என்னவள்_17
அடுத்த நாள் காலை விடியும் போதே தலைவலியோடு கண் விழித்தான் மோகன்…எழுந்து சுற்றிலும் பார்க்க… அது அவன் வழக்கமாக தூங்கும் அறை அது அல்ல என்பது பார்த்ததும் புரிந்தது.கீழே இருக்கும் இன்னோரு பெட்ரூம் அது…உறவினர்கள் தங்க கட்டி இருந்தது…தன்னை ஒரு முறை குனிந்து பார்த்தான் இடுப்பில் கட்டிய லூங்கி கூடவே மாற்றி இருந்த சட்டை நேற்று நடந்ததை அவனுக்கு ஞாபகப்படுத்தியது…சற்று நேரம் தலையை பிடித்தபடி இருந்தவன் .’இப்போது இவங்கள வேற சமாளிக்கணுமா மோகன் லூசு மாதிரி வேலை செஞ்சு தலைவலியையும் சேர்த்து வாங்கி இருக்கற என மனதிற்குள் நினைத்தவன்’, எழுந்து மாடியில் இருந்த தன்னுடைய அறையை நோக்கி நடந்து சென்றான்.
நேரம் பார்க்க ஒன்பது மணியை நெருங்கி இருந்தது. வேகமாக குளித்து கீழே இறங்கி வந்தான். எதுவுமே நடக்காதது போல…”அம்மா சாப்பிட எடுத்து வைங்க என சத்தம் இட.”..அந்த சத்தத்திற்கு வேகமாக வந்தவர்…”ஒத்த பிள்ளையை பெத்தாலும் ராஜா மாதிரி நல்லவனை பெத்து இருக்கறேன்னு அவ்வளவு தைரியமாக நெஞ்சை நிமிர்த்தி நடந்தேன் எல்லாம் போச்சு…ஏண்டா உன் புத்தி இப்படி போகுது.”.கொஞ்சம் அழுகை கலந்தே ஒலித்தது அவரின் குரல்.
“ஒ..தப்பு என் பேரில் தான்…நான் தான் பண்ணினேன் அப்படி தானே மா…எப்படி மா… அது போகட்டும் விடுங்க உங்களை குறை சொல்லி நான் என்ன செய்ய…இன்றைக்கு நேற்றா உங்களை பார்க்கிறேன் அப்பா என்ன சொன்னாலும் நீங்கள் சொல்லற வார்த்தை சரி,சரி அது மட்டும் தான… எனக்காக ஒரு வார்த்தை கூட அப்பா கிட்ட கேட்கணும்ன்னு தோணலைல்ல..”
“டேய்…பேச்சை மாத்தாத மோகன் நேற்று நைட் ஏன் இப்படி வந்த…அதுக்கு பதிலை சொல்லு…”சாப்பிட எடுத்து வைத்தபடி கேட்க…
“நீ ஏண்டி அவன்கிட்ட கேட்கற…தெரியாமல் செய்ய அவன் என்ன குழந்தையா…அவன் ஊர்க்காரங்க முன்னாடி என்ன அசிங்கபடுத்தனும்ன்னு முடிவு பண்ணட்டான். குடிகாரப்பயலோட அப்பான்னு பேர் வாங்க வேண்டாமா…பிறந்ததில் இருந்து பூரிச்சு போய் இருந்தோம்ல…அதுக்கு தான் இப்படி செஞ்சு அசிங்கப்படுத்தறான். சொல்லுடா இந்த பழக்கம் எத்தனை நாளா இருக்கு.”
இவர் சத்தமாக கேட்டதிற்கு எதுவும் பதில் பேசவில்லை.” பாரு ஏதாவது வாயை திறந்து பதில் சொல்லறானா நீயே பாரு…இப்ப சொல்லறேன் கேட்டுக்கோ…நான் பார்த்த பொண்ணுக்கும் உனக்கும் தான் கல்யாணம் அதில் எந்த மாற்றமும் கிடையாது. இன்னும் ரெண்டு நாள்ல கல்யாணத்துக்கு டேட் சொல்லறேன்னு சொல்லி இருக்கறாங்க…மறுபடியும் இதை மாதிரி பண்ணிட்டு வந்தேன்னா உன்னை வீட்டிற்குள் விட மாட்டேன். இந்த கல்யாணத்தை மட்டும் அல்ல உன்னையும் தலை முழிகிடுவேன்.”
