என்னவள்_38
அன்றைய பேச்சிற்கு பிறகு மறுபடியும் கூட…நான் கேட்டதுக்கு பதில் இன்னும் சொல்லலை கார்த்திக் ஏன் அங்கே தங்கினால் என்ன? என மறுபடியும் கேட்டு இருந்தாள்.
“எனக்கு பிடிக்கலை சக்தி “.
“இதென்ன பதில் கார்த்திக். எனக்கு புரியவில்லை அங்கே அம்மா அப்பா ரெண்டு பேருக்கும் உங்களை அவ்வளவு பிடிக்கிறது.பிருந்தா நீங்கள்ன்னா உயிரையே விடறா..அவள்கிட்ட பேச ஆரம்பிச்சா உங்களை பற்றி மட்டும் தான் பேசறா ஆனால் நீங்க…அங்கே தங்கலாம்ன்னு கேட்டா இப்படி ஒரு பதிலை சொல்லறிங்க”.
“எனக்கு இங்கே தனியா வர சுத்தமாக விருப்பம் இல்லை மாயாவையும் என்னையும் பிடிவாதமாக அனுப்பி வச்சாங்க..திரும்ப…திரும்ப மறுபடியும் எப்படி போறதாம்..”
“ஒ…. இது தான் காரணமா இதுக்கு பேரு என்ன தெரியுமா. ஈகோ…அதெப்படி உங்கள் குடுப்பத்துக்கிட்டேயே காட்டுவிங்களா..எப்படி கார்த்திக் எனக்கு ஆச்சர்யமா இருக்கு அதுவும் உங்ககிட்ட இதுமாதிரி ஓரு பதிலை எதிர் பார்க்கவில்லை “.
“அப்படி கிடையாது சக்தி.”
“அப்புறம் இதுக்கு பேரு என்ன ஈகோ தான். கார்த்திக் ஏற்கனவே உங்கள் அப்பாவுக்கு உடம்பு முடியாமல் போய் இருக்கு. அவசரத்துக்கு உடனே கூப்பிட வேண்டியது இருந்தா..நீங்கள் அங்கே இருந்தா அவங்களுக்கு உதவியா இருக்கும். இது தான் நியாயமும் கூட…”
“இப்ப இல்லாட்டியும் கொஞ்சம் உங்களை மாற்றிக்கலாம். அத்தோடு நிற்கவில்லை அந்த வாரத்தில் இறுதியில் அங்கே தங்கலாம் எனக்கு அவனை பிடித்து வைத்தாள்.அப்படியே வாரத்திற்கு இரண்டு நாட்கள் சில நேரம் நான்கு நாட்கள் என மாறி இருந்தது. பிடிவாதம் கிடையாது அதே நேரம் தன் பக்கத்து நியாயத்தை தெளிவாக சொல்லி புரிய வைக்கின்ற திறமை சக்திக்கு இருந்தது. அருகில் வந்தாலே அழுது ஆர்பாட்டம் செய்த வேந்தனை இப்போது கார்த்திக்கோடு விளையாட வைத்து இருந்தாள். இந்த மாற்றம் எல்லாமே வழக்கமான ஒன்று போல இயல்பாக நடந்து கொண்டு இருந்தது.”
அன்றைய பேச்சிற்கு பிறகு இரண்டு பேருமே நிறைய பேசினார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இப்போது பேச இருவருக்கும் தயக்கம் எதுவும் இல்லை…மதியம் உணவு உண்ண கூட வீட்டிற்கு வர ஆரம்பித்து இருந்தான். அன்றும் அது போல அமர்ந்து இருக்க சற்று தொலைவில் அமர்ந்து இருந்த பிருந்தாவிற்கு பழைய ஞாபகம் வந்து இருந்தது. கடைசியாக உணவு ஊட்டி விட்டது ஞாபகம் வர…அடிக்கடி அவளது அண்ணனை திரும்பி பார்த்தபடி அமர்ந்து இருந்தாள். அவளது முகம் பார்த்த சக்தி. .”.என்ன பிருந்தா ஏன் உங்க அண்ணாவை அப்படி பார்க்கற…”
“இல்லை அண்ணி முன்னாடி எல்லாம் அண்ணா எனக்கு சாப்பாடு ஊட்டி விடுவாங்க…”
[the_ad id=”6605″]
“அதென்ன முன்னாடி எல்லாம் இப்பவும் ஊட்டி விடலாம் அதெல்லாம் தப்பு இல்லை என்றவள் போ போய் வாங்கி சாப்பிடு இதுக்கு போய் வேடிக்கை பார்ப்பாயா … கார்த்திக் இவளுக்கு ரெண்டு வாய் ஊட்டி விடுங்க என்றபடி வேந்தனை வாங்கி கொண்டபடி நகர்ந்து சென்றாள்.”
