தமிழ் நாவல் ரைட்டர்ஸ் போட்டிக் கதை 013ன் பின் விழிகளில் கண்டேன் நேசம் எனது பார்வையில். தமயந்தி பதினைந்து வருடப் பெண் ஸ்ரீ யின் அம்மா. தனியாக பெண்ணை வளர்த்து வருகிறாள். அப்பா மற்றும் சென்னையைப் பற்றி மகள் கேட்டால் வருத்தப்படும் அம்மாவை சிரமப்படுத்த விரும்பாத ஸ்ரீ கணக்கில் முதலிடம் பிடித்த அவளுக்கு சென்னையில் போட்டியில் கலந்துகொள்ள வரும் வாய்ப்பை வேண்டாம் என்று தவிர்க்கிறாள். மகளின் சிறிய ஆசையை நிறைவேற்ற தமயந்தி ஸ்ரீயை போட்டிக்காக சென்னைக்கு அழைத்துச் செல்கிறாள். அங்கு அவள் தவிர்க்க நினைத்த ஸ்ரீயின் அப்பா விஷ்வாவை மகன் மற்றும் துணை நேத்ரா மூவரையும் சந்திக்கும் அவள் யாரையும் தொந்தரவு செய்யக் கூடாது என்று விரைவில் ஊர் திரும்பும் பொழுது மகளுக்கு சிறிய விபத்தில் கால் எழும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். இருவரின் பிரிவிற்கான காரணம் எதிர்பாராதது.அன்பான விஷ்வா தான் பிரிந்த குடும்பத்தை தன்னுடன் சேர்த்துக் கொள்ள முடிந்ததா என்பதை விறுவிறுப்பாக தந்திருக்கிறார். வாழ்த்துகள்.