16.
கவிதாவை தேடியபோது அவள் வீட்டு பின் ஓரத்தில் இருக்கும் கிணற்றில் ஏறி நிற்க முயற்சி செய்து கொண்டிருந்த போது…
“ஏய் நில்லுடி” என்று கத்தியபடி லதா ஓடினாள்.
திரும்பி பார்த்த கவிதா..
“அக்கா” என்று ஓடிவந்து கட்டியணைத்தபடி அழுதாள்.
“கவி மா என்ன ஆச்சு ஏன் அழற” என்றாள் லதா.
“எனக்கு சாகனும் போல இருக்கு” என்று கதறி அழுதாள் , கவிதாவின் பெற்றோருக்கு அதிர்ச்சியாக இருந்தது சற்று ஆனால் சுதாரித்து என்ன என்று விசாரிக்க துவங்கினர்.
“கவி சொல்லு டி என்ன?” என்று ஆரம்பிக்கும் போதே கோபி சற்று விலகி நின்றான். ஏனோ அவர்கள் குடும்ப விஷயம் நமக்கு எதற்கு என்பதுபோல்.
“அக்கா எனக்கு என்ன வயசு ஆகுது இப்போ தான் 21 ஆனால் அதுக்குள்ள யாரு கல்யாணம் பண்ணி வைக்க சொன்னா இப்போ பாரு என் வாழ்க்கை இப்படி ஆயிடுச்சு ” என்றாள் கவிதா அழுதவாறு.
“என்ன ? என்ன சொல்ற நீ. உன் மாமியார் வீட்ல சந்தோஷமா தானே இருக்க? உன்னை உன் புருஷன் தானே இங்க வந்து விட்டு போனாரு கொஞ்ச நாள் இருன்னு, இப்போ என்ன ஆச்சு”
“அக்கா….. அக்கா….என்னால் அங்க நிம்மதியாவே இருக்க முடியலை. நானும் என் புருஷனும் சந்தோஷமா இருந்தாலும் சுற்றி இருக்கிறவங்க சந்தோஷமாவே இருக்க விடமாட்டாங்க போலருக்கு எதாவது ஒன்னு தலையீடு இருந்துட்டு இருக்கு. அவரோட அண்ணா அண்ணி தலையீடு ரொம்ப அதிகமா இருக்கு. நாங்க ஆசையா சினிமா போலாம்னு நினைப்போம் ஆனால் அன்னைக்குன்னு பார்த்து இந்த கோவில் போகனும் அந்த கோவில் போகனும் சொல்றாங்க. அதுக்கூட பரவாயில்லை அவங்க தேவைக்கு என் வீட்டுக்காரை வேலைக்காரன் மாதிரி யூஸ் பண்ணிக்கிறாங்க இவரும் பாசம் நேசம்னு கட்டுப்பட்டு அப்படி நடந்திக்கிறாரு. எல்லாத்தை விட என்னோட தினந்தோர வாழ்க்கையில நான் எப்படி நடந்திக்கிறன் இதெல்லாம் விமர்சனம் பண்றாங்க எனக்கு சுத்தமா பிடிக்கவே இல்லை கா….” என்று கூறி கதறி அழுதாள்.
“சரி சரி பார்த்துக்கலாம் விடு இதுக்கெல்லாம் கிணத்துல குதிக்க போவ அடியேய் பைத்தியம் ” என்று சமாதானம் கூறிய லதா…
“இந்த மாமியார் வீடுன்னா அப்படி தான் டி கவிதா. ஒன்னு நேரடியாக எதிர்ப்பாங்க இல்லைன்னா இப்படி வாழைப்பழத்தில் ஊசி ஏத்துறாப்ல நடந்துப்பாங்க. மொத்தத்துல எதாவது நோண்டி விடனும் அதான் அவங்களுக்கு வேணும். இங்க பாரு இதெல்லாம் சகஜம் இதுக்கெல்லாம் நீ வருத்தப்பட ஆரம்பிச்சா காலத்துக்கும் வருத்தப்பட்டுட்டே தான் இருக்கனும் “என்று ஆறுதல் கூறினாலும் அவள் சமாதானம் ஆகவில்லை.
