வெளியெல்லாம் காதலால் நிறைத்தால்(ள்)...
"சில சமயம் வாழ்க்கை இப்படித்தான். பெரிதினும் பெரிது கேள் என்றொரு வாசகம் உண்டு. எல்லோரும் பெரியதையே கேட்கும் பட்சத்தில் சிறியதெல்லாம் ஏன் படைக்கப்பட வேண்டும் என்ற கேள்வி எழலாம். அது நியாயமான கேள்வியும் கூட. ஆனால் இங்கே நிரந்தர பெரியது நிரந்தர சிறியது என்று எதுவுமில்லையே. பெரியது சிறியது என்பதை அந்தந்த காலகட்டத்தின் தேவை பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது. பசியில் இருப்பவனுக்கு கண்ணில் படும் உணவு யாவும் பெரியது தான். வயிறு புடைக்க உண்டவனுக்கு தேவைப்படும் வெற்றிலை சீவல் உருவத்தில் சிறிது என்றாலும் அதுகாறும் அவன் உண்ட உணவின் நிறைவை அந்த வெற்றிலையால் மட்டுமே கொடுக்கமுடியும். அந்தந்த நேரத்து நியாயங்கள் தான் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது. கிருஷ்ணப்ரியாவின் முடிவு உங்களுக்குப் பிடிக்காவிட்டாலும் ஏன் ஏற்றுக்கொள்ள முடியாமல் போனாலும் அதை ஒன்றும் சொல்ல முடியாது. விமர்சிப்பவர்களால் வாழமுடியாது. வாழ்பவர்களால் விமர்சிக்க முடியாது. எல்லாவற்றுக்கும் விடை எதிர்பார்க்க கூடாது. சில கேள்விகளை கேள்விகளாகவே விட்டுவிட வேண்டும். அதற்கு விடை தேட முயன்றால் நம் வாழ்க்கை கேள்விக்குறியாக மாறி விடவும் கூடும். நிஷாந்த் இழைத்த தவறுக்கு கிருஷ்ணா தன் தவறின் மூலமாகவே பதிலளித்து விட்டாள். ஆனால் கிருஷ்ணாவின் தவறுக்கான முடிவு? வாய்ப்பிருந்தால் வேறொரு கதையில் பதில் அளிக்கிறேன்...
ப்ரியங்களுடன்,
பவித்ரா குமாரசாமி"
என்று பவித்ரா சொன்னதை எல்லாம் தட்டச்சு செய்தான் நவிரன். தான் சொல்லும் போதே அதில் நவிரனுக்கு உடன்பாடில்லை என்று பவித்ராவும் புரிந்து கொண்டார் தான். ஒவ்வொரு முறை பவித்ராவைத் திரும்பி திரும்பி பார்த்தவன் இறுதி வார்த்தையைத் தட்டச்சு செய்து முடித்ததும்,
"ஏன் இப்படிப் பண்ண? உனக்கு கொஞ்சம் கூட கிருஷ்ணா மேல இரக்கமே இல்லையா?" என்று கேட்டவனின் முகத்தில் அப்பட்டமான எரிச்சல் குடிகொண்டது.
"அதில்லை நவி..."
"நீ நிறுத்து. எனக்கு உன் எக்ஸ்ப்ளனேஷன் வேணாம். அதெப்படி ஒருத்தங்க வாழ்க்கை இப்படி ஆரம்பத்துல இருந்து இறுதி வரை போராட்டமாவே இருக்கும். அப்படி வாழ்க்கை ஃபுல்லா போராட்டமாவே இருந்தா எப்படி மேற்கொண்டு வாழணும்னு ஆசை வரும். ஏதோ ஒரு பாயிண்ட்ல போடா இந்த வாழ்க்கையும் வேணாம் ஒரு டேஷும் வேணாம்னு ஏதாவது தப்பான முடிவைத் தான் எடுக்க தூண்டும். ஏன் அந்த நிஷாந்துக்கு தண்டனையே கிடைக்கல? தப்பு பண்ணவன் இனிமேல் ஜாலியா சுத்தப் போறான். ஆனா தவறிழைக்கப்பட்டவள் வாழ்க்கை முழுக்க அதையே நெனச்சு வாழணுமில்ல? திஸ் இஸ் சோ ரிடிக்குலஸ். நீ வேணுனா பாரு இதுக்கெல்லாம் சேர்த்து நீ நல்லா வாங்கிக் கட்டிக்கப்போற. அது உன் தலை விதி..." என்று இன்னமும் தன்னுடைய மனமாறாமல் புழுங்கிக்கொண்டு இருந்தான் நவிரன்.