[the_ad id=”6605″]
“ஏங்க நமக்கு இருக்கிறது ஒரே பையன் ஏன் இப்படி பேசறிங்க…”
“மானம் போகுதுடி அங்கே ரோட்டுக்கு போனா அத்தனை பேரும் விசாரிக்கறாங்க…ஏன் உன்னோட பையன் இந்த கடைக்கு வந்தான் நீ கண்டிக்க மாட்டியா…இது நல்லாவா இருக்கு…உனக்கு இருக்கற நல்ல பேரை உன்னோட பையன் கெடுத்திடுவான் போல இருக்கிறதுன்னு…என்னோட தலைமுறைக்கே இந்த பழக்கம் கிடையாது. சீ…சீ…அசிங்கம் விழுந்தது கூட தெரியாத அளவுக்கு சுயநினைவு இல்லாம…”
“எனக்கு போதும் மா நான் கிளம்பறேன்…”
கோபமாக சாப்பாட்டு தட்டில் இருந்து எழுந்தவன் வேகமாக வெளியேறினான்.
“டேய் கொஞ்சமாவது சாப்பிட்டுவிட்டு போடா “என்ற இவரது சத்தத்தை தொடர்ந்து “விடு சாப்பிடாட்டி போகட்டும் ஒரு நேரம் சாப்பிடாட்டி யாரும் செத்திட மாட்டாங்க..”இவனது தந்தையின் குரலும் இவனை தொடர்ந்தது.வாசலுக்கு வந்து பார்க்க வண்டி நேற்று எப்படி விழுந்து இருந்ததோ அப்படியே விழுந்து கிடந்தது வண்டியை நிமிர்த்தியவன் நேராக வண்டியை செலுத்தினான். மணியை பார்க்க இன்னும் ஒன்பதரை கூட ஆகவில்லை…பத்தரை மணிக்கு இவனது சீட்டில் அமர்ந்தால் போதும்…
மெதுவாக வண்டியை செலுத்தியவனின் பார்வை எதிரில் தெரிந்த வாய்க்காலில் நிலைத்தது எதையும் யோசிக்காமல் வண்டியை நிறுத்தியவன் அதன் திண்டில் ஏறி அமர்ந்தான். நினைவுகள் செல்வியை சுற்றி வலம் வந்தது.
இவனை பார்ப்பதற்காகவே காலையிலேயே எதையாவது எடுத்து கொண்டு வரும் செல்வி…இவனிடம் ஏதாவது பேச்சு கொடுக்கும் செல்வி…இவனது ஒவ்வொரு அசைவையும் கண்களால் தொடரும் செல்வி…செல்வி..என சுற்றிலும் அவள் மட்டுமே நிறைந்து இருக்க…கண்களை இருக்க முடியதபடி அமர்ந்து இருந்தான்.
“இதே வாய்காலில் தண்ணீர் முழுக்க சென்று கொண்டு இருக்க… ஒரு நாள் ஏன் மோகன் மாமா உனக்கு நல்லா நீச்சல் தெரியுமாம் அப்படியா….”
“அப்படிதான் ஃப்ரெண்டுங்க சொல்லறாங்க…மோகன் இவளுக்கு பதில் சொல்லியபடி அமர்ந்து இருக்கு…சற்றும் யோசிக்காமல் இவனை சட்டென தள்ளி விட்டுவிட்டு மாமா…நிந்தி காட்டு மாமா…நான் பார்த்ததே இல்லை என சத்தமாக கூறி விட்டு அந்த இடத்தை விட்டு ஓடி இருந்தாள்”.
பழையதை நினைத்தவன் அந்த இடத்தை விட்டு எழுந்து நிற்க…அருகிலேயே சத்தம் கேட்டது…”மாப்பிள்ளை என்ன காலையிலேயே வாய்க்கால் பக்கத்தில் உட்கார்ந்து இருக்கற… “அதே ஊரில் இருக்கின்ற அவனது நண்பன் இவனை பார்க்கவும் அவனது வண்டியை நிறுத்தி விட்டு இவனிடம் கேள்வி கேட்டு இருந்தான்.
