அத்தியாயம் -13
முதல் நாள் வேலையை முடித்துவிட்டு வீடு வந்து சேர்ந்த லதாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
“என்ன தைரியம் இருந்தா உனக்கு. வீட்டுக்கு இவளை நீ கூட்டிட்டு வந்துருப்ப. திடுதிடுப்புனு இப்படி கூட்டிட்டு வந்தா ஊர் உலகம் என்னடா நினைக்கும் ” என்று கார்த்திக்கை வசைப்பாடிக் கொண்டிருந்தாள் தன் மகன் கார்த்திக்கை.
“ஐயோ அத்தை , தோளுக்கு மேல் வளர்ந்த புள்ளைய இப்ப எதுக்கு இப்படி திட்டிட்டு இருக்கீங்க ” என்று பதறியபடி ஓடினாள் லதா.
“வாத்தா வந்து பாரு உன் மைத்துனன் பண்ண வேலையை. இவளை இழுத்துட்டு வந்து நிக்கிறான் ” என்று கதவுக்கு அருகில் நிற்கும் கனகாவை காண்பித்து கூறினாள் லதாவின் மாமியார் மீனாட்சி.
“அ….ஐயோ, என்ன கார்த்திக் இந்த திடிர் முடிவு ” என்று மீண்டும் பதறியபடி வாயில் கை வைத்து கூற…இந்த முறை அமைதியாக இருந்த கார்த்திக் துள்ளி எழுந்தான்.
“அதானே ,இங்க நான் பண்றது மட்டும் தான் தப்பா தெரியுதுல? கல்யாண வயசுல நான் இருக்கிறப்போ என் மனசுல என்ன ஆசை இருக்கும்னு யாராவது அதை பத்தி கேட்டிங்களா? அண்ணன் கோபி 35, வயசுல கல்யாணம் பண்ணினா , நானும் அதே போல வயசாகி பண்ணனுமோ? எனக்கு கனகாவை பிடிச்சிருக்கு அவ வீட்ல ஒத்துக்கவே இல்லை,வேற வழி தெரியலை அதான் நான் இங்கே அழைச்சிட்டு வந்தேன்.
“இப்போ என்ன? அவ இந்த வீட்ல என் காதலியா இருக்க கூடாது ஆனால் மனைவியா இருக்கலாம்ல ? ” என்றபடி அவளை அழைத்துக்கொண்டு பூஜை அறை சென்றவன், அங்கிருந்த குங்குமத்தை எடுத்து நெற்றியில் வைத்துவிட்டு,அங்கு தொங்கிக்கொண்டு இருக்கும் அவனுடைய அப்பத்தாவின் தாலியை எடுத்து அவள் கழுத்தில் அணிவித்தான்.
“இங்க பாருங்க இனி கனகா என்னுடைய மனைவி. வேற எதுவும் இனி எங்களுக்கு தேவையில்லை. ” என்று அன்பாக பேசிய கார்த்திகை ஏறிட்டு பார்த்தால் தாய் மீனாட்சி. லதாவுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை திணறிக் கொண்டிருந்தாள் ஒரு பக்கம்.
“இந்த பாரமானதா இந்த கார்த்திக் பண்ண வேலையை இந்த பொண்ண கூட்டிட்டு வந்ததும் இல்லாம சாமி ரூம்ல நிக்க வச்சு தாலி வேற கட்டி இருக்கான். வீட்ல கோபி வேற இல்லாத நேரம். இந்த பொண்ணு வீட்டுக்காரங்க வந்து பிரச்சனை பண்ணா என்ன பதில் சொல்றது” என்று பதறிய தன் மாமியாரை ஆசுவாசப்படுத்தினாள் மருமகள் லதா.