அதுவரை நிசப்தமாக இருந்த அறைக்குள் நுழைந்தார் குமாரசாமி. அவர் கையிலிருந்த நற்றிணை நவிரனைக் கண்டதும் துள்ளி குதிக்க அவனுக்கு முன்பாக எழுந்த பவித்ரா அவளைத் தூக்கிக் கொண்டார்.
"அப்பா ப்பா..." என்று மழலையில் மொழிந்தாள் பதினான்கு மாத நற்றிணை.
இருவரும் ஆளுக்கு ஒரு புறமாக முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு அமர்ந்திருப்பதைக் கண்ட குமாரசாமி,
"என்ன இது புயலுக்கு முன் அமைதியா இல்ல புயலுக்குப் பின் அமைதியா?" என்று நக்கலாக வினவ அதற்குச் சிரித்த பவித்ரா கண்ஜாடையில் நவிரனைக் காட்ட,
"என்னாச்சு நவி?" என்று அவனருகில் அமர்ந்தார்.
"நீங்களே இந்த நியாயம் கேளுங்க ப்பா. கிருஷ்ணாவை காதலிச்சு கல்யாணம் செஞ்சுக்கறதா ஏமாத்திட்டான் நிஷாந்த். ஆனா அவனுக்கு எந்த ஒரு தண்டனையும் கொடுக்காம கிருஷ்ணாவையே பழிவாங்கிட்டாங்க உங்க பொண்டாட்டி..."
"டேய் இது ஒரு கதை. ஜஸ்ட் எ நாவல். இதுக்கா இப்படி ஓவர் ரியாக்ட் செய்யுற?"
"நாவலா இருந்தா நியாயமா இருக்கக்கூடாதுனு ஏதாவது சட்டமா என்ன? எவ்வளவு அழகான பொண்ணு தெரியுமா கிருஷ்ணா? ஸச் எ போல்ட் பியூட்டிபுல் கேர்ள். கதை முழுக்க அவளை அவ்வளவு ப்ரொஃரஸிவா காட்டிட்டு கடைசியில இப்படி ஏமாந்து போறமாதிரி முடிச்சிட்டாங்க. சரி குறைந்த பட்சம் அவ ஜெயிச்ச மாதிரியா கூட முடிச்சிருக்கலாம்..." என்னும் போது பவித்ரா தன்னையும் மீறிச் சிரிக்கவும்,
"சிரிக்காத பவித்ரா. எனக்கு எரிச்சல் எரிச்சலா வருது. போ உன் பேச்சு டூ" என்றவன் எழுந்து அவர் கையிலிருந்த நற்றிணையை வாங்கி,
"பாட்டிகூட சேராதடா தங்கம். இவங்க சரியான சேடிஸ்ட் ரைட்டர். நீ வா நாம போய் விளையாடலாம்..." என்று நவிரன் வெளியேற,
"நவி, நில்லு. எல்லாம் பேக் பண்ணிட்டியா? அண்ட் ஆர் யூ சூர்?" என்றார் குமாரசாமி.
முழு எபிசோட் சீக்கிரம் போடுறேன். ஆனால் அது கொஞ்சம் லேட்டா தான் வரும் மக்களே!
இது தான் முதல் எபிசோட். டைட்டில் மற்றும் கதை பற்றி விமர்சனங்கள் வரவேற்கப்படும்.
என்னது புது கதையா அப்படினு யாரும் ஷாக் ஆக வேண்டாம். இந்தத் தளத்திலே ரெண்டு கதைங்க pending இருக்கு தான்.(மஞ்சள் வெயில் மாலையிலே மற்றும் கீர்த்தனை) இது ரெண்டும் போக இன்னும் ரெண்டு கதை ப்ரதிலிபிள வேற pending இருக்கு. இருந்தாலும் இந்தக் கதை சீக்கிரம் வரும். இதுக்குப் பிறகு இன்னொரு குட்டி கதை வரும்.
அப்பறோம் எல்லா pending stories வரும். கதை படி ஒரு பிரபல பெண் நாவல் எழுத்தாளருக்கு ஒரு பேர் தேவை பட்டது என்னவோ உண்மை. மிகச் சமீபமா நான் ரசித்து படிக்கும் கதை மார்கழி முத்தங்கள். அதான் அதோட ஆத்தர் பேரை சுட்டுட்டேன். இதுக்காக எல்லாம் என்கிட்ட ராயல்டி கேட்க கூடாது பவி sis. கேட்டாலும் கொடுக்க என்கிட்ட ஒண்ணுமில்ல அது வேற விஷயம்... கதையில சொன்ன மாதிரி நீங்க ஒரு sadist writer எல்லாம் இல்ல. no offences pavi sis நவிரனுக்கும் எனக்கும் எந்தச் சம்மந்தமும் இல்ல...???
