Hi dear ladies and girls thanksssssssssss alot.
share your views...here comes the next update of ?? raja rani
------------------------------------------------------------------------
காதல் 9
“இப்போ நான் வேணுமா வேண்டாமான்னு நீ சொல்லு….” என நந்தன் பட்டெனக் கேட்க சட்டெனப் பதில் சொல்ல முடியாதவளாக அதிர்ந்த மதுரவசனி, எங்கே தனது மௌனத்தை அவன் தவறாக எடுத்துக் கொள்வானோ எனப் பயந்து, கரகரத்த குரலில்,
“நந்தன் ப்ளீஸ் இப்படில்லாம் பேசாதீங்க.. எனக்குக் கஷ்டமா இருக்கு…..” என மதுரவசனி கெஞ்ச
“மது என்னோட கேள்விக்கு பதில் சொல்லு… நான் உனக்கு வேணுமா வேண்டாமா? எஸ் ஆர் நோ….?” எனக் கேட்க அரக்கனுக்கும் ஆழ்கடலுக்கும் நடுவில் மாட்டிக்கொண்டவளாக தான் இருந்தாள் மது.
“எனக்கு நீங்க வேணும்.. நந்தன் “
“ம….து…….ஐ லவ் யூ சோ மச் டா…..” என்றான் நெகிழ்ச்சியாய். அதில் அவளும் நெகிழ,
அந்த நெகிழ்ச்சி நீண்ட நேரம் நிலைக்காத வண்ணம், “அப்போ நான் சொல்றதை செய் மது…… நீயே உங்க வீட்ல சொல்லு.. அவங்க என் அப்பா அம்மா இல்ல….. நானும் நீயும் விரும்புறதையும் சொல்லிடு… வேணும்னா நானும் வந்து பேசுறேன்…. குறிச்ச தேதியில கல்யாணம் நடக்கட்டும்.. ஆனா அந்த வீட்டாளுங்க யாரும் வரக்கூடாது… நான் ரகு மட்டும் தான் என் சார்பா… சரியா…” என அவன் சொல்ல
“என்ன நந்தன் பேசுறீங்க….? புரிஞ்சுதான் சொல்றீங்களா…. உங்களைப் பெத்தவங்க இல்லாம எப்படி நம்ம கல்யாணம் நடக்கும்…? அது மட்டுமில்லாம நான் லவ் பண்றேன்னு சொன்னா எங்க வீட்ல சோத்துல விசம் வைச்சு கொல்வாங்க…. அதான் உங்களுக்கு வேணுமா…?” என ஆத்திரமாய்க் கேட்க
“அப்படி எதாவது நடந்தா நான் உன் குடும்பதுக்கே விசம் வைச்சு கொன்னுடுவேன் மது….” என அவன் சீரியசான குரலில் சொல்ல,
இதையெல்லாம் போனில் பேசி அவனிடம் புரிய வைக்க முடியுமென அவளுக்கு தோணாதலால் ,
“நந்தன் எனக்கு உங்களைப் பார்க்கனும்..இப்போவே…நான் வரேன் உங்க வீட்டுக்கு..எனக்கு அட்ரெஸை மெசெஜ் அனுப்புங்க……” என்றவளது கூற்றை ஆமோதித்தவன் அவ்வாறே செய்ய, மதுரவசனி அடுத்த முக்கால் மணி நேரத்தில் நந்தனின் வீட்டில் இருந்தாள்.
அவள் சென்றப்போது அவன் பால்கனியில் நின்று கடலை வேடிக்கைப் பார்க்க, ரகு தான், “மேல இருக்கார்…” என்று சொல்லி அனுப்பி வைத்தான்.
இவன் செய்த கலாட்டவால் அரக்கப் பறக்க கூந்தல் பறக்க, வியர்க்க விறுவிறுக்க ஓடி வந்தவள் மூச்சிரைக்க நின்ற இடம் அவனது படுக்கையறை.
