அத்தியாயம் -15
‘ஆத்தங்கர மரமே அரச மர இலையே’ என்ற பாடல் எங்கோ ரேடியோவில் ஒலிக்க லதாவும் கோபியிடம் அப்படியே காத்தார நடந்து சென்றனர்.
“என்னங்க இந்த ஊர் எப்படி இருக்கு”
“ஊர் இல்லை லதா,இது சொர்க்கம்” என்றான் கோபி.
“அப்படியா அப்படி என்ன அதிசயம் கண்டிங்க “
“நிம்மதி,அமைதி ……” என்று ஈஈஈ என்று பல்லை காண்பித்தான்.
“அடேங்கப்பா அவ்ளோ பிரியமா இருக்கா “
“ஆமா லதா..எவ்ளோ ஹேப்பியா இருக்கேன் தெரியுமா “என்றான் கோபி.
“அது சரி நீங்க வெளிநாடு போய்ட்டா இதை மிஸ் பண்ணுவீங்களா”என்றாள் லதா.
“அப்கோர்ஸ் இதை மட்டும் இல்லை, உன்னையும் தான் “
“ரியலி” என்று கேட்டபடி ஓடினாள். அவளை பின்னே துரத்தியவாறு அவனும் ஓடினான். அங்கு ஒரு மாந்தோப்பு இருந்தது. அந்த வெயிலுக்கு அதுக்கும் இதமாக இருந்தது மரங்களின் நிழல், அங்கு இருவரும் குழந்தைகள் போல் ஓடிப்பிடித்து விளையாட ,அவளை எட்டி பிடிக்கும் வேகத்தில் தானும் விழுந்தான்,அவன் மீது அவளும் விழுந்தாள்.
“என்னங்க இது விளையாட்டு எந்திரிங்க”
“நீ எழுந்தா தானே நான் எழ முடியும்” என்றான் சிறு குறும்புடன்.
“ஐயோ சாரி” என்றபடி எழுந்தாள். ஏதோ காதலர்கள் போல இவர்களின் காதல் விளையாட்டு பார்க்க வேடிக்கை தான்.
“சரி லதா வீட்டுக்கு போவோம் வா, வீட்ல நிறைய வேலை இருக்கு” என்றான் கோபி.
“ஏன் கோபி சுண்ணாம்பு அடிக்க போறிங்களா” என்றாள் சிரித்துக்கொண்டே.
“அதெல்லாம் இல்லை நீ வா முதல்ல ” என்று அவள் கையை பிடித்து அவளை அழைத்து வந்தான்.
அறையினுள் இருவரும் நுழைய தாழிட்டு கொண்டான் கோபி. லதாவின் தந்தை சட்டென்று மாப்பிள்ளை என்று எதையோ சொல்ல முட்பட்டு வரும்போது..
“என்னங்க அறிவு இருக்கா உங்களுக்கு நீங்க பாட்டுக்கு ரூமுக்கு கிட்ட போய் மாப்பிள்ளையை கூப்பிடுறீங்க. முதல்ல இங்க வாங்க” என்றார் லதாவின் அம்மா.
“ஏ ராக்காயி எதுக்கு டி இங்கிட்டு வரச்சொன்ன ”
“ம்ம் சுத்த வெவஸ்தை கெட்ட மனிஷனா இருக்கீங்க சின்ன சிறுசுங்க ரூம் கதவை சாத்திட்டு இருக்காங்கன்னா ஏன் எதுக்குன்னு புரியாதா ? ஐயோ ச்ச போங்க”
“ஓ…சரி சரி இப்போ புரியுது டி.” என்று தலையை சொரிந்தார் ரங்கசாமி.
அவள் சேலை மடிப்பிற்குள் தன் விரல்களை துலாவ விட்டுக்கொண்டு இருந்தான் கோபி.
“என்னங்க திடிர்னு செம்ம ஃபார்ம்ல இருக்கீங்க”என்றாள் லதா.
