என்னவள்_29
அன்றும் வழக்கம்போல பிரபு சக்தி,ரேஷ்மா இருந்த செக்சனுக்கு வந்து இருந்தான். ஆண்டுவிழா முடிந்து பதினைந்து நாட்கள் முடிந்து இருந்தது. சக்தியின் கவிதை சத்தமில்லாமல் பிரபுவின் பிரோவில் யாருக்கும் தெரியாமல் தஞ்சம் அடைந்து இருந்தது ஆனால் இன்று வரையிலும் கேட்கும் தைரியம் மட்டும் அவனுக்கு வரவில்லை. நிமிர்ந்து முகம்பார்த்து பேசும் அவளிடம் கேட்க இவனுக்கு தான் தைரியம் வரவில்லையோ…ஆனால் சிறு சிறு உதவிகளை தயங்காமல் கேட்க பழகி இருந்தான்.
ஒரு வாரத்திற்கு முன்பு ரேஷ்மா, சக்தியிடம் உதவி கேட்க இரண்டு பேருமே தனக்கு தெரிந்ததை சொல்லி இருந்தார்கள்….பிரபுவின் தாயாயை இங்கே அழைத்து வர ஏற்கனவே முடிவு செய்திருக்க…வீடு தேடும் படலம் துவங்கி இருந்தான். பார்த்தது எதுவும் திருப்தி இல்லாமல் இருந்தது. ஒன்று வாடகை அதிகமாக இருந்தது…இல்லையென்றால் நிறைய கண்டிசன் போட்டார்கள் இவனுக்கு பிடித்து இருந்தால் அருகில் தங்கி இருப்பவர்கள் பிடிக்காமல் இருந்தது…கடைசியாக இவர்களிடம் வந்து நின்றான்.
“தெரிந்த இடத்தில் வீடு ஏதாவது காலி இருக்கான்னு கேட்டு சொல்ல முடியுமா என்று இருவரிடமும் கேட்க…கடைசியாக சக்தி தான் அவளுக்கு தெரிந்த உறவினர் வீடு காலியாக இருக்கிறது என்று இவனை அனுப்பி வைத்தாள்.”
“அவங்க தூரத்து சொந்தம் பெரியப்பா முறை வரும் வீடு காலியாக இருக்கு…போய் வேணும்னா பாருங்க என்று அட்ரஸ் கொடுத்து அனுப்பி வைத்தாள். இங்கே ஷோரூம்பில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தூரம் வரும் என்று சொல்ல…போய் பார்த்தவனுக்கும் வீடு பிடித்து இருந்தது.”
அதுவும் சக்தியின் பேர் சொல்லவும் உடனே எந்த கன்டிசனும் போடாமல் கொடுத்திருந்தார். இரண்டு நாட்கள் விடுமுறை எடுத்து வீடு ஷிப்ட் ஆகவும் இன்று தான் ஆபீஸ் வந்து இருந்தான்.
வந்ததுமே இங்கு தான் வந்திருந்தான்…ரேஷ்மா கூட… “என்னங்க காலையிலேயே இந்த பக்கம் காத்தடிக்குது…என்றபடி தனது வேலையை தொடற…”
“நன்றி சொல்ல வந்து இருக்கிறேன் நன்றி சக்தி வீடு அம்மாவுக்கு ரொம்ப பிடித்து இருக்கு…எல்லாமே செட் பண்ணி ஆச்சு….பக்கத்தில் இருக்கறவங்க பழக ரொம்ப நல்லமாதிரியா இருக்கறாங்க…நானும் இந்த மாதிரிஒரு அமைப்பை தான் எதிர் பார்த்தேன்.தேங்க்ஸ்…தேங்க்யூ வெரி மச்…”
[the_ad id=”6605″]
“ஸார் நியாயமா நீங்க டிரீட் வைக்கனும் வெறும் தேங்க்ஸ் சொன்னா எப்படி உங்கள் சிஸ்டருக்கு ஸ்கூல் கூட நாங்கதான் சொல்லி இருக்கிறோம் நல்ல ஸ்கூல் இந்த ஸ்கூல்ன்னு…”
“இவ்வளவு தானே கொடுத்திடலாங்க என்று பிரபு சொல்ல. .சக்தி பேசாமல் இரு ரேஷ்மா என்றவள் இவனிடம் திரும்பி அவ விளையாட்டுக்கு சொல்லறா ஸார்..அதெல்லாம் எதுவுமே வேண்டாம் ஒரு இடத்தில் வேலை செய்யறோம் இது கூட செய்யாட்டி எப்படி என்று முடித்துக்கொண்டாள்.”