“அக்கா…நான் மேற்கொண்டு படிக்கனும் அக்கா ஆசையா இருக்கு ஆனால் இப்போ இனிமே எப்படி நான் படிப்பேன் அதான் கல்யாணம் ஆயிடுச்சு” என்று வருந்தினாள் கவிதா.
“இங்க பாரு கவி படிக்கிறதுக்கும், கல்யாணம் ஆனதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. படிக்கனும்னா சொல்லு கரெஸ்ல போடலாம்” என்று தோளில் சாய்த்து கூறினாள்.
இவர்கள் பேசுவதை எல்லாம் கவனித்தான் கோபி. ம்ம் போச்சு க்ளாஸ் எடுக்குறா மொத்தமா . ஐயோ ஐயோ…என்று நினைத்தவன் சற்று விலகி நின்று எதையோ சிந்தித்தபடி இருந்தான்.
‘இந்த பொண்ணுங்க மனசுல இவ்ளோ ஆசை பாசம் இருக்குமா? கல்யாணம் ஆன பொண்ணுங்க ரொம்ப கஷ்டப்பட்டு தான் இருக்கிறாங்களோ ? ‘
“ஹலோ என்ன யோசனை” – லதா.
“ஆங் ஒன்னுமில்லை” – கோபி.
“இல்லையே எதையோ சிந்தித்தபடி இருக்கீங்க”
“ஐயோ ஒன்னுல சாமி ஆள் விடு. “
“சரி இன்னைக்கு நைட் கவிதாவை என் வீட்டுக்கு அழைச்சிட்டு போலாம்னு இருக்கேன் வாங்க அவளை அழைச்சிட்டு போலாம்”
“அடியேய் அப்போ ரொமான்ஸ் இல்லையா “
“ரொம்ப ஆசையோ”
“ஆங் இல்லை இருந்தாலும் ஆமா ஆசை தானே ” – கோபி.
“ஆசையே துன்பத்திற்கு காரணம் மிஸ்டர் கோபி”
“சரி சரி உன் போன் அடிக்குது பாரு ” என்றான் கோபி.
“இதோ பாக்குறேன் “
“ஐய்யோ வருண் போன் பண்றானே ” என்று போனை எடுத்தாள்.
“ஹலோ வருண்” என்று ஆரம்பிக்கும் போதே காட்டு கத்தல் அவனிடமிருந்து ஆரம்பித்தது.
“என்ன நினைச்சிட்டு இருக்க நீ உன் மனசுல ஆங். வேலைக்கு சேர்ந்த கொஞ்ச நாள்ல லீவு போட்டு ஊருக்கு போயிருக்க ஏன் இப்படி நடந்திக்கிற நீ ” என்றான் வருண் கோபமாக.
“சாரி..வருண்” என்றாள் நிதானமாக.
உடனே போனை பிடுங்கி”டேய் என் பொண்டாட்டியை திட்ட நீ யாரு. என்னமோ புருஷன் மாதிரி உரிமையா போன்ல திட்டுற. வேலைக்கு வரலைனா சம்பளம் பிடிச்சிக்க அதை விட்டுட்டு இது என்ன பழக்கம் ” என்றான் கோபி.
கோபியையே உற்று நோக்கினாள் லதா.
‘எனக்காக இவ்ளோ பரிந்சது பேசுறாரு பரவாயில்லை இதுவும் நல்லாதான் இருக்கு. பொண்டாட்டி மேல இவ்ளோ பொஸஸிவ் ம்ம் ரைட்டு ‘ என்று மனதுக்குள் சிரித்துக் கொண்டாள்.
கவிதா,லதா கோபி மூவரும் லதா வீட்டுக்கு வந்தடைந்தனர். நடந்ததை ராக்காயிடம் கூற கவிதாவை வாரி அணைத்தாள் ராக்காயி.
“நாங்க எல்லாம் இருக்கிறோம் கன்னு ஏன் இப்படி எல்லாம் முடிவு எடுக்கிற ” என்று சமாதானம் கூறினாள்
லதாவும் கவிதாவும் ரொம்ப நாள் பிறகு இரவு நேரம் முழுவதும் உரையாடலோடு கழித்தனர்.
