காதல் 12:
தஞ்சையில் உள்ள ராஜ் பாலேஸ் திருமண அரங்கம் ஜொலித்துக் கொண்டிருந்தது. ராஜ் நந்தன் – மதுரவசனி யின் திருமண வைபவம். ஆங்காங்கே உறவினர் கூட்டம் கூடியிருக்க, வாசலிலே பன்னீர் ரோஜாவுக்கும் சந்தன கிண்ணத்துக்கும் போட்டி போட்டுக் கொண்டிருந்தனர் சிறார்கள்.
வருபவர்களுக்கு ‘நான் தெளிக்கிறேன் பன்னீரை’ எனப் பிரியா சொல்ல, சிறுவனான ஆயுஷோ நான் தான் என அடம்பிடித்தான். மகனை சமாதானம் செய்து குட்டி நாத்தனார் பிரியாவிடம் ,
“ப்ரீமா… ஆயுஷ் சின்னப்பாப்பா இல்லையா..? அவன் கொஞ்ச நேரம் தெளிக்கட்டும்… அப்புறமா உனக்குத் தரேன் டா.. நீ ரோஜாப்பூவை வரவங்களுக்குக் கொடும்மா” என சமரசம் பேசினாள் அந்த வீட்டின் மூத்த மருமகள் ஹரிணி.
“அண்ணி.. அவன் தான் சின்னப்பையன் இல்லல.. அவன் ஒழுங்கா செய்ய மாட்டான்… நான் பிக் கேர்ள்.. அதனால எங்கிட்ட தாங்க…. இல்ல நான் அம்மாட்ட போவேன்..” எனக் கண்ணை கசக்கத் துவங்க,
“உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்… இதான் நாத்தனார் கொடுமையா சாமி… ராமா… என்னைக் காப்பாத்து… இவ கிட்டப் பேசி ஜெயிக்க எனக்குத் தெம்பில்ல…” எனப் புலம்ப , அவள் கேட்டபடி ஸ்ரீராமனே வந்தான்.
கடவுளாய் அல்ல கணவனாய்..!
“ஹனி…. என்னடி இங்க நின்னுட்டு இருக்க… உள்ள போ.. உன்னை அம்மா தேடுறாங்க… மதுவுக்கு அலங்காரம் செய்யனுமாம்..” எனச் சொல்ல
“ராம்.. இவன் அழறான்.. பன்னீர் தெளிக்கனும்னு சொல்றான்… ப்ரியா அவ தெளிக்கனும்னு சண்டை போடுறா… என்னால் முடியல..”
“அதானா விசயம்…” என்றவன் சிறிது நேரத்தில் ஒரு காற்றாடியை ஆன் செய்தான். அது சுழலும்போது பன்னீரை தானாகவே தெளிக்கும்.
மனைவியிடம் குனிந்து, “அமெரிக்காவுல படிச்ச முகத்தைப் பாரு.. இது எதுக்கு வைச்சிருக்கான்.. பன்னீர் தெளிக்கிறாளுங்களாம்…” எனத் திட்ட
“ஹும்கும்…” என நொடித்துக் கொண்டு அவள் உள்ளே செல்ல
ராஜதீபன் பட்டு வேஷ்டி சட்டையில் மிகவும் கம்பீரமாய் வந்தவன் ஸ்ரீராமிடம்,
“மச்சான்… உங்களை அண்ணாவுக்கு மாலைப் போட்டு அழைச்சிட்டு வர கூப்பிட்டாங்க…” என அழைக்க
“இதோ வரேன் தீபன்..” என அவன் பின்னால் சென்றான்.
வைரமும் கீர்த்தியும் மதுவின் அறையில் அவளோடு இருக்க, ராஜதீபனிடம் மட்டும் கொஞ்சம் பேசினான் ராஜ் நந்தன்.
இதில் மிகவும் பாதிக்கப்பட்டது சுந்தர் ராஜன் தான். அவர் தான் மகனிடம் நெருங்க முடியாமல் தவித்தார். மற்றவர்களிடமாவது ஒரிரு வார்த்தைகள் பேசுபவன் இவரிடம் வெறும் முகத்திருப்பல் மட்டுமே. ஆதலால் மிகுந்த சோர்வுக்கு ஆளானார்.