இவனை பார்த்து அழுத வேந்தனை கூட இவனுக்கு அருகில் கொண்டு வந்து இங்கே பாரு குட்டிபையா உங்கள் அப்பாவை பாரு என்று காட்ட…அன்றும் அப்படிதான் கதறி அழுதான்.
“கூப்பிட்டுட்டு போ சக்தி அழுவான் சொல்லறேன்ல்ல…”
“ஹலோ உங்கள் பையன் அவன் எத்தனை நாள் இப்படியே இருப்பிங்க… இங்கே பாருங்க தங்கம் இந்த தாடியை பார்த்து தான் பயப்படறையா இங்கே பாரு இத இப்படி இழுக்கணும் என்று இழுத்து காட்டி இருக்க… இவள் இழுத்த வேகத்தில்… சக்தி வலிக்கிறது சக்தி என்று சற்று குனிய..வேந்தன் சிரிக்க ஆரம்பித்து இருந்தான். அப்புறம் என்ன பார்க்கும் போது எல்லாம் கார்த்திக்கின் தாடியை இழுத்து விட்டபடி சிரிக்க ஆரம்பித்தான்…இப்போது இவனை பார்த்தாலே தாவ ஆரம்பித்து இருந்தான்.”
எப்போது வந்தாலும் தாடியை இழுக்க இவளிடம் வந்தவன் “அவன்கிட்ட என்ன காமெடி பீஸ் ஆக்கி விட்டு இருக்கற எப்ப வந்தாலும் தாடியை பிடிச்சு இழுக்கறான்.”
“இழுக்க கூடாதுன்னா தாடியை எடுத்துடுங்க நல்லாவா இருக்கு…”
“ஏய் என்ன நீயும் ஒட்டற…”
“இதெல்லாம் ஒட்டறது இல்லை ஒட்டறதுன்னா என்ன தெரியுமா என்றவள் பிருந்தா உங்கள் அண்ணா ஏன் தாடி வச்சி இருக்கறாங்க தெரியுமா…அவளிடம் கேள்வி கேட்டாள்.”
“ஏன் அண்ணி எனக்கு தெரியாது. “
“எனக்கு தெரியும் சொல்லவா…”
“என்ன சொல்ல போகிறாய் என்பது போல கார்த்திக் அவளை பார்க்க தினமும் உங்கள் அண்ணா சைட்ல இருந்து அரைகிலோ மண்ண அந்த தாடியில் வச்சி திருடிவிட்டு வராரு உனக்கு தெரியுமா…”
“அண்ணா டோட்டல் டேமேஜ் போ…”என்றபடி சிரிக்க ஆரம்பித்தாள் பிருந்தா…” இரு வரேன் என்று சக்தியை துரத்தினான்.”