“ஏன் டி பொண்டாட்டி இருக்க கூடாதா”
“இருக்கலாம் இருக்கலாம் ஆனால் ஏதோ ஹனிமூன் வந்த புது பையன் மாதிரி ஒரே ரொமாண்டிக்கா இருக்கீங்களே அதான் கேட்டேன் ” என்று புன்முறுவலுடன் கூறினாள் லதா.
“ஆமா லதா உண்மையை சொல்லனும்னா எனக்கு கோவா போனதை விட இங்க வந்தது தான் செம்ம ஹேப்பியா இருக்கு”
“ரியலி”
“யெஸ் டியர். பேசாம நாம இங்கேயே இருந்தடலாமா” என்றான் கோபி முகத்தை குழந்தை போல் வைத்துக்கொண்டு.
“எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை ஆனால் நீங்க எப்படி எல்லாம் விட்டு இங்க என்கூட இருப்பீங்கன்னு தான் சந்தேகமா இருக்கு” இவள் இப்படி பேசிக்கொண்டு இருக்கும்போதே அவள் சேலையை பாதி அவிழ்த்து இருந்தது.
“ம்ம் நீ பக்கத்துல இருந்தா எதை வேணாலும் விட்டு கொடுப்பேனே ” என்று அவளை அவன் மீது சாய்நத்தான்.
இருவரும் பரஸ்பர அன்பினால் இணைந்து மகிழ்ந்தனர். மாலை நேரமே ஆகியிருந்தது. சுட சுட டீ பஜ்ஜி ராக்காயி பரிமாறினாள்.
“மாப்பிள்ளை இந்தாங்க எடுத்துக்கங்க “
“தேங்க்ஸ் அத்தை”
“என்னது தேங்க்ஸா என்ன மாப்ளை நீங்க எனக்கு போய் தேங்க்ஸ் எல்லாம் சொல்லிட்டு “என்றாள் ராக்காயி.
“நல்லாருக்கு அத்தை பஜ்ஜி “
“ம்ம் அத்தையும் மருமகனும் மாறி மாறி பேசிக்கிட்டே இருந்தா எப்படி என் தட்டுல பஜ்ஜி காணோமே “என்றாள் லதா சிரித்துக்கொண்டே.
“பாத்திங்களா உங்க பொண்ணு ” என்று சிரித்தான் கோபி.
“ஆமா கோபி பாரேன் என் தட்டுல சுத்தமா பஜ்ஜி இல்லை ” என்று முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு கூற.. எல்லோரும் சிரித்தனர்.
நகர வாழ்க்கையில் இப்படி பேசி சிரிக்க கூட நேரமில்லாதது போல் இருக்கும். ஒரு வேளை நேரம் இருந்தாலும் சிலருக்கு அங்கு இயல்பாக இருக்க தெரியாது. ஏதோ ஒரு மன இருக்கத்துடனே இருப்பார்கள். அதற்காக கிராமத்தில் வசிப்பவர்களுக்கு மன இருக்கமே இருக்காது என்றெல்லாம் அர்த்தம் அல்ல….
ஒருவேளை கிராமத்தில் இருப்பவர்களுக்கு ஆடம்பர வாழ்க்கையை தேடி ஓட சந்தர்ப்பம் இல்லாததால் இருப்பதை வைத்துக்கொண்டு நிம்மதியாக இருக்கிறார்களோ என்னவோ.
மறுநாள் காலை பொழுது இனிதே விடிந்தது.
அதிகாலை நேரம் என்பதால் சீக்கிரமே எழுந்தாள் கனகா. அவள் எழுந்தது கூட தெரியாமல் கார்த்தி கவிழ்ந்த படுத்துக்கொண்டு நல்ல உறக்கத்திற்கு சென்றிருந்தான். இவள் இரண்டு முறை எழுப்பி பார்த்தாள் ஆனால் அவன் எழுந்திருக்கவில்லை எனவே அவள் குளியல் அறைக்கு சென்று குளித்து முடித்துவிட்டு சமையலறையில் நுழைந்தாள்.
“அத்தை நான் டீ போடட்டுமா”என்றாள் கனகா.
