வாணி ராணி
வாணி மஹாலில் அன்று கண்டேன் கலைவாணி
அவள் சிரித்து பேசுவதே ஒரு அலாதியான பாணி
பொறுமையுடன் காத்து அவள் மனம் கவர்ந்தேன்
வாணி பூத்து என் மனதில் தோணியாக மிதந்தாள்
ராணி சீதை ஹாலில் என்னை கண்டவள் ராணி
என்னுடன் காதல் பேச அன்று போட்டாள் போணி
எனக்கோ வாணி, அவளுக்கே என்னை காட்டினேன்
வாணியை காதலிப்பதால் ராணியை ஓரம் கட்டினேன்
விடவில்லை ராணி, நிழலாய் என்னை தொடர்ந்தாள்
நான் அறியாமலே மனதில் மென்மையாக படர்ந்தாள்
ராணி என்னிடம் கொண்ட அன்பை அறிந்த வாணி
ராணியை சந்தித்தாள் அவள் காதலை சொன்னாள்
ராணி அறிவாள், என்னுடன் வாணியின் காதலை
மிகவும் மனம் உடைந்து போனாள், பாவம் ராணி
ராணி மேற்படிப்புக்காக அமெரிக்கா செல்கிறாளாம்
எனவே அவளால் எங்களுக்கு பிரச்சினை இல்லயாம்
அவளை வழி அனுப்ப நான் சென்றேன் விமான நிலையம்
ராணி கண்ணாலே சொன்னாள் 'நான் ஒரு சாந்தி நிலையம்'
என் கைபடாமல் இருந்தவள் என்னை கட்டி பிடித்தாள்
நானும் கட்டி பிடித்தேன், கதறினேன், ராணி தப்பித்தாள்
வாணியிடம் நான் கொண்ட காதலை ராணி அறிவாள்
ராணியிடம் நான் கொண்ட அன்பை வாணி அறிவாளா?
Joyram
வாணி மஹாலில் அன்று கண்டேன் கலைவாணி
அவள் சிரித்து பேசுவதே ஒரு அலாதியான பாணி
பொறுமையுடன் காத்து அவள் மனம் கவர்ந்தேன்
வாணி பூத்து என் மனதில் தோணியாக மிதந்தாள்
ராணி சீதை ஹாலில் என்னை கண்டவள் ராணி
என்னுடன் காதல் பேச அன்று போட்டாள் போணி
எனக்கோ வாணி, அவளுக்கே என்னை காட்டினேன்
வாணியை காதலிப்பதால் ராணியை ஓரம் கட்டினேன்
விடவில்லை ராணி, நிழலாய் என்னை தொடர்ந்தாள்
நான் அறியாமலே மனதில் மென்மையாக படர்ந்தாள்
ராணி என்னிடம் கொண்ட அன்பை அறிந்த வாணி
ராணியை சந்தித்தாள் அவள் காதலை சொன்னாள்
ராணி அறிவாள், என்னுடன் வாணியின் காதலை
மிகவும் மனம் உடைந்து போனாள், பாவம் ராணி
ராணி மேற்படிப்புக்காக அமெரிக்கா செல்கிறாளாம்
எனவே அவளால் எங்களுக்கு பிரச்சினை இல்லயாம்
அவளை வழி அனுப்ப நான் சென்றேன் விமான நிலையம்
ராணி கண்ணாலே சொன்னாள் 'நான் ஒரு சாந்தி நிலையம்'
என் கைபடாமல் இருந்தவள் என்னை கட்டி பிடித்தாள்
நானும் கட்டி பிடித்தேன், கதறினேன், ராணி தப்பித்தாள்
வாணியிடம் நான் கொண்ட காதலை ராணி அறிவாள்
ராணியிடம் நான் கொண்ட அன்பை வாணி அறிவாளா?
Joyram