“அத்தை அதெல்லாம் ஒன்னும் இல்ல பாத்துக்கலாம் விடுங்க. அந்த பொண்ணு வீட்ல யாருக்குமே விருப்பம் இல்லை அதனால தான் அந்த பொண்ணு நம்ம வீட்டு தேடி வந்து இருக்கு இதுக்காக இரண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணாம அப்படியே வச்சுக்கவும் முடியாது. கார்த்திக் திடு திடுப்புன்னு தாலி எடுத்து கட்டுனது தப்புதான். ஆனால் இனி என்ன பண்றது விடுங்க பாத்துக்கலாம்” என்றாள் லதா.
லதா எவ்வளவு தான் சமாதானம் கூறினாலும் மீனாட்சியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எவ்வளவு திட்டி தீர்க்க முடியுமோ அவ்வளவு திட்டி தீர்த்தாள் கார்த்தித்தை இதில் பற்றாக்குறைக்கு கனகாவுக்கு வேற சாபம் விட்டுக் கொண்டிருந்தாள்.
“நீ ஹாஸ்பிடல்ல என் புருஷன நல்லா பாத்துக்கிட்டேன் அப்படிங்கற ஒரே காரணத்துக்காக தான் உங்களை சும்மா விடுறேன்” என்று கையை நீட்டி கனகாவிடம் கோபமாக கூறினாள் மீனாட்சி.
“ஐயோ ஆண்ட்டி என் நிலைமையில் இருந்து கொஞ்சம் யோசிச்சு பாருங்க எங்க வீட்ல சுத்தமா ஒத்துக்கவே இல்ல நான் என்ன பண்ண முடியும். அதுக்காக கார்த்திகை மறந்துட்டு எல்லாம் என்னால இருக்க முடியாது” என்றாள் கனகா.
“போ எங்கேயாவது போ. என் வீட்டை தேடி ஏன் வந்த?” என்றுரைத்தாள் மீனாட்சி.
“மா….போதும் நிறுத்தமா இப்போ அவ நம்ம வீட்ல இருக்கிறது தான் பிரச்சனையா சொல்லு, நான் வேணும்னா அவளை அழைச்சிட்டு வெளியே போய்டுறேன். ” என்று கனகாவின் கையை பிடித்தப்படி நடக்க துவங்கியபோது லதா தடுத்தாள்.
“தம்பி ஏன் இந்த முடிவு, நிதானமா இருங்க அம்மா ஆதங்கத்தில பேசுறாங்க நீங்களும் ஏட்டிக்குப் போட்டியா பேசினா எப்படி ? ” என்று லதா அவனை தடுத்து நிறுத்தி கூறினாள். அதைக்கேட்டவன்.
“அண்ணி நீங்க கூட எனக்கு எந்த உதவியும் பண்ணல ல…உங்களை மலப்போல நம்பியிருந்தேன் ஆனால் நீங்கள் இதை பத்தி கண்டுக்காம விட்டுடிங்க இப்ப பாருங்க என் நிலைமையை”என்றான் கார்த்திக்.
“ஐயோ தம்பி அப்படி எல்லாம் இல்லை,இதை பத்தி வீட்ல எல்லார்கிட்டயும் பேசலாம்னு தான் இருந்தேன் ஆனால் அதுக்குள்ள இப்படியெல்லாம் நடந்துருச்சு “என்று தலை குனிந்தாள்
“ஆமா எல்லாரும் உங்க வேலையை மட்டும் கவனமா பண்ணுங்க, மத்தவங்கள பத்தி யாருக்கு கவலை” என்று ஆதங்க பட்டான் கார்த்திக்.
“இல்லை லதா இதெல்லாம் சரி வராது இவங்களை வீட்டை விட்டு அனுப்பிடலாம் ” என்று பிடிவாதமாக அவர்களை வெளியே அனுப்பி கதவை சாத்திக் கொண்டாள் மீனாட்சி.
வீட்டின் கதவை ஏறெடுத்து பார்த்துவிட்டு இந்த உறவுகளே இப்படித்தான் இல்ல.. என்றபடி மன வருத்தத்துடன் கனகாவை அழைத்துக் கொண்டு நடந்தான் கார்த்திக்.
