Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அரக்கன்( ஒரு இரக்கமற்றவன்) அத்தியாயம் ஒன்று EPISODE - 3

Advertisement

naveen prabu

Member
Member
EPISODE - 3


“சத்தியா உனக்கு டூட்டி முடிஞ்சிடுச்சில நீ கிளம்பு…’’

“சரி சார்…’’

நவீன் காரை விட்டு இரங்கி ஸ்டேஷனுள் சென்று தன் இருக்கையில் அமர்ந்தார்.

நேரம் காலை 11.20

“ஏட்டு…’’ இன்ஸ்பெக்டர் நவீனின் குரல்,

“சொல்லுங்கய்யா…’’ ஏட்டு மணிவன்னன் 52 வயது, வயதுக்கே உரித்தான தொளதொள பேண்ட் ஐயன் பண்ணாத சட்டை, தொப்பைக்கு மேலே பெல்ட்.

“ஒரு டீ.... ஒரு பிளாக் சிகரட்… யாரையாச்சும் வாங்கிட்டு வர சொல்லுங்க…’’ “யாரு அவுரு…’’ சாம்பல் கலர் சட்டை கருப்பு கலர் பேண்ட் வயது 60க்கு மேல் இருக்கும், வழுக்கை தலை கைல் கம்பளைண்ட் பபேருடன் உக்காந்திருந்தார்.

“மிஸ்ஸிங் கேஸ் யா... உங்கள பாத்துட்டு தான் போவணு உக்காந்துட்டு இருக்கார்…’’

“சரி வர சொல்லு…’’

மெல்ல எழுந்து நடந்து வந்து “அய்யா வரலாங்களா…’’

“வாங்க... உக்காருங்க... சொல்லுங் என்ன பிரேச்சனை..’’
.
“என் பொண்ணு, மாப்ல, என் பேத்தி மூணு பேரையும் காணோம் சார்…’’

நவீனுக்கு ஒரு வினாடி புலியூர் காட்டில் பார்த்த மூணு சடலங்கள் நியாபகம் வந்தது, “எத்தன நாலா காணோம்…’’

“3 நாள் ஆச்சி சார்…’’

டாக்டர் அந்த சடலங்கள் 20... 22 நாட்களாக அங்கு தான் இருக்குதுனு சொன்னது நியாபகத்துக்கு வந்தது,

“அவுங்க போட்டோ எடுத்துட்டு வந்து இருக்கீங்களா…’’

கம்பளையண்டு பப்பேருடன் மடக்கி வைத்திருந்த போட்டோவை எடுத்து நீட்டினார், நவீன் போட்டோவை பார்த்தபடி “பேர் என்ன..’’
.
“பொண்ணு பெரு ஆரோக்கிய மேரி, மப்புல பெரு அன்டனி, பேத்தி பெரு கேபிரில்ல... கடைசியா சர்ச்க்கு போறேன்னு சொல்லிட்டு போனாங்க... இன்னும் வரல சார்… சொந்தகாரங்க வீட்டுலலாம் போன் பண்ணி கேட்டுடன் அங்கயும் வரலனு சொல்லிட்டாங்க பயத்துல கம்பலையன்டு குடுத்துட்டு போலாமேனு வந்தன் சார்…’’
“இந்த கொழந்த இருக்கா…’’ போட்டோவில் இருந்த இன்னொரு குழந்தையை காட்டி கேட்டார் நவீன்,


“இல்ல சார் அந்த குழந்தை தவறி போச்சு, அந்த குழந்தை இறந்ததுல இருந்து பொன்னும் மாப்பளையும் ஒழுங்கா பேசிக்குறது கூட இல்ல சார்... என் பொண்ணோட அஜாக்கிரதைநாலா தான் குழந்தை இறந்து போச்சுன்னு மாப்பிளைக்கு வருத்தம்... ரொம்போ நாலா பொண்ணும் மாப்புளையும் எங்க வீட்டுலதான் குழந்தோயோட இருந்தாங்க... மனசு சரி இல்லனு கடைசியா சர்ச்க்கு கிளம்பி போனாங்க... அதான் சார் கடைசியா பாத்தது…’’. வருத்தத்தோடு சொல்லி பெருமூச்சு விட்டார்....

“எந்த சர்ச்…’’

“செயின்ட் பீட்டர் சர்ச்…’’

“சரி பயப்படாதீங்க உங்க பேரு போன் நம்பர் லாம் இதுல எழுதி இருக்கீங்களா…’’

“எழுதி இருக்ன் சார்’’-னு கம்பிளைன்ட் பேப்பரை நவீனிடம் கொடுத்தார்...