அவளது மூச்சிரைப்புக் கேட்டு திரும்பிய நந்தன், “ஹே..!! மதும்மா.. என்ன இது…. இப்படி வந்திருக்க……. கூல் கூல்..” என்றவன் தண்ணீரை எடுத்துப் பருகத் தந்தான்.
அவள் கண்கள் கலங்கி இருக்க, அதை கண்ணுற்ற அவளது கண்ணன், மதுவின் மதி முகத்தைக் கைகளில் தாங்கியவன், கண்களைத் துடைத்து விட்டு,
“என்னாச்சும்மா…ஏன் அழுகை…?” என வாஞ்சையாய்க் கேட்க
“ஏன் போன்ல அப்படில்லாம் பேசுனீங்க.. அநாதை.. அது…. இதுன்னு..” எனத் தேம்பியப்படிச் சொன்னவளின் கையைப் பிடித்தவன், அதை வருடியபடி,
“இப்போ நான் அநாதை இல்ல மது… நீ இருக்கும்போது நான் எப்படி மா அநாதை ஆவேன்… சொல்லு… நீ எப்போவுமே எங்கூட இருப்பதானே…” என ஆவலாய்க் கேட்டவனிடம் ஆமோதிப்பாய் தலையசைத்தாள்.
“மது…. நான் உன்னைப் பார்த்தது.. சண்டைப் போட்டது….. என் மனசை சொன்னது…. எல்லாம் உடனே நடந்து முடிஞ்சிச்சு…. அப்புறம் என்னோட அமெரிக்க பயணம்.. இடையில நீ வேற போன் பேசக்கூடாதுன்னு ஸ்டீரிக்டா சொல்லிட்ட…. என் மதுவோட ஆர்டர் மீற முடியல…… என்னைப் பத்தி நான் உன்ட்ட முழுசா எதுவும் சொல்ல நேரமில்ல…. இப்போ சொல்றேன் கேளு…..” என்றவன் பெருமூச்சை வெளியேற்றி விட்டு,
“நான் நிஜமாவே அநாதை தான் மது…. என்னைப் பெத்தவங்க யார்ன்னே எனக்குத் தெரியாது.. என்னை வளர்த்தவங்க தான் உன்னை வந்துப் பெண் கேட்டது…. அவங்களுக்கும் எனக்கும் எந்த ரத்த சம்மந்தமும் இல்லை….” என வார்த்தைகள் இறுக்கமாய் ஒலிக்க, அவனை அதிர்ச்சியோடு மது ஏறிட்டுப் பார்க்க
நந்தன் கண்கள் சிவக்க, சுவற்றை வெறித்தவாறே மதுவின் கைகளைப் பற்றிய நிலையிலே சொல்லிக் கொண்டேப் போனான்.
“நந்தன் நீங்க நிஜமா தான் சொல்றீங்களா..? கோபத்துல சொல்ல..ல…தா..னே….” என அவள் திணறலோடு வினவ,
“மது… ஒன்னு நல்லா புரிஞ்சிக்கோ… கோபத்துல நான் பொய் சொல்ல மாட்டேன்….. ஒரு காலத்துல விளையாட்டுக் கூட என்னை அவங்க பையன் இல்லன்னு சொன்னா தாங்கதவன் நான்… ஆனா ஒரு நாள் எந்த முன்னறிவிப்பும் இல்லாம வர சுனாமி போல என் வாழ்க்கையும் மாறிடுச்சு….. எல்லாமே தலைகீழாப் போயிடுச்சு… என்னோட அம்மா எனக்கு அம்மா இல்ல…… அப்பா அவர் என்னோட அடையாளம் இல்ல.. என் தம்பி, என் தங்கை, தாத்தா, ஆத்தா யாருமே எனக்கு சொந்தமில்லை…… என்னோட வீடு எனக்கு வீடே இல்ல…… உலகத்தில நான் உதிக்க காரணம் யார்னு இன்னிக்கு வர எனக்குத் தெரில…… நான் தப்பானவங்களுக்குக் கூட பொறந்திருக்கலாம்…..” என்றவன் கண்களிலிருந்து கண்ணீர் கனமாய் இறங்க,
அதை பார்த்த மதுவுக்கும் கண்ணீர் உருண்டோடியது, அவனது கையை இறுகப்பற்றினாள்.
