றம் வந்தது அவனிடம். உடனே துர்காவின் அறைக்கு சென்றான்.
அங்கு அவள் தூங்கிக் கொண்டிருந்தாள். ஆம், அப்படி தான் படுத்திருந்தாள், அவன் வந்த அரவம் கேட்டு எழவில்லை அவள், ஏதேனும் கேள்வி கேட்பானோ என நினைத்து உறங்கியதாக காட்டிக் கொண்டு படுத்திருந்தாள்.
அருகில் வந்தவனுக்கு புரிந்தது அவளின் நிலை. தன் நிலையை முதல் முறை தானே வெறுத்தான். எந்த அடிப்படையில் நெருங்குவது அவளை, எழுப்பவோ, தூக்கவோ.. வாய்யோ, கையோ வரவில்லை கணவனுக்கு.
போனெல்லாம் செய்தாள், வந்து பார்த்தாள். உறங்குகிறாள். அவ்வளவு தானோ, அதற்கு மேல் எதிர்பார்க்க எனக்கு உரிமை இல்லை, என தோன்றியது.
இத்தனை நாள் இருந்த ஏதோ ஒன்று இப்போது தன்னிடம் இல்லை என உணர்ந்தான் மகி. இதே யோசனையோடு அவளின் பின்புறம் நின்று பார்த்திருந்தான் ஒரு ஐந்து நிமிடம்.
பின் மேலே போய்விட்டான் மகி, அவனிற்கு அப்படி ஒரு மன சங்கடம், தன் அப்பா நினைவு வேறு வந்து விட்டது. அவனின் அப்பா சென்ற பிறகு யாரையும் முழுதாக நம்புவதில்லை மகி.
யாரிடமும் மனம் விட்டு பேசுவதில்லை, எங்கோ ஒரே வட்டத்திற்குள் சுழலும் நிலையில் இருந்தான் அவன்.
கூடவே அவனின் தொழில் முறை போட்டி, அது குறித்து வினோ மற்றும் பல நண்பர்கள் கூறிய அறிவுரை என அவனை குழப்பி இருந்தது.
எனவே, தந்தை இல்லா நிலையை இப்போது, கொடுமையாக உணர்ந்தான் மகி. ஒரு குழப்பமான, கலவையான மனநிலையில் இருந்தான்.
இங்கே மகி, தன் அறைக்கு வந்து போனவுடன் ‘அப்பாடி’ என மனையாள் தூங்க நினைத்தாள். ஆனால், அது வரவில்லை.
மகி ரெப்பிரஷ்ஷாகி கீழே வந்தான். கீழே அவன் நடமாடும் ஓசை கேட்டது.
சிறிது நேரத்தில் அடங்கி விட்டது. ஒருவேலை எங்கேனும் கிளம்பி விட்டானா’ என துர்காவிற்கு தூங்க முடியவில்லை. சற்று நேரம் பொறுத்து பார்த்தாள் சத்தம் வரவில்லை எனவும், என்னமோ அவளை படுக்க விடாது எழ வைத்தது. எழுந்து ஹாலிற்கு வந்தாள்.
ஹால் தாண்டி, கிட்சென் செல்லும் இடத்தில் தான் பூஜை அறை உள்ளது. என்னமோ உறுத்த, பூஜை அறையை பார்க்க….. திடுக்கிட்டு பயந்து போனால் துர்கா.
அங்கு மகி, விடிவிளக்கின் ஒளியில், ஒரு ஷாட்ஸ்சோடு வெற்று உடம்போடு தலையில் தண்ணீர் சொட்ட சொட்ட, தன்னிரு கண்களை மூடி தியான நிலையில், தன் அப்பாவின் படத்திற்கு முன் அமர்ந்திருந்தான்.
அந்த நேரத்தில், மணி இரவு 1:45லிருந்து 2மணிக்குள் தான் இருக்கும். சற்றும் எதிர்பார்க்கவில்லை, துர்கா…. மகியை இந்த கோலத்தில். இந்த அகால நேரத்தில்.
பார்த்தவளுக்கு கால்கள் இரண்டும் துவண்டு போயின, சற்று நேரம், அந்த சேரில் அமர்ந்து, தன்னை நிலைப்படுத்திக் கொண்டே மீண்டும் எழுந்தாள்.
என்ன செய்வது என தெரியவில்லை, தான் இங்கு இருப்பதா, மகியை கூப்பிடுவதா, இல்லை சென்று உறங்கி விடலாமா எதுவுமே புரியவில்லை அவளிற்கு. மீண்டும் அதே சேரில் அமர்ந்தாள்.
அமைதியாக அமர்ந்திருந்தாள்… ஏதும் யோசிக்க கூடாது என தனக்கு தானே சொல்லிக் கொண்டாள்.
கேட்டு விடுமா மனது அவள் பேச்சை. ‘திரும்பவும் தன் மணாளன் எண்ணம் தான் அவளுள். என்ன ஆயிற்று, இன்னும் ஏதேனும் பிரச்சனையா’ என தீராத யோசனை.
யார் சொல்வது துர்காவிடம் இப்போது அவனின் பிரச்சனை நீ தான் என.
