அத்தியாயம் -11
நாட்கள் மெல்ல நகர்ந்து போனது. தற்போது கதாநாயகன் கோபி சிங்கப்பூரில் இருக்கிறான். அழகான கண்ணாடி கட்டிடங்கள்,புது மனிதர்கள்,புது வித வேலைகள் என்று அவனுடைய வாழ்க்கை சற்று மாறி இருந்தது. அவ்வப்போது தன் மனைவி லதாவுடன் போனில் உரையாடுவான். அன்று அப்படிதான்.
“என்ன லதா போனே எடுக்கலை நான் உனக்கு கால் பண்ணிட்டே இருந்தேன்” என்றான் கோபி.
வெளிநாட்டில் இருப்பதால் சில மணி நேரங்கள் இந்தியாவுக்கும் அவன் வசிக்கும் இடத்திற்கும் வித்தியாசம் உள்ளதால் தொடர்ந்து ஒரே நேரத்தில் தினமும் பேச இயலாது. அவள் வேலையாக இருக்கும் போது அவன் அழைப்பு தருவான் ,இவன் வேலையாக இருக்கும் போது அவள் தருவாள். இப்படியே தான் போய்க்கொண்டே இருந்தது.
“நான் கோவிலுக்கு போயிருந்தேன் அதாங்க பேச முடியலை” என்றாள் லதா.
“அது என்னமோ தெரியல லதா,இங்க வந்தப்றம் தான் உன்னுடைய அருமை எனக்கு அதிகமா தெரியுது. நீ கூடவே இருக்கிறப்போ உன் கூட இந்த அளவு நேரம் செலவழிக்க தோணாது ஆனால் தள்ளி வந்தப்றம் உன் கூட பேசிட்டே இருக்கனும் போலவே இருக்கு ” என்று சொல்லி சிரித்தான். அவன் சிரிப்பில் அவள் மீது அவனுக்கு இருக்கும் ஆர்வம் புரிந்தது.
விலகி இருந்தா தான் அன்பு அதிகமா இருக்கும். அப்படின்னு பொதுவாக சொல்வாங்க உண்மை தான் போலருக்கு. என்று நினைத்து அவளும் சிரித்தாள்.
“சரி லதா நான் போனை வைக்கிறேன் எனக்கு வேலை வந்துருச்சு பை” என்று சொல்லிவிட்டு போனை வைத்தான். அவளும் சரி போனை வைத்துவிட்டு சூப்பர் மார்க்கெட் செல்ல ஆயுத்தமானாள். தன் வீட்டிலிருந்து நான்கு தெரு தொலைவில் தான் சூப்பர் மார்க்கெட், நடப்பதற்கு பெரியதாக ஒன்றும் கஷ்டம் இல்லை என்றாலும் ஸ்கூட்டி ஓட்ட தெரிந்தால் எவ்வளவு ஈசியா இருக்கும் என்று தோன்றியது.
‘அப்போதெல்லாம் ஆண்கள் டூவீலரில் செல்வதே அரிது இதில் பெண்கள் எங்கே? நடந்து தான் செல்வார்கள் ஆனால் இன்று நடந்து செல்வதையே குறைச்சலாக நினைக்கிறோம். 60 வயதில் கால் குடைச்சல் என்று உட்கார்ந்திட்டு இருப்போம் ஆனால் அன்றைய பெண்கள் 80 வயதில் கூட குனிந்து நிமிர்ந்து வேலை செய்வார்கள். வசதி என்று எதை பயன்படுத்துகிறோமோ அதுவே நம் ஆரோக்கியத்தை கெடுக்கிறது தான் ‘ என்று நினைத்தபடியே ஒருவழியாக சூப்பர் மார்க்கெட் வந்தாள் லதா.
