உடல் இரண்டானாலும்
உணர்வுகளை ஒன்றாகி
உடன் பயணித்த உறவு
உணர்வற்ற நிலையில்
உறைந்து கிடக்க
உடன் இருப்பவர்களின்
உயர் அழுத்தம் கூட்ட....
உடனே வாருங்கள் அடுத்த அத்தியாயம் உடன்....
முன்னொரு நாள்
மலர்ந்த காதல்
முடிவில் நட்பாய் மாறியது...
மனைவியின் புரிதலில்
மனக்காயங்கள் மெதுவாய் மறைந்தது...
மனமகிழ்ந்த கணவன்
மனதில் நேசம்
மீண்டும் மலர்ந்தது...
மனதை வாசித்த நட்பொன்று
மௌனத்தின் மொழியையும் புரிந்தது...
மெல்லிய உணர்வுகள் எல்லாம்
மறைக்க முடியாத மெல்லிய நட்பாக மாறியது...
நிமிடமெல்லாம் டென்ஷனுடன் துடிக்கும் ரம்யா,
நிதானத்தின் மொழியாக
நிற்கும் தருண்.
நெருப்பாய் வெடிக்கும் அவள் கோபம்,
நீரோடை போல குளிர்விக்கும் அவன் வார்த்தைகள்.
நட்பின் அழகே
நலமுடன் பரிமாறிக்கொள்ளும்
நேசத்தின் வேராக
நின் புன்சிரிப்பே....
நிழலாடும் நின் நினைவில்....
நினைவெல்லாம் நீயாகி
நித்தமும் என்னுள் வாழ்கிறாய்
நிழல் போல தொடர்ந்தாலும்
நிஜத்தில் மட்டும் தூரமாய் நிற்கிறாய் ஏனடி…
நினைவுகள் மட்டும் துணையாக
நாட்களை நான் கடக்கிறேன்…
நிழலாடும் நின் நினைவில்
நித்தமும் உன்னையே காதலிக்கிறேன்....
உனதன்பில் சரணாகிறேன்....
உள்ளம் உருகி
உயிர் கலந்து
உன்னோடு நடந்த நாட்கள்
உன் நினைவுகளாக என்றும் என்
நெஞ்சின்
உள்ளே
நித்தம் வாழ்கிறது
உன் காதல்…
விதி வந்து நம்
விரல்களைப் பிரித்த நாளில் கூட
விழிகளில் என்றும்
வலிகளை தந்தும்
விலகாமல் என்னுடன் தங்கியிருந்தாய்…
காலங்கள் கடந்தும்
காதல் மட்டும்...
மழை நேரத்தின் குளுமை
மனதில் சாரல் பரவ
மாறும் வானிலை போல
மங்கை தயங்கி
முகத்தை நெருங்கும்
மூச்சின் வெப்பத்தில்
மனசே மெதுவாக
மயங்கி விழுகிறது...
முன் வந்து
முத்தம் தந்து விட்டாள்
மீதமிருக்கும் கோபமும்
மௌனமும் கூட
மொத்தமாக
மறைந்து விட்டது...
முழு உயிரும்
மௌனமாக உருகும்
முத்தம் இதழ்களின் தொடுதல்...
கண்களில்
கரைந்த கண்ணீரும்
கனமாக நின்ற கோபங்களும்
கால ஓட்டத்தில்
கரைந்து போய்
காற்றாய் மட்டும் காத்திருக்க....
கையில் வெற்றி
கோப்பை
களிப்பில் இருந்தாலும்
கண்கள் அவள் வாழ்த்தை
கேட்டு காத்திருக்க....
கடந்த கால நினைவில்
காத்திருக்கிறேன் நான்
கையில் அணிந்த மோதிரம்
கழட்டி நீ என்னை
கடந்து...
ஜேடன் ❤️மாயா....
கண்ணசைவில்
காதலை பரிமாறும்
கணவன் மனைவி....
மனைவியின் சந்தோஷத்தில்
மலர்ந்திடும் கணவன் மனம்...
மதிக்க தெரிந்த அன்பினால்
மௌனமும் கூட இசையாகும்....
புரியாமல்
பிரிந்து விட்டோமா??
பார்க்கும் எங்கும்
பார்வையில் எல்லாம்
பழகிய நினைவும்
பல விசயங்கள்
பாவை மனதை
பந்தாடா...
பார்ப்போம்....
பல மாதங்கள் கடந்து
பார்வையில் படுவானோ..
பாவை நெஞ்சை
புரிந்து கொள்வானோ....
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.