#TNWcontestwriter
#013
"நின் விழிகளில் கண்டேன் நேசம்"
பெயர் சொல்லாமல் எழுதும் போட்டி கதைகள்.. தமயந்தி.. தன் 15 வயது மகள் ஸ்ரீவிஜித்தவுடன் வாழ்ந்து வருகிறாள் சிங்கிள் மதர் ஆக...தன்னவனின் நினைவு அவனின் ஜாடைலேயே இருக்கும் மகளை பார்க்கும் போதெல்லாம் சுழற்றி அடித்தாலும் அதை மகளுக்கு காட்டாமல் தன் மனதிலும் பாரம் ஏற்றிக் கொள்ளாமல் வலம் வருகிறாள் முகத்தில் ஒட்ட வைத்த புன்னகை உடனேயே... தந்தையை பற்றிய அதீத ஆசையும் ஏக்கமும் மனதில் இருந்தாலும் அதை தாயின் மனது வாடக்கூடாது என்பதற்காகவே ஒதுக்கி வைக்கிறாள் ஸ்ரீ.. இதற்கிடையில் பள்ளியின் மூலம் சென்னைக்கு ஒரு போட்டிக்காக போக வேண்டிய நிலை ஏற்படும் போது தனக்கு ஆசை இருப்பினும் சென்னை என்ற பெயரே அன்னைக்கு வேப்பங்காய் என்று தெரிந்து கொண்டு அந்தப் போட்டியை தவிர்த்து வரும் நிலையில் மகளின் ஆசை அறிந்து சென்னைக்கு செல்ல முடிவெடுக்கிறாள் தமயந்தி அங்கு தன்னவனைப் பார்த்து விடவே கூடாது என்று வேண்டுதலோடு.. அதே நேரம் தந்தையை ஒரு முறையேனும் பார்த்து விட வேண்டும் என இறைவனிடம் வரம் வேண்டி பயணமாகிறாள் சென்னைக்கு ஸ்ரீ... யாரின் வேண்டுதல் நிறைவேறியது என்பதை கதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே.. விஷ்வஜித் தன் மகன் நிகர்தன் மற்றும் மாமன் மகள் நேத்ராவுடன் வாழ்ந்து வருகிறான்... எப்பொழுதும் ஒரு தேடல் இவன் கண்களில்.. மனதும் யாரையோ தேடிக்கொண்டே இருக்கிறது...இவனின் கோபத்திற்கு அஞ்சி எட்டே நின்று இவனின் மனம் அறிந்து நடந்து கொள்கிறாள் நேத்ரா.. ஆனால் தந்தைக்கும் மகனுக்கும் அதீதமான பாசமும் அன்பும்? இந்நிலையில் ஒரு சந்தர்ப்பத்தில் ஸ்ரீ யை சந்திக்கும் விஷ்வாவின் மனதில் ஏதோ ஒரு இனம் புரியாத நெகிழ்வும் மகிழ்வும் ? அதேபோல் தமயந்தி யையும் சந்திக்கிறான் விஷ்வா நீங்கா கோபத்துடன்... என்ன நடந்தது இவர்கள் வாழ்வில் யார் யாரோடு சேர்ந்தார்கள் ஸ்ரீக்கு அவள் எதிர்பார்த்து ஏங்கிய தந்தை பாசம் கிட்டியதா என்பது கதையில்.. விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்போடும் அழகான எழுத்து நடையோடும் நகர்ந்தது கதை ??நீங்கள் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ??? இந்த எழுத்தாளர் இலங்கையைச் சேர்ந்தவர் என நினைக்கிறேன் ??
Good luck dear ??