“மது… இந்த பிடியை என்னைக்கும் விட மாட்டதானே…?” எனக் கண்ணீரோடு கேட்டவனைக் கண்டவளுக்கு நெஞ்சம் வலிக்க,
“மாட்டேன் என் உயிர் போற வரைக்கும் விட மாட்டேன்……” எனச் சொல்ல
“ம்ஹூம்.. நான் தான் முதல்ல சாகனும் மது… நீ உலகத்தில இல்லன்னு நினைச்சுப் பார்க்கக் கூட முடியாது என்னால…. நான் செத்தா எனக்காக அழ மது இருக்கான்னு நம்பிக்கையில நான் சந்தோசத்துல செத்து போவேன் மா…” என்று தீர்க்கமாய் சொல்ல
“போதும்.. இப்படில்லாம் பேசாதீங்க….” என அவள் சொல்ல
“அப்போ என்ன பேசனும் நீயே சொல்லேன்…”
“அவங்க உங்களை வளர்த்தவங்களா இருந்தாலும் உங்க மேல பாசமா தான் இருக்காங்க.. உங்களை எங்கேயும் விட்டுக்கொடுக்கல… அதுவும் அத்தைக்கு நீங்கன்னா ரொம்ப இஷ்டம்….. நம்ம சேரனும்னு நம்மளை விட அதிக ஆசை அவங்க எல்லாருக்கும் தான்…. என்னோட வீட்டை சமாளிக்கறது ஈசியில்லங்க… என்னோட அப்பா அம்மா மட்டுமில்லாம பெரிப்பா பெரிம்மா, சித்தப்பா சித்தின்னு எல்லாரும் ஒத்துக்கனும்…. அவங்களாம் ஒத்துட்டாலும் ஆத்தா ஒத்துக்கனும்….. இப்படி எல்லாரும் ஒத்துட்டு நம்ம கல்யாணம் நடக்கப்போவுது… அதையேன் நந்தன் தடுக்கப் பார்க்கிறீங்க….. என்ன இருந்தாலும் உங்களை வளர்த்தவங்க தானே… எதுக்கு இந்த கோபம்…? வேண்டாமேங்க…” என மதுப் பொறுமையாகக் கூற
நந்தன் அவள் கைகளிலிருந்து தனது கையை விடுவித்தவன் எழுந்துச் சென்று அவள் முன்னால் உள்ள சுவற்றில் ஒரு காலை வைத்து தரையில் ஒரு காலை ஊன்றி , மதுவை நோக்கி ஒரு கூரியப் பார்வை வீசியவன் ,
“மது… அவங்க என்னை வளர்த்தாங்க தான் மது….. அதை நான் மறுக்கல… ஆனா வளர்த்த விசயம் தெரியாம இருந்திருந்தா நான் வாழ்க்கை முழுக்க நிம்மதியா இருந்திருப்பேன்…. என்னோட குடும்பம் எனக்கே சொந்தமா இருந்திருக்கும்.. ஆனா அது தெரிஞ்சப்பா ஆயிரம் பேர் ஈட்டியை வைச்சு முதுகில குத்தின வலி மது, உயிரை விடனும்னு தோணிச்சு…”என்றவனை அவள் அதிர்ந்த நயனங்களோடு நோக்க
“கேளு…. முழுசா நான் சொல்றதைக் கேளு மது….. வாழ்க்கை முழுக்க நீ மட்டும் எங்கூட வர போவதில்லை… என்னுடைய வலிகளும் தான்… சோ நீ அதையும் தெரிஞ்சிக்கனும் மது……..” என்றவன் கனம் மிகுந்த தனது கடந்த கால பக்கங்களைத் திறக்கத் தொடங்கினான்.
