Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நிலா..என்..வெண்ணிலா-11

Advertisement

lakshu

Well-known member
Member
நிலா..என்..வெண்ணிலா-11

2195
ஹாய் , ஐ ம் ஈஷ்வர் சொல்லி , தன் கரத்தை நீட்ட, எல்லோரும் ஈஷ்வரை சூழ்ந்துக் கொண்டார்கள். எல்லோரும் அறிமுகமாகி முடிந்தவுடன்..

அடிக்கடி நிலாவையும் ஈஷ்வரின் கண் தேடும். பெண்னை தன் கண்ணில் படம் பிடித்துக் கொள்வான்.

அப்ப இன்னிக்கு நம்ம ஈஷ்வர் மச்சான் ,ஜோதியில கலந்துக்குவாங்களாம் ரகு..

இன்னும் சொல்லவில்லைடா, சகல ,பக்கத்து ஊருல திருவிழா என்றும் கண்ணடிக்க.
அதுக்கு,

அந்த பக்கம் போன இருபெண்கள் ரகுவை என்ன மச்சான் கண்டுக்க மாட்டிங்களா.

நான் தினமும் தான் பார்க்கிறேன் , நீதான் முஞ்ச திருப்பிட்டு போறவ.

டேய் அங்க என்ன பேச்சு, ஈஷ்வர்கிட்ட சொல்லுடா.

ஓவர் கிராஸ்- டாக்கிங் சகல, அதுவந்து பக்கத்து ஊருக்கு ஜிகினாஸ்ரீ வராலாம் கரக்காட்டம் ஆட.

ஓ நம்மெல்லாம் பார்க்க போறோமா, நான் பார்த்ததே இல்ல ரகு.

அது பகல்ல ,தனி ஷோவே இருக்கு நைட் பத்து மணிக்கு , இப்பவே புக் பண்ணனும் சகல , நீ வருவீயா , புது அனுபவமா இருக்கும் ஓன்லி யூத் மட்டும்.

ஷூயர் ரகு...

ஆனா யார்கிட்டயும் சொல்லாதப்பா , முக்கியமா நிலாகிட்ட.ஓகே.
ம்ம். டன்.

இன்னொருவன் இப்ப 11 மணிக்கு பைக் ரேஸ் இருக்குப்பா, டைம் வேற ஆகுது போலாமா.
பைக் ரேஸ் என்றவுடன் ,ஈஷ்வர் முகத்தில் பல்பு எரிந்தது. இதையேன்டா இவ்வளவு லேட்டா சொல்லுறா. நான் கலந்துக்கிறேன் ரகு.

சகல ரேஸ் போயிருக்கீயா ..

ம்ம் சாம்பியன் நான். எனக்கு பைக் ரேஸ்ன்னா உயிரு ரகு.

அப்ப இன்னிக்கு கப்ப தட்டறோம். ஓஓ என்று ஓரே கத்தல்...எல்லோரும் இவர்களை பார்க்க, பார்த்திக்கு தான் தன் மகனை பார்த்து உள்ளம் மகிழ்ந்தது கட்டி அனைத்துக் கொண்டான் ராமை. நன்றிடா நன்பா என்று கண்கலங்க.

நான்தானடா நன்றி சொல்லனும் என்று ராம் கூறினார்.

டேய் மச்சான் ரகு உன் ஆள் கவிதா வராடா. நான் ஓரு எட்டு அவளை பார்த்துட்டு வரேன்.
யாருப்பா கவி ஈஷ்வர் கேட்க, நிலா சித்தப்பா மக, அவ தங்கச்சி...ஓஓ என்று பார்த்தான்..

நிலாவும், ஈஷ்வரும் காலை உணவை சாப்பிட்டு முடிக்க, பவன் நிலாவிடம் வந்தான்.

அண்ணி, என்னவென்று நிலா கேட்க, நம்ம ஊர் கிராவுண்ட்ல மேட்ச் நடக்குதாம் ,
என்னையும் சேர்ந்துக்க சொல்லி செந்தில் கூப்பிட்டான், நான் போய் வரவா.

சரி பவன் பார்த்துப்போ, தண்ணீ எடுத்துக்கோ. இதை பார்த்தவுடன் ஈஷ்வருக்கு நிலாவிடம் சொல்லிட்டு போகனும் தோன , அவன் பக்கத்தில் ரகு இருந்தான்.