திருமணத்தின் ஒவ்வொரு விசயத்துக்கும் நந்தன் பிடிவாதம் பிடிக்க, மதுரவசனி தான் அவனைக் கெஞ்சி கெஞ்சியே சமாதானம் செய்தாள்.
“என் கல்யாணம்…. என் இஷ்டப்படி நடக்கப்போகுது.. அவங்க வந்தா என்னை சீண்டாம இருக்க சொல்லு மது… அவங்களைப் பார்த்தாலே பழைய ரணமெல்லாம் கீறி விட்டு வலி தான் எனக்கு மிச்சம்.. உனக்குப் புரிஞ்சதா…?” என அழுத்தமாய்க் கேட்க
“சரி சரி…. அவங்க உங்களை நெருங்க மாட்டாங்க.. ஆனால் என் வீட்டு ஆளுங்க முன்னாடி அவங்களுக்குத் தலைக்குனிவை ஏற்படுத்தாதீங்க… உங்களை அவங்கப் பெத்துக்கலை ஒழிய இத்தனை வருசம் நல்லா வளர்த்துருக்காங்க.. உங்களை மாதிரி ஒரு நல்ல பையனை எனக்குத் தந்துருக்காங்க.. அதுக்காகவே நான் அவங்களை மதிக்கனும்… நீங்களும் தான்…. நம்ம இரண்டு பேரும் ரொம்ப ஆசைப்பட்டு எதிர்ப்பார்ப்போட செய்யப்போற விசயம்… எனக்கு எந்த டென்ஷனும் இருக்க கூடாதுன்னு நான் நினைக்கிறேன் நந்தன்.. அப்படியே உங்களுக்கு பழசு ஞாபகம் வந்து காயப்பட்டா கூட எனக்காகப் பொறுத்துக்கோங்க. அதுக்கு நான் வந்து மருந்து போடுறேன்…” எனப் பேசியே அவனைக் கரைத்தாள்.
மூகூர்த்தத்துக்கு நேரம் நெருங்க மாப்பிள்ளையை ஸ்ரீராம் மைத்துனனாய் அழைத்து வந்து அமர வைக்க, ஐயர் முறைகளைச் செய்யத் துவங்கினார்.
மணமகனாய் ராஜ தோரணையில் அமர்ந்திருந்த ராஜ் நந்தனின் பார்வை ஒரு இடத்தில் தேங்கி அவனைக் கோபத்துக்கு உள்ளாக்கியது. உடனே அவன் ரகுவை முறைக்க, ரகுவோ ‘என்னாச்சுண்ணா’ எனக் கண்ணால் கேட்க
“கல்யாணத்துக்கு முன்னாடியே என்னை இம்சை பண்றாடா உங்கண்ணி… அவளுக்கு நான் வாங்கிக் கொடுத்த சேலையை யார் கட்டிருக்கா பாரு..” எனவும் அவன் காட்டிய திசையில் பார்க்க அழகான இளம்பச்சை வண்ண புடவையில் தங்க நிறத்தில் மாங்காய் பதித்த புடவையில் லட்சணமாய் இருந்தார் நந்தனின் தாய் வைரம். அதைப் பார்த்து விட்டு எதாவது சொல்லப்போய் ராஜாவின் கோபத்துக்கு ஆளாகிவிடுவோமோ எனப் பயந்து ஓடி ஓளிந்துக் கொண்டான் ரகு.
மதுரவசனி தான் திருமணத்துக்குப் புடவை எடுக்கும்போது ராஜா தேர்ந்தெடுத்தப் புடவையையே வைரத்துக்குக் கொடுக்க அவர் மனம் குளிர்ந்துப் போனார்.
மண்டபமே வண்ணமயமாய் ஜொலித்தது, வானவில் போல் ஒவ்வொரு பெண்டிரும் ஒவ்வொரு வண்ணச்சேலையில் அழகாய் வளைய வந்தனர்.
சுலோச்சனாவும் பூம்பொழிலும் மகள் புகுந்த வீடு செல்வதை எண்ணிக் கொஞ்சம் கலக்கத்துடனும் அதே சமயம் அவள் வாழ்க்கையில் அடுத்த அடி எடுத்து வைக்கப் போகும் மகிழ்வுடனும் ஒரு இரட்டை மன நிலையில் இருந்தனர்.