“சும்மாதாண்டா வேலைக்கு போக நேரம் இருக்கு அதுதான் இங்கே வந்து உட்கார்ந்து இருக்கிறேன். “
“கேள்விபட்டேன்டா உனக்கு பெரிய இடத்தில் பொண்ணு பார்த்து இருக்கறாங்களாம்…வாழ்த்துக்கள் டா…ஃபோட்டோஸ் பார்த்தேன் பொண்ணு நல்லா இருக்குது…”
“ம்…அதற்கு மேல் பேச பிடிக்காமல் சரிடா நான் கிளம்பறேன் வேலைக்கு நேரம் ஆச்சு என்றபடி புறப்பட்டு இருந்தான். போக போகவே என்ன செய்வது, இந்த திருமணத்தை எப்படி தடுத்து நிறுத்துவது என்ற எண்ணம் மட்டும் தான். ஆனால் அங்கே அவனது தந்தை தியாகு…இவன் புறப்பட்ட சிறிது நேரத்தில் எல்லாம் வேகமாக…நல்ல நாள் பார்த்து திருமணபத்திரிக்கை வாங்க என ஜோசியரை பார்க்க ஜோசியரின் வீட்டிற்கு புறப்பட்டு சென்று இருந்தார் .
*****************************************************
இரண்டு நாட்கள் முடிந்து இருக்க…அன்று காலையில் தான் திவ்யாவை அழைத்து செல்ல டெல்லியில் இருந்து நேரடியாக வந்து இருந்தான் சிவா…திவ்யா, சக்தி ,மாமனார், மாமியார் என்ன அனைவருக்கும் புதிய உடை வாங்கி வந்து இருந்தான் டெல்லியில் இருந்து…
“எதுக்கு மாமா இப்ப புது டிரஸ் எல்லாம் வாங்கி வந்து இருக்கறிங்க.. அக்காவுக்கும் பாப்பாவுக்கு மட்டும் வாங்கினா பத்தாதா..”
“சக்தி இங்கே உங்களுக்கு மட்டும் வாங்கலை அம்மா அப்பா எல்லோருக்கும் தான் வாங்கி இருக்கிறேன். தினமுமா டெல்லி வரைக்கும் போறோம்…ஞாபகமாக இருக்க வாங்கிட்டு வர்றது தான். அங்கிருக்கின்ற ஸ்பெஷல் ஸ்வீட்ஸ் என அனைத்தும் கொடுத்தவன் மாலை புறப்படுவதாக சொல்லி இருந்தான்.”
மாலை நான்கு மணியை நெருங்கிக்கொண்டு இருக்க…வரவேற்பு ஹாலில் அமர்த்தபடி அபிநயாவோடு விளையாடிக் கொண்டு இருந்தான் சிவா…அப்படியே உள் அறையில் புறப்பட்டு கொண்டு இருந்த திவ்யாவை பார்த்து “திவ்யா நேரம் ஆகுமா நான் ரெடியாகி வந்து ஒரு மணி நேரம் ஆச்சு சீக்கிரம் புறப்படு…வீட்டுக்கு புறப்படலாம் இப்போது புறப்பட்டால் தான் நைட்டிற்குள் வீட்டுக்கு போக முடியும்.”
[the_ad id=”6605″]
“மாமா எத்தனை நாள் இருந்தாலும் பொண்ணுங்களுக்கு அம்மா வீடு ஸ்பெஷல் தான் பொறுமையாக தான் கிளம்புவோம் என்றபடி ஃகாபியை கையில் எடுத்து வந்தாள் சக்தி .”
“என்ன சக்தி பார்த்து இருபது நாள் இருக்குமா…கல்யாண பொண்ணு கலையாக உடம்பு போட்டு இருப்பேன்னு நினைச்சிட்டு வந்தா நீ முன்னாடி விடவும் உடம்பை கம்மி பண்ணி வச்சி இருக்கறே…”
“நானும் அதைதான் சொல்லிட்டு இருக்கிறேன். ஏன் சக்தி கல்யாணம்னா பயப்படறையா என்ன பாரு நான் நல்லா தானே இருக்கிறேன் திவ்யா கேட்டபடியே தன்னுடைய துணி ஃபேக்,இரண்டு கட்டப்பை நிறைய பொருட்கள் என்ன எடுத்து வர…”
“அதுதானே சக்தி கல்யாணத்தை பற்றி கட்டிக்கப்போற மாப்பிள்ளை தானே பயப்படணும் நீ ஏன் பயப்படறே..சிவா கேட்டபடி கொண்டு வந்த ஃகாபியை குடித்து கொண்டு இருந்தான்.”
