தமிழ் நாவல் ரைட்டர்ஸ் போட்டிக் கதை 017ன் காதலால் காதலாய் எனது பார்வையில். டாக்டர் ஜெய் பிரகாஷ் அப்பா பாலநாதன் குணசீலனிடம் கடன் வாங்க குணசீலன் தன் மகள் அஞ்சலியின் விருப்பத்திற்காக ஜெய்யை மாப்பிள்ளையாக திருமணம் நிச்சயம் செய்கிறார். அஞ்சலி நடந்துக் கொள்ளும் விதம் பிடிக்காத ஜெய் திருமணம் தொடர்பாக அக்கறை காட்டாமல் இருப்பது கண்டு கோபம் அடையும் அஞ்சலி ஜெய்யின் சித்தப்பா மகன் வழக்கறிஞர் சூர்யாவை திருமணம் செய்வேன் என்று திருமண நாளில் சொல்வதால் குடும்பத்தில் உள்ளவர்கள் விருப்பமின்றி அஞ்சலியை திருமணம் செய்து கொள்கிறான் சூர்யா. சூர்யாவின் தோழி ஜனனியை ஜெய்க்கு திருமணம் செய்து வைக்கிறான். இடையில் பெரியப்பாவின் கடன் பிரச்சினை, அஞ்சலியின் அப்பா குணசீலன் விவகாரம் எல்லாவற்றையும் எப்படி கையாள்கிறான் சூர்யா என்பதை இயல்பாக தந்திருக்கிறார். முதலில் ஜெய் நாயகன் ஆக கொண்டு வந்தாலும் நிறைவில் சூர்யாவே அந்த இடத்தை பிடிக்கிறான். வாழ்த்துகள் எழுத்தாளரே.