‘அச்சோ இப்ப என்ன பண்றது இந்த அத்தை வேற பிடிவாதமா வீட்டை விட்டு அனுப்பிட்டாங்க. இப்போ இவங்க எங்க போவாங்க? ‘ என்று யோசித்த லதா உடனே உதவிக்காக வருணுக்கு அழைப்பு விடுத்தாள்.
முதல் ரிங்கில் போனை எடுத்தவன் “ஹலோ சொல்லு லதா ,என்ன கால் பண்ணிருக்க? என்ன விஷயம் சொல்லு” என்றதும் உடனே கண்ணீர் கொட்ட கொட்ட அனைத்தும் சொல்லி முடித்தாள் லதா.
“லதா ப்ளீஸ் டோன்ட் வரி. என்னுடைய போர்ஷன் ஒன்னு காலியா இருக்கு. உன் மச்சினரையும் அந்த பொண்ணையும் அங்க வந்து தங்கிக்க சொல்லு. எனக்கு வாடகை எல்லாம் எதுவும் வேணாம். அவங்க ஒரு நார்மல் லைப்க்கு வர வரைக்கும் உங்க தங்கிக்கிட்டும் . அது மட்டும் இல்ல அவங்க ரெண்டு பேருக்கும் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணி வச்சிருவோம். சட்டப்படி புருஷன் பொண்டாட்டியா அவங்க வாழ ஆரம்பிச்சா யாரும் பிரிக்க முடியாது” என்று ஆறுதலாய் பேசி போனை வைத்தான்.
நாம ஒரு பிரச்சனையில் இருக்கும் போது அல்லது மனசு வருத்தத்தோடு இருக்கும் போது யாரு நம்ம கிட்ட வந்து பேசினாலும் எமோஷனலா அவங்க கூட கனெக்ட் ஆகிடுவோம். அப்படித்தான் வருணும் லதாவும். லதாவுக்கு வருணை தெரியும் அவனுக்கும் அவளை தெரியும் இதை தாண்டி எந்த உறவும் இல்லை அப்படினாலும் அவங்களுக்குள்ள ஏதோ ஒரு கனக்டிவிட்டி இருக்கு என்பது தான் உண்மை. அதற்கு நட்பு என்று பெயர் வைத்தாலும் சரி வெல்விஷர் என்று பெயர் வைத்தாலும் சரி.
இதற்கிடையில் கோபியிடம் இருந்து ஃபோன் வந்தது..
“ஹலோ லதா நடந்தது எல்லாமே கேள்விப்பட்டேன் நான் இந்தியா வர டிக்கெட் போட்டுட்டேன். நான் வந்து எல்லாத்தையும் பாத்துக்குறேன் யாரும் எதுக்கும் வொரி பண்ணிக்காதீங்க” என்றான் கோபி.
“இல்லை கோபி ,நோ ப்ராப்ளம் நீங்க வரலைனாலும் பரவாயில்லை. நான் ஹேண்டில் பண்ணிக்கிறேன். என்னோட ப்ரண்டு வருண் ஹெல்ப் பண்றார் ஸோ நோ இஷ்ஷுஸ் ” என்று லதா சொன்னதும் சுருக்கென்று இருந்தது அவனுக்கு.
“என்னது என்ன சொன்ன?”
“இல்லை அது வந்து என் ப்ரண்டு வருண்…..”
“யார் அந்த வருண் நம்ம குடும்ப விஷயத்தில் தலையிட அவங்க யாரு? இதெல்லாம் சரி இல்லை. ஆமா உன்னை யாரு கண்டவங்க கிட்டலா உதவி கேட்க சொல்றது. “என்று கோபி சொன்னதும் சட்டென்று கோபம் பீறிட்டு வந்தது லதாவுக்கு.
“என்னது கண்டவங்களா யாரு கண்டவங்க அவன் என் ப்ரண்டு இன்னொரு வாட்டி இப்படி பேசாதீங்க.ஆபத்துக்கு உதவி செய்ய ஆள் கிடைக்கிறதே கஷ்டம் இதுல உதவி பண்ண வரவங்களை குறை சொல்றது சரியாவா இருக்கு. உங்களுக்கு வாழ்க்கையோட எதார்த்தமே புரியலைங்க ” என்றாள் லதா.
