19.
ரித்விகாவின் வருகை சற்று சங்கடங்கள் தந்தாலும் நீண்ட நாள் கழித்து வந்த அவளின் காரணம் தான் என்ன என்பதை தெரிந்து கொள்ள சற்று ஆர்வமாக இருந்தான்.
“என்னங்க ரொம்ப நாள் கழிச்சு உங்க ப்ரண்டு வந்துருக்காங்க பேச நிறைய இருக்கும் தானே இரண்டு பேரும் பால்கனில உட்கார்ந்து கொஞ்ச நேரம் பேசிட்டு இருங்க நான் இரண்டு பேருக்கும் காபி கொண்டு வந்து தரேன்”- லதா.
“ரொம்ப தேங்க்ஸ் லதா” என்றாள் ரித்விகா. கண்களால் சரி என்பது போல் நகர்ந்தாள் லதா.
‘அன்னைக்கு இதே பிரைவசி யுவி எனக்கு கொடுத்ததினால் தான் கௌதமை அன்னைக்கு மீட் பண்ண முடிஞ்சது அவன் மனசுல இருக்குறது தெரிஞ்சுக்க முடிஞ்சது. அதே போல் தான் இன்னைக்கு ரித்விகாக்கு நான் கொடுத்த ப்ரைவேசி. இரண்டு பேரும் ப்ரண்ட்ஸ் தானே பேசட்டும் ‘ என்று நினைத்தவாறு காபி தயாரித்தாள். காபியை மட்டும் வழங்கிவிட்டு இவள் ஹாலில் வந்து அமர்ந்தாள்.
“காபி எடுத்துக்க ரித்விகா ” – கோபி.
“ம்ம் நீயும் எடுத்துக்க கோபி” – ரித்விகா
“அப்றம் என்ன விஷயமா இங்க வந்த ரித்விகா. நீயும் நானும் சந்திக்கிறது இதுவே கடைசி தடவையா இருக்கட்டும். இது உனக்கே நல்லா இருக்கு? நான் ஹேப்பியா என் பொண்டாட்டி கூட நிம்மதியாக இருக்கேன் இந்த சமயத்தில் நம்ம விஷயம் தெரிய வேணாம் நினைக்கிறேன் புரிஞ்சிக்க ,இனி உனக்கும் எனக்கும் எந்த தொடர்பும் வேணாம் ” என்றான் கோபி.
“இங்க பாரு கோபி உன் வாழ்க்கை கெடுக்கிறதுக்காகவோ இல்ல உன்ன பழி வாங்கறதுக்காக இல்ல உனக்கு சும்மா குடைச்சல் கொடுப்பதற்காகவும் நான் வரல, கடைசியா உன்ன ஒரு வாட்டி பார்த்து பேசிட்டு போலாம்னு தோணுச்சு வந்தேன் அவ்ளோ தான்” என்றாள் ரித்விகா.
“கடைசியாவா?”
“ம்ம் யெஸ் “
“என்ன இப்படி சொல்ற”
“லுக் மிஸ்டர் கோபி,எங்க அப்பா மருத்துவ செலவுக்காக உன் கிட்ட நாடகம் ஆடி பணம் பிடுங்கினேன். உன் கூட பழகிய நாட்கள் அதே சமயம் மறக்கவும் முடியாது, எனக்கு புதுசா ஒரு வாழ்க்கை துவங்க போகுது ,என்னோட ரிலேட்டிவ் மூலமா வந்த வரன் ,எனக்கு அவர்க்கூட சீக்கிரம் கல்யாணம் ஆக போகுது. ஏற்கனவே மனைவியை இழந்து தவிக்கும் அவருக்கு வாழ்க்கை தரப்போறேன்,நான் பண்ண தப்புக்கெல்லாம் பரிகாரம் தேடிக்க போறேன், நம்ம இரண்டு பேர் விஷயம் அவருக்கும் தெரியும், ஸோ ஒரு நல்ல புரிதல்ல தான் வாழ்க்கை ஆரம்பிக்க போகுது. அப்றம்……”என்று நிறுத்தினாள்.
“என்ன சொல்லு….”
“உன்கிட்ட பிடுங்கிய பணம் கொஞ்சம் கொஞ்சமாக திருப்பி தர முடிவு பண்ணிருக்கேன். ” என்க.
“வேணாம் ரித்விகா தரவேண்டாம் , உனக்கு ஹெல்பா அந்த பணம் இருந்துச்சுல அதுவே போதும் ” – கோபி.
“கோபி ,நம்ம விஷயம் லதாவுக்கு தெரிய வேண்டாம். அதை அவங்களுக்கு சொல்ல ட்ரை பண்ணாத , நடந்தது நடந்ததாவே இருக்கட்டும் ” என்றாள் ரித்விகா
“ஏன் ஆக்சுவலி சொல்ல வேணாம்னு நீயே சொல்ற ” என்றான் கோபி.
“பொண்ணுக எவ்ளோ பொஸஸிவ்ன்னு ஒரு பொண்ணா எனக்கு நல்லா தெரியும். பொண்ணுங்களுக்கு உலகமே புருஷன் தானே? ” – ரித்விகா
“ஹாஹா உண்மை தான் “- கோபி.
“உனக்கு என்மேல் கோபம் எதுவும் இல்லை தானே ” என்றாள் ரித்விகா .