மோகனா அவருக்குப் பிடித்த நீல வண்ண சேலை அணிந்திருக்க, அவரைக் கண்ட ஹரிணி ,
“அத்த… இன்னிக்கு நம்ம மதுவுக்குக் கல்யாணமா இல்ல உங்களுக்கா…. அசத்துறீங்க… மாமா கண்கள் உங்களைத் தான் தேடுதே…” என ராகம் பாட
“அட டே ஹனிமா… இப்ப என்ன நானும் உன்னோட இந்த காக்ரா சோளி அழகா அம்சமா… சூப்பரா இருக்குன்னு சொல்லனும்.. சூப்பரா இருக்க.. ஒரு குழந்தைக்கு அம்மா மாதிரியே தெரில… கரெக்டா சொல்லிட்டேனா…” எனக் கலாய்க்க
“போங்கத்த… நான் நிஜமா தான் சொன்னேன்… மனசு விட்டுப் பாராட்டினா உங்களுக்குக் கிண்டலா..” எனச் சொல்லிக் கொண்டே வெளியே வர, அவள் கைகளைப் பிடித்து இழுத்த ஸ்ரீராம் ,
“ஹனிம்மா… சித்தி சரியாதான் டா சொல்றாங்க.. உன்னைப் பார்த்தா ஆயுஷ்க்கு அம்மா மாதிரி இல்ல… லுக்கிங் ப்ர்ட்டி கார்ஜியஸ்….” எனக் கண்ணால் கபளீகரம் செய்ய
வெட்கம் ஆட்கொள்ள, “இன்னிக்கு உங்க தொங்கச்சிக்குக் கல்யாணம்.. நமக்கில்ல…. போய் வேலையை பாருங்க…” என விரட்ட
“ நான் போக மாட்டேன்..” என அவள் கையை இன்னும் இறுகப்பற்ற ,
“எங்க அண்ணா கல்யாணத்துல அவனைத் தவிர ஆளாளுக்கு ரொமான்ஸ் படம் ஓட்டுறீங்களே… இது நியாயமா… தர்மமா…. ஒரு பச்சப்புள்ள இதெல்லாம் பார்த்தா கெட்டுப் போகாதா…?” என்றபடி அவர்களைச் சீண்டினாள் ராஜாவின் தங்கை கீர்த்தி.
“ஹா ஹா… அதுக்கு உங்கண்ணனுக்குத் திறமை இருக்கனும் மேடம்… பச்சப்புள்ளைக்கு இங்க என்ன பார்வை..?” எனத் திருப்பிக் கேட்டான் ஸ்ரீராம்.
“அக்காவைக் காணுமே அதான் தேடிட்டு வந்தேன்…”
“உங்களை.. விடுங்க…. கீர்த்தி நீ வா டா” என்றபடிக் கணவனை முறைத்துக் கொண்டே சென்றவளின் முகம் முழுக்கப் புன்னகையின் சாயலே.
திருமணத்திற்கு அமெரிக்காவில் இருந்து வந்திருந்த ஹரிணியின் அம்மா தீபாவும் அப்பா கணேஷும் மகள் மருமகனின் அன்யோன்யத்தைக் கண்டு உள்ளம் குளிர்ந்தனர்.
குட்டித் தாவணியில் ப்ரியா மதுரவசனியை வைத்த கண் வாங்காமல் பார்த்தாள். அமுதனும் அவளருகிலேயே உட்கார்ந்திருக்க, மோகனா ,
“அமுதா…. லேடீஸ் இருக்க இடத்துல உனக்கு என்ன வேலை… போய்… அண்ணா கூட இரு…” என விரட்ட
“போம்மா… மதுக்கா இனிமே நம்ம கூட இருக்க மாட்டாள்.. இல்ல… இப்ப நான் அவ கூடவே இருக்கேன்” என்று சொல்ல, மதுவின் கண்ணில் நீர் நிறைந்து விட அதைக் கண்ட மோகனா மகனை முறைத்து விட்டு ,
“மதும்மா.. என்ன நினைச்சிட்டு இருக்க நீ.... நான் கல்யாணம் ஆனப் புதிசில போன் பேசவே கஷ்டம்…. மதுரையில இருக்க எங்க வீட்டுக்கும் அடிக்கடி போக முடியாது.. இப்ப அப்படியா.. ஐமோ, ஃபேஸ்புக், வைபர் எல்லாம் இருக்குல… அப்புறம் என்னமோ வேற கிரகத்துக்குப் போற மாதிரி சீன் போடுற.. மேக்கப் கலைஞ்சிடும் டா… அழாத…” எனச் சொல்ல
சுலோச்சானாவும் கூட ,
“அட ஆமாங்கறேன்.. நான் கட்டிக்கிட்டு வந்த காலத்துல எல்லாம் கடுதாசிப் போட்டுதான் பேசிக்கிடனும்…. போனெல்லாம் இப்ப வந்தது தானே… மதும்மா…. மாப்பிள்ளை வீட்ல எல்லாரும் ரொம்ப நல்ல ஆளுங்க.. அவங்க மனசு நோகாம நடக்கனும்.. இங்க இருக்க மாதிரி டப் டப்னு பேசிட கூடாது.. எதிர்த்தெல்லாம் பேசிடாதேம்மா…” என்று சொல்லிவிட
பூம்பொழில் பிடித்துக் கொண்டார்.