நிலா நானும் பைக் ரேஸ்ஸூக்கு போறேன்...

மதியம் சாப்பிட வந்துடு மகி, அப்புறம் எதுக்கு ரேஸ்ஸூ எனக்கு பயமாயிருக்கு, முகத்தை வாட்டமாக வைத்துக் கொண்டு,டேய் ரகு ,மகியை பார்த்துக்கோ நிலா சொல்ல.

அவள் கையை பிடித்து பந்தல் பின்னாடி கூட்டிச்சென்றான் ஈஷ்வர், ஏய் நான் என்ன சின்ன பையனா, ரகுவ பார்த்துக்க சொல்லுற, நான் சிட்டியில ரேஸ் ஓட்டுனவன்டி.

அதுயில்ல மகி புதுயிடம், அவள் முகத்தை கையில் ஏந்தி, உனக்கு என்ன பிரச்சனை முகத்தை தூக்கி வைச்சிக்கிட்டு பேசேற.

அவள் கண்களை நேரே பார்த்தான் ஈஷ்வர், மிக அருகில் ஈஷ்வரின் வாசனை அவளுள் நிரம்பியது, இவ்வளவு அருகில் தன்னிடம் பேசுவதே அவளுக்கு பிடித்திருந்தது. அது என் கூட நீ ,ஸ்பேண்ட் செய்யுவ நினைச்சேன்
.
நாளைக்கு வெளியே போலாம் ஓகே, ப்ளீஸ்டி ஓன் டைம்.

சரி பத்திரமா போயிட்டு வாங்க...

டூ விலரை கிளப்பினர் ,அண்ணா நானும் வரேன் விக்கி மற்றவர் பைக்கில் தோற்றிக்கொள்ள, வண்டி சிட்டாக பறந்தது. அவன் வண்டியோட்டும் அழகை ரசித்துக் கொண்டே உள்ளே சென்றாள் நிலா.

என்ன நிலா மாப்பிள்ள என்ன சொல்லுறாரு, உன்னைய நல்லா பார்த்துக்கிறாரா தன் அத்தையும் , சித்தியும் கேட்க.

ம்ம் நல்லா பார்த்துக்கிறார் சித்தி..
-----------
பைக் ரேஸில் முதலாவது வந்து கப்பை பெற்றுக்கொண்டான் ஈஷ்வர், சகல எப்படிப்பா இப்படி ஓட்டுற... அவனை தூக்கிக்கொண்டு சுற்றினார்கள்.

அப்போது அங்க வந்த ஓருவன், நீங்க ஈஷ்வர் தானே உங்ககிட்ட கொஞ்சம் பேசனும் ...
நீங்க யாரு,
சகல வா போகலாம், இங்க பாரு அரவிந்த உங்களுக்கும் எங்க வீட்டுக்கும் பேச்சு வார்த்தை இல்ல . ஈஷ்வர் கையை பிடித்து இழுத்துக் கொண்டு சென்றான் ரகு. பகையாளி குடும்பம் போல ஈஷ்வர் நினைத்தான்.

அப்பா,மாமா,நிலா இங்க பாருங்க முதல் பரிசு , எல்லோரிடமும் காண்பித்தான். வந்த விருந்தினர்கள் அவர்கள் வீட்டிற்கு செல்ல, ரூமில் ஈஷ்வர் ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருந்தான்.

நிலா தன் கணவனுக்கு ஆப்பிள் ஜூஸை கொடுத்து , அவன் பக்கத்தில் அமர்ந்து லேப்டாப்பில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள்.

கட்டிலில் காலை நீட்டி பின்னாடி தலையனையில் சாய்ந்து உட்கார்ந்திருந்தான். நிலா நான் இன்னிக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கேன். நான் நினைக்கிறேன், உன்ன லவ் பண்ணறேனோ.

நிலா திடுக்கிட்டு, என்ன இவன் இப்படி அசால்ட்டா சொல்லுறான், சினிமாவுக்கு போறேன்னு.

என்னடி இப்படி கண்ணை விரிச்சு பார்க்கிற, அப்பா எவ்வளவு பெரிய கண்ணு, ஷாக்க குற, ஷாக்க குற..

