Skip to content
Post Views: 553
விசாலம் கடைக்கு சென்றிருக்க, சாயந்தரம் வருவதாக இருந்த திருமலை மதியமே வீடு திரும்பினார்.
மீனா அடுப்படியில் இருந்தாள்.
“மீனா தண்ணீர் தாம்மா!”
‘மாமாவா. . .தன்னிடமா. .?’
Advertisement
அவசரமாகத் தண்ணீர் கொண்டு சென்றவள், படி இடறி தன் மேலே கொட்டிக் கொண்டாள்.
“என்ன அவசரம்? மெதுவா வந்தா என்ன?”
விழி விரியப் பார்த்திருந்தவள் நெஞ்சில் தன் வேஷ்டியால் துடைத்தார்
பின் கைகளால். இன்னும் அழுத்தி!
Advertisement
நெளிந்தவளைத் தன் மார்போடு இறுக்கி அணைத்தார்.சட்டை பட்டன்களை அவிழ்த்துக் கொண்டார். அவள் முகத்தை தன் மார்பில் புரட்டினார்.
Advertisement
“உன் மாமாதானே!”
அன்றொருநாள் விசாலம் அடைமாவு தரேன் என்று சொன்னார் என வாங்குவதற்காக அவர்கள் வீட்டிற்கு சென்ற பவித்ரா கதவு திறந்திருக்கவும் சுவாதீனமாக உள்ளே சென்றவள், மூர்த்தியைப் பார்த்தாள்.
அவர் திருமலையிடம், “ரொம்ப பயம்மா இருக்குடா! தூங்க முடியலை!காதில் மீனா விட்டுடுங்கன்னு சதா சர்வ காலமும் கத்திட்டே இருக்கா!”
Advertisement
“செத்தவளைப் பத்தி என்னடா உனக்கு? லூசுப்பயலே!”
அத்தை வருவதற்காகக் காத்திருந்த நேரத்தில் அவர்கள் பேசுவதை முழுவதுமாகக் கேட்டிருந்தவளுக்கு நிறைய புரியவில்லை.
அன்று விருதுநகரில் ஒரு கல்யாணத்திற்கு இருவரும் சென்றிருந்தனர். மொய் எழுதியதும்,” விசாலம் எனக்கு சாத்தூர்ல ஒரு அவசர வேலை! லேட்டானா நீ நம்ம ஜெகனோட வந்திரு!” என்றபடி கிளம்பினார்.
காலிங்பெல் சத்தத்தில் கதவைத்திறந்த மீனா மூர்த்தியைப் பார்த்ததும்,
” அத்தையும் மாமாவும் வெளியே போயிருக்காங்க!”
“தெரியும்!”
ஊஞ்சலில் அமர்ந்தவர், “என்ன வெயில்! கொஞ்சம் தண்ணீர் தரியா?”
தந்தாள்.
“வா! இப்படி உட்காரு!”
தன்னருகில் அமர்த்திக் கொண்டவர், அவள் தோள்களை இறுக்கியபடி, தொடையில் கை வைத்தார்.
நெளிந்தாள்.
” அந்த ஸ்பெஷல் பாக்கு வைச்சிருப்பானே எடுத்து தா!” என்றபடி வெற்றிலையை மடித்தார்.
எடுத்துக் கொடுத்தவள், சிட்டாக வெளியே ஒடினாள்.
வாசல் கேட்டைத் திறந்து, திருமலைநாதன் உள்ளே நுழைந்தார்.
“அத்தை எங்க மாமா?”
உக்கிரமாய் முறைத்தார்.
பயத்துடன் உள்ளே சென்றாள் மீனா!
“என்னடா குட்டி படியாது போல!”
“இங்கே வா!” திருமலை அழைத்ததும் ஓடிச் சென்றவளை, இருவருக்கும் நடுவில் அமர்த்தினார்.
மூர்த்தியின் கைகள் எல்லை மீறின!
“மாமா அவர். . .!”
“அவரும் மாமாதான்!”
சிவப்பு தாவாணியை உருகி வீசினார். சட்டையில் கை வைத்து இழுக்கையில், ” மாமா என்னை விட்டுடுங்க. . .எனக்கு பயம்மா இருக்கு! அத்தை. . .அத்தை. .!”
