பெண் என்பவள்
ஒரு விதைக்குள்
அடங்கிய விருட்சம்...!!
படைத்த பிரம்மனையே
கர்வம் அடையச் செய்த
புதுமை அவள்......!!
அடுப்படியில் தொடங்கி
அனைத்து துறைகளிலும்
தன் பாதம் பதித்த
சாதனை அவள்....!!
கண்ணகியாய் நின்று
கற்புக்கு இலக்கணம் வகுத்த
வீரம் அவள்...!!
அன்பென்ற ஒற்றை
ஆயுதத்தால் தரணியை
அடிமை செய்த
அன்னைதெரசா அவள்...!!
தோல்வியின் விளிம்பில்
நின்றாலும் முன்னோக்கி
மட்டுமே செல்லும்
நம்பிக்கை அவள்.....!!
எவ்வளவு துயரம் வந்தாலும்
தன்னைத்தானே பக்குவப்படுத்த தெரிந்த
பொறுமை அவள்....!!
பத்து திங்கள் சுகமாய்
சுமந்து - புறந்தள்ள
விரும்பி தன் உயிரை
பணயம் வைத்த
தாய்மை அவள்...!!
மகளாய், சகோதரியாய்
தோழியாய், காதலியாய்
தாரமாய், தாயாய்
துளிர்க்கும் பெண்மை அவள்..!!
எத்துணையும் இல்லாமல்
பெண் வாழ்வு முற்றுப்பெறும்
ஆனால்....,
அவள் இல்லாமல்
இவ்வுலகில் எதுவுமே
முற்றுப் பெறாது...!!
இத்தனை சிறப்பையும்
தன்னுள் பெற்றிருந்தாலும்
தன் பலம் எதுவென
தெரியாத அப்பாவிதான்
பெண் என்பவள்...!!
சந்தோஷினி
ஒரு விதைக்குள்
அடங்கிய விருட்சம்...!!
படைத்த பிரம்மனையே
கர்வம் அடையச் செய்த
புதுமை அவள்......!!
அடுப்படியில் தொடங்கி
அனைத்து துறைகளிலும்
தன் பாதம் பதித்த
சாதனை அவள்....!!
கண்ணகியாய் நின்று
கற்புக்கு இலக்கணம் வகுத்த
வீரம் அவள்...!!
அன்பென்ற ஒற்றை
ஆயுதத்தால் தரணியை
அடிமை செய்த
அன்னைதெரசா அவள்...!!
தோல்வியின் விளிம்பில்
நின்றாலும் முன்னோக்கி
மட்டுமே செல்லும்
நம்பிக்கை அவள்.....!!
எவ்வளவு துயரம் வந்தாலும்
தன்னைத்தானே பக்குவப்படுத்த தெரிந்த
பொறுமை அவள்....!!
பத்து திங்கள் சுகமாய்
சுமந்து - புறந்தள்ள
விரும்பி தன் உயிரை
பணயம் வைத்த
தாய்மை அவள்...!!
மகளாய், சகோதரியாய்
தோழியாய், காதலியாய்
தாரமாய், தாயாய்
துளிர்க்கும் பெண்மை அவள்..!!
எத்துணையும் இல்லாமல்
பெண் வாழ்வு முற்றுப்பெறும்
ஆனால்....,
அவள் இல்லாமல்
இவ்வுலகில் எதுவுமே
முற்றுப் பெறாது...!!
இத்தனை சிறப்பையும்
தன்னுள் பெற்றிருந்தாலும்
தன் பலம் எதுவென
தெரியாத அப்பாவிதான்
பெண் என்பவள்...!!
சந்தோஷினி