“அண்ணி சிக்கிடாதிங்க அவன் மண்டையில் கொட்டுவான்…என்று சொல்ல வேகமாக லட்சுமியின் பின்புறத்தில் போய் ஒழிந்து கொண்டாள். அத்தை அடிக்க வராங்க என்னன்னு கேளுங்கள் என்றபடி…ஏதோ ஒரு வகையில் பழைய மகிழ்ச்சி இங்கே திரும்ப வந்து இருந்தது. “
பிருந்தா பிளஸ்டூ முடித்து இருக்க காலேஜ் சேர்ந்து இருந்தாள். உடை எடுக்க என ஒரு நாள் முழுக்க இரண்டு பேரும் கடைவீதியை சுற்றி விட்டு வந்து இருந்தனர். இரண்டு முறை தடுப்பூசி போடக்கூட கார்த்திக்கோடு சக்தி மட்டும் சென்று வந்திருந்தாள்.மொத்தத்தில் அந்த வீட்டோடு ஒன்றி இருந்தாள் சக்தி…
[the_ad id=”6605″]
திரும்ப திரும்ப கிண்டல் செய்ய தாடியை எடுத்து விட்டு பழைய தோற்றத்திற்கு மாறி இருந்தான் கார்த்திக். இவளிடம் தான் முதலில் வந்து மாடியில் இருக்கும் போது கேட்டு இருந்தான். “தாடியை எடுத்தாச்சு இப்ப ஒகேதான இனி கிண்டல் பணாண மாட்டேல்ல என்று கேட்க..”.அவனை மேலும் கிழும் பார்த்தவள் “கார்த்திக் சொன்னா தப்பா நினைக்க கூடாது நிஜமாகவே இப்பதான் பிள்ளை பிடிக்கறவன் மாதிரி இருக்கறிங்க”என்று சொல்ல…கையை பிடித்து திருத்தி இருந்தான்.” ஒழுங்காக முகத்தை பார்த்து பதில் சொல்லு…உண்மையை சொல்லு… எப்படி இருக்கிறேன் என்று அவளை நெருங்கிய படி கேட்க…”
முதல் முதலாக கார்த்திக்கை பார்த்து தடுமாற ஆரம்பித்தாள் சக்தி. கையை இது போல எல்லாம் இழுத்து நிறுத்தியது இல்லை. பெரும்பாலும் பேச்சோடு சரி…அருகில் முகத்தை பார்த்து தடுமாறியபடி…” வந்து கார்த்திக்…என்று கண்களை மூடியவள்…பிருந்தா வர்றா” என்று சொல்ல கார்த்திக் கையை விட்டிருந்தான். ஒரு நிமிடத்தில் அவனை லேசாக தள்ளிவிட்டு விட்டு நகர்ந்து கீழே ஒடி இருந்தாள் சக்தி.
கார்த்திக்கின் அந்த தோற்றத்தை பார்த்து மறுபடியும் வேந்தன் அழ…அவனின் முகத்தை பார்க்கும் போது எல்லாம் சிரித்து கொண்டு இருந்தாள் சக்தி.
“நல்லா இருக்கிறது என்று சொல்லவில்லை ஆனால் வீட்டில் எல்லோரும் சொல்லி இருந்தனர். பிருந்தா…அண்ணா இப்பத்தான் பார்க்க நல்லா இருக்கிறது அழகா இருக்கறணா என்று பார்க்கும் போது எல்லாம் சொல்லி கொண்டு இருந்தாள்.
காலேஜ் துவங்கி மூன்று மாதம் முடிந்து இருந்தது. அன்று அப்போதுதான் பிருந்தா காலேஜில் இருந்து வந்து இருந்தாள். உள்ளே அவளது ரூம்பில் அமர்ந்து இருக்க…சக்தி அவளை தேடி வந்தாள். பிருந்தா மொபைலை பார்த்து கொண்டு இருக்க…
“பிருந்தா வேலை இருக்கா சரி அப்புறம் வரேன் என்று புறப்படப்போக…”அண்ணி சும்மா தான் உட்கார்ந்து இருக்கிறேன். நாளைக்கு காலேஜ்ல்ல ஃபங்சன் இருக்கு எதை போட்டுவிட்டு போகலாம்ன்னு டிஸ்கஷன் போயிட்டு இருக்கு .அப்புறம் டிக்டாக் விடியோ பார்த்திட்டு இருக்கிறேன்.
“ஒ…சரி டிரஸ் எந்த மாதிரி போட்டுவிட்டு போகப்போற…”
“கொஞ்சம் பேர் சேலை சொல்லறாங்க இன்னும் கொஞ்சம் பேர் சல்வார்… இன்னும் முடிவாகவில்லை. அண்ணி எனக்கு ஹெல்ப் பண்ணுங்கள் எது போட்டுவிட்டு போகலாம்.”