“ஆமா பெரியம்மா சொல்ற மாதிரி வாயை வைச்சிட்டு சும்மா இருக்கனும்… ராங்கா பேசாத… கொஞ்சம் பொறுமையா இரு… சின்னப்பிள்ளைத்தனமா இருக்காத..” எனத் தாயாய் தனது அதீத கவலையை வெளிப்படுத்தினார்.
மஹாலஷ்மியும் சும்மா இருக்காது அவள் பங்கிற்கு ,”ராஜா பேசிக்கா ரொம்ப ஜாலி டைப் கிடையாதுன்னு நான் படிச்சேன் டி மது… இண்டஸ்டெரில கூட எல்லார்கிட்டையும் அளவா தான் பழகுவாராம்.. பட் ரொம்ப நல்ல குணமாம்.. உன் பிடிவாதத்தெல்லாம் மூட்டைக் கட்டி வைச்சிடு… சரியா?” என அறிவுரை சொல்ல.
மதுவின் மனமோ, “பிடிவாதமா.. அவன்ட்ட நானா… அவன் முன்னாடி பேசவே கஷ்டம்… பேசவே விட மாட்டான்… இதுல பிடிவாதமா நான் பேசிட்டாலும்…” என்று நினைத்துக் கொண்டாள்.
தஞ்சையில் உள்ள ராஜ் பாலேஸ் திருமண அரங்கம் ஜொலித்துக் கொண்டிருந்தது. ராஜ் நந்தன் – மதுரவசனி யின் திருமண வைபவம். ஆங்காங்கே உறவினர் கூட்டம் கூடியிருக்க, வாசலிலே பன்னீர் ரோஜாவுக்கும் சந்தன கிண்ணத்துக்கும் போட்டி போட்டுக் கொண்டிருந்தனர் சிறார்கள்.
வருபவர்களுக்கு ‘நான் தெளிக்கிறேன் பன்னீரை’ எனப் பிரியா சொல்ல, சிறுவனான ஆயுஷோ நான் தான் என அடம்பிடித்தான். மகனை சமாதானம் செய்து குட்டி நாத்தனார் பிரியாவிடம் ,
“ப்ரீமா… ஆயுஷ் சின்னப்பாப்பா இல்லையா..? அவன் கொஞ்ச நேரம் தெளிக்கட்டும்… அப்புறமா உனக்குத் தரேன் டா.. நீ ரோஜாப்பூவை வரவங்களுக்குக் கொடும்மா” என சமரசம் பேசினாள் அந்த வீட்டின் மூத்த மருமகள் ஹரிணி.
“அண்ணி.. அவன் தான் சின்னப்பையன் இல்லல.. அவன் ஒழுங்கா செய்ய மாட்டான்… நான் பிக் கேர்ள்.. அதனால எங்கிட்ட தாங்க…. இல்ல நான் அம்மாட்ட போவேன்..” எனக் கண்ணை கசக்கத் துவங்க,
“உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்… இதான் நாத்தனார் கொடுமையா சாமி… ராமா… என்னைக் காப்பாத்து… இவ கிட்டப் பேசி ஜெயிக்க எனக்குத் தெம்பில்ல…” எனப் புலம்ப , அவள் கேட்டபடி ஸ்ரீராமனே வந்தான்.
கடவுளாய் அல்ல கணவனாய்..!