share your views...here comes the next update of ?? raja rani
------------------------------------------------------------------------
காதல் 9
“இப்போ நான் வேணுமா வேண்டாமான்னு நீ சொல்லு….” என நந்தன் பட்டெனக் கேட்க சட்டெனப் பதில் சொல்ல முடியாதவளாக அதிர்ந்த மதுரவசனி, எங்கே தனது மௌனத்தை அவன் தவறாக எடுத்துக் கொள்வானோ எனப் பயந்து, கரகரத்த குரலில்,
“நந்தன் ப்ளீஸ் இப்படில்லாம் பேசாதீங்க.. எனக்குக் கஷ்டமா இருக்கு…..” என மதுரவசனி கெஞ்ச
“மது என்னோட கேள்விக்கு பதில் சொல்லு… நான் உனக்கு வேணுமா வேண்டாமா? எஸ் ஆர் நோ….?” எனக் கேட்க அரக்கனுக்கும் ஆழ்கடலுக்கும் நடுவில் மாட்டிக்கொண்டவளாக தான் இருந்தாள் மது.
“எனக்கு நீங்க வேணும்.. நந்தன் “
“ம….து…….ஐ லவ் யூ சோ மச் டா…..” என்றான் நெகிழ்ச்சியாய். அதில் அவளும் நெகிழ,
அந்த நெகிழ்ச்சி நீண்ட நேரம் நிலைக்காத வண்ணம், “அப்போ நான் சொல்றதை செய் மது…… நீயே உங்க வீட்ல சொல்லு.. அவங்க என் அப்பா அம்மா இல்ல….. நானும் நீயும் விரும்புறதையும் சொல்லிடு… வேணும்னா நானும் வந்து பேசுறேன்…. குறிச்ச தேதியில கல்யாணம் நடக்கட்டும்.. ஆனா அந்த வீட்டாளுங்க யாரும் வரக்கூடாது… நான் ரகு மட்டும் தான் என் சார்பா… சரியா…” என அவன் சொல்ல
“என்ன நந்தன் பேசுறீங்க….? புரிஞ்சுதான் சொல்றீங்களா…. உங்களைப் பெத்தவங்க இல்லாம எப்படி நம்ம கல்யாணம் நடக்கும்…? அது மட்டுமில்லாம நான் லவ் பண்றேன்னு சொன்னா எங்க வீட்ல சோத்துல விசம் வைச்சு கொல்வாங்க…. அதான் உங்களுக்கு வேணுமா…?” என ஆத்திரமாய்க் கேட்க
“அப்படி எதாவது நடந்தா நான் உன் குடும்பதுக்கே விசம் வைச்சு கொன்னுடுவேன் மது….” என அவன் சீரியசான குரலில் சொல்ல,
இதையெல்லாம் போனில் பேசி அவனிடம் புரிய வைக்க முடியுமென அவளுக்கு தோணாதலால் ,
“நந்தன் எனக்கு உங்களைப் பார்க்கனும்..இப்போவே…நான் வரேன் உங்க வீட்டுக்கு..எனக்கு அட்ரெஸை மெசெஜ் அனுப்புங்க……” என்றவளது கூற்றை ஆமோதித்தவன் அவ்வாறே செய்ய, மதுரவசனி அடுத்த முக்கால் மணி நேரத்தில் நந்தனின் வீட்டில் இருந்தாள்.
அவள் சென்றப்போது அவன் பால்கனியில் நின்று கடலை வேடிக்கைப் பார்க்க, ரகு தான், “மேல இருக்கார்…” என்று சொல்லி அனுப்பி வைத்தான்.
இவன் செய்த கலாட்டவால் அரக்கப் பறக்க கூந்தல் பறக்க, வியர்க்க விறுவிறுக்க ஓடி வந்தவள் மூச்சிரைக்க நின்ற இடம் அவனது படுக்கையறை.