“சேலை கட்டிக்கோ பிருந்தா உன்னோட உயரத்திற்கு அழகா இருக்கும். “
“அண்ணி சேலை சிம்பிளா எதுவுமே இல்லை. ரெண்டு மூன்று சேலை இருக்கு…எல்லாமே பார்டர் ஜரிகையோட பெருசா இருக்கும் அதை போட்டுட்டு போக முடியாது. “
“பிருந்தா நான் தரவா…நிறைய புதிது இருக்கு…இன்னும் கட்டாத சேலை நீ எதிர் பார்க்கறமாதிரி சிம்பிளா இருக்கும். பிளவுஸ் மட்டும் ரெடிமேட் வாங்கிக்கலாம்.ஒகே வா…வா வா…என்னோட பிரோவில் தேடலாம் என்றபடி மாடிக்கு இவளை அழைத்து சென்றாள்.”
அங்கே பிரோவை தலைகிழாக புரட்டிக்கொண்டு இருந்தனர் இருவரும் சேர்ந்து…அண்ணி டிக்டாக் பாருங்க அண்ணி செம காமெடியா இருக்கு என்று இவளிடம் கூறியவள் நான் நிறைய ஃபாலோ கொடுத்து இருக்கிறேன் என்று உடையில் ஆரம்பித்து எங்கோ பேச்சு சென்று கொண்டு இருந்தது. ஒருவழியாக ஒரு சேலையை செலக்ட் செய்து இருந்தாள் பிருந்தா.
கார்த்திக்கின் நிலைபாடு இப்போது வேறு மாதிரி இருந்தது…சக்தி தன்னிடம் நெருங்குவது இல்லை என்பது போன்ற ஒரு மனநிலையில் இருந்தான். திருமணம் முடிந்து கூட இப்போது ஆறு மாதம் தாண்டி இருந்தது. எனக்கு டைம் வேணும் என ஆரம்பித்து இவளிடம் கேட்டது அவன் தான் என்பதை மொத்தமாக மறந்து இருந்தான்.இப்போது எல்லாம் சின்ன சின்ன விஷயத்திற்கும் அவளிடம் கோபப்பட ஆரம்பித்து இருந்தான்.
“சாப்பாடு வேணும் என்றபடி டைனிங்ஹாலில் அமர்ந்து அழைக்க… இவள் சற்று லேட்டாக அங்கே சென்றால் கூட அவ்வளவு தான் எழுந்து சாப்பிட்டால் புறப்பட்டு இருந்தான்.”
[the_ad id=”6605″]
சக்தியின் வீட்டில் திவ்யா வந்ததாக அழைத்து இருக்க…இவளும் இங்கே கேட்டுவிட்டு புறப்பட்டு இருந்தால் கார்த்திக்கிடம் ஃபோனில் அழைத்து சொல்லி விட்டு…அன்றைக்கு தான் முதல் முதலாக சக்தி இல்லாத அந்த நாளின் வெறுமையை உணர ஆரம்பித்தான். இத்தனை நாளில் இல்லாத தனிமை உணர்வு அதுவும் இங்கு வந்த பிறகு நிறைய மாற்றம் தான் முன்பு அங்கே சக்தியோடு இருந்த போது முதலில் தூங்கும் சக்தி இங்கே வந்த பிறகு பெரும்பாலும் இவன் தூங்கியபிறகு தான் வருவதே..
பழைய நாட்கள் போல மாறி இருந்தது வீட்டின் நிலைமை… வேலை முடிந்து வரவும் பிருந்தாவோடு பேசிவிட்டு தந்தையிடம் சிறிது நேரம் பேசி வேந்தனோடு விளையாடி கடைசியாக இவன் வரும் போது பதினோரு மணியை எப்போதும் தாண்டி இருக்கும் அதன்பிறகு சக்தி வந்தபிறகு அவளிடம் சிறிது நேரம் பேசிவிட்டு தூங்க ஆரம்பிப்பான்.