நாட்கள் வேகமாக நகர்ந்ததுஎன்று தான் சொல்ல வேண்டும் பிரபு இப்போது முன்பு போல இல்லை நல்ல நிறத்தோடு சற்றே உடம்பும் வந்திருக்க…அன்று ரேஷ்மா சக்தியிடம்…
“சக்தி ஒரு விஷயம் கவனித்தாயா…”
“என்ன என்று சக்தி கேட்க”…” நம்ம பிரபு ஸார் இப்போது பயங்கர ஹேன்சமா மாறிட்டு வர்றாரு…உனக்கு வித்தியாசம் தெரியுதா…”
“வீட்டு சாப்பாட்டோட மகிமை ரேஷ்மா…அவங்க அம்மா இங்கே வந்த பிறகு தினமும் மதியசாப்பாடுக்கு வீட்டுக்கு ஒடிடறாரே…அதனால இருக்கும்…ஆனால் ரேஷ்மா எப்போது இருந்து ஸாரை சைட் அடிக்க ஆரம்பிச்ச…உன்னோட மாமா என்ன ஆனாரு…”
“சக்தி…நான் மட்டுமா சைட் அடிக்கறேன்…ஆபீஸ்ல எல்லோரும் தான் அடிக்கறாங்க… மற்றபடி கல்யாணம் பண்ணிக்க போறது என்னோட மாமனை தான்.இப்போ…நமக்கு பிடிச்சு சினிமா ஹிரோவை அந்தந்த சீசனுக்கு தகுந்த மாதிரி ரசிக்கறது இல்லையா…அது மாதிரி தான் இதுவும்…ரசிப்பு தன்னைமா இதை கொச்சை படுத்த கூடாது. இதே அவருக்கு கல்யாணம் ஆச்சுன்னு வச்சிக்கோயேன் அப்புறம் யாரு அவரை பார்க்க போறாங்க…எப்படி என்னோட கொள்கை…”
பிரபுவின் தாயார் இங்கே வந்து ஒரு வருடத்தை நெருங்கி இருந்தது…அதன் பிரதிபலிப்பு பிரபுவிடம் நன்றாக தெரிந்தது…இங்கே ரேஷ்மா மட்டும் அல்ல…கீழே பெண்கள் கூட அடிக்கடி இதை பற்றிய கமெண்ட்ஸ் வருவது உண்டு “செம போ…”என்றபடி சிரித்தபடி நகர்ந்தாள். வேகமாக நகர்ந்து கொண்டுஇருந்தது நாட்கள்…அன்றும் வழக்கம்போல பிரபு ஸ்டாக் கேட்க வந்தவன்..”இவர்களிடம் மறுபடியும் உதவி கேட்டான்.
“ரெண்டு பேரும் எனக்கு சின்ன உதவி பண்ணனும் பதினைந்து நாளுக்கு இங்கே இருக்கமாட்டேன். மும்பையில் இருக்கற ஆபீஸ்க்கு வரச்சொல்லி இருக்கறாங்க…”
“எதுக்கு ஸார் “என்று ரேஷ்மா கேட்க… “அங்கே நீயூவா வர்ற வண்டி சர்வீஸ் பற்றி ஒரு எக்போ மாதிரி போட்டு இருக்கறாங்க…சோ…தினமும் சேல்ஸ் லிஸ்ட்ட மெயில் பண்ணிடுங்க இங்கே வந்து வாங்க யாரும் வரமாட்டாங்க…மறந்திட வேண்டாம் நாளைக்கு காலையில் நான் புறப்படணும் என்று சொல்லி விட்டு புறப்பட்டு இருந்தான். “
இரண்டு நாட்கள் பெரிதாக தெரியவில்லை மூன்றாவது நாள் ரேஷ்மா ஆரம்பித்து விட்டாள்…”ஸார் இல்லாமல் ஃபோர் அடிக்குதுல்ல சக்தி..எதையோ மிஸ் பண்ணின பீல்ங்..”
