கண்ணாடி முன்பு நின்றுக்கொண்டு தன் வயிற்றை தடவிப்பார்த்துக்கொண்டிருந்தாள் யுவராணி.
‘நாமளும் இன்னும் கொஞ்ச நாள்ல கன்சிவ் ஆயிட்டா எவ்ளோ நல்லாருக்கும் ‘ என்று நினைத்துக் கொண்டிருந்தாள். பின்னாடியிலிருந்தபடி அவளை கட்டிக்கொண்டான் கௌதம்.
“என்ன யுவி கண்ணாடி முன்னாடி நின்னு என்ன பண்ற” என்றபடி அவள் வலது தோளில் முத்தமிட்டான்.
“அது வந்து சும்மா கண்ணாடி முன்னாடி நின்னு கற்பனை பண்ணிட்டு இருந்தேன். லைக் எப்படினா நான் கன்சிவ் ஆனா எப்படி இருக்கும்னு “என்று சொல்லி நிறுத்தினாள்.
“ஓஹோ ஓஹோ…அப்படி ம்ம்ம் ஆனால் அதுக்கு சில வேலைகள் செய்யனுமே” என்று தன் முகத்தை அவளது இடது தோளில் புதைத்தான். அவள் தோள்பட்டையை அப்படியும் இப்படியும் ஆட்டி அவன் பிடியிலிருந்து விலகினாள்.
“ஏ…என்ன ஆச்சு ஏன் விலகி போற” என்று மீண்டும் தன் பக்கம் இழுத்தான்.
“நீங்க என்ன சொல்ல வறீங்க அப்படின்னு எனக்கு நல்லா புரியுது கௌதம் ஆனால்….” என்று நகர்ந்தாள் மீண்டும்.
அவளருகே ஒரு அடி எடுத்து நடந்தான் கௌதம். என்ன ஆனா …என்று மீண்டும் அவளை பின்னாலிருந்து தூக்கி கையில் ஏந்தி தன் பார்வையை அவள் முகத்திற்கு நேராக நிறுத்தினான்.
“என்னங்க,எறக்கி விடுங்களேன் ப்ளீஸ்” என்றாள் யுவராணி. அதற்கு அவன் முடியவே முடியாது என்று தலையை ஆட்டினான்.
“ஏன் இப்படி பண்றீங்க” என்று சிணுங்கினாள் யுவி.
“யுவி இவ்ளோ நாள் என்னோட அன்புக்கும் தொடுதலுக்கும் அவ்ளோ ஏங்கிய நீ,இப்போ வேணாம் வேணாம் சொல்ற என்ன ஆச்சு யுவி” என்றான் கௌதம்.
“கௌதம் அது வந்து…”
“என்ன வந்துப்போய்னு ” என்று தூக்கிக்கொண்டு கட்டில் அருகில் சென்று அவளை படுக்க வைத்து தானும் போர்வையாய் அவள் மீது சாய்ந்து முத்தமிட துவங்கினான்.
“ஐயோ விடுங்க கௌதம் ”
“முடியாது முடியாது” என்று சொல்லிட்டு முத்தமழையை மீண்டும் பொழிய செய்தான்.
“கௌதம் உங்க அம்மா”…
“என்ன இப்போ எங்க அம்மாக்கு”
“உங்க அம்மா ஓம் சக்திக்கு மாலை போட்டுருக்காங்க அதனால் இன்னும் ஒரு மாசத்துக்கு எதுவும் கிடையாது.
“வாட்?”
“யெஸ் எதுவும் கிடையாது ” என்று சிரித்தாள் யுவராணி.
இவர்கள் பேசிக்கொண்டு இருப்பதற்கும் கௌதமுக்கு அழைப்பு வந்ததுக்கும் சரியாக இருந்தது. உடனே நகர்ந்து சென்றுவிட்டான்.
யுவராணி எழுந்து மிச்சம் இருந்த மீதி வேலையை செய்ய ஆயுத்தமானாள். அடுக்குமாடி குடியிருப்பு அது,எனவே நான்கு சுவரில் மொத்த வீடே அடங்கிவிடும் இரண்டு படுக்கையறை என்றாலும் ஜெயில் வாழ்க்கை மாதிரி தான். சிங்கில் இருந்த பாத்திரத்தை கழுவிக்கொண்டு ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தாள்.