அவளது மூச்சிரைப்புக் கேட்டு திரும்பிய நந்தன், “ஹே..!! மதும்மா.. என்ன இது…. இப்படி வந்திருக்க……. கூல் கூல்..” என்றவன் தண்ணீரை எடுத்துப் பருகத் தந்தான்.
அவள் கண்கள் கலங்கி இருக்க, அதை கண்ணுற்ற அவளது கண்ணன், மதுவின் மதி முகத்தைக் கைகளில் தாங்கியவன், கண்களைத் துடைத்து விட்டு,
“என்னாச்சும்மா…ஏன் அழுகை…?” என வாஞ்சையாய்க் கேட்க
“ஏன் போன்ல அப்படில்லாம் பேசுனீங்க.. அநாதை.. அது…. இதுன்னு..” எனத் தேம்பியப்படிச் சொன்னவளின் கையைப் பிடித்தவன், அதை வருடியபடி,
“இப்போ நான் அநாதை இல்ல மது… நீ இருக்கும்போது நான் எப்படி மா அநாதை ஆவேன்… சொல்லு… நீ எப்போவுமே எங்கூட இருப்பதானே…” என ஆவலாய்க் கேட்டவனிடம் ஆமோதிப்பாய் தலையசைத்தாள்.
“மது…. நான் உன்னைப் பார்த்தது.. சண்டைப் போட்டது….. என் மனசை சொன்னது…. எல்லாம் உடனே நடந்து முடிஞ்சிச்சு…. அப்புறம் என்னோட அமெரிக்க பயணம்.. இடையில நீ வேற போன் பேசக்கூடாதுன்னு ஸ்டீரிக்டா சொல்லிட்ட…. என் மதுவோட ஆர்டர் மீற முடியல…… என்னைப் பத்தி நான் உன்ட்ட முழுசா எதுவும் சொல்ல நேரமில்ல…. இப்போ சொல்றேன் கேளு…..” என்றவன் பெருமூச்சை வெளியேற்றி விட்டு,
“நான் நிஜமாவே அநாதை தான் மது…. என்னைப் பெத்தவங்க யார்ன்னே எனக்குத் தெரியாது.. என்னை வளர்த்தவங்க தான் உன்னை வந்துப் பெண் கேட்டது…. அவங்களுக்கும் எனக்கும் எந்த ரத்த சம்மந்தமும் இல்லை….” என வார்த்தைகள் இறுக்கமாய் ஒலிக்க, அவனை அதிர்ச்சியோடு மது ஏறிட்டுப் பார்க்க
நந்தன் கண்கள் சிவக்க, சுவற்றை வெறித்தவாறே மதுவின் கைகளைப் பற்றிய நிலையிலே சொல்லிக் கொண்டேப் போனான்.
“நந்தன் நீங்க நிஜமா தான் சொல்றீங்களா..? கோபத்துல சொல்ல..ல…தா..னே….” என அவள் திணறலோடு வினவ,
“மது… ஒன்னு நல்லா புரிஞ்சிக்கோ… கோபத்துல நான் பொய் சொல்ல மாட்டேன்….. ஒரு காலத்துல விளையாட்டுக் கூட என்னை அவங்க பையன் இல்லன்னு சொன்னா தாங்கதவன் நான்… ஆனா ஒரு நாள் எந்த முன்னறிவிப்பும் இல்லாம வர சுனாமி போல என் வாழ்க்கையும் மாறிடுச்சு….. எல்லாமே தலைகீழாப் போயிடுச்சு… என்னோட அம்மா எனக்கு அம்மா இல்ல…… அப்பா அவர் என்னோட அடையாளம் இல்ல.. என் தம்பி, என் தங்கை, தாத்தா, ஆத்தா யாருமே எனக்கு சொந்தமில்லை…… என்னோட வீடு எனக்கு வீடே இல்ல…… உலகத்தில நான் உதிக்க காரணம் யார்னு இன்னிக்கு வர எனக்குத் தெரில…… நான் தப்பானவங்களுக்குக் கூட பொறந்திருக்கலாம்…..” என்றவன் கண்களிலிருந்து கண்ணீர் கனமாய் இறங்க,
அதை பார்த்த மதுவுக்கும் கண்ணீர் உருண்டோடியது, அவனது கையை இறுகப்பற்றினாள்.