“உங்கள் மாமா காமெடி பண்ணிட்டாங்க சிரிச்சிடு சக்தி என்றபடி அருகில் வர…”
“ஏய் என்ன திவ்யா வரும் போது ஓரு ஃபேக் தானே தூக்கிட்டு வந்தே இதென்ன இன்னும் ரெண்டு குட்டி போட்டு இருக்கு…”
“அம்மாவோட வேலை இதெல்லாம்…
எனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை எதா இருந்தாலும் அம்மா கிட்ட கேளுங்கள் இதெல்லாம் வேண்டாம்ன்னு சொன்னதுக்கு செமையா டோஸ் வாங்கி இருக்கிறேன். “
“அப்படி என்ன தான் பேக் பண்ணி இருக்கறாங்க…”
“பெருசா எதுவும் இல்லை மாமா கொஞ்சம் காய்கறி…ஸ்வீட்ஸ் அவ்வளவு தான் சக்தி பேசியபடி அபியை கையில் வைத்திருக்க…சிவா திவ்யாவிடம் திரும்பியவன் என்ன திவ்யா காலையில் வந்தது நேரம் பாரு நாலு மணி ஆகப்போகிறது நாளைக்கு அங்கே நிறைய வேலை இருக்கு நீ லேட் பண்ணிட்டு இருக்கற…”
“அம்மா எங்க சக்தி அப்பாகிட்ட இவங்க வந்ததும் சொல்லிவிட்டேன்… அவங்க சந்தைக்கு போயிட்டு வர்றதுக்கு நைட் ஆகிடும்ன்னு சொல்லி இருக்கறாங்க…”திவ்யா சக்தியிடம் கேட்டாள்.
“அக்கா அம்மா உனக்கு பூ பறிச்சி எடுத்துவிட்டு வரேன்னு போய் இருக்கறாங்க வந்திடுவாங்க இருங்க போய் பார்த்துவிட்டு வரேன் என்றபடி குழந்தையோடு வெளியேறினாள். அபி குட்டி வாங்க போய் பாட்டியை பார்த்துவிட்டு வரலாம் என குழந்தையிடம் பேசியபடியே நகர்ந்து சென்றாள்.”
சிவா திவ்யாவை பார்த்தவன் “சக்தி முகத்தை பார்த்தா ஏன் திவ்யா ரொம்ப சந்தோஷமாக தெரியலை இந்த இடம் அவளுக்கு பிடிக்கவில்லையா…”
“அது…மாப்பிள்ளை முகத்தில் சிரிப்பே இல்லை எதுவும் பேசவும் இல்லை சக்தி கிட்ட… அதனால கொஞ்சம் அப்செட்…எனக்கு நீங்கள் கொஞ்சம் ஹெல்ப் பண்ணனும் மாப்பிள்ளையை பற்றி கொஞ்சம் விசாரித்து சொல்லணும்…அப்பா நல்லா விசாரித்து இருப்பாங்க தான்…ஆனாலும் என்னோட திருப்திக்காக…ஏன்னா சக்தி நிச்சயம் முடிஞ்சு அவங்க போனதும் சொன்னா…இன்றைக்கு தான் அன்றைக்கு மொபைலில் எடுத்த ஃபோட்டோஸ் எல்லாம் பார்த்தேன். பார்க்கும் போது தான் தெரிஞ்சது மாப்பிள்ளை எதையோ பறிகொடுத்த மாதிரி தெரியறாரு..”
“ஏன் திவ்யா ரொம்ப ஹேட்சம்மா ,சக்திக்கு பொருத்தமாக இல்லையா…அவளுக்கு அந்த பையன் பொருத்தம் இல்லைன்னு தோணுதா…”
“ச்சு…இப்ப அழகையெல்லாம் யார் பார்க்கறா…வரப்போகிற பெண்டாட்டியை நல்ல விதமாக பார்த்துக்கற பையன் தான் வேணும்…அப்புறம் பார்க்க சுமாராக இருந்தாலும் ஓகே தான். ஃபோட்டோவில பையனோட முகத்தில் மருந்துக்கு கூட சந்தோசம் தெரியவில்லை அது தான் யோசனையாக இருக்கு.”
“இவ்வளவுதானா நானும் என்னவோன்னு நினைச்சேன் அடுத்த வாரம் அந்த பக்கம் போகவேண்டிய வேலை இருக்கு…தெளிவாக விசாரிச்சிட்டு வரேன். சக்திக்கு ஏற்ற வரன் தானான்னு ஒகே வா..
அப்போது தனது தாயாரோடு சக்தி வீட்டிற்குள் நுழைந்தாள். அக்கா இந்தா பூவை தலையில் வச்சிக்கோ…என்றபடி நெருக்கமாக கட்டிய மல்லிகை சரத்தை இவளிடம் .நீட்டினாள்.”