“இங்க பாரு சமையலறையில் லதா இல்லாத நாட்களில் நான் பார்த்துகிறேன் நீ இப்பதான் இந்த வீட்டுக்கு வந்து இருக்கே.. எது எங்க இருக்குன்னு கூட உனக்கு தெரியாது நீ போய் வாசல் பெருக்கி கோலம் போட போ” என்றாள் மீனாட்சி.
‘ச்ச என்ன இவங்க மூஞ்சில அடிச்சாப்ல சொல்றாங்க. சமையல் கட்டில் வேலை செய்றது என்ன அவ்ளோ பெரிய கஷ்டமா . எது எங்க இருக்குன்னு தெரியாதம்ல எனக்கு. ‘ என்று முகத்தை சுழித்தாள்.
சரி கோலமாவது போடுவோம் என்று எடுத்து கோலம் போட ஆரம்பித்தாள். அன்னைக்குன்னு பார்த்து புள்ளியும் வரலை கோலமும் வரலை ,அட இது என்னடா சத்ய சோதனை என்று நினைத்துக் கொண்டு கோலமிட்டாள்.
“ஆமா கோலம் போட சொன்ன அங்கேயே இருக்கிறதா போ போய் புருஷனுக்கு டவல் எடுத்து வை” என்றதும்.
“சரிங்க அத்தை ” என்று சென்றாள்.
“என்னங்க எழுந்திரிங்க ” என்று கார்த்திக்கை எழுப்ப முயன்றாள். அவனோ எழுந்து அமர்ந்து அவளை இழுத்து தன் மடியில் அமர்த்தினான்.
“என்னங்க குளிங்க போங்க”
“ம்ம் ப்ளீஸ் இன்னும் கொஞ்ச நேரம்”என்று சினுங்கினான்.
முதல்ல போங்க குளிக்க என்று எழுந்து அவன் கையை பிடித்து இழுத்தாள். அவனும் குளித்து முடித்து வந்ததும்.
“என்ன பொண்டாட்டி லஞ்ச் என்ன கட்டிருக்க எனக்கு” என்க.
“ம்ம் நான் எங்க சமைச்சன் கட்டுறதுக்கு”என்று சலித்துக்கொண்டாள்.
“ஏ…. எதுக்கு டி இந்த சலிப்பு “
“பின்ன என்னை எங்க சமைக்க விட்டாங்க “
“ஏன் நீ போய் உரிமையா நின்னு சமைக்க வேண்டியது தானே “
“அது எப்படி முடியும் அவங்க தான் விடவே மாட்டேன் ட்டாங்க “என்றாள் கோபமாக .
“சரி ரிலாக்ஸ் இதெல்லாம் போக போக சரியாகிடும் . சரி சரி லஞ்ச் பேக் ஆச்சும் உன் கையால் எடுத்து கொடு போ” என்றான் கார்த்திக்
அவளும் சமையலறைக்குள் மெதுவாக நுழைந்து லஞ்ச் பேகை எடுத்து வந்து அவனிடம் தந்தாள்.
“தேங்க்ஸ் பொண்டாட்டி ” என்றபடி விடைப்பெற்றான்
அவன் போனதும் இவளுக்கு வீட்டில் பொழுது போவேனா என்றது. என்ன செய்வது என்று தெரியாமல் அறையில் படுத்தபடி ஓய்வு எடுத்தாள். புத்தகம் ஏதேனும் வாசிக்க ஆவல் தொற்றிக்கொண்டது. தன் பையில் இருக்கும் ரமணிசந்திரன் நாவல் புத்தகத்தை எடுத்து வாசிக்க துவங்கினாள்.
வாசிக்க வாசிக்க ஆர்வம் அதிகமானது ஒரே மூச்சில் படித்து முடிக்க ஆசையும் வந்தது . அதை முழுவதுமாக படித்து முடிக்க
தூக்கம் கண்களை இழுத்தது அப்படியே உறங்கிப் போனாள்.
அங்கு ஊரில் உள்ள லதாவோ கோபியிடம்…
“என்னங்க கனகா பாவம் லோன்லியா ஃபீல் பண்ணுவா நானும் இல்லை, கார்த்திக் ஆபிஸ் போயிருப்பார் ,பாவம் என்ன பண்றாளோ மாசமா வேற இருக்கா ” என்றாள் லதா சற்று வருத்தமாக.