அப்படியா என்றபடி நகர்ந்த சக்திக்கும் அப்படி தான் தோன்றியது. ஒரு நாள் கூட இவர்கள்இருக்கும் பகுதிக்கு வராமல் இருந்தது இல்லை. சில நேரம் கஸ்டமர்கள் ஏன் இத்தனை அதிகமாக பொருட்களை விற்கறிங்க உங்களுக்கு மனசாட்சி கிடையாதா…என சண்டையிடுபவர்களும் உண்டு ரேஷ்மா கூட ஏதாவது பதில் பேசுவாள் சக்திக்கு சட்டென பேசவராது…அப்போது எல்லாம் பெரும்பாலும் இருவருக்கும் உதவி செய்வது அவன் தான். ரேஷ்மா தான் நிறைய சக்தியிடம் அப்படி கேட்டால் இப்படி பதில் சொல்லு சக்தி…”நாங்கள் உங்களை வாங்க சொல்லி கையை பிடிச்சா இழுத்தோம்ன்னு கேளேன்”இப்படி சொல்லவும் சிரித்து விடுவாள்.கையை பிடிச்சு வேற இழுப்பாயா நீ…வாங்க சொல்லி…என்று ரேஷ்மா இழுப்பது போல நினைத்து சிரிப்பாள்.
அன்றும் ஏணேதோ யோசனையில் இருக்க…கம்பெனி ஃபோனில் இருந்து அழைப்பு வந்தது.சக்தி ரேஷ்மாவிடம் கிண்டலாக…”போ…போ உங்க பிரபு ஸார் அட்டன் பண்ணி பேசு என்றபடி நகர.”..”போ…போ உனக்கு பொறாமை என்றபடி ரேஷ்மா அட்டன் செய்தாள்.”
ஹலோ என்ன ஆரம்பித்து ம்…ம்….என்று பதில் சொல்லி கடைசியாக ஃபோனை கட் செய்தாள்.
“சக்தி ஸாரோட அம்மாவுக்கு உடம்பு முடியலையாம்…ஸ்ரீ…அது தான் ஸாரோட தங்கச்சி போன் பண்ணி அழுதிருப்பா போல இருக்கு…ஸார் முடிஞ்சா நாம ரெண்டு பேரையும் அவங்க வீட்டுக்கு போய் ஒரு தடவை பார்த்துவிட்டு ஃபோன் பண்ண சொல்லறாரு…என்ன செய்ய…”போகலாமா…நீயும் வருகிறாயா…
நேரம் பார்த்தவள் வேறு எதுவும் சொல்லவில்லை. “சரி போகலாம் ரேஷ்மா…தெரிஞ்சவங்க அப்படிங்கறப்ப இந்த உதவி கூட செய்யாட்டி எப்படி? என்று முடித்துக்கொண்டாள்.”
[the_ad id=”6605″]
மாலை சக்தியின் டூவிலரில் இருவரும் அங்கே செல்ல… உண்மையிலேயே மிகவும் முடியாமல் தான் படுத்து இருந்தார். சக்தி ரேஷ்மா இரண்டு பேருமே தங்களை அறிமுகம் செய்த பிறகு…பார்க்க அவனது தாயாருக்கு காய்ச்சல் அதிகமாகவே இருந்தது. ஒரு ஆட்டோ ஃபுக் செய்து அவரை அழைத்து சென்று ஹாஸ்ப்பிடலில் காட்டியபிறகு இரவுக்கு இருவருக்கும் இட்லி வாங்கி கொடுத்து விட்டு சக்தி அவளது வீட்டிற்கு வரும் போது ஒரு மணி நேரம் லேட்டாக ஆகி இருந்தது.