"சில சமயம் வாழ்க்கை இப்படித்தான். பெரிதினும் பெரிது கேள் என்றொரு வாசகம் உண்டு. எல்லோரும் பெரியதையே கேட்கும் பட்சத்தில் சிறியதெல்லாம் ஏன் படைக்கப்பட வேண்டும் என்ற கேள்வி எழலாம். அது நியாயமான கேள்வியும் கூட. ஆனால் இங்கே நிரந்தர பெரியது நிரந்தர சிறியது என்று எதுவுமில்லையே. பெரியது சிறியது என்பதை அந்தந்த காலகட்டத்தின் தேவை பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது. பசியில் இருப்பவனுக்கு கண்ணில் படும் உணவு யாவும் பெரியது தான். வயிறு புடைக்க உண்டவனுக்கு தேவைப்படும் வெற்றிலை சீவல் உருவத்தில் சிறிது என்றாலும் அதுகாறும் அவன் உண்ட உணவின் நிறைவை அந்த வெற்றிலையால் மட்டுமே கொடுக்கமுடியும். அந்தந்த நேரத்து நியாயங்கள் தான் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது. கிருஷ்ணப்ரியாவின் முடிவு உங்களுக்குப் பிடிக்காவிட்டாலும் ஏன் ஏற்றுக்கொள்ள முடியாமல் போனாலும் அதை ஒன்றும் சொல்ல முடியாது. விமர்சிப்பவர்களால் வாழமுடியாது. வாழ்பவர்களால் விமர்சிக்க முடியாது. எல்லாவற்றுக்கும் விடை எதிர்பார்க்க கூடாது. சில கேள்விகளை கேள்விகளாகவே விட்டுவிட வேண்டும். அதற்கு விடை தேட முயன்றால் நம் வாழ்க்கை கேள்விக்குறியாக மாறி விடவும் கூடும். நிஷாந்த் இழைத்த தவறுக்கு கிருஷ்ணா தன் தவறின் மூலமாகவே பதிலளித்து விட்டாள். ஆனால் கிருஷ்ணாவின் தவறுக்கான முடிவு? வாய்ப்பிருந்தால் வேறொரு கதையில் பதில் அளிக்கிறேன்...
ப்ரியங்களுடன்,
பவித்ரா குமாரசாமி"
என்று பவித்ரா சொன்னதை எல்லாம் தட்டச்சு செய்தான் நவிரன். தான் சொல்லும் போதே அதில் நவிரனுக்கு உடன்பாடில்லை என்று பவித்ராவும் புரிந்து கொண்டார் தான். ஒவ்வொரு முறை பவித்ராவைத் திரும்பி திரும்பி பார்த்தவன் இறுதி வார்த்தையைத் தட்டச்சு செய்து முடித்ததும்,
"ஏன் இப்படிப் பண்ண? உனக்கு கொஞ்சம் கூட கிருஷ்ணா மேல இரக்கமே இல்லையா?" என்று கேட்டவனின் முகத்தில் அப்பட்டமான எரிச்சல் குடிகொண்டது.
"அதில்லை நவி..."
"நீ நிறுத்து. எனக்கு உன் எக்ஸ்ப்ளனேஷன் வேணாம். அதெப்படி ஒருத்தங்க வாழ்க்கை இப்படி ஆரம்பத்துல இருந்து இறுதி வரை போராட்டமாவே இருக்கும். அப்படி வாழ்க்கை ஃபுல்லா போராட்டமாவே இருந்தா எப்படி மேற்கொண்டு வாழணும்னு ஆசை வரும். ஏதோ ஒரு பாயிண்ட்ல போடா இந்த வாழ்க்கையும் வேணாம் ஒரு டேஷும் வேணாம்னு ஏதாவது தப்பான முடிவைத் தான் எடுக்க தூண்டும். ஏன் அந்த நிஷாந்துக்கு தண்டனையே கிடைக்கல? தப்பு பண்ணவன் இனிமேல் ஜாலியா சுத்தப் போறான். ஆனா தவறிழைக்கப்பட்டவள் வாழ்க்கை முழுக்க அதையே நெனச்சு வாழணுமில்ல? திஸ் இஸ் சோ ரிடிக்குலஸ். நீ வேணுனா பாரு இதுக்கெல்லாம் சேர்த்து நீ நல்லா வாங்கிக் கட்டிக்கப்போற. அது உன் தலை விதி..." என்று இன்னமும் தன்னுடைய மனமாறாமல் புழுங்கிக்கொண்டு இருந்தான் நவிரன்.
