மதியம் உணவு அண்ணன் வந்ததன் பிரதிபலிப்பாக அமர்க்களமாய் நடத்தியிருந்தார் மஹாலக்ஷ்மி. மொத்த குடும்பமும் வயிற் நிறைய உண்டு நிம்மதியாக வீடு திரும்பியிருக்க மதியம் அனைவருக்கும் நல்ல உறக்கம். அதே நேரம் சகோதரன் பார்வை தன் மீது ஒரு கேள்வியோடு தொடர்ந்துகொண்டே இருப்பதை கண்டும் காணாமலும் தவிர்த்த மகாலட்சுமிக்கு தான் உறக்கம் எட்டாக்கனியாக போனது.
இனி மொத்தமும் மகனின் கையில் என்று எண்ணியவர் மாலை மணி ஆரை தொட்டதும் அனைவருக்கும் மத்திய சிற்றுண்டியாய் வெளியில் தூரிய தூறலுக்கு இதமாக பஜ்ஜி செய்து உடன் காபி, டீ என கொடுத்து இறுதியாக மகனுக்கு தேவையானதை எடுத்து அவன் கீழே வரும் முன் மாடிக்கு விரைந்தார்.
சரியாக இவர் மாடிக்கு செல்லும் பொழுது தான் கீழே வர ஆயத்தமானவன் டீ-ஷர்ட் ஒன்றை எடுத்து அணிந்த சமயம் அன்னையை பார்த்து சிரிப்போடு, “ஒரு கால் பண்ணிருந்தா நானே கீழ வந்துருப்பேனே ம்மா”
கோவம் தீர்ந்ததோ என்ற ஆசையில் அவன் பேச அன்னை முகம் இப்பொழுதும் வாடி தான் கிடந்தது. அவரின் கை பிடித்து அவன் அறையில் வாயிலில் அமர வைத்தவன் அவர் அருகில் அமர்ந்து, “ரொம்ப கோவமா?” என்றான் வருத்தத்துடன்.
தனயன் முகம் பார்த்தவர் அவன் முகத்தில் இருந்த சோர்வை கண்டு, “ரொம்ப இல்ல. ஆனா இருக்கு. உனக்கு என்ன ப்பா அங்க போகணும்னு அவசியம்? ஆறு மாசம் அப்பா உன்ன பாத்துக்கமாட்டாரா? அது என்ன ப்பா பசங்க கொஞ்சம் வளந்ததும் பெத்தவங்ககிட்ட காசு கேக்கவே இவ்ளோ ஈகோ பாக்குறீங்க? (Tramadol) ”
“அப்டிலாம் இல்ல ம்மா” என்றவன் குரலே உள்ளே சென்றிருந்தது.
“நீங்க நல்ல நிலைமைக்கு வரணும்னு தான் ப்பா உங்க மனசு அலைப்பாயிர வயசுல பெத்தவங்க நாலு வார்த்தை பேசுவோம் அத மனசுலையே வச்சுட்டு இவ்ளோ தூரம் வளந்ததும் இப்டி ஒட்டியும் ஒட்டாம இருந்தா அப்பா-கு மனசு எவ்ளோ கஷ்டப்படும் யோசிச்சு பாத்தியா கார்த்தி?” மகனிடம் எந்த மாற்றமும் இல்லை.
“ஆறு மாசம் தான் இருந்தாலும் கைக்குள்ளயே வச்சுட்டு இப்போ விட மனசு வர மாட்டிக்கிது. அதையும் மீறி உனக்கு பொண்ணு பாத்துட்டு இருக்க நேரம் நீ இப்டி போறது தான் அப்பா யோசிக்கிறாங்க”
“அதுக்கெல்லாம் அவசரம் இல்ல ம்மா. சுபி-கு பாருங்க”
“உன் தங்கச்சிக்கு இப்போ தான் இருபத்தி மூணு ஆகுது. ஒரு வருஷம் எங்க கூட அவ இருக்கட்டும்ன்னு அப்பா சொல்லிட்டாங்க. ரெண்டு மாசத்துல நீ 28 வயசு தொட்டுடுவ. இன்னமும் உனக்கு யோசிச்சிட்டே இருக்கணுமா? எங்களுக்கும் உன்ன குடும்பமா பாக்கணும்னு ஆசை இருக்கு கார்த்தி”
மகன் அமைதியாய் இருக்கவும் அவன் அருந்தாமல் பிடித்திருந்த டம்ளரை அவன் வாயருகே கை பிடித்து கொண்டு சென்றவர் மகன் டீயை அருந்தவும் இந்த நேரத்திற்காக காத்திருந்தவர், “கார்த்தி அம்மா ஒன்னு கேப்பேன் உண்மைய மறைக்காம பதில் சொல்லணும்”
அவனோ மெல்லிய சிரிப்போடு, “கேளுங்க ம்மா” என்றான்.