“அதெல்லாம் போக போக செட் ஆயிடும். ” -கோபி.
“நார்மலா கல்யாணம் ஆகி வந்து பழகுறது வேற இவ திடிர்னு வந்து அடைக்கலமாக வந்தது வேறங்க. அவ அம்மா அப்பா சப்போர்ட் இல்லாம கல்யாணம் ஆகிருக்கு.ஸோ அவளுக்கு நிறைய ஃபீலிங் இருக்கும்ங்க “
“சரி தான். ஆமா நீ ஏன் அங்க நடக்கிற விஷயத்தை இங்க கற்பனை பண்ணிட்டு திரியுற “- கோபி.
“ஏன் இங்க இருக்கிறப்போ அங்க நியாபகம் வரக்கூடாதா ” – லதா.
“வரலாம் வரலாம் ஆனால் எப்பவுமே இருக்கிற மோமண்டை என்ஜாய் பண்ணனும்” என்றான் கோபி.
“ஓகே இப்போ என்ன உங்களுக்கு என்ஜாய் பண்ணனும் அவ்ளோ தானே வாங்க தென்னந்தோப்பு போலாம் எங்க சித்தப்பா வீடு அங்க தான் இருக்கு இளநீர் வெட்டி சாப்டலாம் “என்று அழைத்து சென்றாள்.
“வாடி வாடி ராசாத்தி ” என்று சித்தி ஆசையாய் அவளை அழைத்தார்.
“மாப்பிள்ளை இந்தாங்க இளநீ சாப்பிடுங்க ” என்று உடனே இளநீர் வெட்டி தந்தார் லதாவின் சித்தப்பா.
“என்ன மாப்ள அப்படி பாக்குறீங்க ரங்கசாமி அண்ணனும் நானும் கூட பிறந்த அண்ணன் தம்பிங்க. ரொம்ப ஒற்றுமை அதே சமயம் ரொம்ப பூசிக்கவும் மாட்டோம் நீ நல்லாருக்கியா நான் நல்லாருக்கியா அப்படிங்கிற வாசனையாக பழகிட்டு போய்டுவோம். எங்களுக்கு கடவுள் குழந்தை பாக்கியம் தரலை. எங்க குடும்பத்துக்கு இருக்கிற ஒரே வாரிசு இந்த லதா புள்ள தான். எங்களுக்கு அப்றம் இந்த சொத்து லதாவுக்கு தான் ” என்று குடும்ப விவரம் முழுவதும் கூறினார் லதாவின் சித்தப்பா.
‘ம்ம் லதாவுக்கு இவ்ளோ பாசமான உறவுகளா பரவாயில்லை ‘ என்று மனதில் நினைத்துக்கொண்டு.
“சரிங்க மாமா சந்தோஷம் அப்போ நாங்க தோப்பை சுத்தி பாத்துட்டு அப்படியே கிளம்புறேன் ” என்று எழுந்தான் கோபி.
“கோபி போற வழியில் என்னோட மாமா வீடு இருக்கு வாயேன் போய்ட்டு வருவோம் ” – லதா.
“லதா வெயில் வேற வாட்டுது போலாம் லதா வீட்டுக்கு “
“ஏங்க எங்க மாமா பொண்ணு காலேஜ் ஜாயின் பண்ணிருக்கா அவளுக்கு வாழ்த்து கூட சொல்லலை ப்ளீஸ் வாங்க”
“சரி போவோம் ” என்று அங்கும் அவளுடன் சென்றான் கோபி.
“மாமா….” என்று ஓடிச்சென்று தன் தாய்மாமன் ரவியை அணைத்தாள். மாமி எப்படி இருக்கீங்க என்று மாமியையும் விசாரிக்க அவளை ஆசையாய் வரவேற்றனர்.
“ஆமா…..எங்க கவிதா ” என்று கேட்க அங்கே தான் ஒரு அதிர்ச்சி.