அதுவரை நிசப்தமாக இருந்த அறைக்குள் நுழைந்தார் குமாரசாமி. அவர் கையிலிருந்த நற்றிணை நவிரனைக் கண்டதும் துள்ளி குதிக்க அவனுக்கு முன்பாக எழுந்த பவித்ரா அவளைத் தூக்கிக் கொண்டார்.
"அப்பா ப்பா..." என்று மழலையில் மொழிந்தாள் பதினான்கு மாத நற்றிணை.
இருவரும் ஆளுக்கு ஒரு புறமாக முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு அமர்ந்திருப்பதைக் கண்ட குமாரசாமி,
"என்ன இது புயலுக்கு முன் அமைதியா இல்ல புயலுக்குப் பின் அமைதியா?" என்று நக்கலாக வினவ அதற்குச் சிரித்த பவித்ரா கண்ஜாடையில் நவிரனைக் காட்ட,
"என்னாச்சு நவி?" என்று அவனருகில் அமர்ந்தார்.
"நீங்களே இந்த நியாயம் கேளுங்க ப்பா. கிருஷ்ணாவை காதலிச்சு கல்யாணம் செஞ்சுக்கறதா ஏமாத்திட்டான் நிஷாந்த். ஆனா அவனுக்கு எந்த ஒரு தண்டனையும் கொடுக்காம கிருஷ்ணாவையே பழிவாங்கிட்டாங்க உங்க பொண்டாட்டி..."
"டேய் இது ஒரு கதை. ஜஸ்ட் எ நாவல். இதுக்கா இப்படி ஓவர் ரியாக்ட் செய்யுற?"
"நாவலா இருந்தா நியாயமா இருக்கக்கூடாதுனு ஏதாவது சட்டமா என்ன? எவ்வளவு அழகான பொண்ணு தெரியுமா கிருஷ்ணா? ஸச் எ போல்ட் பியூட்டிபுல் கேர்ள். கதை முழுக்க அவளை அவ்வளவு ப்ரொஃரஸிவா காட்டிட்டு கடைசியில இப்படி ஏமாந்து போறமாதிரி முடிச்சிட்டாங்க. சரி குறைந்த பட்சம் அவ ஜெயிச்ச மாதிரியா கூட முடிச்சிருக்கலாம்..." என்னும் போது பவித்ரா தன்னையும் மீறிச் சிரிக்கவும்,
"சிரிக்காத பவித்ரா. எனக்கு எரிச்சல் எரிச்சலா வருது. போ உன் பேச்சு டூ" என்றவன் எழுந்து அவர் கையிலிருந்த நற்றிணையை வாங்கி,
"பாட்டிகூட சேராதடா தங்கம். இவங்க சரியான சேடிஸ்ட் ரைட்டர். நீ வா நாம போய் விளையாடலாம்..." என்று நவிரன் வெளியேற,
"நவி, நில்லு. எல்லாம் பேக் பண்ணிட்டியா? அண்ட் ஆர் யூ சூர்?" என்றார் குமாரசாமி.
முழு எபிசோட் சீக்கிரம் போடுறேன். ஆனால் அது கொஞ்சம் லேட்டா தான் வரும் மக்களே!
இது தான் முதல் எபிசோட். டைட்டில் மற்றும் கதை பற்றி விமர்சனங்கள் வரவேற்கப்படும்.
என்னது புது கதையா அப்படினு யாரும் ஷாக் ஆக வேண்டாம். இந்தத் தளத்திலே ரெண்டு கதைங்க pending இருக்கு தான்.(மஞ்சள் வெயில் மாலையிலே மற்றும் கீர்த்தனை) இது ரெண்டும் போக இன்னும் ரெண்டு கதை ப்ரதிலிபிள வேற pending இருக்கு. இருந்தாலும் இந்தக் கதை சீக்கிரம் வரும். இதுக்குப் பிறகு இன்னொரு குட்டி கதை வரும்.
அப்பறோம் எல்லா pending stories வரும். கதை படி ஒரு பிரபல பெண் நாவல் எழுத்தாளருக்கு ஒரு பேர் தேவை பட்டது என்னவோ உண்மை. மிகச் சமீபமா நான் ரசித்து படிக்கும் கதை மார்கழி முத்தங்கள். அதான் அதோட ஆத்தர் பேரை சுட்டுட்டேன். இதுக்காக எல்லாம் என்கிட்ட ராயல்டி கேட்க கூடாது பவி sis. கேட்டாலும் கொடுக்க என்கிட்ட ஒண்ணுமில்ல அது வேற விஷயம்... கதையில சொன்ன மாதிரி நீங்க ஒரு sadist writer எல்லாம் இல்ல. no offences pavi sis நவிரனுக்கும் எனக்கும் எந்தச் சம்மந்தமும் இல்ல...???