சற்று நேரம் சென்றது. சத்தமே இல்லை. அமைதியாக இருக்க இருக்க துர்காவிற்கு தூக்கம் வந்தது. எழுந்து சென்று பிரிஜ்ஜிலிருந்து பால் பாகெட் எடுத்து வெளியே வைத்தாள்.
சத்தம் கேட்டும் எழவில்லை மகி, இதற்கு மேல் பொறுக்க முடியாதவள். பூஜை அறையினுள் சென்று “பாவா” என சிறிதான குரலில் அழைக்க. கண் திறந்தான் மகி.
துர்காவை பார்த்ததும் அவன் கண்ணில் வந்தது என்ன ஆசுவாசமா, இல்லை நிராசையா தெரியவில்லை துர்காவிற்கு. அதை ஆராய்வதற்குள் சுதாரித்துக் கொண்டான், அவள் கணவன்.
மகி ”என்ன தூங்கலையா… அப்போவே, நான் வந்த போது தூங்கிட்டு தானே இருந்த” என்றான் சாதாரண குரலில்.
ஆனால், ஏனோ துர்காவினுள் சுருக்கென தைத்தது. அதனை அவள் முகம் காட்ட. இதை பார்த்த மகியின் முகம் இப்போது வாடியது. அவளிற்கு முகம் காட்டாமல் எழுந்து கொண்டான்.
“கொஞ்சம் டென்ஷன் அதான்…. நீ போய் தூங்கு” என்றான் ஒட்டாத குரலில். மகிக்கு தான் ஒட்டமாட்டான் என்றால் துர்கா அப்படி அல்லவே.
எனவே அவன் சொன்னைதை எல்லாம் காதில் வாங்காமல், அவனுக்கு முன்பாக சென்று ஒரு துண்டு எடுத்து வந்தாள். அதற்குள் மகி டைனிங் ரூம் வந்திருந்தான்.
வாயே திறக்காது துர்கா அவனிடம் துண்டை நீட்ட… “ம்..” என்றான். அவனிற்கு தன் தலை ஈரமெல்லாம் தெரியவில்லை.
துர்கா “தலை….ல ஈரம்…. துண்டு, ஈரமா இருக்கா, அதான் துடைச்சுக்க கொடுத்தேன்.” என்றவள் திக்கி திக்கி பேசினாள். துர்காவால் அவனை நிமிர்ந்து பார்க்கவே முடியவில்லை.
இப்போது மகி தெளிவாகி இருந்தான். எனவே அவளை, வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே, தன் தலையை துடைத்துக் கொண்டான்.
நாகபழ கலர் ஜார்ஜெட் நைட்டி தான் அணிந்திருந்தாள், கணவனின் பார்வையில் என்ன இருந்தது என தெரியாமலே, ஒரு வெட்கம் வந்தது துர்காவிடம்.
குப் என முகம் வேர்த்தது, அவளின் அந்த மூக்குத்தி அதில் மிக அழகாக தெரியவும். மகி இன்னும் பார்த்திருந்தான்.
எதுக்கு இப்படி பார்க்கிறான். ‘கல்யாணம் ஆனா நாளில் இருந்து இப்படியெல்லாம் பாத்தது கிடையாதே.’ என யோசனை செய்து கொண்டே “காப்பி போடவா” என்றாள். கொஞ்சம் தடுமாற்றம் குறைந்தவளாக.
அவள் கிட்செட்னில் இருந்து வரும் வரை, மகி தனது கைவிரல்களில் விளையாடிக் கொண்டிருந்தான்.
அவள் அவனிடம் காபி கப் ஒன்றை கொடுத்து விட்டு, தனக்கென ஒன்று எடுத்து வந்து, ஒரு சேர் எடுத்து அவனின் பின் புறம் போட்டு அமர்ந்து கொண்டாள்.
மகி குடித்து முடித்து, அவள் புறம் திரும்பி அமர்ந்தான். “ஸ்ரீ, நீ போய் ஏற்காடு ரெஸார்ட் கொஞ்சம் பார்த்துக்கிரியா, அகில அனுப்ப முடியாது, நீ போனா மட்டும் போதும். நம்ம ஆளுங்கன்னு யாராவது இருந்தா சரி, நீ ஒரு, ஒரு மாதம் போ, அப்புறம் வேறு ஏற்பாடு பண்ணலாம்.” என்றான் எங்கும் எந்த பிசிறும் தட்டாமல். வார்த்தையில் ஏற்றம் இறக்கம் இல்லாமல்.
துர்கா அவனை இப்போது நிமிர்ந்து பார்த்தாள், இன்னுமேதோ யோசனையில் இருப்பவன் போலவே இருந்தான். ஆனால், முகம் நல்ல தீர்க்கமாக இருந்தது.
துர்காவிற்கு திரும்பவும் யோசனை ‘தன்னை விலக்க நினைக்கிறானோ’ என.
துர்கா “நான் ஒன்னு சொன்ன கேட்பீங்களா…” என்றால் ஒரு அழுத்தமான குரலில்.