“அப்றம் கவி இப்போ உன் மனசு லேசா ஆயிடுச்சா “
“ஆமா அக்கா ஆனால் நீ மட்டும் வரலைனா கிணத்துல குதிச்சிருப்பேன்”என்றாள் கவிதா.
“விழுந்தா அடுத்த நிமிஷமே நானோ இல்லை மாமாவோ இறங்கி தூக்கிருப்போமே டி லூசு ” – லதா.
“ஆமால உங்களுக்கெல்லாம் நீச்சல் தெரியும் னு மறந்துட்டேன்”
“ஹாஹா”- லதா.
மாமனாருடன் தனி அறையில் படுத்திருந்த கோபி.
‘ஐயோ இது என்னடா சத்திய சோதனை இந்த மாமனார் வேற டர்ரு புர்ருனு விட்டுட்டு இருக்கிறாரு நாங்க முடியலை டா சாமி’- மனதுக்குள் கோபி நினைக்க…
“என்ன மாப்பிள்ளை தூக்கம் வரலையா – மாமனார்.
“ஆமாங்க மாமா – கோபி”
“ஏன் காத்து பத்தலையா ” – மாமனார்.
“ஐயோ அதான் விட்டுட்டு இருக்கீங்களே மாமா- கோபி “
தூக்கம் வராமல் புரண்டு படுத்தான். என்னத்த பண்றது கொஞ்ச நேரம் காத்து வாங்கலாம் என்று தாழ்வாரம் வந்தான் அங்கு லதா அமைதியாக அமர்ந்திருப்பதை கண்டான். குரலை செருமியவன் அவளருகே செல்ல அதை கண்டவள்,அவன் அமர்வதற்கு இடம் தந்தாள்.
“என்ன லதா தூங்கலையா “
“இதே கேள்வியை நான் உங்க கிட்ட கேட்கணும்”
“ஹாஹா உங்க அப்பா பக்கத்துல செட் ஆகல அதான் “
“எனக்கும் கவிதா விடுற கொரட்டை டிஸ்டர்ப் ஆகுது அதான் வந்தேன்”
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி நின்றனர்.
“லதா….”
“சொல்லுங்க”
“கொஞ்சம் கிட்ட வாயேன் “
சற்று நெருங்கி வந்தாள் . அவனோ படாரென்று அவள் கன்னத்தில் முத்தம் பதித்தான்.
‘ரொம்ப சினிமாட்டிக்கா இல்லைனாலும் பரவாயில்லை இவருக்கும் ரொமான்ஸ் பண்ண தெரியுது ‘ என்று நினைத்து சிரித்துக்கொண்டாள்.
கொஞ்சம் பேசிவிட்டு இருவரும் தாழ்வாரத்திலே படுத்தனர். ஒருவர் தோளில் ஒருவர் சாய்ந்த படி உறக்கத்தில் இருந்தனர். மறுநாள் காலை ராக்காயி தாழ்வாரம் பெருக்கி கூட்டும் போது பார்த்து சிரித்து விட்டாள்.
“ஐய்யோ நைட் ஃபுல்லா இங்க தான் தூங்கினோமா அச்சச்சோ”என்று பதறினாள் லதா.
“பரவால்ல விடு நம்ம வீட்டு ஆளுங்க தானே பார்த்தாங்க என்றான் கோபி.
“அதுக்குன்னு இப்படியா” என்று வெட்கப்பட்டாள் லதா.
இதைப் பார்த்த கவிதா லதாவிடம் வந்து கேட்டாள்.
“அக்கா உங்க ரெண்டு பேருக்குள்ள இவ்வளவு அண்டர்ஸ்டாண்டிங் இருக்கா” என்று வினவ.
“அண்டர்ஸ்டாண்டிங் இருக்கா அப்படின்னு எனக்கு சொல்ல தெரியல ஆனா நம்ம ஊருக்கு வந்த கொஞ்ச நாள்ல ரொம்ப ஹேப்பியா இருக்க மாதிரி ஒரு ஃபீல்”என்றாள் லதா.
“அப்படியா அதுவும் நல்லது தானே பேசாம இங்கேயே இருந்திடுங்க நீயும் கோபி மாமாவும்”
“ஆமா இருக்கலாம் தான் ஆனால் வேலைக்கு என்ன பண்றது” என்றாள் லதா.
