Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Pani Thirai - 6

Advertisement

Krithika Pradeep

Member
Member
மது-விடம் ரிஷியின் அம்மா பத்திரிகை வைக்கும் போதே கல்யாணத்துக்கு ரெண்டு நாட்கள் முன்னமே வர வேண்டும் என்று சொல்லிருந்தார்கள் ஆனால் மது-விற்கு அங்கே போகவே மனது இல்லை .

அவளுக்கு அங்கே எல்லோரையும் பிடிக்கும் யதுனந்தன் தவிர . சொல்லப்போனால் மது -விற்கு எந்த பிரச்சனை-யும் இல்லை ஆனால் மதுவை கண்டால் யதுவிற்கு சுத்தமாக பிடிக்காது.

சின்ன வயதில் இருந்தே மது மற்றும் ரிஷி இருவரும் , மது வீட்டில் விளையாடுவார்கள் இல்லை ரிஷி வீட்டில் . ஆனால் இவர்கள் விளையாடும் போது யது எப்போதும் வந்து சத்தம் போடாதீர்கள் என்று கத்தி விட்டு செல்வான். இவர்களும் அதை பெரிதாக எடுத்து மாட்டார்கள் .

இதே போல் அவர்கள் எய்த் ஸ்டாண்டர்ட் படிக்கும் போது மது ரிஷி வீட்டிற்கு படிக்க சென்றிருந்தாள் .

அவர்கள் வீட்டில் காலிங் பெல் அடிக்கவும் ரிஷியின் அம்மா வந்தார்கள் , வா மது உட்காரு கிட்சன்-ல கொஞ்சம் வேலை இருக்கு முடுச்சுட்டு வரேன் .

ஆண்ட்டி என்ன டிஷ் செஞ்சிட்டு இருக்கீங்க , நீ வருவாய் என்று ரிஷி சொன்னான் மது அதான் உங்க ரெண்டு பேர்த்துக்கும் பிடித்த பாதாம் ஹல்வா செஞ்சிட்டு இருக்கேன் .
சூப்பர் ஆண்ட்டி நீங்க always பெஸ்ட் , ஆமா ரிஷி எங்கே காணோம் .

ரிஷி இப்ப தான் அவன் அப்பா-வுடன் ஐஸ்கிரீம் வாங்க சென்றான் , நீ வந்தா வெயிட் பண்ண சொன்னான் டா . பூஸ்ட் கலக்குறேன் குடுச்சுட்டு ரிஷி ரூம்-ல படிச்சிட்டு இரு.

பூஸ்ட் வேணாம் ஆண்ட்டி இப்போ தான் வீட்ல குடிச்சிட்டு வரேன் , நான் ரிஷி ரூம்-ல வெயிட் பண்றேன் என்று சென்று விட்டாள்.

மது-மா யது பிரிண்ட்ஸ் கூட வந்திருக்காங்க என்று வேதநாயகி அம்மா சொன்னது காற்றோடு போய் விட்டது , ஏன் என்றால் அதை கேட்க மது அந்த இடத்தில் இல்லை . அவர் சொல்வதை ஒரு நிமிடம் கேட்டறிந்தால் பாவம் மனது கஷ்ட பட்டிருக்க மாட்டாள் .
இவர்கள் எய்த் படிக்கும் பொது யது காலேஜ் முதலாம் ஆண்டு படித்து கொண்டு இருந்தான் , அவர்கள் காலேஜ்-ல் culturals டே வரவும் , அவன் நண்பர்கள் உடன் நடனம் practice பண்ணி கொண்டு இருந்தான் .
மது அப்போது கொஞ்சம் உடம்போடு , அதிக வளர்தியாக இருப்பாள் , பார்த்தால் +11 பொண்ணு போல் இருப்பாள் .ஆனால் அவளுக்கு டான்ஸ் என்றால் மிகவும் இஷ்டம் .

பாட்டு சத்தம் கேட்கவும் balcony போய் பார்த்தாள் , அங்கே எல்லாரும் டான்ஸ் ஆடி கொண்டு இருக்க , இவளும் எதையும் யோசிக்காமல் நின்று பார்க்க ஆரம்பித்துவிட்டாள் .

யது-வின் நண்பன் கீழே தண்ணி எடுக்க சென்றவன் , திரும்ப வரும்போது இவள் பார்ப்பதை பார்த்து விட்டு , விளையாட்டு போல யதுவிடம் கேக்க ஆரம்பித்து விட்டான் , என்னடா அந்த பொண்ணு இங்கயே பாக்குது , என்ன நடக்குது .

அப்போது தான் யது மற்றும் அவன் நண்பர்கள் மது அங்கே இருப்பதையே பார்த்தார்கள் .

அப்பொழுதும் அவன் நண்பன் அமைதியாக இல்லாமல் , வீட்லயே ஒரு பொண்ணு கரெக்ட் பண்ணி வச்சிருக்கே , அதான் காலேஜ்-ல எந்த பொண்ணு கிட்ட வந்தாலும் மூஞ்சிய காமிக்கற என்று விளையாட்டு போல கேட்க .

யது-கு இங்கே கோவம் ஏற ஆரம்பித்து விட்டது . டேய் கொஞ்சம் நிறுத்து டா.

