Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அணுவெல்லாம் நினைவென நிறைந்தாய் விமர்சனம்.

Advertisement

Chitrasaraswathi64@gmail.

Well-known member
Member
தமிழ் நாவல் ரைட்டர்ஸ் போட்டிக் கதை 070 ன் அணுவெல்லாம் நினைவென நிறைந்தாய் எனது பார்வையில். ஜெகன் கேரளாவில் அம்மு என்கிற கார்தும்பியை அவளது பெரியப்பா மகன் ராஜீவின் திருமணத்தன்று திருமண வீட்டிற்கு வந்து அதிரடியாக திருமணம் செய்து கூட்டிக் கொண்டு போகிறான். அவள் பெரியப்பா மற்றும் சித்தப்பா காவல்துறையினருடன் வந்து அவளைக் கூட்டிக் கொண்டு போக முயற்சி செய்யும் பொழுது அவர்கள் செய்த குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள். அம்முவை ஊசி மூலம் எதிர் நடவடிக்கை எடுக்க இயலாது முடக்கி வைத்திருக்கிறார்கள். அம்முவின் சொத்து மற்றும் சில காரணங்களால் முடக்கி வைத்திருக்கும் அவளை திருமணம் செய்த ஜெகனால் அவளை பழைய நிலைக்கு கொண்டு வர முடிந்ததா குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை கிடைத்ததா என்பதை விறுவிறுப்பாக தந்திருக்கிறார். பிரகாஷ் மற்றும் சீதா அருமையான தம்பதிகள். அம்முவின் பெரியம்மா மற்றும் பாட்டி அருமையான கதாபாத்திரங்கள். ஜெகன் மாமா அத்தை யதார்த்தமாக இருக்கிறார்கள். ஜெகனின் அன்பு செலுத்தும் வகை அருமை. பெண் பாவம் பொல்லாதது என்பதை உணர்த்துகிறது. கேரளாவை அழகாக தந்திருக்கிறார் எழுத்தாளர். வாழ்த்துக்கள் எழுத்தாளரே.
 
மிக்க நன்றி தோழி வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றி ????? நிறைவாக உணர்கிறேன் , முகநூலில் இனைய இயலவில்லை அங்கும் உங்கள் பதிவை பார்த்தேன் மிக்க நன்றி , தொடர்ந்து ஆதரவு தாருங்கள் :love::love:???
 
Top