பேச்சே வரவில்லை நிலாவிற்கு,ஐ திங் ஃபாலின் லவ், தன் கையை எடுத்து நெஞ்சத்தில் வைத்து இங்க நிலா நிலா சொல்லுது ,உனக்கு என்ன சொல்லுது.

எனக்கு ஓண்ணும் சொல்ல மாட்டுதே மகி, அதாவது உனக்கு ஹார்மோன் கோளாறா இருக்கும் மகி.

ஆமாம், நீ பதினெஞ்சு வயசு பொண்ணு , நான் பதினெட்டு வயசு பையன் இரண்டு பேருக்கு இனகவர்ச்சி வரதுக்கு.

போய் உன் தங்கச்சிங்க கிட்ட கத்துக்கோ , மாமனை எப்படி சைட் அடிச்சாங்க , தெரியுமா,
எந்த மாமன மகி.

ம்ம் உன் புருஷன, இட்ஸ் மீ ஓகே. ஆனாலும் அவசர பட்டேன் நினைக்கிறேன், இவ்வளவு ஆஃபர் இருக்கிறது தெரியாத உன்னை அவசரப் பட்டு கட்டிக்கிட்டேனே. அதுவும் அந்த மூனு பொண்ணுங்க செமையா இருந்தாங்க.

அப்பறம் ஏன் ஐய்யா என் கையை பிடிச்சிங்க,என்னவிட்டு போகாதா நிலான்னு..
அதுவா அந்த டாக்டர் பொண்ணுயில்ல என்னைய பார்த்து கண்ணையடிக்குது,
ஐய்யோ நிலா ரியாக்ஷன் கூட.

ஆமான்டி பேட் கேர்ல்ஸ், அந்த புளு சுடியில்ல கிஸ் அடிக்கிறா, இன்னோரு பொண்ணு மேலே விழுந்து, உன் கையை கொடேன் . நிலா கையை நீட்ட, கையை எடுத்து தன் கண்ணத்தை தடவி விட்டான்.

டேய் மகி என்ன செய்யற, இப்படிதான் பண்ணா அந்த பொண்ணு... அப்பறம் இன்னோருத்தி ...

போதும் நிறுத்து, இப்படி செய்யறாங்க தெரியுதுல்ல ,நல்லவனா இருந்தா முன்னாடியே கூப்பிட வேண்டியது தானே. முகத்தை சுளித்துக் கொண்டாள் நிலா.

நீ ஏன் ஃபீல் செய்யற, இந்த ஊரு பொண்ணுதான நீ, இதெல்லாம் உனக்கு தெரிய மாட்டுங்குது. அந்த பிள்ளைங்க எவ்வளவு கருத்தா இருக்கு பாரு. இயற்கையாவே புத்திசாலியா இருக்குனும்...

என்ன புத்திசாலி, அடுத்தவ புருஷன தப்பா பார்க்கிறது.

ஏய் மண்டு, அடுத்தவன் புருஷன ஏன் பார்க்கிற உன் புருஷன பாரு, உன் டார்லிங்கை லுக்கு விடு.

ஏன் நல்லாதான பார்த்துக்கிறேன். ஆனா புருஷன் தான் என்னைவிட்டு வெளியே போயிட்டான். மூஞ்சை திருப்பிக் கொண்டாள்.

ஓ மேடமுக்கு இதான் கோவமா... அவள் தலையை ஆட்ட..சரி நாளைக்கு உன் கூடதான் சுற்றுவேன்.

நிஜமாவா மகி...சரி அப்ப நாளைக்கு நீ,நானு, விக்கி,பவன், அப்பா , மாமா எல்லோரும் அருவிக்கு போறோம், சூப்பர் ஜாலியா இருக்கும் மகி.

தலையில் கை வைத்தான், நீ எல் கே ஜீ பாப்பாவாடி...வாயை பொத்தி சிரிக்க..

டேய் என்ன ஓவரா பேசுற, மகி போன் அடிக்க , ஹலோ என்றான், நான் போய் அப்பாகிட்ட சொல்லிட்டு வரேன் கீழே இறங்கி சென்றாள்.