ஏய் இங்கே வா என்று மது-வை கூப்பிட்டான் . மது அவன் நண்பன் பேச ஆரம்பிக்கவுமே பயந்துவிட்டாள்.
யது கூப்பிடவும் பயந்து கொண்டே வந்து நின்றாள் .

இப்போ எதுக்கு இங்கே வந்த என்று யது கேட்க .

பாட்டு சத்தம் கேட்டுச்சு அதான் வந்து பார்த்தேன் , வேற ஒன்னும் இல்லை என்றாள் .

ஆனால் அவன் நண்பன் சொன்னது உறுத்த , ஏன்டா போயும் போயும் உனக்கு என்ன வெச்சு ஓட்ட வேற ஆளு கிடைக்கலையா , குண்டு பூசணிக்காய் மாதிரி இருக்கா , இவள போய் என்னோட சேர்த்து வெச்சு பேசற . இவ ஸ்டேட்டஸ் என்ன என்னோட ஸ்டேட்டஸ் என்ன . ஏணி வெச்சா கூட எட்டாது . கூடவே இவ இங்கே வரதே சாப்பிட்றதுக்கு தான் , எப்ப வந்தாலும் வீட்ல பாதி ஐட்டம் காலி பன்னிருவா , பாதாம் ஹல்வா பார்த்தா அவ்ளோ தான் , அவங்க வீட்ல அவ்ளோ costly-ஹ வாங்கி குடுக்க முடியாதுலே , சோ இங்கே வந்து ஒரு கட்டு காட்டுவா , இவ எனக்கு மேட்ச்-ஹ , போடா போ என்று சொல்ல , மது பேய் அறைந்தது போல ஆகி விட்டால் , கண்ணீர் பாட்டுக்கு நிற்காமல் வர ஆரம்பித்து விட்டது , அவன் நண்பர்களுக்கே ஒரு மாதிரி தர்மசங்கடம் ஆகி விட்டது , அவன் கிளோஸ் friend விஷால் தான் திட்ட ஆரம்பித்து விட்டான் .

உனக்கு பிடிக்கலையா அதை டீசென்ட்-ஹ சொல்லணும் யது , மத்தவங்க மனசு கஷ்ட படற மாதிரி சொல்ல கூடாது , சின்ன பொண்ணு ஏதோ ஆர்வத்துல வந்து பாத்திருக்கா , இவனுக்கு தான் அறிவு இல்லை ஒரு சின்ன பொண்ணுகூட உன்ன compare பண்ணி பேசிட்டான் , அதுக்காக நீ அந்த பொண்ணு பத்தி இவ்ளோ பேசியிருக்க கூடாது . நீ போ மா என்று யது விடம் ஆரம்பித்து மது-விடம் சொல்ல .

அப்போது தான் யது மது-வின் முகத்தையே பார்த்தான் , அவள் முகத்தை பார்த்ததுமே ,தான் பேசியது எவ்ளோ தவறு என்று புரிந்து விட்டது .

ஆனால் அவனின் ஈகோ அவனை சாரி கேட்க விட வில்லை , விஷால் சொன்னதும் மது ஓடி போய் விட்டாள் , அவளால் அழுகையை கட்டு படுத்த முடியவில்லை , அவளுக்கு தெரியும் யது-கு தன்னை பிடிக்காது என்று ஆனால் இவ்ளோ கேவலமாக நினைப்பான் என்று நினைக்கவில்லை .

உடம்பு சரி-இல்லை என்று அப்போதே கிளம்பி விட்டால் , அதற்கு பின் இப்பொது வரைக்கும் ரிஷி வீட்டுக்கு போக மாட்டாள் , ரிஷி தான் இது வரை மது வீட்டுக்கு வருவான் .
மது நடுத்தர வர்கம் என்றாலும் , அவள் அப்பா அம்மா அவள் கேட்பதை வாங்கி குடுத்து விடுவார்கள் , யது சொன்ன அளவுக்கு மோசம் எல்லாம் இல்லை . அது யதுக்கும் நன்றாக தெரியும் . அவளை கஷ்டப்படுத்த வேண்டும் என்று தான் சொன்னான் .

எதற்கு பிடிக்காத இடத்துக்கு போக வேண்டும் என்று அவளும் போவதை நிறுத்தி கொண்டாள் .

ரிஷி மற்றும் அவன் அம்மா-விற்கு ஏதோ அன்று நடந்திருக்கிறது என்று தெரியும் ஆனால் என்ன என்று தெரியாது .

இப்பொழுது போகாமல் இருக்கவும் முடியாது , கல்யாணத்துக்கு முந்தின நாள் இரவு மெஹெந்தி function வைத்திருக்கிறார்கள் , அப்போது தம்பி உடன் போய் விட்டு திரும்பி விடலாம் என்று நினைத்துக்கொண்டாள் .
 
அடப்பாவி யதுநந்தன்
நீ இவ்வளவு பீத்தையான பையனா?
வேணுமுன்னே மதுவிடம் தப்பாய் பேசியிருக்கிறானே
பதினஞ்சு வயசு கூட இல்லாத சின்ன பொண்ணு மதுவிடம் எப்படி பேசணுமுன்னு உனக்கு தெரியாதா?
 
Top