வாசலில் இருக்கும் கூடையை எடுத்தபடி உள்ளே நுழைந்தாள். தனக்கு தேவையான ஒவ்வொரு பொருளையும் எடுத்து கொண்டு இருக்க அவளுக்கு எதிரே வந்த பெண் மோதிக்கொண்டாள் அது வேறு யாருமில்லை கனகா தான்.
“ஹாய் கனகா நீங்களா”
“ம்ம் நானே தான் எப்படி இருக்கீங்க”
“ஆங் நல்லாருக்கேன். இங்க பாருங்க நீங்க எதுக்கும் கவலை படாதீங்க கனகா. என் மாமியார் கிட்ட எப்படியாவது பேசி உங்க வீட்டுக்கு வந்து பெண் கேட்க சொல்றேன். தைரியமா இருங்க. ” என்றாள் லதா ஆறுதலாக.
“லதா சிஸ் எனக்கு தெரியும் கார்த்திக் கண்டிப்பா கை விட மாட்டாரு. அப்படியே மறுப்பு சொன்னாலும் ஃபேமிலி எதிர்த்து போராடும் தைரியம் எனக்கு இருக்கு. ” என்று நம்பிக்கையாக கூறினாள் கனகா.
கனகா நடந்து சென்றதும் லதா மீண்டும் தனக்கு தேவையான பொருட்களை தேடிக் கொண்டிருந்தாள் அந்த சூப்பர் மார்க்கெட்டில்.
‘இந்த கடுகு பாக்கெட் எடுத்தோமா இல்லையா என்ற குழப்பத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள்’ மீண்டும் அவள் அங்கும் இங்கும் நடக்கும்போது சட்டென்று ஒரு ஆடவன் மீது மோதி கொண்டாள்.
ஆஹா இந்த முறை யார் மேல மோதி கிட்டும் என்று நிமிர்ந்து பார்த்தாள் லதா.
“நீ ….நீ உன்னை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே” என்றாள் லதா.
“ஆமா நானும் உங்களை எங்கேயோ பார்த்து இருக்கேன்” என்றான் அவனும்.
“ஐ திங்க் நீங்களும் நானும் ஒரே கம்ப்யூட்டர் கிளாஸ் படிச்சோம் நினைக்கிறேன்”இன்று லதா சொன்னதும் அவனுக்கும் நினைவு வந்தது.
“ஆமா எக்ஸாக்ட்லி இப்ப ஞாபகம் வந்திருச்சு உங்க பேரு லதா தானே”
“ஆமா ஆமா என் பேரு லதா உங்க பேரு வருண் தானே?” என்றதும் வருண் தலையசைத்தான்.
“எப்படி இருக்க வரும் இப்ப நீ என்ன பண்ணிட்டு இருக்க என்றாள் லதா.
“நான் இப்போ ஒரு பிஸ்னஸ் பண்ணிட்டு இருக்கேன். பினான்ஸ் பிஸினஸ் தான். அதாவது சீட்டு பிடிக்கிறது, ஷேர் ட்ரேட் பண்ணி கொடுக்கிறது , நகை லோன் கொடுக்கிறதுன்னு ஏதோ பண்றேன். ஓரளவு வருமானம் வருது .” என்றான் வருண்.
“வாவ் ப்ரில்லியண்ட் ” என்று புன்னகையித்தாள் லதா.
“நீ என்ன பண்ணிட்டு இருக்க லதா உன்ன பார்க்கும்போதே தெரியுது மேரேஜ் ஆயிடுச்சா அப்படின்னு . வீட்ல இருக்கியா இல்ல வேலைக்கு எங்கையாவது போறியா” என்றான் வருண்.
“இல்லை வீட்ல தான் இருக்கேன்”என்றதும்.
“நீ தப்பா எடுத்துக்கலைன்னா நான் ஒன்னு சொல்றேன் எவ்ளோ நாளைக்கு தான் வீடு குடும்பம்னு அதையே பாத்துட்டு இருக்கேன் உனக்குன்னு ஒரு கோல்ஸ் ஆச்சிவ் ன்னு எதுவும் இல்லையா”என்றான் வருண்.