“ஹனி…. என்னடி இங்க நின்னுட்டு இருக்க… உள்ள போ.. உன்னை அம்மா தேடுறாங்க… மதுவுக்கு அலங்காரம் செய்யனுமாம்..” எனச் சொல்ல
“ராம்.. இவன் அழறான்.. பன்னீர் தெளிக்கனும்னு சொல்றான்… ப்ரியா அவ தெளிக்கனும்னு சண்டை போடுறா… என்னால் முடியல..”
“அதானா விசயம்…” என்றவன் சிறிது நேரத்தில் ஒரு காற்றாடியை ஆன் செய்தான். அது சுழலும்போது பன்னீரை தானாகவே தெளிக்கும்.
மனைவியிடம் குனிந்து, “அமெரிக்காவுல படிச்ச முகத்தைப் பாரு.. இது எதுக்கு வைச்சிருக்கான்.. பன்னீர் தெளிக்கிறாளுங்களாம்…” எனத் திட்ட
“ஹும்கும்…” என நொடித்துக் கொண்டு அவள் உள்ளே செல்ல
ராஜதீபன் பட்டு வேஷ்டி சட்டையில் மிகவும் கம்பீரமாய் வந்தவன் ஸ்ரீராமிடம்,
“மச்சான்… உங்களை அண்ணாவுக்கு மாலைப் போட்டு அழைச்சிட்டு வர கூப்பிட்டாங்க…” என அழைக்க
“இதோ வரேன் தீபன்..” என அவன் பின்னால் சென்றான்.
வைரமும் கீர்த்தியும் மதுவின் அறையில் அவளோடு இருக்க, ராஜதீபனிடம் மட்டும் கொஞ்சம் பேசினான் ராஜ் நந்தன்.
இதில் மிகவும் பாதிக்கப்பட்டது சுந்தர் ராஜன் தான். அவர் தான் மகனிடம் நெருங்க முடியாமல் தவித்தார். மற்றவர்களிடமாவது ஒரிரு வார்த்தைகள் பேசுபவன் இவரிடம் வெறும் முகத்திருப்பல் மட்டுமே. ஆதலால் மிகுந்த சோர்வுக்கு ஆளானார்.
திருமணத்தின் ஒவ்வொரு விசயத்துக்கும் நந்தன் பிடிவாதம் பிடிக்க, மதுரவசனி தான் அவனைக் கெஞ்சி கெஞ்சியே சமாதானம் செய்தாள்.
“என் கல்யாணம்…. என் இஷ்டப்படி நடக்கப்போகுது.. அவங்க வந்தா என்னை சீண்டாம இருக்க சொல்லு மது… அவங்களைப் பார்த்தாலே பழைய ரணமெல்லாம் கீறி விட்டு வலி தான் எனக்கு மிச்சம்.. உனக்குப் புரிஞ்சதா…?” என அழுத்தமாய்க் கேட்க
“சரி சரி…. அவங்க உங்களை நெருங்க மாட்டாங்க.. ஆனால் என் வீட்டு ஆளுங்க முன்னாடி அவங்களுக்குத் தலைக்குனிவை ஏற்படுத்தாதீங்க… உங்களை அவங்கப் பெத்துக்கலை ஒழிய இத்தனை வருசம் நல்லா வளர்த்துருக்காங்க.. உங்களை மாதிரி ஒரு நல்ல பையனை எனக்குத் தந்துருக்காங்க.. அதுக்காகவே நான் அவங்களை மதிக்கனும்… நீங்களும் தான்…. நம்ம இரண்டு பேரும் ரொம்ப ஆசைப்பட்டு எதிர்ப்பார்ப்போட செய்யப்போற விசயம்… எனக்கு எந்த டென்ஷனும் இருக்க கூடாதுன்னு நான் நினைக்கிறேன் நந்தன்.. அப்படியே உங்களுக்கு பழசு ஞாபகம் வந்து காயப்பட்டா கூட எனக்காகப் பொறுத்துக்கோங்க. அதுக்கு நான் வந்து மருந்து போடுறேன்…” எனப் பேசியே அவனைக் கரைத்தாள்.
மூகூர்த்தத்துக்கு நேரம் நெருங்க மாப்பிள்ளையை ஸ்ரீராம் மைத்துனனாய் அழைத்து வந்து அமர வைக்க, ஐயர் முறைகளைச் செய்யத் துவங்கினார்.