“அவ சாயந்திரம்தான் வருவா. அதுக்குள்ள நம்ம ஆட்டத்தை முடிச்சிக்கலாம்.!”
“வேண்டாம். வேண்டாம். மாமா!”,
” என்னடி, பிச்சைக்கார பரதேசி! கூட்டிட்டு வந்து, மூணு நேரம் சோறு போட்டு துணிமணி கொடுத்து பளபளப்பாக்கிருக்காளே உன் அத்தை! யாரு சம்பாத்தியம் இதெல்லாம். .ம்ஹ்ம். நன்றி வேண்டாம்!”
“மாமா எனக்கு இந்த புது டிரஸ்லாம் வேண்டாம். என்னை விட்ருங்க .ஊருக்குப்போயிடறேன்.!”
“அப்போ கழட்டுடி எல்லாத்தையும்!”
சட்டையைக் கிழித்தார்.
மீனா ஓடினாள்.
“என்னடி ஆட்டம் காட்றியா? எங்களை சந்தோஷப்படுத்திட்டு ஊருக்குப் போ! இல்லேன்னா திருடிட்டேன்னு போலீஸ்ல பிடிச்சுக் குடுத்திருவேன்!”
மூர்த்தியின் கை அவளது பாவாடை முடிச்சை அறுத்தது!
அலற வாய் திறந்தவளின் வாய்க்குள் தாவணியைச் சுருட்டி திணித்தனர்.மூர்த்தி அவள் கைகளைப் பின்னிருந்து முறுக்கி பிடிக்க, பயத்திலும், வலியிலும், சத்தம் வெளிவர வழியின்றி கத்தினாள்.
திருமலை நாதன் அவள் மீது படர்ந்து இயங்கினார்.
கால்களால் வலுவின்றி உதைத்தாள்.எதுவுமே அவரைத் தடுக்கவில்லை. மூர்த்தியையும்!
அவள் மூர்ச்சையானதைக் கூட கவனிக்காமல் மிருகங்கள் இயங்கின.
எல்லாம் முடிந்ததும்,” இன்னும் கொஞ்சம் பாக்கு அதிகமா வைடா! எங்கேருந்துதான் வாங்கறியோ!”
சிறிது நேரம் கழித்துதான் அவள் அசைவின்றி இருப்பதைக் கவனித்தனர்.மூர்த்தி பதறி அவள் மூக்கருகே கை வைத்துப் பார்த்தார் மூச்சு இருந்தது! அவள் மார்பு ஏறி இறங்கியதும் ஆசுவாசமாயினர்.
மூர்த்தி தண்ணீர் எடுத்து வந்து அவள் முகத்தில் தெளித்தார். அவளின் அலங்கோல நிலையைப் பார்த்து, இருவரும் விசாலத்தின் ஒரு பழைய பாவாடையை எடுத்து மேலெல்லாம் துடைத்து சுத்தம் செய்தனர். அவளது பையிலிருந்து வேறு ஒரு ஆடை அணிவித்தனர். திருமலை அவள் கன்னங்களை வேகமாகத் தட்டினார்.
இலேசாகக் கண்கள் திறந்தவளைப் பார்த்ததும், மூர்த்தி ஃபிரிட்ஜில் இருந்து பவண்டோ எடுத்து வந்து அவள் வாயில் ஊற்றினார். பின் அவளைத் தூக்கி வந்து, அவளது இடத்தில் பாயில் படுக்கவைத்தனர்.
” இங்க பாரு பேசாம இருந்தேன்னா, இரண்டு நாளில் ஊருக்கு அனுப்பிருவேன்.உங்க அத்தை இல்ல வேற யார்கிட்டேயாவது சொல்லாம்னு நினைச்ச, உந்தங்கச்சி லோகுவைக் கூட்டிட்டு வந்துருவேன்.உங்கப்பனுக்கு காசுதான் வேணும்” மிரட்டினார்.
மீனா கண்ணீர் வழிய அயர்ந்தாள்.
விசாலம் வரும்போது அவளுக்கு மேல் அனலாய்க் கொதித்தது. பயந்து போனவர் இரவானாதால் , மாத்திரை கொடுத்து உறங்க செய்தார். காலையில் டாக்டரிடம் போக அழைக்கையில், பிடிவாதமாக மறுத்தாள். ஊருக்குப் போக வேண்டும் என அழுது பிடிவாதம் பிடித்தாள்.