யார் நீங்க, உங்களுக்கும் மாமாவுக்கு ஆகாது எனக்கு தெரியும். சோ இனிமே பேசாதீங்க போனை கட் செய்தான். அதுக்குள் போய்டாளா.பவன் ரூமிற்கு சென்றான் ஈஷ்வர், வா அண்ணா, என்னடா பண்ணுற பவன்

பீரி ஃபயர் கேம்ஸ் விளையாடுறேன்னா..

பெட்டில் அவன்மேல் படுத்துக் கொண்டான் காலை ஆடிக்கொண்டே, பவன் உங்க டீச்சர எப்படிடா கரெக்ட் பண்ணுறது...

அண்ணா டூ லேட், பிஸிக்ஸ் மிஸ் நிச்சியதார்தம் நடந்துடுச்சி.

ச்சீ அவங்க இல்லடா, உங்க கணக்கு டீச்சர எப்படி கணக்கு பண்ணறது.. கண்ணை சுருக்கி கேட்டான் ஈஷ்வர்.

அய்யோ அண்ணா, இப்பதான் கல்யாணம் ஆச்சு, எங்க மூனுக்கு, அவங்க வீட்டுக்காரர் செம டேரருரு.

ரெஸ்ட் ரூமிலிருந்து வெளியே வந்த விக்கி, ஐய்யா அண்ணா என்று ஈஷ்வர் மேல் படுத்துக் கொண்டான். இருவரும் யோசித்ததை பார்த்து, என்ன விஷியம் பவன்..

அதுவா எங்க கணக்கு டீச்சர எப்படி கணக்கு பண்ணறதுன்னு கேட்குது அண்ணா.... ஈஈன்னு ஈஷ்வர் சிரிக்க.

விக்கி , ஏஏ அண்ணா பழைய மகியாயிட்ட, அவன் கணத்தை பிடித்து கொஞ்ச.... உள்ளே நுழைந்த பார்த்தி இவர்களை பார்த்து, ஈஷ்வர் மேல சாய, என்னடா மூனு பேரும் கூட்டனியா திட்டம் போடுறீங்க.

அதுவாப்பா பவன் வாயை திறக்க, அவன் வாயை மூடினான் ஈஷ்வர் சொல்லாதேடா. விக்கி உடனே அதுவா பவன் கணக்கு டீச்சர எப்படி கணக்கு பண்ணறதுன்னு கேட்குறாரு அண்ணா.

ஏன்டா ஈஷ்வர், உனக்கு கல்யாணம் ஆயிடுச்சிடா, நிலா என்ன நினைக்கும் இந்த மாதிரி மத்த பொண்ண பார்க்க கூடாதுடா, பார்த்தி அட்வைஸ் செய்ய..

அய்யோ அப்பா, என் கணக்கு டீச்சர் யாருப்பா, நம்ம மூனுதான், டியூப்லைட்...எப்படிதான் நீயெல்லாம் பிஸினஸ்மேன்னு இந்த உலகம் நம்புதுதோ..

ம்ம் அப்படியா, என்று ஈஷ்வரை பார்க்க, அவன் வெட்கத்தில் தலையை ஆட்டினான். உள்ளே நுழைந்த ராம், பார்த்தி சாப்பிட வரல. என்ன எல்லோரும் ஓருத்தர் மேல ஓருத்தர் யோசிக்க..

அதுவா ராம், பார்த்தி இழுக்க, அப்பா என்று ஈஷ்வர் சினுங்கினான்.. என்ன மாப்பிள்ள எங்கிட்ட சொல்ல கூடாது.

டேய் ராம், அதுவா பவன் கணக்கு டீச்சர எப்படி கணக்கு பண்ணறதுன்னு கேட்குறான்.

என்னது ராம் ஆச்சரியமாக பார்க்க, சரிதான் மாமாவும் குண்டு பல்பா, பவன் கலாய்க்க ,
ராம், நம்ம நிலாவதான் சொல்லுறான் ,முகத்தில் சிரிப்பு வர ,நாளைக்கு நிலாவ தனியா வெளியே கூட்டிட்டு போங்க மாப்பிள்ள. ஓகே மாமா தேங்க் யூ, நீங்க யாரும் வர கூடாது.
-நிலாவை பிடித்தேன்
 
Super sis...pawan than kutty hero...nilakku eshwar mela eppo love varum sis?paavam ellarukittayum eshwar bulb vaanguranga... Aravindh yaaru sis? Nilavoda x-husband ah?
 
Top