ராஜா ராணி - 1

Advertisement

ஸ்ரீராமும் மகாலஷ்மியும் பாட்டிச் சொல் தட்டாதப் பேரப்பிள்ளைகள்.
அதற்கு மாறாக சரணும் மதுவும் சின்ன வயதிலிருந்தே பாட்டியிடம் எதிர்த்துப் பேசி, எப்போதும் அவரின் வெறுப்புக்கு ஆளான ஜீவராசிகள்.

“டேய்…. என்ன அண்ணா நீ… நோ பீலீங்க்ஸ்… சரி அதை விடு… எப்போ… உனக்கு ஆபிஸ் போற ஐடியாடா…. இன்னிக்குப் பெரியம்மாக்கு டோஸாம்….”

“போடி…. அங்க போனா… ராம்…. மாறி செய்யு…… ராமைக் கேட்டு செய்னுப் படுத்துவாங்க…. இதுங்க…….கூடல்லாம் என்னால வொர்க் செய்ய முடியாது..” என மறுக்க

“அப்போ… இப்படி ஊரைச் சுத்திட்டு இருக்கப் போறியாடா……?”

“இல்லடி… இந்த பர்த்டே அன்னிலேர்ந்தாவது ஆபிஸ் போகனும்…. இல்லனா அம்மா அழுவுற அழுகையில நம்ம வயலுக்குத் தண்ணிப் பாய்ச்சவே தேவையிருக்காது……”

“சரி… நீ என்ன செய்யப் போற…?”
“ஹம்ம்…. இன்னும் ஒரு மாசத்துல எக்சாம் முடிஞ்சிடும்…. அதுக்கு அப்புறம்… நானும் சில கம்பெனிக்கு அப்ளை பண்ணிருக்கேன் டா…..”

“ஆத்தா உன்னை வேலைக்கு அனுப்ப ஒத்துக்கும்னு நினைக்கிறியா டி……?”

“அனுப்பாம….?” என்றாள் புருவம் உயர்த்தி.

“இங்க பாரு சரண்…. இத்தனை நாள் அவங்கப் பேச்சை நான் கேட்டேன்ல…. எனக்குப் பிடிச்ச…… ஜர்னலிசம் கூடப் படிக்க விடல… பொம்புள புள்ள…. பத்திரிக்கைல வேலைப் பார்த்தா பிரச்சனை வரும்னு சொல்லித் தடுத்தாச்சு…. இப்போ… வேலைக்கும் போக விட மாட்டாங்களா….. நெவர்… சரண்…. என்னால நம்ம அம்மா மாறில்லாம் வீட்டுக்குள்ள அடைஞ்சு கிடக்க முடியாது… மஹா மாறிப் புருசனுக்குச் சேவை செஞ்சிட்டு குழந்தைப் பெத்துட்டு நல்ல மக, நல்ல மருமகன்னு செர்டிஃபிகேட்லாம் எனக்கு வேண்டாம்... ஒரு வாழ்க்கை அதை நான் என் இஷ்டத்துக்கு வாழ ஆசைப்படுறேன்….” என்றாள் உறுதியோடு.

ஆனால் அவள் வாழ்வை செதுக்க வேறு ஒருவன் சிற்பியாய் இருப்பதை அவள் மறந்து போனாள்…!!
Nice ud sis, antha sirpi eppo, eppadi varuvan, achiki pidithavana?
 

Advertisement

Advertisement

Back
Top