எழுத்தாளருக்கு: குடும்பம் கலந்த காதல் கதையில்நாயகன் நாயகியின் பரிசுத்தமான காதலை பெற்றோர்களின் ஆசியுடன் கைசேர்ந்த தெய்வீக காதலை கூட்டுக் குடும்பத்தின் மேன்மையை
பெரியோர்கள் மீது கொண்ட மரியாதையை அவர்களின் பிரத்யேக எழுத்து நடையில் மிக சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் ரசிக்கும் படி தந்தமைக்கு வாசகர்களின் பாராட்டுகளும் நன்றிகளும்
தென்றல் மீனா : நம் கதையின் நாயகி பத்மநாபன் _ அழகம்மை கூட்டுக் குடும்பத்தின் ஒரே பெண் வாரிசாக தந்தை வெங்கடேசனின் செல்ல மகளாக செல்வ மகளாக பிறந்து அழகு, அன்பு, அறிவு, ஆளுமை என்று அத்தனை மேன்மையான குணங்களையும் ஒருங்கே பெற்று தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்ற வாக்கியத்திற்கு எடுத்து காட்டாக... தந்தை மீது பாசம் எந்த அளவுக்கு என்றால் விருப்பம் இல்லை என்றாலும் தந்தை பார்த்த மாப்பிள்ளைக்கு சம்மதம் சொல்லும் அளவிற்கு Dad's little princess ஆவாள்
அருண் மொழி: நம் கதையின் நாயகன் சிறு வயதில் பெற்றவர்களையும் தாயின் கருவறையிலேயே தங்கையையும் இழந்து அநாதரவாக நின்ற வேளையில் மருத்துவர் அனுஜா அவர்களால் மகனாகப் பாவித்து... அவனுக்கு யாருமில்லை என்ற எண்ணத்தை களைந்து....பெற்ற மகன் மாதவனை விட மேலாக அன்பை கொட்டி நல்ல மனிதனாக தன் குடும்பத்தின் தலைமகனாக வளர்த்து.... தலைசிறந்த மகப்பேறு மருத்துவனாக அந்த தெய்வத்தாயால் ஆளாக்க பட்டவன்
அன்பானவன், பண்பானவன், சாந்த குணம் கொண்டவன், நட்பிற்கு இலக்கணமானவன்
நாயகனும் நாயகியும் எங்கு சந்திக்கிறார்கள்எவ்வாறு காதலில் விழுகிறார்கள்
காதல் என்றாலே எதிர்ப்பு இல்லாமலா...!!!!! எதிர்ப்பை தாங்கள் கொண்ட அளவில்லா காதலால் எவ்வாறு போராடி வென்று திருமண பந்தத்தில் இணைகிறார்கள்
அதற்கிடையில் தென்றல் மறந்த அவள் வாழ்வின் துன்பப் பக்கத்தினையும் தந்தை மகள் மற்றும் தென்றலை பெறாத தாயாகிய வசுந்தரா ஆகியோரின் பாசப் போராட்டத்தினையும் தென்றலை மட்டுமல்லாது படிக்கும் நம்மையும் கண்ணீர் கடலில் ஆழ்த்திய நாட்களை....மிக அருமையாக நம் கண் முன்னே கொண்டு வந்து காட்சி படுத்துகிறார் கதாசிரியர்...!!!!
உண்மை காதலுக்கு அக்காதலே துணை நிற்கும் என்பதற்கிணங்க மொழியின் மீதான தென்றலின் அளப்பரிய காதல் தென்றல் மீதான மொழியின் அளவில்லா காதல்
தென்றலுக்காக மொழி மொழிக்காக தென்றல் என்ற இருவரின் தெய்வீக காதல் இரு வீட்டாரின் சம்மதத்துடனும் நிறைந்த சந்தோஷத்துடனும் திருமண பந்தத்தில் இனைந்து அவர்களின் இனிய இல்லறத்திற்கு சான்றாக அவர்களின் தூய்மையான காதலுக்கு பரிசாக கடவுளின் வரமாக தென்றலின் விருப்பமாக மூன்று பிள்ளைகளின் வரவுடன் இனிதே முடிகிறது கதை
மிக அருமையான கதை
மனதுக்கு இதமளிக்கும் தேனின் சுவையாக நிறைவான முடிவு
@Kanmani Manodheedhan
உங்களின் தமிழ் பனி மேன்மேலும் வளர இதேபோல் ஆயிரமாயிரம் நல்ல கதைகளை எங்களுக்கு அளிக்க கடவுள் அருள்பாளிக்கட்டும் வாழ்த்துக்கள் மா