ஹாஸ்ப்பிடலில் இருக்கும் போதே வீட்டிற்கு சக்தி அழைத்து சொல்லி இருந்தாள் ரேஷ்மா ஹாஸ்ப்பிடல் வாசலிலேயே பஸ் ஸ்டான்ட் இருக்க அங்கிருந்து பஸ் ஏறி வீட்டிற்கு புறப்பட்டு இருந்தாள்.
பிரபுவின் தாயாரிடம் பேசிய போது அவரையும் ,ஸ்ரீ யையும் சக்திக்கு மிகவும் பிடித்து இருந்தது. மறுநாள் காலையில் வருவதாக சொல்லி புறப்பட்டு வந்திருந்தாள்.வீட்டிற்கு வந்ததுமே தனது தாயாரிடம் சொல்லி இருந்தாள். அவர் அப்படியா என்ன கேட்டதோடு சரி…அடுத்த நாள் காலையிலேயே மறுபடியும் அங்கே புறப்பட்டு சென்றிருந்தாள்.
பிரபுவின் தாயார் இப்போது நன்றாக இருந்தார். இவளை பார்க்கவும் அறிமுக புன்னகை சிந்தியவர் அன்போடு வரவேற்றார்..”.வாம்மா சக்தி..ரொம்ப நன்றி மா…நேற்று நீ வராட்டி என்ன செஞ்சிருப்பேனோ…இவள் வேற அழ ஆரம்பிச்சுட்டா என தனது மகளை கைகாட்ட…”
“ஊருக்கு புதிது இல்லைங்களா…ஒரு வருஷம் தானே ஆகுது…அவளுக்கு ஸ்கூல் தவிர இப்போதைக்கு வேறு எதுவும் தெரியாது இல்லையா…அதுதான் பயந்திட்டா பழகின இடமாக இருந்து இருந்தா இத்தனை பயம் இருக்காது என்றபடி சிறிது நேரம் பேசிவிட்டு புறப்பட்டாள்.”
அங்கே ஆபீஸ் போகவும் ரேஷ்மாவிடம் சொல்லி விட்டு வழக்கம்போல் வேலை செய்ய ஆரம்பித்து இருந்தார்கள். பிரபு ஃபோன் செய்து இரண்டு பேருக்கும் நன்றி சொல்லி இருந்தான்.
“தேங்க்ஸ் ரேஷ்மா சக்தி கிட்டேயும் சொல்லிடுங்க இன்றைக்கு காலையில் கூட போயிட்டு வந்தாங்கலாம் சிஸ்டர் சொன்னா…இன்னும் ஒரு வாரம் ஆகும் அதுவரைக்கும் கொஞ்சம் பார்த்துக்கோங்க ..தினமும் போகணும்ன்னு இல்லை ஸ்ரீ யோட ஃபோனுக்கு கூப்பிட்டு பேசினா கூட தைரியமாக இருப்பா…என்றபடி கட் செய்தான்.”
காலையிலேயே சக்தி அங்கே சென்று வந்ததினால் மாலையில் போகும் போது வீட்டிற்கு தேவையான காய்கறிகளை கடையில் வாங்கி சென்றாள்.பிரபுவின் தாமாருக்கு கொஞ்சம் சரியாகி இருந்தாலும் சுத்தமாக சரியானது.போல தெரியவில்லை. கொஞ்சம் பழங்களையும் வாங்கி கொடுத்து விட்டு புறப்பட்டாள்.