“சரி நீங்க கிளம்புங்க எதாவது இன்போர்மஷன் கிடைச்சா உங்களுக்கு தெரிவிக்கிறோம்…’’

“சார்... கொஞ்சம் சீக்கிரமா கண்டு புடிங்க சார்…’’ என்று கும்பிட்டு கிளம்பினார்…

நவீன் கம்பலைன்ட் பேப்பரை பார்த்தார், வந்தவர் பெயர் ஜோசப்
போட்டோவில் அழகிய குடும்பம், போட்டோவில் இருக்கும் ஆணுக்கு 30வயதுக்கு மேல் இருக்கது பெண்ணுக்கு 25 இருக்கும் இரண்டடு குழந்தைகள் ஒன்று 1ஆவது இல்ல ரெண்டாவது படிக்கும் இன்னொண்ணு 2 வயசு இருக்கும் அனைத்தையும் காம்ப்லின்ட் பேப்பரை பார்த்து உறுதி செய்துகொண்டார்.. இதன் இடையில் டீ சிகரெட் வந்தது..

“ஏட்டு..’’

“சார்…’’

“இந்த கம்பளைண்ட்ட ரெஜிஸ்டர் பண்ணிக்கோங்க ரமேஷ் கிட்ட கொடுத்து பேசிக் எனகுறிய ஆரமிக்க சொல்லுங்க... அப்போ அப்போ ஸ்டேட்டஸ் ஹா அப்டேட் பணிகிட்டயே இருக்க சொல்லுங்க…’’

“சரி சார்..’’.

“அப்புறம் அந்த பாரஸ்ட் கேஸ் பாரென்சிக் ரிப்போர்டும், போஸ்ட்மார்டம் ரிப்போர்ட் ரெண்டும் நாளைக்கு காலைல என்டேபிள்ல இருக்கணும் ஏற்பாடு பண்ணு…”

“சரிங்கசார்…’’ நகர்ந்தார் ஏட்டு

சிகரட் புடித்தவாறு பாரஸ்ட்கேசை பற்றி யோசிக்க தொடங்கினார்…. நேரம் நகர்ந்தது சாப்பிடுவதை கூட மறந்தவாறு யோசித்துகொண்டு இருந்தார்…

மணி4.00
“சத்தியா, நாளைக்கு காலைல அலெக்ஸ் வீட்டுக்கு போகனும் டூப்ளிகேட் கீ ஏற்பாடு பன்னிட்டு சொல்லு, அப்புறம் பாரென்சிக் டிபார்ட்மென்டை நாளைக்கு காலைல அலெக்ஸ் வீட்டுக்கு வர சொல்லிடு, எல்லாரும் வந்ததுக்கு அப்புறம் எனக்கு போன் பண்ணு…’’ என சொல்லிவிட்டு போன் காளை சுட் செய்தார்.

சிறிது நேரம் போனது

“ஏட்டு நா கிளம்புறேன் ஏதாவதுனா கால் பான்னு…’’ வழக்கமா கிளம்பும்போது சொல்லிட்டு போகும் அதே வார்த்தையை சொல்லிவிட்டு கிளம்பினார்…





இணைந்திருங்கள் அடுத்த பாகத்துக்காக...
மறக்காம இந்த பாகம் எப்புடி இருந்துதுனு எனக்கு எழுதி அனுப்புங்க. உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கும் நவீன் பிரபு....
நன்றி....!


அரக்கன்( ஒரு இரக்கமற்றவன்) அத்தியாயம் ஒன்று
முழு நாவலையும் உடனடியாக படிக்க வேண்டுமா இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்
 
அங்க மிஸ் ஆனவுங்களும் இவுங்களும் ஒண்ணா இருக்க வாய்ப்பு ரொம்ப கம்மி போலவே.... பேர் காணாமல் போன நாள் எல்லாமே வித்தியாசமா இருக்கு.... ரெண்டும் வேற வேற கேஸ் யா இல்ல ஒன்னோட ஒன்னு தொடர்ப்பு உடையதா....
 
Athu enna பிலாக் சிகரெட், இருக்கும் இரண்டு குழந்தைகளில் ஒன்று தான் அங்கு இருப்பது என‌ தோன்றுகிறது
 
அங்க மிஸ் ஆனவுங்களும் இவுங்களும் ஒண்ணா இருக்க வாய்ப்பு ரொம்ப கம்மி போலவே.... பேர் காணாமல் போன நாள் எல்லாமே வித்தியாசமா இருக்கு.... ரெண்டும் வேற வேற கேஸ் யா இல்ல ஒன்னோட ஒன்னு தொடர்ப்பு உடையதா....
adutha paagathai padiunga ;););) ellamae purium . nandri
 
Athu enna பிலாக் சிகரெட், இருக்கும் இரண்டு குழந்தைகளில் ஒன்று தான் அங்கு இருப்பது என‌ தோன்றுகிறது
thodarnthu adutha paagathaium padiunga 8 episode release pani irrukan kolaikaana karanam lam ungaluku pakkava purium thodarnthu padiunga
 
சர்ச்சுக்கு போனவங்க காணாம போய் இருக்காங்க, இந்த குடும்பத்தையே! கொலை செஞ்சி இருக்காங்க, குழந்தையோட தலையையே! வெட்டி இருக்காங்கன்னா, பலி கொடுக்குறது போல ஏதாவது இருக்குமோ! :unsure: :unsure:
 
Top