“மது… இந்த பிடியை என்னைக்கும் விட மாட்டதானே…?” எனக் கண்ணீரோடு கேட்டவனைக் கண்டவளுக்கு நெஞ்சம் வலிக்க,
“மாட்டேன் என் உயிர் போற வரைக்கும் விட மாட்டேன்……” எனச் சொல்ல
“ம்ஹூம்.. நான் தான் முதல்ல சாகனும் மது… நீ உலகத்தில இல்லன்னு நினைச்சுப் பார்க்கக் கூட முடியாது என்னால…. நான் செத்தா எனக்காக அழ மது இருக்கான்னு நம்பிக்கையில நான் சந்தோசத்துல செத்து போவேன் மா…” என்று தீர்க்கமாய் சொல்ல
“போதும்.. இப்படில்லாம் பேசாதீங்க….” என அவள் சொல்ல
“அப்போ என்ன பேசனும் நீயே சொல்லேன்…”
“அவங்க உங்களை வளர்த்தவங்களா இருந்தாலும் உங்க மேல பாசமா தான் இருக்காங்க.. உங்களை எங்கேயும் விட்டுக்கொடுக்கல… அதுவும் அத்தைக்கு நீங்கன்னா ரொம்ப இஷ்டம்….. நம்ம சேரனும்னு நம்மளை விட அதிக ஆசை அவங்க எல்லாருக்கும் தான்…. என்னோட வீட்டை சமாளிக்கறது ஈசியில்லங்க… என்னோட அப்பா அம்மா மட்டுமில்லாம பெரிப்பா பெரிம்மா, சித்தப்பா சித்தின்னு எல்லாரும் ஒத்துக்கனும்…. அவங்களாம் ஒத்துட்டாலும் ஆத்தா ஒத்துக்கனும்….. இப்படி எல்லாரும் ஒத்துட்டு நம்ம கல்யாணம் நடக்கப்போவுது… அதையேன் நந்தன் தடுக்கப் பார்க்கிறீங்க….. என்ன இருந்தாலும் உங்களை வளர்த்தவங்க தானே… எதுக்கு இந்த கோபம்…? வேண்டாமேங்க…” என மதுப் பொறுமையாகக் கூற
நந்தன் அவள் கைகளிலிருந்து தனது கையை விடுவித்தவன் எழுந்துச் சென்று அவள் முன்னால் உள்ள சுவற்றில் ஒரு காலை வைத்து தரையில் ஒரு காலை ஊன்றி , மதுவை நோக்கி ஒரு கூரியப் பார்வை வீசியவன் ,
“மது… அவங்க என்னை வளர்த்தாங்க தான் மது….. அதை நான் மறுக்கல… ஆனா வளர்த்த விசயம் தெரியாம இருந்திருந்தா நான் வாழ்க்கை முழுக்க நிம்மதியா இருந்திருப்பேன்…. என்னோட குடும்பம் எனக்கே சொந்தமா இருந்திருக்கும்.. ஆனா அது தெரிஞ்சப்பா ஆயிரம் பேர் ஈட்டியை வைச்சு முதுகில குத்தின வலி மது, உயிரை விடனும்னு தோணிச்சு…”என்றவனை அவள் அதிர்ந்த நயனங்களோடு நோக்க
“கேளு…. முழுசா நான் சொல்றதைக் கேளு மது….. வாழ்க்கை முழுக்க நீ மட்டும் எங்கூட வர போவதில்லை… என்னுடைய வலிகளும் தான்… சோ நீ அதையும் தெரிஞ்சிக்கனும் மது……..” என்றவன் கனம் மிகுந்த தனது கடந்த கால பக்கங்களைத் திறக்கத் தொடங்கினான்.