மணமகனாய் ராஜ தோரணையில் அமர்ந்திருந்த ராஜ் நந்தனின் பார்வை ஒரு இடத்தில் தேங்கி அவனைக் கோபத்துக்கு உள்ளாக்கியது. உடனே அவன் ரகுவை முறைக்க, ரகுவோ ‘என்னாச்சுண்ணா’ எனக் கண்ணால் கேட்க
“கல்யாணத்துக்கு முன்னாடியே என்னை இம்சை பண்றாடா உங்கண்ணி… அவளுக்கு நான் வாங்கிக் கொடுத்த சேலையை யார் கட்டிருக்கா பாரு..” எனவும் அவன் காட்டிய திசையில் பார்க்க அழகான இளம்பச்சை வண்ண புடவையில் தங்க நிறத்தில் மாங்காய் பதித்த புடவையில் லட்சணமாய் இருந்தார் நந்தனின் தாய் வைரம். அதைப் பார்த்து விட்டு எதாவது சொல்லப்போய் ராஜாவின் கோபத்துக்கு ஆளாகிவிடுவோமோ எனப் பயந்து ஓடி ஓளிந்துக் கொண்டான் ரகு.
மதுரவசனி தான் திருமணத்துக்குப் புடவை எடுக்கும்போது ராஜா தேர்ந்தெடுத்தப் புடவையையே வைரத்துக்குக் கொடுக்க அவர் மனம் குளிர்ந்துப் போனார்.
மண்டபமே வண்ணமயமாய் ஜொலித்தது, வானவில் போல் ஒவ்வொரு பெண்டிரும் ஒவ்வொரு வண்ணச்சேலையில் அழகாய் வளைய வந்தனர்.
சுலோச்சனாவும் பூம்பொழிலும் மகள் புகுந்த வீடு செல்வதை எண்ணிக் கொஞ்சம் கலக்கத்துடனும் அதே சமயம் அவள் வாழ்க்கையில் அடுத்த அடி எடுத்து வைக்கப் போகும் மகிழ்வுடனும் ஒரு இரட்டை மன நிலையில் இருந்தனர்.
மோகனா அவருக்குப் பிடித்த நீல வண்ண சேலை அணிந்திருக்க, அவரைக் கண்ட ஹரிணி ,
“அத்த… இன்னிக்கு நம்ம மதுவுக்குக் கல்யாணமா இல்ல உங்களுக்கா…. அசத்துறீங்க… மாமா கண்கள் உங்களைத் தான் தேடுதே…” என ராகம் பாட
“அட டே ஹனிமா… இப்ப என்ன நானும் உன்னோட இந்த காக்ரா சோளி அழகா அம்சமா… சூப்பரா இருக்குன்னு சொல்லனும்.. சூப்பரா இருக்க.. ஒரு குழந்தைக்கு அம்மா மாதிரியே தெரில… கரெக்டா சொல்லிட்டேனா…” எனக் கலாய்க்க
“போங்கத்த… நான் நிஜமா தான் சொன்னேன்… மனசு விட்டுப் பாராட்டினா உங்களுக்குக் கிண்டலா..” எனச் சொல்லிக் கொண்டே வெளியே வர, அவள் கைகளைப் பிடித்து இழுத்த ஸ்ரீராம் ,
“ஹனிம்மா… சித்தி சரியாதான் டா சொல்றாங்க.. உன்னைப் பார்த்தா ஆயுஷ்க்கு அம்மா மாதிரி இல்ல… லுக்கிங் ப்ர்ட்டி கார்ஜியஸ்….” எனக் கண்ணால் கபளீகரம் செய்ய
வெட்கம் ஆட்கொள்ள, “இன்னிக்கு உங்க தொங்கச்சிக்குக் கல்யாணம்.. நமக்கில்ல…. போய் வேலையை பாருங்க…” என விரட்ட
“ நான் போக மாட்டேன்..” என அவள் கையை இன்னும் இறுகப்பற்ற ,
“எங்க அண்ணா கல்யாணத்துல அவனைத் தவிர ஆளாளுக்கு ரொமான்ஸ் படம் ஓட்டுறீங்களே… இது நியாயமா… தர்மமா…. ஒரு பச்சப்புள்ள இதெல்லாம் பார்த்தா கெட்டுப் போகாதா…?” என்றபடி அவர்களைச் சீண்டினாள் ராஜாவின் தங்கை கீர்த்தி.