“என்னது வாழ்க்கையின் எதார்த்தம் எனக்கு புரியலையா உனக்கு தான் எதுவுமே புரியல. நீ ஒரு குடும்பத்துக்குள்ள இருக்க உன்ன சுத்தி புருஷன் மாமியார் மாமனார் என்று இத்தனை பேர் இருக்கும்போது எவனோ ஒருத்தன் அவனை போய் உதவி கேட்டு போயிருக்க…. நம்ம குடும்ப விஷயம் நமக்குள்ள இருக்கணும் அப்படிங்கிற சென்ஸ் கூட உனக்கு இல்லை” என்று கோபி அவளிடம் வாதாடினான்.
“என்னது எனக்கு சென்ஸ் இல்லையா”
“ஆமா பின்ன”
“சரிங்க உங்ககிட்ட ஒன்னு கேக்குறேன் நமக்கு கல்யாணம் ஆகி முழுசா இன்னும் ஒரு வருஷம் கூட ஆகல புருஷன் பொண்டாட்டி இந்த சமயத்துல தான் ரொம்ப அன்னோன்யமா இருக்கணும் ஆனா நீங்க எதை பத்தியுமே கவலைப்படாத வெளிநாட்டில் போய் இருக்கீங்க உங்களுக்கு கொஞ்சமாவது என் மேல என் குடும்பத்தினரையும் அக்கறை இருந்தா இப்படி போய் இருக்க மாட்டிங்க” என்று அழுது கொண்டே கூறினாள் லதா.
“வசதியா இருக்கணும் கார் வாங்கணும் பங்களா வாங்கணும். அப்படிங்கற ஆசை பொம்பளைங்களுக்கு நிறைய இருக்குதானே ? அந்த ஆசையை நிறைவேத்த தானே நாங்க வெளிநாட்டுக்கு போறோம். என்பது காலகட்டங்களில் இருந்த மாதிரி எந்த வசதியும் வேண்டாம் அப்படின்னு வயித்துக்கு வஞ்சனை இல்லாமல் இருந்தா போதும்னு இருந்தா நாங்க ஏன் இப்படி போக போறோம்.” என்று கூறினான் கோபி.
“வேணாம் கோபி இப்படியே பேசிட்டு இருந்தா எதுக்குமே முடிவு கிடைக்காது. இப்ப என்ன நீங்க கிளம்பி வரீங்க தானே வாங்க தாராளமா”என்று சொல்லிவிட்டு போனை வைத்தாள் லதா
வரும்போது ஒதுக்கி கொடுத்த ஒரு போர்ஷனில் கார்த்திக் கனகாவும் வசிக்க துவங்கினர். கழுத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் தாலியை கையில் ஏந்தியபடி பார்த்து கொண்டிருந்தாள் கனகா.
“என்ன கனகா அதையே பாத்துட்டு இருக்க நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடந்தது ல உனக்கு சந்தோஷம் தானே”
“இதை நினைச்சு சந்தோஷப்படுறதா இல்ல வருத்தப்படுவதா தெரியல கல்யாணம் அப்படிங்குறது ரெண்டு மனசு சம்பந்தப்பட்ட விஷயம் நெனச்சிட்டு இருந்தேன் ஆனா இப்ப தான் தெரியுது அது இரண்டு குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயம் அப்படின்னு. யாருக்குமே திருப்தி இல்லாத ஒரு கல்யாணம் இப்ப நமக்கு நடந்திருக்கு. ஆனா உங்க அம்மா அப்பா முன்னாடி லதா அக்கா முன்னாடி நடந்தது எனக்கு சந்தோஷம் தான் ” என்று கார்த்திக்கின் தோளில் தலை சாய்த்தபடி கூறினாள் கனகா.
