உனதன்பில் சரணாகிறேன் ஜோதி ரிவ்யூ

Advertisement

Anantha jothi

Well-known member
Member
#ஜோதி_ரிவ்யூ

கதையின் பெயர் : உனதன்பில் சரணாகிறேன்

எழுத்தாளர் : Priyadharshini S

லிங் :
https://tamilnovelwriters.com/community/forums/14-77-பிரியதர்ஷினி-s-உனதன்பில்-சரணாகிறேன்.1673/

கதாபாத்திரங்கள் : ம்ருதவ் & மித்யுகா

ஆரம்ப அத்தியாயத்தில் நாயகி மித்யுகாவிற்கு இரண்டு வாரிசுகள் வர, நாயகன் ம்ருதவ் காதல் தோல்வியுடன் அவளது காதலை மறக்க முடியாமல் தவிக்கிறான். அவளது அம்மா மகளுக்கு திருமணம் செய்து வைக்க திட்டமிட அவளோ மறுத்து எதிர்ப்பு கொடி காட்டுகிறாள்.

நாயக நாயகி இருவருக்கு இடையில் நடந்தது என்ன? எதனால் அவர்களுக்கு இடையில் பிரிவு உருவாகிறது? அம்மா என்றழைத்து அவள் மீது பாசத்தை கொட்டுகின்ற இரண்டு செல்ல வாண்டுகளும் அவளுக்குப் பிறந்ததா? இந்தக் கதையில் எந்த இடத்தில் அப்பா பாத்திரம் தவறிழைக்கிறது? என்று பல கேள்விகளுடன் அவ்வப்போது அவர்களின் காதலும், ஏக்கமுமாக கதை நகர்கிறது.

சும்மா சொல்ல கூடாது ஹீரோ பாத்திரம் அட்டகாசம்👌👌👌

எப்படி இவனால் அவள் மீது இந்த அளவு நேசத்தை கொட்டி இத்தனை வருடங்களாக வேறு எதன் மீதும் நாட்டம் இல்லாமல் இருக்க முடிந்தது என்று வியக்காமல் இருக்க முடியவில்லை. அதேநேரம் அவனது பிறப்பு வளர்ப்பு தன் வாழ்க்கையில் கிடைத்த வழித்துணைகள் பற்றி பார்க்கும் போது அவனது நிலை மிகவும் சரியானதாகவும் தெரிகிறது.

அம்மாடி மித்யுகா, முதல் சந்திப்பில் மோதி விழுந்து ஒற்றை காதில் உள்ள ஜிமிக்கியை தொலைத்து தேடி அலைந்து, அவனது நண்பர்களையும் தேட வைத்து, அவனது முதல் பார்வையில் காதலில் விழுந்து அட அட அட அவனை விட இவள் அதிரடி காதல் மன்னி 👌👌👌

அடேயப்பா!! போட்டிப் போட்டுக் கொண்டு திகட்ட திகட்ட காதல் செய்றாங்க. ஓவர் கான்பிடன்ட் உடம்புக்கு ஆகாது. வந்துட்டாங்க வில்லங்கம் வடிவில் அவர்களை பிரித்து வைக்க கூட்டமா!

த்தூ... நீங்க எல்லாம் மனுஷங்களாடா? இப்படியா ஒரு அப்பாவி பெண்ணை செய்வது? 😡😡😡😡

எனக்கு நாயக பாத்திரத்தின் அன்பும், கண்ணீரும், ஏக்கமும் ரொம்ப பிடிச்சிருந்து. அவளும் பாவம் தான். இருவரின் காதலும் அழகு. அவளது தொலைந்த ஜிமிக்கியை ஞாபகமாக சாவியில் இணைத்து வைத்திருப்பதும், அவளுக்காக வித விதமாக வாங்கி குவிப்பதும் அவள் மீதான எல்லை இல்லாத காதலை பறைசாற்றியது.

ப்ளாஷ்பேக் எதிர்பார்த்தேன் என்றாலும் இப்படி இல்லை🥲🥲🥲

காதல் போட்டிக்கான கதை என்பதால் ஒரே காதல் காதல் காதல் ... என்று காதலை மையப்படுத்தி எழுதியிருக்காங்க. குடும்பமும் இன்னும் கொஞ்சம் கலந்திருந்தா திகட்டா தித்திப்பாய் இருந்திருக்கும்.

நிகழ்காலமும், கடந்த காலமும் அடிக்கடி வந்து அவர்களின் வாழ்க்கையில் நடந்ததை சொல்லும் போது ஒரு சில இடத்தில் கனவா நனவா என்று குழம்பி போயிட்டேன்.

அப்பா பாத்திரம், அக்கா, அத்தான் எல்லாம் அடேயப்பா எங்கிருந்துடா வந்தீங்க வரிசையா? 😏😏😏 அம்மா செண்பகம் அருமை.

அந்த ரச்சனாவை நாலு கொடுக்கலாம் போலிருந்தது. கடைசி வரை அவளை திருந்தாமல் விட்டதுடன் ம்ருதுவையும் பேச விடாமல் செய்ததில் கொஞ்சம் கடுப்புதான் எனக்கு😡😡😡😏😏😏

ரதி, கமலேஷ் அருமையான நண்பன் நண்பி👌👌👌

போட்டிக்கதை வாசிக்க நல்லா இருக்கு. நீங்களும் வாசித்துப் பாருங்கள்.

எழுத்தாளருக்கு வாழ்த்துக்கள் 💐💐💐

போட்டியில் வெற்றி பெறவும் வாழ்த்துக்கள் சகோதரி 💐💐💐
 

Advertisement

Advertisement

Back
Top