“எனக்கு கோல்ஸ் பெருசா எதுவும் இருந்தது இல்லை, காலேஜ் முடிச்ச உடனே கல்யாணம் ஆயிடுச்சு சோ பெருசா எனக்கு எதுவும் யோசிக்கவே தோணல” என்றாள் லதா.
“ஹாஹா பொதுவா எல்லா கல்யாண பொண்ணு சொல்றதுதான் இது. ஆனால் ஒரு ஸ்டேஜ்ல இது உனக்கு போரடிச்சுரும் லதா” என்றான் வருண்.
“ஹாஹா நீ சொல்றது கரெக்ட் தான் ஆனால்…”என்று இழுத்தாள் லதா.
“என்ன ஆனா . இங்க பாரு நீ விருப்பப்பட்டால் என் கூட வந்து ஜாயின் பண்ணிக்கோ உனக்கு பைனான்ஸ் வொர்க் எல்லாம் கத்து தரேன் எனக்கு ஹெல்ப்பா இரு. மாசம் உனக்கு ஒரு சம்பளம் போட்டு கொடுத்திடறேன்” என்றதும்
அவளுக்கு இது சரி என்று தான் பட்டது ஆனால் உடனே முடிவு எடுக்கும் சூழ்நிலையில் அவள் இல்லை இதை கணவனிடம் சொல்லி பர்மிஷன் கேட்டுவிட்டு தான் முடிவு எடுக்க வேண்டும் என்று நினைத்திருந்தால் ஆனால் கோபியோ வெளிநாட்டில் இருக்கிறார் அலைபேசியில் தான் கேட்க முடியும் அப்படி கேட்டாலும் அவன் உடனே ஓகே சொல்வானா என்று தெரியாது.
“சரி வரும் உன் போன் நம்பர் குடுத்துட்டு போ உன்னை நான் காண்டாக்ட் பண்றேன்” என்றாள் லதா.
“இதோ இதான் என்னோட விசிட்டிங் கார்டு நீ எப்ப வேணாலும் என்னை காண்டாக்ட் பண்ணலாம்” என்று சொல்லிவிட்டு கிளம்பினான் வருண்.
இவளும் ஒரு வழியாக ஷாப்பிங் முடித்துவிட்டு பில்லிங் செக்ஷனில் வந்து நின்றால் அதற்கு ஏற்ற தொகையை கட்டிவிட்டு பையை எடுத்துக்கொண்டு வெளியே வந்தார் சுற்றி முற்றி பார்க்கும் போது கண்ணு கெட்டிய தூரம் ஆட்டோ எதுவும் கிடைக்கவில்லை பாதி தூரம் நடந்து கொண்டே வந்தாள்.
“அம்மா ஆட்டோ” என்று ஒரு ஆட்டோக்காரன் வந்து நின்றான்.
“ஆமாங்க … இங்க போகனும் எவ்ளோ ஆகும்”
“150 ரூபா மா”
சரி என்று ஏறிக்கொண்டாள் லதா. போகும் வழி எல்லாம் வருண் சொன்னதை நினைத்துக் கொண்டே சென்றாள் லதா.
‘இவன் சொல்ற மாதிரி ஒரு ஸ்டேஜ்ல இந்த லைஃப் போர் அடிக்க தான் செய்யும் அப்போ நம்முடைய கவனத்தை திசை திரும்ப நமக்கு ஒரு காரியம் இருக்காங்கப்பா வேணும் எவ்வளவு நாளைக்கு தான் வீடு அப்படின்னு இருக்க முடியும். இது என்ன சுத்த பைத்தியக்காரத்தனம் நாமளும் நம்ம கரியர் நோக்கி பயணிக்கலாமே.
ஆம் லதா கரியர் நோக்கி பயணிக்க உங்களுக்கு சம்மதமா வாசகர்களே?