“சரி கொஞ்சம் காய்ச்சல் விட்டதும் அனுப்பறேன்!” என்ற விசாலத்தின் வார்த்தையில் நம்பிக்கை வைத்து தூங்கினாள். நான்காவது நாள் அவள் சற்றே தெம்பாய் இருப்பதைப் பார்த்தவள், நம்பிக்கையாள ஆளுடன் விக்கிரமசிங்கபுரம் அனுப்பி வைத்தார்.
ஊருக்கு சென்ற அடுத்த நாள் தன் சிகப்பு தாவணியில் தூக்கு மாட்டிக் கொண்டாள்.
விசாலத்துக்கு அதிர்ச்சி. சிறிது சந்தேகமும். அழுதார்.
மூர்த்தியும், திருமலையும் அதிர்ந்தாலும் அலட்சியமாய்க் கடந்தனர்.
விசாலத்தின் அடுப்படியில், அரிசி டிரம்மில் அடியில் , தப்பும் தவறுமாய் எழுதப்பட்ட ஒரு ஐந்து வரி கடிதம் அவரது பார்வைக்காய் காத்திருந்தது!
பவித்ராவின் சிவப்பு பாவாடையைக் கண்ட ராஜி அதிர்ந்து சந்துருவிடம் கண் காட்டினாள்.
“லீவுதானேம்மா. .இன்னிக்கு எங்க போற?”
“விசாலம் அத்தை மாங்கா தரேன்னாங்க!”
” அவங்க கடைக்குப் போயிருக்காங்கம்மா. .!”
” இப்போ வந்திருவாங்கண்ணா!”
“சரிம்மா வெளில போக வேண்டாம் என்ன?”தலையாட்டி விட்டு மாடிக்கு சென்றவள், காலிங் பெல் அடிக்க மூர்த்தி திறந்தார்.” வாம்மா!”
“அங்கிள்.அத்தை மாங்கா தரேன்னாங்க!”
“அவ கடைக்கு போயிருக்கா! ஆமா விசாலம் அத்தைன்னா, என்னையும் மாமான்னே சொல்லும்மா!”
மூர்த்தி ஆமோதிப்பாய் தலையசைத்தார். அவரை ஆக்ரோஷமாய் உறுத்து விழித்தாள் பவித்ரா. அவர் உடல் சிலிர்த்து அடங்கியது!
“அந்த கண்களில் இருந்தது என்ன?”
“நீயும் மாமாதான், இவனும் மாமாதான்!”, சீற்றத்துடன் ஒலித்தது பவித்ராவின் குரல்!
” பவித்ரா. . . .?” திருமலை குழப்பமாய் ஏறிட்டார்.
ஆங்காரமாய் தள்ளி விட்டாள் திருமலையை.
“ஏய்.ய்.ய். .!”
“திருமலை இது அவளாடா. . .?”
டக்கென்று திரும்பி மூர்த்தியிடம் சென்றாள்.
திருமலை பாய்ந்து பிடித்தார் அவளை.அவளது சட்டை கிழிந்து, அவரது கைகளில் வந்தது!
“என்னாச்சு உனக்கு. .?”
“விடுடா விடு என்னை!” அவர் கைகளில் பலம் கொண்ட மட்டும் கடித்தாள்.
‘சட்’ டென்று கையை உதறியவர், அவளை கோபத்துடன் பிடித்து தள்ளினார். ஊஞ்சல் நெற்றிப்பொட்டில் அடிக்க இரத்தம் ஊற்றியது.
மூர்த்தி பற்றி பிடித்தார் அவளை!
“டேய் என்னடா இது?”
அவள் மூர்த்தியின் பிரௌன் கலர் சட்டையின் காலரைப் பிடித்து இழுத்தாள். மூர்த்தி தடுமாறி விழுந்த்தும், அவர் கைகளை இழுத்து, அவரது நகங்களாலேயே தன் கன்னத்தைப் பிராண்டினாள்.
“ஏய். .என்ன பண்ற? மூர்த்தி இவளைத் தூக்கு! கீழ விட்ரலாம்.!”