பள்ளிக்கூடத்துக்கு சென்று வீடு திரும்பி கொண்டிருக்கும் குழந்தைகளை பார்த்துக் கொண்டிருந்தாள். ஒரு பக்கம் அவர்களை அழைத்துச் செல்லும் தாய்மார்களையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.
‘பொண்ணுங்களோட வாழ்க்கை எவ்வளவு சிம்பிளா முடிஞ்சிறுதுல. நாலு செவத்துக்குள்ள இருக்கிற ஒரு உலகம் அந்த உலகத்துக்குள்ள புருஷன் அப்படிங்கிற ஒரு கதாபாத்திரம் அதுக்கு அப்புறம் நம்ம பெத்து போடுற பிள்ளைங்க இதைத்தாண்டி பெண்களுக்கு உலகம்னு எதுவுமே இல்லைல. ஆனாலும் இந்த வாழ்க்கை அப்படியே பழகி போயிடுது. என்று நினைத்து சிரித்துக்கொண்டாள் யுவராணி.
சிங்கிள் இந்த பாத்திரங்களை கழுவி விட்டு ஓரம் தள்ளி விட்டு மீண்டும் வரவேற்பறைக்கு வந்தாள். சரி கொஞ்ச நேரம் டிவி ஆச்சு பாப்போம் என்று ரிமோட் கண்ட்ரோலை எடுத்து டிவியை ஆன் செய்தாள்.
“கணவனே என் தோழன்” என்ற ஒரு புதிய மெகா சீரியல் ஓடிக்கொண்டிருந்தது.அதில் வரும் கதாபாத்திரம் அவளை மெல்ல ஈர்த்தது.
‘நல்லா இருக்கேன் இந்த சீரியல்ல இனிமேல் ரெகுலரா பார்க்க ஆரம்பிக்க வேண்டியது தான்’ என்று தொடர்ந்து அந்த சீரியலை பார்க்க நினைத்தாள் யுவராணி.
‘இந்த சீரியல் மட்டும் இல்லன்னா பாதி பெண்களோட வாழ்க்கையில டிப்ரஷன் தான் வந்து இருக்கும் போல இருக்கு. அட்லீஸ்ட் சீரியலை பார்க்கும்போது அவங்க கஷ்டத்தை எல்லாம் மறந்துட்டு கவனத்தை அது மேல திருப்புறாங்க’ என்று நினைத்து அவளே சிரித்தாள்.
“ட்ரிங்….” என்று செல்போன் மணி அடித்தது. யாரு அழைப்பு விடுத்தது என்று பார்த்துக் கொண்டிருந்தாள்.
“ஓஹோ லதாவா ” என்று பார்த்துவிட்டு அழைப்பை எடுக்காமல் அப்படியே விட்டு விட்டாள்.
லதாவா இருந்தா என்ன போன் எடுத்தா தான் என்ன என்று மனம் கூறினாலும் அவளுக்கு எடுக்கணும் என்ற எண்ணமே வரவில்லை. லதா ஒரு நல்ல தோழியாக தான் அறிமுகமானார் ஆனால் எப்போ கெளதம் முன்னாள் காதலி என்று தெரிந்ததோ அன்றிலிருந்து லதாவிடம் இயல்பாக பழக முடியவில்லை யுவராணியிற்கு.
எல்லாம் முடிந்து விட்டது தான் ஆனாலும் லதாவை எதிர்நோக்கும் போதோ இல்ல பேசும்போது அந்த ஞாபகம் எட்டிப் பார்த்து விடுகின்றது.
அன்று பார்க்கில் இருவரும் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்ததை யுவராணி தான் ஆனால் அங்கேயே எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்துவிட்டால் யுவராணி. அதற்காக லதா மீது கோபம் என்றெல்லாம் சொல்ல முடியாது இருந்தாலும் ஒருவித சங்கடம். கௌதம் மீது இருக்கும் பொசசிவ் இதெல்லாம் லதாவிடம் இயல்பாக இருக்க விடாமல் தடுக்கின்றது.
வெளியே சென்றிருந்த கௌதம் மீண்டும் வீடு திரும்பினான் யுவராணி அமைதியாக ஆளில் அமர்ந்திருப்பதை கண்டவன்.
