வணக்கம் நண்பர்களே,
முதல் முறை நான் கலந்துக்கிட்ட போட்டி இது தான். ஒருவழியா கதையை சொன்ன டைம்க்கு முடிச்சிட்டேன். போன வாரம் கான்டஸ்ட் டேட் எக்ஸ்டென்ட் பண்ணிட்டாங்கன்னு கேட்டதுமே "அடடா, இன்னும் ரெண்டு மூணு எபி தான் இருக்கு சீக்கிரம் முடிச்சிடுவோன்னு" நினைச்சு கொஞ்சம் சந்தோஷப்பட்டேன், அப்போ ஆரம்பிச்சது என் கஷ்ட்டகாலம், கதை எழுத சுத்தமா டைம் கிடைக்கல.... முட்டி மோதி கிடைச்ச கேப்ல கதை எழுதும்போது இதுதான் என் மண்டைக்குள்ள ஓடுச்சு

இந்த மாதிரி தான், குறுக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாதுன்னு கிடைக்குற நேரத்துல எழுதி, எப்படியோ முடிச்சிட்டேன்

.
போட்டியில ஜெயிப்போமா தோப்போமான்னு தெரியாது ஆனா முதல போட்டியில கலந்துக்கனும்ல அந்த மைன்ட் செட்ல தான் முடியும்ன்னு நினைச்சு ஆரம்பிச்ச கதையை நினைச்ச மாதிரியே முடிச்சிட்டேன், உண்மையிலேயே மனசுக்கு ரொம்ப சந்தோஷமாயிருக்கு
இப்போ என்னோட குறிக்கோள் போட்டியில் ஜெயிக்கனும் அது வாசகர்கள் கைகளில் தான் இருக்கு.... கப்பு முக்கியம் பிகிலு
கதையை எப்படி அப்லோட் பண்ணறதுன்னு தெரியாம இருந்த எனக்கு, பொறுமையா எல்லாத்தையும் சொல்லிக்கொடுத்த மல்லிகா சிஸ்டர்க்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்

.
குறிப்பா, கதையின் ஆரம்பத்திலிருந்து இறுதி வரை படிச்சு கமெண்ட் அன்ட் லைக் பண்ண நண்பர்களுக்கும், இனி படித்துவிட்டு கமெண்ட் செய்யவிருக்கும் நண்பர்களுக்கும் என் அன்பும் பண்பும் பாசமும் கலந்த மனமார்ந்த நன்றிகள்


.
என்றும் உங்கள் அன்பு தோழி,
பவித்ரா புருஷோத்தமன்