“ஹா ஹா… அதுக்கு உங்கண்ணனுக்குத் திறமை இருக்கனும் மேடம்… பச்சப்புள்ளைக்கு இங்க என்ன பார்வை..?” எனத் திருப்பிக் கேட்டான் ஸ்ரீராம்.
“அக்காவைக் காணுமே அதான் தேடிட்டு வந்தேன்…”
“உங்களை.. விடுங்க…. கீர்த்தி நீ வா டா” என்றபடிக் கணவனை முறைத்துக் கொண்டே சென்றவளின் முகம் முழுக்கப் புன்னகையின் சாயலே.
திருமணத்திற்கு அமெரிக்காவில் இருந்து வந்திருந்த ஹரிணியின் அம்மா தீபாவும் அப்பா கணேஷும் மகள் மருமகனின் அன்யோன்யத்தைக் கண்டு உள்ளம் குளிர்ந்தனர்.
குட்டித் தாவணியில் ப்ரியா மதுரவசனியை வைத்த கண் வாங்காமல் பார்த்தாள். அமுதனும் அவளருகிலேயே உட்கார்ந்திருக்க, மோகனா ,
“அமுதா…. லேடீஸ் இருக்க இடத்துல உனக்கு என்ன வேலை… போய்… அண்ணா கூட இரு…” என விரட்ட
“போம்மா… மதுக்கா இனிமே நம்ம கூட இருக்க மாட்டாள்.. இல்ல… இப்ப நான் அவ கூடவே இருக்கேன்” என்று சொல்ல, மதுவின் கண்ணில் நீர் நிறைந்து விட அதைக் கண்ட மோகனா மகனை முறைத்து விட்டு ,
“மதும்மா.. என்ன நினைச்சிட்டு இருக்க நீ.... நான் கல்யாணம் ஆனப் புதிசில போன் பேசவே கஷ்டம்…. மதுரையில இருக்க எங்க வீட்டுக்கும் அடிக்கடி போக முடியாது.. இப்ப அப்படியா.. ஐமோ, ஃபேஸ்புக், வைபர் எல்லாம் இருக்குல… அப்புறம் என்னமோ வேற கிரகத்துக்குப் போற மாதிரி சீன் போடுற.. மேக்கப் கலைஞ்சிடும் டா… அழாத…” எனச் சொல்ல
சுலோச்சானாவும் கூட ,
“அட ஆமாங்கறேன்.. நான் கட்டிக்கிட்டு வந்த காலத்துல எல்லாம் கடுதாசிப் போட்டுதான் பேசிக்கிடனும்…. போனெல்லாம் இப்ப வந்தது தானே… மதும்மா…. மாப்பிள்ளை வீட்ல எல்லாரும் ரொம்ப நல்ல ஆளுங்க.. அவங்க மனசு நோகாம நடக்கனும்.. இங்க இருக்க மாதிரி டப் டப்னு பேசிட கூடாது.. எதிர்த்தெல்லாம் பேசிடாதேம்மா…” என்று சொல்லிவிட
பூம்பொழில் பிடித்துக் கொண்டார்.
“ஆமா பெரியம்மா சொல்ற மாதிரி வாயை வைச்சிட்டு சும்மா இருக்கனும்… ராங்கா பேசாத… கொஞ்சம் பொறுமையா இரு… சின்னப்பிள்ளைத்தனமா இருக்காத..” எனத் தாயாய் தனது அதீத கவலையை வெளிப்படுத்தினார்.
மஹாலஷ்மியும் சும்மா இருக்காது அவள் பங்கிற்கு ,”ராஜா பேசிக்கா ரொம்ப ஜாலி டைப் கிடையாதுன்னு நான் படிச்சேன் டி மது… இண்டஸ்டெரில கூட எல்லார்கிட்டையும் அளவா தான் பழகுவாராம்.. பட் ரொம்ப நல்ல குணமாம்.. உன் பிடிவாதத்தெல்லாம் மூட்டைக் கட்டி வைச்சிடு… சரியா?” என அறிவுரை சொல்ல.
மதுவின் மனமோ, “பிடிவாதமா.. அவன்ட்ட நானா… அவன் முன்னாடி பேசவே கஷ்டம்… பேசவே விட மாட்டான்… இதுல பிடிவாதமா நான் பேசிட்டாலும்…” என்று நினைத்துக் கொண்டாள்.