மாயாவி 4 ::- என் குடும்பத்தை ஆள வந்த நீ ! என்னையும் என் மனதையும்.. உன் அன்பால் ஆள நினைக்கிறாயே! என்னடி மாயாவி நீ ! அப்பாவின் மரண போராட்டத்தின் இடையே அவர் கேட்டதை தட்ட முடியாமல் திருமணத்திற்கு சம்மதம் சொன்னாலும் அந்த பந்தத்தை மனதார ஏற்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான். “அவ சம்மதம் சொல்லமாட்டான்னு தப்பா கணக்கு போட்டு ,அப்பா மனசு கஷ்டப்பட கூடாதுன்னு கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னேன்… ஏற்கனவே […]
மாயாவி 3 ::- கட்டாயத்தின் பேரில்… நான் கட்டிய தாலியால்… என் வாழ்வில் நுழைந்த நீ ! என்னை கட்டிப்போட்டு என் மனதிலும் நுழைய முயல்கிறாயே! என்னடி மாயாவி நீ ! அவர் சொன்னதை கிரகிக்கவே குழலிக்கு சில நிமிடம் ஆனது… உடனே அவரிடம் இருந்து தன் கையை உருவ முயன்றவளின் முயற்சியை முறியடித்து அதை இறுக்கமாக பற்றியவரை நிமிர்ந்து பார்த்தவள், “என்னால முடியாது மாமா ! கண்டிப்பா என்னால நீங்க கேட்டதை […]
மாயாவி –2 ::- நீ எந்தன் கனவா! நீ எந்தன் கற்பனையா! அல்லது நீ எந்தன் நிழலா! எதுவென்று நான் அறியுமுன்னே… நீ எந்தன் நிஜமாகிப் போனாயே! என்னடி மாயாவி நீ ! “நீ சொல்றது உண்மையா காரு? உனக்கு கல்யாணமாகிடுச்சா? ஐயோ என்னாலே நம்ப முடியலையே…“ என்றபடி அவளை கைகொடுத்து எழுப்பியவன் முற்றிலும் வேறாக மாறியிருந்த தன் தோழியை பார்த்து மகிழ்ந்தான். “ஐய்! என் காருக்கு கல்யாணமாகிடுச்சு.. என் பூனைக்கு கல்யாணமாகிடுச்சு…” […]
மாயாவி – 1 !! விலகவா ! விலக்கி வைக்கவா ! என்று நான் முடிவெடுப்பதற்குள் … நீயே எந்தன் விலங்கானாயே! என்னடி மாயாவி நீ ! பரபரப்புக்கும் நாகரிக வளர்ச்சிக்கும் பெயர் போன பெங்களூரில் வாகன நெரிசலில் மாட்டிக் கொண்டிருந்தவனின் முகமோ டென்ஷனை அதிகமாக குத்தகைக்கு எடுத்துக் கொண்டிருந்தது… அவனின் டென்ஷன் எல்லாம் இந்த வாகன நெரிசலால் அல்ல… வாகனம் நகர நகர அதில் கிடைக்கும் இடைவெளியில் இதோடு கிட்டத்தட்ட இருபத்தைந்து முறைக்கு மேல் […]