“நம்ம அஸ்வினியை பத்தி நீ என்ன நினைக்கிற?”
“நல்ல பொண்ணு”
யாரை பற்றி கேட்டாலும் இவன் பதில் இதுவாக தானே இருக்கும், மற்ற நேரமாக இருந்தால் சாதாரணம், இப்பொழுது வைஷ்ணவி என்னும் ஒரு புது அத்தியாயம் வந்த பின் இந்த சாதாரண பதில் கூட அவருக்கு பயத்தை தந்தது.
“நல்ல பொண்ணு தான் ப்பா. உன்னோட முறைப்பொண்ணும் கூட… அந்த விதத்துல நீ என்ன…”
உடனே குறுக்கிட்டவன், “ம்மா… நல்ல பொண்ணு தான். அதுக்குன்னு கல்யாணம் குடும்பம்-னு எங்களுக்குள்ள செட் ஆகும்னு தோணல”
காலை அஸ்வினி தன்னுடைய கையை பிடித்தது நினைவு வர, “அஸ்வினி தவற யாரா இருந்தாலும் பரவால்ல” தலையை உலுக்கி மகன் கூறியதை கேட்ட அன்னைக்கு எல்லையற்ற சந்தோசம்.
அவர் சந்தேகம் அவனுக்கே ஆச்சிரியமாக இருந்தது ‘அண்ணனின் மகளை வேண்டாம் என்றதில் என்ன இவருக்கு மகிழ்ச்சி’ என்று.
“எனக்கும் அதே தான் கார்த்தி தோணுச்சு. சரி நான் போறேன். அப்பா ப்ரன்ட் ஒருத்தரோட சம்மந்தி டைல்ஸ் ஷோரூம் வச்சிருக்காங்களாம். அத பத்தி ஏதோ பேசணுமாம் கீழ வேகமா வா” சமையலறை சென்றவர் இந்த செய்தியை வைஷ்ணவிக்கு தெரிவிக்க அவள் இதழில் விஷம புன்னகை.
“அடுத்த அடிமை சிக்கிடுச்சு… ஹாஹாஹா…”
அவளது வில்லத்தனமான சிரிப்பை சீத்தாப்பழத்தை உள்ளே தள்ளிக்கொண்டே, “அடுத்த அடிமையா? முதல் அடிமை யாருலே?”
“நீ தாம்லே” என்ற வைஷ்ணவிக்கு இன்னும் சிரிப்பு தான்.
“பைத்தியம் தான் ஒட்டிக்கிச்சு. இப்போ வேனா நான் உனக்கு அடிமையா இருக்கலாம். இதே நான் யாரையாவது லவ் பண்ணா அந்த நேரம் நீயும் எனக்கு அடிமதே” – ஷெர்லின்
“அப்ப என்ற அண்ணன நீ லவ் பண்ணலயா?” பதில் தெரிந்தும் தோழியின் வாயிலிருந்து திட்டு வாங்குவதில் அலாதி பிரியம்.
“உன் அண்ணன் எல்லாம் எரும மாடு மேய்க்க கூட ஆகமாட்டான். இதுல அவனை லவ் பண்ணி, ரொமான்ஸ் பண்ணி, டூயட் ஆடி, ஊர் சுத்தி… சாத்தியமா உன் அண்ணன் இதுக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டான்”
“உன்ன மாதிரி ஊர் பொறுக்கி-கு இந்த மாதிரி ஒருத்தன் கெடைக்கிறதெலாம் அதிசயம். ஒழுங்கா சொல்றேன் கேட்டுக்கோ மகேஷ் கிட்ட சத்தமா ரெண்டு வார்த்தை பேசுனா அவ்வளவு தான் ஆப் ஆகிடும். கிழவனும் கெழவியும் உன் கைக்குள்ள, மொத்த ராஜ்யமும் அதிகாரமும் நீ தான்.. இனி உன் பிரியம் ப்பா”
“ரெண்டு அடி தூரத்துல உன்ன வச்சிட்டு நீ வர்றப்ப எல்லாம் சேவகம் பண்ண செலவே இல்லாம உனக்கு ஒரு வேலைக்காரி வேணும் அதுக்கு நான் லாரில அடிபட்டு சாவணும்?”
‘நம்ம கூட சேந்துட்டு எப்படி இவ மட்டும் இவ்ளோ தெளிவா இருக்கா?’ வைஷ்ணவி ஷெர்லினை கண்கள் சுருக்கி முறைக்க ஷெர்லின் உண்டு முடித்த பழத்தை தோழி கையில் கொடுத்தாள்.