அதிகம் பேசாவிட்டால் கூட என்ன செய்கிறான் எங்கே போகிறான் என்ன வேலை நடந்தது என்பதை கேட்க ஆரம்பித்து அவனும் தினமும் நடப்பதை சொல்ல பழகி இருந்தான். சமயத்தில் அங்கே நடக்கும் காமெடியை கூட இவளிடம் சொல்லி சிரித்திருக்கிறான்.
இப்படி நகர்ந்து கொண்டு இருக்க…சட்டென காலியானது போல… எதையோ இழந்தது போல மொத்தத்தில் அன்றைக்கு தூக்கத்தை தொலைத்து இருந்தான். இவனிடம் பேசும் சக்தி இவனிடம் சிரிக்கும் சக்தி…என மொத்தத்தில் எங்கும் சக்தி எதிலும் சக்தி…சக்தி பயம் தான்.
அங்கே சக்திக்கு கூட அதுபோல தான் இருந்தது. திவ்யாவோடு அபிநயாவோடு பேசி சிரித்தவளின் நினைவு அவ்வப்போது கார்த்திக்கை தொட்டுவிட்டு வந்து கொண்டு இருந்தது. நேரம் பார்த்தவள் இந்நேரம் அங்கே வீட்டிற்கு வந்து இருப்பான். பிருந்தாவோடு பேசிக்கொண்டு இருப்பான். இப்படி ஒவ்வொன்றாக யோசித்து கொண்டு இருந்தாள்.
“திவ்யா கூட என்ன சக்தி நிறைய யோசிக்கற போல இருக்கு…ஏன் அப்பப்போ டல் அடிக்கற… எப்படி போகுது கல்யாணம் லைப் என்று கேட்க”…
“அதுக்கென்ன கா நல்லா தான் போகுது”.
“ஏன் வீட்டுக்காரரை விட்டுட்டு வந்தது கஷ்டமான இருக்கா என்ன?”.
“ஆமாம் ஆமாம் இரூயூர் ஒர் உடல் அதனால ரொம்ப மிஸ் பண்ணறேன் போக்கா போய் தூங்கு என்று கிண்டலாக பேசி விட்டு நகர்ந்தாள் சக்தி “.
ஆனால் எல்லாம் விடியும் வரை தான் காலையிலேயே விடிந்தும் விடியாத பொழுதில் இவளை அழைத்து செல்ல வந்திருந்தான் கார்த்திக்.
திவ்யா பார்க்கவுமே கிண்டல் செய்ய ஆரம்பித்து இருந்தாள். “உண்மை தான் சக்தி ஒரு தாள் கூட விடலை வந்தாச்சு…புறப்படு என்று அனுப்பி வைத்தனர். “
வண்டியில் புறப்படவுமே இவளிடம் சொல்லி இருந்தான் “நீ இல்லாமல் அங்கே வீடு நல்லாவே இல்லை சக்தி இனி இது போல விட்டுவிட்டு போகாதே என்று சொல்ல”… முதல் முதலாக எங்கோ பறப்பது போல உணர்ந்தாள் சக்தி. தான் மட்டும் இல்லை அவனும் தன்னை தேடுகிறான் என்பதே மகிழ்ச்சியாக இருந்தது.
நாட்கள் வேகமாக நகர்ந்தது கூடவே இருவருடைய கண்ணாம்பூச்சி ஆட்டமும்… ஒருவர் மீது ஒருவருக்கு அன்பு அதிகம் இருந்தாலும் யார் முதலில் சொல்வது என்ற தயக்கத்தோடு நாட்கள் நகர்ந்தது..
இவர்களது பிரச்சனையில் ஒன்றை கவனிக்க தவறி இருந்தனர்.
பிருந்தா…பிருந்தா தனது வெகுளி தனத்தில் வேறு ஒரு பிரச்சினையில் அவளுக்கே தெரியாமல் சிக்கி இருந்தாள் அதன் விளைவு அப்போது யாருக்கும் தெரியவில்லை கார்த்திக்கிற்கு தெரிய வந்த போது நிலைமை கை மீறி சென்று இருந்தது.
தொடரும்.
.