“வாங்கறதான்னு யோசிக்க வேண்டாம் காய்யோட பில் இது இதற்கு பணம் கொடுத்திடுங்க வேற ஏதாவது வேணும்றாலும் ஸ்ரீ யை ஃகால் பண்ண சொல்லுங்க வாங்கிட்டு வரேன் ரெண்டு நாளைக்கு நல்லா ரெஸ்ட் எடுங்க…சொல்லி விட்டு வந்து இருந்தாள்…”
அன்று பிரபுவோடு பேசும் போது பிரபுவின் தாயாருக்கு அத்தனை மகிழ்ச்சி…”சக்தி பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணுடா…எவ்வளவு அன்பாக பேசுது…ஒருநாள் விட்டு ஒருநாள் பார்த்துவிட்டு போகுது. நீ எப்போது டா இங்கே வர்ற..”
“பிரபுவும்….இன்னும் ரெண்டு நாள் தான் வந்திடுவேன்மா… இப்போது காய்ச்சல் சரிமாகிடுச்சு தானேமா…என்று விசாரித்து விட்டு ஃபோனை வைத்து இருந்தான்.”
இந்த பத்து நாளில் சக்தியை பற்றி இவன் கேட்காத நேரமே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு தாயும் ஸ்ரீயும் இவனிடம் அவளை பற்றி பேசி இருந்தனர். இதையெல்லாம் அடிக்கடி கேட்டதாலோ என்னவோ தனக்கு திருமணம் முடிக்கும் பெண் இது போல இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தவன் ஒரு கட்டத்தில் சக்தியே பெண்ணாக இருந்தால் என்ன என்று யோசிக்க ஆரம்பித்து இருந்தான்.
அன்று காலையும் பிரபுவின் தாயாரை பார்க்க வந்திருந்தால் சக்தி…இந்த நாட்களில் நிறைய பிரபுவை பற்றி தங்களை பற்றி நிறைய கூறி இருந்தார் பிரபுவை பற்றி தெரிந்தபோது நிறைய ஆச்சர்யமாக இருந்தது. அவனது உழைப்பு, அவனது குணம் என எல்லாமுமே பிடித்தும் இருந்தது.. பிரபுவின் தாயார் மனதில் எதையும் வைத்து கொள்வது கிடையாது. அவரிடம் பேசியபோது அவர் பட்ட கஷ்டத்தை கேட்டவளுக்கு தான் பட்டது எல்லாம் எதுவும் இல்லை என தோண்ற ஆரம்பித்து இருந்தது. அந்த அளவுக்கு கணவரிடம் கொடுமை அனுபவித்து இருந்தார். அதனாலேயே அவர் மேல் இனம் புரியாத அன்பு இவளுக்கு உதயமாகி இருந்தது. “இன்றைக்கு உங்கள் மகன் நைட் வீட்டுக்கு வந்திடுவாங்க…நான் புறப்படறேன் என்று சொல்லி விட்டு புறப்பட.”..”அப்படின்னா இனி இங்கே வரமாட்டாயாம்மா என்ன கேட்டு இருந்தார் .”
“ஐயோ…அப்படி சொல்ல வரலை உங்களுக்கு பார்க்கணும்ன்னு தோணிச்சதுன்னா எனக்கு ஃபோன் பண்ணுங்கமா நான் வந்திடுவேன் என்று சக்தி சொல்லிவிட்டு புறப்பட்டாள்”. வாசலை தாண்டிய போது இவளை அந்த வீட்டின் உயிமையாளர்,.இவளது பெரியப்பா ஏதோ வேலையாக வந்தவர் இவளை பார்த்து இரண்டு வார்த்தை பேசிவிட்டு புறப்பட்டார் இவளும் இங்கே வந்ததின் காரணத்தை கூறிவிட்டு புறப்பட்டு இருந்தாள். அருகில் குடியிருந்த இன்னோரு வீட்டில் குடி இருப்பவரிடம் சக்தியை பற்றி விசாரிக்க ..அவரும் இந்த பொண்ணு பத்து நாளா ஒரு நாள் விட்டு ஒரு நாள் வருதுங்க என்று சொல்லி இருந்தனர்.