“என்னவாம் உன் மாமியாருக்கு?” – ஷெர்லின்
“அவுகளோட மாமியாரை கரெக்ட் பண்ண போறேன். நான் கேட்ட வெத்தலை உரல் எங்க?”
“செத்து போன கெழவி தலமாட்டுல இருந்து யாருக்கும் தெரியாம உருவிட்டு வந்தேன். ரெண்டே நாள்ல திருப்பி தந்துடு சொல்லிட்டேன்” – ஷெர்லின்
“இனி வராது. சமையலோட பாட்டிக்கு கிப்ட் பண்ண போறேன்” – வைஷ்ணவி
“என்னது இத கிப்ட் பண்ண போறியா? ஏட்டி பைத்தியமா நீ? புதுசு வாங்கி குடு”
“காசு நீ தருவியா?” – வைஷ்ணவி
“ஏன் சம்பளம் வாங்கி அப்டியே ஒளிச்சு வச்சிருக்கியே அத எடுத்து வாங்கு. ஒரு ஆசை சாக்லேட் கூட வாங்கி தரல. என் காசுல மட்டும் பரோட்டாவா உள்ள தள்ளுனா” தோழியை முறைத்து அடுத்த பழத்தை கையில் எடுத்து உரிக்கும் வேளையில் ஷெர்லின் இறங்கினாள்.
“சேமிப்பு பண்ணனும்னு சுவாமி விவேகானந்தர் சொல்லிருக்காரு ஷெர்லின் அவர்களே”
“அதே சாமி தான் ஒடம்பு மட்டும் வளந்தா போதாது மூளையும் வளரணும்னு சொன்னாரு அத கேட்டியா?” – ஷெர்லின்
“நமக்கு என்ன தேவையோ அத மட்டுமே எடுக்குறது தான் புத்திசாலி தனம்” – வைஷ்ணவி
“உனக்கு தக்க நியாயத்தை மாத்திக்க. சரி எதுக்கு கிழவிக்கு இந்த உரலு?”
“ஒரு டிக்கெட் கரெக்ட் பண்ணிட்டேன். அடுத்த மெயின் டிக்கெட்ட உசார் பண்றது அவ்ளோ ஈஸி இல்ல. பாத்து பக்குவமா செண்டிமெண்ட் பாத்து அடிக்கணும். அதுக்கு தான் அந்த உலக்கை. வா போலாம். என் கல்யாணத்துக்கான முதல் படி” – வைஷ்ணவி
“அடியே ரத்தி அகினி கோத்ரி… வாய்த்தியார் மக மக்குனு சும்மாவா சொன்னாய்ங்க. இந்த வெத்தல உரலு என் ஆச்சி அது சமைஞ்ச காலத்துல இருந்து கழுவாம வச்சிருக்கு. இத அப்டியே போய் குடுத்து பாரு பிச்சைக்காரன் கூட வாங்க மாட்டான். இதுல கோயம்பத்தூர் சீமாட்டிக்கு குடுக்கபோறேன்னு நிக்கிற”
ஷெர்லின் கூறியதை யோசனையோடு கேட்ட வைஷ்ணவி, “சரி தான். நீ கீழ போய் அத நல்லா புளி வச்சு தேச்சு கொண்டா. நான் அதுக்குள்ள கெளம்பி வந்துடுறேன்”
“நீ பீர் அடிக்க நான் லைன்ல நின்னு வாங்கணுமா? போடி போடி போக்கத்தவளே…”
“அந்த என்ஜினீயரு நீ எடுத்த லீவ்க்கு மொத்தமா வேலை வாங்க பிளான் போட்டான். ஹெல்ப் பண்ணலாம்னு நெனச்சேன். சரி பரவால்ல. புளிய வச்சு தேய்ச்சிடலாம் அவன் சொல்ற வேலைய செய்றதுக்கு”
படியை நோக்கி சென்ற தோழியின் கையை பிடித்து விரிந்த கண்களுடன், “வெள்ள வெளீர்னு விளக்கணுமா? மஞ்ச கலர்ல வர வைக்கணுமா?”
தன்னுடைய வழிக்கு வந்த சகோதரியின் தோளை தட்டிய வைஷ்ணவி, “உன் குடும்பத்து நாத்தம் வராம இருந்தா போதும். முக்கியமா என்ன பெத்த மம்மிகு இது தெரிய கூடாது சொல்லிட்டேன்”
ஒன்றும் செய்ய முடியாத நிலையில் ஷெர்லின் சென்று தன்னுடைய வேலையை முடித்து வந்த நேரம் வைஷ்ணவியும் இளம் பச்சை நிற சுடிதாரில் தயாராகி வீட்டின் வாயிலில் நின்றாள்.