“என்ன யுவி நான் வெளியே கிளம்பினதுல இருந்து இப்படியேதான் ஒக்காந்து இருக்க போல இருக்கு” என்றான் கௌதம்.
“வேற என்ன செய்றது கௌதம் கொஞ்ச நேரம் டிவி பாத்துட்டு இருந்தேன் டிவிலயும் பெருசா பார்க்கிற மாதிரி ப்ரோக்ராம் எதுவும் இல்ல அதான் ஆப் பண்ணிட்டு கம்முனு உக்காந்துட்டு இருந்தேன்”
“சரி சரி நீ டீ போட்டு எடுத்துட்டு வா ரெண்டு பேரும் சேர்ந்து குடிப்போம்”என்றான் கௌதம்.
“டீயா இதோ இப்பவே போட்டு என்று சொல்லிவிட்டு நகர்ந்தாள் யுவராணி.
‘இந்த யுவராணி எப்படிடா சந்தோஷப்படுத்துவது ஒரு மாதிரி மூட் அவுட்டாவே இருக்காளே. முன்னாடி ஆச்சு நான் அவ கிட்ட சரியா பேசாம பழகாமல் இருந்தேன் இப்போ என்ன? எல்லாமே சரியா போயிட்டு இருக்கு அப்றம் எதனால ஒரு மாதிரி டல்லாவே இருக்கா.’ என்று யோசித்தபடி அமர்ந்தான் கௌதம்.
சமையலறையில் டீ பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க விட்டு டீ தூள் சக்கரை எல்லாம் போட்டு பாலும் ஊற்றி நல்ல சுவையான தேனீரை தயார் செய்து இருக்கோப்பைகளிலும் ஊற்றி எடுத்து வந்து அவன் முன்பு நீட்டினாள்.
“முதல்ல உக்காரு” என்று தேநீரை எடுத்துக்கொண்டு அவளையும் அமரச் செய்தான்.
“என்ன கௌதம் டீ எப்படி இருக்கு”என்றாள் யுவி.
“ம்ம் சூப்பர். இரு ஒரு நிமிஷம்” என்று அவள் கோப்பையில் இருந்த டீயை வாங்கி உரித்து விட்டு வாவ் இது என்ன சுவையா இருக்கே என்று ஓரக்கண்ணால் அவளைப் பார்த்து சிரித்தான்.
“சும்மா கதை விடாதீங்க கௌதம் அது எப்படி ரெண்டு கோப்பையிலே ஒரே மாதிரியான டீ தானே” என்றாள் யுவி.
“இல்ல யுபி உன்னோட உதடு பட்டதுனால ஒரு வேலை டேஸ்ட் அதிகமாயிடுச்சோ என்னவோ” என்று கண்ணடித்தான்.
“எப்படிங்க திடீர்னு இப்படி ரொமான்டிக்கா மாறுநீங்க கல்யாணமான புதுசுல என்கிட்ட இப்படி பேசவே மாட்டீங்க இப்போ எப்படி இப்படி எல்லாம் மாறினீங்க”என்றாள் யுவி.
“இங்க பாரு யுவி பழையதெல்லாம் எதுவுமே பேச வேண்டாம். அப்போ நான் இருந்த மனநிலை வேற லதாவை மறக்க முடியாமல் தவிச்சிட்டு இருந்தேன் அவகிட்ட ஒரு சாரி கூட கேட்காம விலகி விட்டோமே அப்படின்னு நினைக்கிறப்போ மனசு குற்ற உணர்ச்சில தவிச்சது .ஆனால் எப்போ நானும் அவளும் சந்திக்க நீ ஏற்பாடு பண்ணி அவகிட்ட மனசு விட்டு சாரி கேட்க அனுமதிச்சியோ அப்பவே எனக்கு எல்லா கலக்கமும் போயிடுச்சு அதனால இப்போ உன்கிட்ட என்னால இயல்பா இருக்க முடியுது அவ்ளோ தான்.” என்றான் கௌதம்.
“லதாவை மறக்க முடியாத அளவுக்கு அப்படி என்ன லதா உங்க வாழ்க்கையில் உங்களுக்காக பண்ணாங்க கௌதம்” என்றதும் மௌனமானான் கௌதம்.