இவருக்கு ஏதோ தோண்ற சக்தியின் தகப்பனாரிடம் அழைத்து சொல்லி இருந்தனர்…”கூடவே நல்லா விசாரிச்சிட்டேன்… அந்த பையன் ரொம்ப நல்ல பையன் அவங்க அம்மாவும் அப்படி தான். ஒரு வேளை சக்திக்கு மறுபடியும் கல்யாணத்துக்கு பார்க்கற மாதிரி இருந்தா இந்த பையனுக்கு பேசலாம்ன்னு தோணுது “என்று தன்னுடைய கருத்தையும் சொல்லி இருந்தார் எதிர் முனையில் .ஃபோனில் கேட்ட முருகேசனுக்கு கொஞ்சம் மகிழ்ச்சி தான். தன்னுடைய மனைவி இடமும் உடனே சொல்லி இருந்தார்.
“அவர் இப்படி சொல்லறாரு கோமதி…நாம முடிவு பண்ணின இடம்தான் சரியா வரலை அவளுக்கு பிடித்திருந்தால் பேசி முடிச்சிடலாமா…பணம், அந்தஸ்து எதுவும் தேவையில்லை நம்ம பொண்ணுக்கு பிடிச்சா போதும் என்ன சொல்ற…என்று கேட்டு இருந்தார்.”
“ஆனால் கோமதியோ…இன்னும் சக்தி இதை பற்றி எதுவும் சொல்லலையேங்க…சாதாரணமாக உதவி செய்து இருந்தா…மறுபடியும் அவசரம் வேண்டாங்க…நல்லா விசாரிக்கலாம் அப்புறம் பார்க்கலாங்க…அப்போதைக்கு இந்த பேச்சை நிறுத்தி இருந்தாள்.”
அன்று மாலை வீட்டிற்கு வந்த பிரபுவிடம் அவனது தாயார் சக்தியை பற்றியே பேச… “ஒரு கட்டத்தில் அம்மா அந்த பொண்ணை உங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்காம்மா…வேணும்னா அவங்க வீட்டில் பேசலாமா…என்று நேரடியாக கேட்டு இருந்தான். ஏற்கனவே கல்யாணம் பண்ணிக்கோ என்று நீண்ட நாட்களாக பிரபுவிடம் கேட்டுக்கொண்டு இருந்தவர் தான். “
[the_ad id=”6605″]
“எனக்கு சொல்ல தெரியலை பிரபு… அவங்க வீட்டில் பொண்ணு தருவாங்கலா…ஏன்னா நாம வேற இனம்…வசதியும் பெருசா கிடையாது.
உன்னை குறைவாக சொல்லலை… அந்த பொண்ணு தான் உனக்குன்னு இருந்தா மாறவா போகுது”.
பிரபுக்கு அந்த நிமிடம் தாயாருக்கும் பிடித்து இருக்கிறது என்பதே அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது. அந்த சந்தோஷத்தில் ஆபீஸ் சென்றவன் அன்று மாலையில் சக்தியிடம் ..”.சக்தி நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும் இன்றைக்கு வடமதுரை ஈஸ்வரன் கோவிலுக்கு வரமுடியுமா..”கோவிலில் சின்ன வேண்டுதல் ஒன்றும் இருக்கிறது என்று அழைக்க…
அந்த நேரத்தில் சக்திக்கு வேறு எதுவும் தோன்றவில்லை. எப்போதும் இவள் செல்லும் கோவில் தான் அது…அதுவும் இப்போது எல்லாம் இவள் எப்போது அந்த கோவிலுக்கு வருவாள் என கேட்டு…பிரபுவின் தாயாரும் ஸ்ரீ யும் வந்து விடுவார்கள்…மூவருமே கொஞ்ச நேரம் பேசி விட்டு தரிசணம் முடிந்தபிறகு செல்வதை வழக்கத்தில் வைத்து இருந்தனர்.
வழக்கம்போல பிரபு இப்போதும் ஏதாவது சிறு உதவி கேட்க போகிறான் என்று நினைத்தவள் வருகிறேன் என்பது போல தலையை மட்டும் ஆட்டினாள்.
தொடரும்.