அவளை அணைத்து தன் மார்போடு சேர்த்து தூக்கினார். உதறும் கால்களை மூர்த்தி பிடித்துக் கொள்ள, ” ஏய் வலிக்குது விடுங்க! விட்டுடுங்க! யாராவது வாங்களேன். .. .ஹெல்ப்!” என பெருங்குரலெடுத்து கத்தினாள்.
அவள் கன்னம், மார்பு என திருமலையின் கைகளும் பிரேஸ்லெட்டும் அழுந்தி காயம் ஏற்படுத்தி கீறியது!
சத்தம் கேட்டு ஓடி வந்த சந்துரு அதிர்ச்சியானான் கண்ணெதிரே கண்ட காட்சியில்!
“த்.த்.தூ மனுஷனாடா நீ. .!”
“சந்துரு இல்ல. .நீ நினைக்கற மாதிரி இல்ல. .!”
“கொழந்தைடா அவ. . .அவளைப் போய். . .. .நாயே!” சட்டையைப் பிடித்து இழுத்து அடித்தான்.
அக்கம் பக்கத்தவரும் கூடினர்.
“போலீஸ்ல சொல்லுங்க சார்!”
பவித்ரா திரும்பி இருவரையும் பார்த்தாள். ஆக்ரோஷமாய் ஒளிர்ந்தது கண்கள்.
“அவளா. .அவளேதானா. .?” இருவரும் திகைத்தனர்.
ஒரு கோணல் சிரிப்புடன் மயங்கினாள் பவித்ரா.
தணிகாசலம் ஆம்புலன்சுக்கு ஃபோன் செய்தார்.
சந்துரு அவளைக் கைகளில் அள்ளியபடி, அவர் மாமாவின் ஹாஸ்பிடலுக்கே கொண்டு சென்றான். பவித்ராவிற்கு சிகிச்சைகள் தொடர்ந்தது! பவித்ராவின் அப்பாவும் கேள்விப்பட்ட உடனே வந்து விட்டார். தன் மகளின் எதிர்காலம் குறித்து கவலைப்பட்டவரை வெங்கடாசலம் ஆறுதல்படுத்தினார்.
திருமலைநாதனையும், மூர்த்தியையும் போலீஸ் வந்து கைது செய்து ஜீப்பில் ஏற்றினர். ஊரே வேடிக்கை பார்க்க, அவமானத்தில் குனித்த தலை நிமிரவில்லை.
விசாலம் எதுவும் பேசவில்லை. சில நாட்களுக்கு முன் மீனாவின் கடித்த்தைப் படித்தவள், மீனாவுக்கு நடந்த அநியாயத்துக்கு நியாயம் கிடைத்ததாகவே எண்ணினாள். அவளால் நம்ப முடியவில்லை. வெளியே வரவேயில்லை.
ஜீப்பில் மீனா ஒரு சிரிப்புடன் இவர்கள் நடுவே வந்து அமர்ந்தாள்.
அட்டெம்ப்ட் டு ரேப் என வழக்கு பதிவு செய்யப்பட்டது. சின்ன பெண் எனவே போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். சாட்சிகள் அவருக்கு எதிராகவே இருந்தது! பிரேமா கூட சாட்சியம் அளித்தாள்.
போலீசால் பவித்ராவிடம் வாக்குமூலம் வாங்க முடியவில்லை.
“சின்ன பெண்! நடந்த அதிர்ச்சியில், மூளை வேண்டாத நிகழ்வுகளை ஒதுக்கியதில், தனக்கு என்ன நடந்த்து என்றே தெரியவில்லை!” என மாமாவின் நண்பர் மனோதத்துவ டாக்டர் அரவிந்த் கோர்ட்டில் வாக்குமூலம் கொடுத்தார்.
“அவள் எதிர்கால நலன் கருதி அவளுக்குப் பூரண ஓய்வு தேவை !” என வலியுறுத்தினார்.
மயக்கத்தில் மீனா கண்ணீருடன் வந்து நன்றி சொல்லி , பவித்ராவின் நெற்றியில் முத்தமிட்டு கைகூப்பி விடை பெற்று சென்றாள்.
பவித்ரா கண் விழித்தவள் அடித்து போட்டது போல் கிடந்தாள்.
” எனக்கு என்ன ஆச்சு? ஏன் இவ்வளவு காயம்? என்ன நடந்தது?” தொடர்ந்து கேள்வி எழுப்பியடி இருக்கிறாள்.
error: Content is protected !!