“கல்யாணம் அப்படிங்கறது ரெண்டு மனசு சம்பந்தப்பட்ட விஷயம் தான் கனகா இதுல வருத்தப்படறதுக்கு என்ன குடும்பம் அப்படிங்கறது நம்மள ஆதரிக்கிற ஒரு வட்டம். அவங்களுக்கு பிடிச்சதை செஞ்சா தான் உன்னை ஆதரிப்பாங்க அவங்களுக்கு பிடிக்காததை செஞ்சினா எதிர்ப்பாங்க. அவங்க ஆதரவு இருந்தால் தான் கல்யாணம் நடக்கணும் அப்படின்னா இந்த உலகத்துல பாதி பேருக்கு கல்யாணமே நடந்திருக்காது” என்று சொல்லி அவள் தலையை வருடிக் கொடுத்தான்.
“நீங்க சொல்றது உண்மைதான் கார்த்தி கல்யாணம் அப்படிங்கறது ஒரு பீல் ஒரு உணர்வு அதில் ஒரு காதல் இருக்கணும். எந்த உணர்வும் இல்லாம குடும்பத்தோட சந்தோஷத்துக்காக சில பேர் கல்யாணம் பண்ணிக்கிட்டு இருக்கிற வாழ்க்கை அப்படியே ஏத்துக்கிட்டு தானும் சந்தோஷமா இல்லாம மத்தவங்களையும் சந்தோஷமாக வைத்துக்கொள்ள முடியாமல் அப்படியே வாழ்க்கை ஓட்டிடறாங்க. அந்த வகைல நான் கொடுத்து வைத்தவள் தான்” என்றாள் கனகா.
“எப்படியோ நீ புரிஞ்சுகிட்ட சரி” என்று அவள் நெற்றியில் முத்தமிட்டான்.
நாட்கள் இப்படியே போய்க் கொண்டிருந்தது கனகாவும் கார்த்திக்கும் அதே வீட்டில் வாழ துவங்கினர். இருவருக்கும் இடையே இருந்த பரஸ்பர அன்பினால் கனகா கருவுற்றிருந்தாள். இந்த செய்தி கார்த்திக் குடும்பத்துக்கு தெரிய வந்தது…
“டேய் பெரியவனே நம்ம கார்த்திக் ஓட பொண்டாட்டி முழுகாம இருக்காளாம் டா.. என்னதான் கோவமா இருந்தாலும் இந்த மாதிரி நேரத்துல அவங்க கூட இருந்தா நல்லா இருக்கும் இல்ல? நம்ம வேணும்னா அவங்கள சேர்த்துக்கலாமா?”என்று கோபியிடம் தாய் மீனாட்சி கேட்டாள்.
“சரி மா அதனால் என்ன ? தாராளமா சேர்த்துக்கலாம். ஆனால் ஒன்று செலவு கணக்கு எல்லாம் இரண்டு அண்ணன் தம்பியும் சரிக்கு சமமா தான் செலவு பண்ணனும். அவனுக்கு இப்போ குடும்பம் ஆயிடுச்சு இனி அவன் காசும் குடும்பத்துக்கு வேணும் “என்றான் கோபி.”
சற்று தயங்கியபடி மீனாட்சி சரி என்று தலையசைத்தாள்.
‘என்னமோ மணி மோட்டிவ் நமக்கு தான் இருக்கிற மாதிரி அன்னைக்கு பேசினாரு ஆனா இப்ப பாரு மணி மோட்டிவ் அவருக்கு தான் இருக்கு ‘ என்று நொடித்துக்கொண்டு நகர்ந்தாள் லதா.
“ஹலோ மேடம் என்ன முனுமுனுப்பு” என்றான் கோபி.
“ஒன்னுல சும்மா”
“கண்டிப்பா ஏதோ என்னை குறை சொல்லி இருப்பியே”
“யப்பா ஆள விடுங்க சாமி”
“ஹாஹா…ஆனாலும் உன் கூட சண்டை போடுறது நல்லா தாண்டி இருக்கு” என்றதும் அவனை முறைத்தாள் லதா.
தொடரும்.