“அபிக்குட்டி இல்லாமல் ஃபோர் அடிக்கப்போகுது…ஏன் மாமா அக்காவை இன்னும் பத்து நாளைக்கு இங்கே விடலாம்ல…”
“சரிதான் சக்தி…அக்காவை போன வாரம் தானன் அனுப்பி வச்சிங்க… இதோ மறுபடியும் ஒரு வாரம் இங்கே தங்கியாச்சு….போயிட்டு மறுபடியும் கல்யாணத்துக்கு, ஜவுளி எடுக்கன்னு அடிக்கடி வருவோமே…அத்தை புறப்படறோம் அத்தை என்றபடி இரண்டு பைகளை கையில் தூக்கியபடி சிவா நடக்க இன்னோரு ஃபேக்கை திவ்யா எடுத்து கொள்ள அபியை தூக்கியபடி இவர்களை வழி அனுப்ப சக்தியோடு அவளுடைய தாயாரும் கூடவே நடந்தார். “
“செல்ல செல்லவே திவ்யா சக்தியிடம் சிவாகிட்ட சொல்லி இருக்கிறேன் மாப்பிள்ளையை பற்றி விசாரிக்க…விசாரித்து சொல்லறேன்னு சொல்லி இருக்கறாங்க…வந்ததும் உனக்கு ஃகால் பண்ணறேன் நீ உன்னை குழப்பிக்காதே சக்தி…”
“ம்…சரிக்கா…”
“நல்லா சாப்பிடு காற்றில் உடைஞ்சு விழற மாதிரி இருக்கற அடுத்த தடவை பார்க்கும் போது கொஞ்சமாவது உடம்பு போட்டு இருக்கணும் சரியா…”
“அச்சோ அக்கா நான் நல்லாதானே சாப்பிடறேன். “
[the_ad id=”6605″]
“சக்தி குருவி கொறிக்கற மாதிரி கொறிக்காதே…வரவா…ஃபேக் ஒவ்வொன்றாய் டிக்கியில் வைத்தவன்…இவர்களை பார்க்க..திவ்யா சக்தியை அருகில் இழுத்தவள் கன்னத்தில் முத்தமிட்டு வரேன் சக்தி பார்த்துக்கோ…என புறப்பட்டாள்.”
வண்டியை எடுத்த சிறிது நேரத்தில் எல்லாம் வண்டியை ஒட்டியபடியே சிவா திவ்யாவிடம்…”என்ன முத்தம் எல்லாம் தங்கச்சிக்கு மட்டும்தானா எனக்கு எதுவும் கிடையாதா என கேட்க…”
“சிவா…வண்டியை ஒழுங்கா ஒட்டுங்க தேவை இல்லாமல் பேச கூடாது அபியை தட்டிக்கொடுத்தபடியே யோசனையோடு கூறினாள்…”
“என்ன திவ்யா இன்னும் வீட்டில் பேசினதையே யோசிக்கறையா…நல்ல இடமா இல்லாட்டி பத்திரிக்கை வாங்க இன்னும் ஒரு வாரத்தில் போகணும்ன்னு மாமா சொல்லி இருக்க மாட்டாங்க தானே…இல்லாத ஒரு விஷயத்தை பற்றி நிறைய யோசிக்கற…”
“அப்படி இருந்தா நல்லாதான் இருக்கும்.”
“அப்படியே தான் இருக்கும் சரியா கொஞ்சம் கலகலப்பா பேசேன் என்னவோ இப்படி முகத்தை வச்சிட்டு வர்றே எனக்கு கோபம் வர்றதே நிறைய நேரம் நீ சக்தி கிட்ட காட்டற இந்த அதிகப்படியான அக்கரை தான். இந்த அக்கரையால என்ன பண்ணறோம்ன்னு தெரியாமல் அதிகமாக நீ பயப்படற…”
“இருக்கலாம்ங்க…முதல் நாள் சொல்லும் போது தெரியவில்லை இப்போது யோசிச்சா பயம் வருது.”
“நடக்காத ஒன்றுக்கு பயம் தேவை இல்லை திவ்யா…நாம எல்லாம் எதுக்கு இருக்கிறோம். அப்படி எல்லாம் எதுவும் ஆக விடமாட்டோம் நல்லது மட்டும் தான் சக்திக்கு நடக்கும் என்றவனின் குரலில் அவ்வளவு நம்பிக்கை இருந்தது. “
இவர்களுடைய நம்பிக்கை பலிக்குமா…விதி சக்தியின் வாழ்க்கையை பந்தாட முடிவு செய்து இருக்கும் போது…
தொடரும்.