“கௌதம் உங்கள தான் கேட்கிறேன் சொல்லுங்க”என்றதும்.
“அவ இல்லைனா இப்போ நான் உயிரோடவே இருந்திருப்பனா தெரியாது. நானும் அவளும் ஒரே ஊர் தான். நிறைய வாட்டி பார்த்துருக்கேன் ஆனால் ரொம்ப பேச வாய்ப்பு கிடைச்சது இல்லை,எங்க ஊர் ஆத்தங்கரையில என் சித்தப்பா பையனோட பேசி கலாட்டா பண்ணிட்டு இருந்தப்ப தவறுதலாக தண்ணில விழுந்துட்டேன். அந்த டைம்ல லதா அவ பாவாடையை இழுத்து சொருகி தண்ணில பாய்ந்து என்னை காப்பாத்துனா கடவுள் மாதிரி வந்து. நான் கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கிட்டு இருந்த அந்த நேரம் என் கண்ணு மட்டும் அவளை பார்த்துட்டு இருந்துச்சு. கொஞ்சம் விட்டுருந்தா என்ன ஆயிருப்பேனோ ” என்றதும் அவனறியாமல் கண்கள் கலங்கியது.
கௌதம் மேலும் பேச்சு துவங்கினான்.
“நானும் அவளும் அதுக்கப்புறம் ஒரு நல்ல பிரெண்ட்ஸ் ஆனோம். என் உயிரை காப்பாத்துன அவளுக்கு ஏதாவது ஒரு நன்றி கடன் செய்ய நானும் ரொம்ப நாளா வெயிட் பண்ணிட்டு இருந்தேன். அந்த சமயத்துல தான் அவ காலேஜுக்கு ஜாயின் பண்ணனும் ஆனா போதுமான அளவு காசு இல்ல அப்படின்னு சொல்லி கஷ்டப்பட்டு இருந்தா. அந்த டைம்ல நான் வேலைக்கு போயிட்டு இருந்தேன் அதனால அவளுக்கு காலேஜ் பீடஸ் கட்டி நான் தான் சேர்த்து விட்டேன். இந்த விஷயத்துக்கு அப்புறமா எங்களோட ஃப்ரெண்ட்ஷிப் ரொம்பவே ஸ்ட்ராங்காச்சு. ஊருக்கு பயந்து நாங்க ரொம்ப சந்தோஷக்க மாட்டோம் ஆனால் போன்ல நிறைய தடவை பேசி இருக்கும். திருவிழா டைம்ல அவ கண்டிப்பா ஊருக்கு வருவா நானும் கண்டிப்பா அந்த டைம்ல அவளுக்கு அதுவே ஊருக்கு வருவேன். என்ன அறியாமையே நான் அவளை விரும்பவும் ஆரம்பிச்சிட்டேன் ஆரம்பத்துல அவ ஒதுங்கி ஒதுங்கி தான் போனா ஆனா நான் தான் அவளை விடாமல் துரத்தி துரத்தி லவ் பண்ணேன். அதுகப்றம்….” என்று மற்ற விஷயத்தையும் சொல்லி முடித்தான்.
“கௌதம் உங்க கதையைக் கேட்கவே ரொம்ப நல்லா இருக்கு இந்த ஆத்மார்த்தமான லவ்வுன்னு சொல்லுவாங்களே அது இதுதான் போல இருக்கு. சும்மா ஒரே நாள்ல பார்த்துட்டு ஐ லவ் யூ ன்னு சொல்ற கால கட்டம்ல ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி பண்ணி ஒரு நல்ல ஒரு நட்பை ஏற்படுத்திகிட்டு அதுக்கப்புறம் ஹாஹா…சொல்லப்போனா நீங்க இரண்டு பேருமே லக்கி தான்.
“ஏன் என் யுவி குட்டியும் லக்கி தான்…” என்று அவள் கன்னத்தை கிள்ள …
“அச்சோ ரொம்ப தான் உங்களுக்கு,உங்கள மாதிரி ஹஸ்பெண்ட் கிடைக்க கொடுத்து வச்சிருக்கனும் ஆனால் அதை உங்க வாயாலேயே சொல்றீங்க பாருங்களேன் அதான் சிரிப்பு வருது.