“மினுகிட்டு வருவன்னு நெனச்சேன்…” ஷெர்லின் வைஷ்ணவியை பார்த்து சிரிக்க,
“நான் என்ன ஜேம்ஸ் பாண்ட் மகளா மின்னுகிட்டு வர(ஷெர்லின் தந்தை பெயர் ஜேம்ஸ் + அவர் ஒரு போலீஸ்)” மீண்டும் ஷெர்லினை வாரி தன்னுடைய வருக்காலத்தின் வீட்டிற்குள் அடி எடுத்து வைத்தாள்.
வரவேற்பறையில் தந்தையோடு டைல்ஸ் பற்றிய பேச்சில் ஈடுபட்டிருந்த அவளவனை நன்றாக சைட் அடித்தவாறே வீட்டிற்குள் உரிமையாய் நுழைந்தவள் அன்னையோடு கதை பேசுவதில் ஈடுபட்டிருந்த சுபத்ராவை இடுப்பில் கிள்ள அவளோ சிறிதாக அதிர்ந்து கத்திவிட்டாள்.
“ஏண்டி வண்டில அடிபட்ட நாய் மாதிரி கத்துற?”
தன்னை விசித்திரமாய் பார்த்து கேள்வி கேட்கும் ஷெர்லினிடம் விரிந்த கண்களோடு பதட்டம் விலகாமல் சுபத்ரா, “க்கா இடுப்புல கிள்ளுனா எப்படி க்கா சும்மா இருக்க முடியும்?”
“அது பொம்பள புள்ளைங்களுக்கு தான் சுபி தெரியும்” அந்த இடைவெளியிலும் வைஷ்ணவி தோழியை அசிங்கப்படுத்த அந்த இடத்தில் ஒரு குட்டி விவாதம் அரங்கேறியது.
“ஊர்ல கேளுடி யார் பொம்பள புள்ள யார் ஆம்பள புள்ளன்னு. ஒரு தெரு விடாம எல்லாரோடையும் ஓராண்ட இழுத்து வச்சிருக்குறது நீ” – ஷெர்லின்
“அதுக்கெல்லாம் வேர் யாரு? நீ தானே?” – வைஷ்ணவி
“வீட்டு கண்ணாடி ஜன்னலை ஒடைக்கணும், தூங்குற கிழவன் வாயில அருசிய போடணும்னு ஆசை இருக்குன்னு சொன்னேன். ஆனா இதெல்லாம் செஞ்சது யாரு?” – ஷெர்லின்
“அதெல்லாம் தெரியாது. தப்பு பண்றவன விட தூண்டி விடுறவன் தான் உண்மையான குற்றவாளின்னு நம்ம சட்டம் சொல்லுது” தன்னுடைய அத்தையிடம் திரும்பி, “சரி தானே யுவர் ஆனந்த்?”
“அது ஹானர். ஆனந்த் இல்ல” – ஷெர்லின்
“என்னமோ ஒன்னு. நீங்க சொல்லுங்க த்தை. யார் மேல தப்பு?”
“உங்க ரெண்டு பேரையும் பேச வுட்டு வேடிக்கை பாக்குற என்ற மருமவ தான் தப்பு பண்ணவ”
சமையலறை உள்ளே நுழைந்த சேர்மத்தாய் கையிலிருந்த காபி கிளாசை மருமகளிடம் கொடுத்தவர், “இந்த பொண்ணுகளுக்கு வாய் குசும்பு ஜாஸ்தி மருமவளே. இதெல்லாம் பாக்குறப்ப உன்ர அண்ணன் மவளையே என்ற பேரனுக்கு கேட்டுடலாமா-னு தோணுது”
“சரி தான் பாட்டி. அஸ்வினிக்கு அண்ணா மேல கண்ணு ரொம்ப நாளாவே” – சுபத்ரா
மஹாலக்ஷ்மி பதட்டமாய் வைஷ்ணவியை பார்க்க அவளோ சிறிதும் அலட்டாமல் பேசட்டும் என்ற ரீதியில் பார்க்க அவளை பார்த்து கழுத்தை வெட்டியவர் வந்த வேலை முடிந்ததை தனக்கென்று மகன் தந்த சிறிய அறையில் சென்று மீண்டும் முடங்கினார்.
அவர் சென்றதும், “சுபி விளக்கு ஏத்து டா. பிரிட்ஜ்ல பூ வச்சிருக்கேன் பாரு” மகளுக்கும் வேலையை கொடுத்து அனுப்பி வைத்தார்.
“என்ன த்தை உங்க மாமியார் காரியத்தையே கெடுத்து வகித்து” வராத கோவத்தை அவர் சென்ற திசை பார்த்து வைஷ்ணவி பேச,
“பாயாசம் ஒன்னு போட்டுட வேண்டியது தான்” ஷெர்லின் கொடுத்த ஐடியாவில் பயந்தே போனார் மஹாலக்ஷ்மி.