“அட இங்கேயே இருந்து ஒரு பெட்டி கடை போட்டு பொழச்சிக்கோங்க இந்த ஊர்ல பொழைக்கிறது எல்லாம் ஒரு விஷயமா” – கவிதா.
“கரெக்டு தான் ஆனா அங்க அவங்க அம்மா அப்பா தம்பி ,தம்பி வைப் என்று குடும்பமே அங்க இருக்கு அதெல்லாம் விட்டுட்டு இங்க வந்து இருப்பாரா. அது மட்டுமில்ல கொஞ்ச நாளா சிங்கப்பூர்ல வேலை கிடைச்ச அவர் அங்க தானே இருந்தாரு. ஏதோ லீவு நாள்ல இங்க வந்தாரு இன்னும் பத்து நாள்ல கிளம்பி போக போறாரு அப்புறம் எதுக்கு நம்ம தேவை இல்லாத கனவு காண வேண்டும்” என்றாள் லதா.
“அப்படி சிங்கப்பூர்ல எல்லாம் இருந்தவரு இந்த ஊர்ல சந்தோஷமா இருக்காருன்னா என்ன அர்த்தம் அவர் இதுவரைக்கும் ஏதோ ஒரு ஸ்ட்ரெஸ் ல இருந்து இருக்காரு இங்க அவருக்கு ஏதோ ஒரு மன நிம்மதி கிடைச்சிருக்கு அதனால உங்க ரெண்டு பேருக்குள்ள ஒரு நல்ல அண்டர்ஸ்டாண்டிங் இங்க இருக்கு சோ , எப்படி பட்ட சூழல்ல வாழ்றோம் அப்படிங்கிறதை பொறுத்து சந்தோஷம் அடங்கியிருக்கு.” என்று கவிதா சொன்னதை கேட்டவள்.
ஒரு சின்ன புன்னகை மட்டும் உதிர்த்துவிட்டு கிடந்தாள். நேரம் போய்க்கொண்டே இருந்தது.
“அக்கா வரியா அங்க சமோசா விப்பாங்களே வாங்கிட்டு வரலாமா “
“என்ன டி சாப்பிடனும் போல இருக்கா” -லதா.
“அப்படி இல்லை கா நம்ம ஊரு பாலாஜி மெஸ்ல சமோசா தான் பேமஸ். உங்க வீட்டுக்காரர் நம்ம ஊருக்கு புதுசா வந்துருக்காரு இது கூட வாங்கி தரலைனா எப்படி”
சரி வா போலாம் என்று இருவரும் காத்தோட்டமாக மாந்தோப்பு வழியே நடந்தனர். போகும் வழியெங்கும் தெரிந்தவர்கள்,இவர்களிடம் பேசிவிட்டு செல்லவே வெகு நேரம் ஆனது.
பாலாஜி மெஸ், சொல்லும் அளவு பெரியது அல்ல, ஆனால் அந்த ஊரில் எந்த விசேஷம் நடந்தாலும் அங்கு தான் ஆர்டர் பரக்கும். ஒரு நீண்ட பெஞ்ச் நாலு நாற்காலி முனையில் கல்லா பெட்டி . சமையலறை ஒன்று , ஆனால் சும்மா சொல்லக்கூடாது, சமையலறை அவ்ளோ சுத்தமாக இருக்கும்.
இதோ பாலாஜி மெஸ் வந்தாச்சு.
“அண்ணே ஆறு சமோசா”
“இதோ மா”
இருவரும் அந்த சமோசா பொட்டலத்தை எடுத்துக் கொண்டு கூடவே ஒரு கலர் பாட்டிலும் வாங்கிக்கொண்டு கிளம்பினர். மறுபடியும் அதே மாந்தோப்பு வழியாக தான் நடந்து வந்தனர் சிலு சிலுவென்று காற்று. அந்த தூய காற்றை சுவாசித்தபடி இருவரும் நடந்து வந்தனர். வீட்டை நெருங்க இன்னும் சற்று தூரமே . இவர்கள் நடந்து வருகையில் இவர்களுக்கு எதிரே ஒரு கூட்டம் கூச்சலாய் இருந்தது.
தொடரும்.