“இல்லை இல்லை,மனசு லேசா இருக்கு. எனக்குள்ள இருந்த கில்டி கொஞ்சம் குறைஞ்சது ” என்றான் கோபி.
“தட்ஸ் குட்,அப்போ நான் கிளம்புறேன் “என்று எழ எத்தனிக்கும் போது.
“இன்னும் கொஞ்ச நேரம் இங்கே இருக்கலாமே ” என்றான் கோபி.
“தேவையில்ல கோபி வந்த வேலை முடிஞ்சது நான் கிளம்புறேன். வெளியே உன் மனைவி காத்துட்டு இருக்கா.. என்னதான் அவங்க பேசுறதுக்கு ப்ரைவேசி கொடுத்தாலும் அதை ஓவர் அட்வான்டேஜ் எடுத்துக்க விரும்பலை ” என்றாள் ரித்விகா.
கடைசியாக ஒருமுறை கைகளை குலுக்கி விடைப்பெற்றாள் ரித்விகா. ரித்விகா பற்றிய பயம் மொத்தமாக போனது அவனுக்கு.
…….
……
ஒரு மாதம் கழிந்தது.
நம் கதாநாயகி லதா கார்டனில் வாக்கிங் செய்து கொண்டு இருந்தாள். அந்த நேரம் அந்த லிவிங் கப்புல்ஸ் வருவதை கண்டாள். கழுத்தில் தாலி இல்லை காலில் மெட்டி இல்லை ஆனாலும் இருவருக்கும் இடையே உள்ள அந்த பரஸ்பர காதல் அவளுக்கு புரிந்தது.
“மித்ரா டார்லிங், உனக்கு நான் என்ன சொன்னேன் கொஞ்சம் நாள் ஆபிஸ் லீவு போட்டு ரெஸ்ட் எடு அப்போ தானே உடல் குணமாகும்” என்க.
“இல்லை மதன் ,ஐயம் ஓகே ” என்று அவளுக்கே உரிய அந்த முக பாவனையில் கூறினாள்.
‘ம்ம் இதுவே கல்யாணம் வாழ்க்கைல பொண்டாட்டி வேலைக்கு போக புருஷன் கிட்ட அனுமதி வாகனும்,இங்க பாரு காட்சியை என்று வியந்தாள் லதா’
லதா வாக்கிங் செய்வதை கண்ட மதன் மற்றும் மித்ரா ஓடி வந்து, என்ன சிஸ் வாக்கிங்கா,உங்களை பாக்கவே முடியலையே வீட்லயே என்ன பண்றீங்க?, போர் அடிச்சா இப்படி கார்டன் பக்கம் வரலாமே என்க…
“ஹாஹா கண்டிப்பா வரேன் ” என்று புன்னகையுடன் கூறினாள் லதா.
லதா முன்பே மித்ராவும் மதனும் கட்டி அணைத்தவாறு “ஓகே டார்லிங் இட்ஸ் டைம் அப் இரண்டு பேரும் சேர்ந்து ஈவ்னிங் டிபன் ரெடி பண்ணுவோம் வா என்று பேச…அதையும் ஆச்சரியமாக பார்த்தாள் லதா.
“பை சிஸ் ” என்று இருவரும் விடைப்பெற்றனர்.
‘நல்லாருக்கே இவங்களை பாக்குறப்ப , வாழ்க்கையில் பரஸ்பர காதலோடு ஒரு பொண்ணும் பையனும் வாழ்றதுக்கு எந்த சம்பிரதாயம் தேவையில்லை போலருக்கு, என்று நினைத்து தனக்குள் சிரித்துக் கொண்டாள் ‘
அன்றிரவு இவர்களை பற்றி கணவரிடம் பேசிக்கொண்டு இருந்தாள்.
“என்னங்க மதன் மித்ரா ரிலேஷன்ஷிப் எவ்ளோ அழகா இருக்கு தெரியுமா”,- லதா.
“ம்ம் பார்த்துருக்கேன் லதா”
“இது நம்ம ஊர்ல சாத்தியமில்லாத / சமுதாயத்தில் ஒத்துப் போகாத விஷயம் என்றாலும்,இதுல இருக்குற ஹேப்பினஸ் ரொம்ப அழகா இருக்கு” – லதா.
“அப்படினா இவர்களுக்கு நடுவுல பிரச்சனை எதுவுமே வராது நினைக்கிறியா லதா” – கோபி.
“,வரும் வரும் ஆனா அது எல்லாமே மறுநாள் மறந்து போற அளவு சின்னதா தான் வரும். புயல் அடிக்கிறாப்ல எதுவும் இருக்காது தோணுது. ” என்றாள் லதா.
“எப்படி சொல்ற” என்று தோள்களை உயர்த்தினான் கோபி
“யோசிச்சு பாருங்களேன் கணவன் மனைவி நடுவுல இருக்கிற பொஸஸிவ் அவங்க நடுவுல அந்த அளவு இருக்காது. ஏன்னா பிடிக்கலைனா விலகிடுவாங்க நம்ம பார்ட்னர் னு மனசை தெளிவு படுத்தி தானே இந்த ரிலேஷன்ஷிப் வாழ்க்கையில் ஈடுபடுறாங்க,அதே போல் சுத்தி இருக்கிற சொந்தங்கள்னால வர குறை நிறைகள் எதுவுமே இருக்காது,அப்றம் கமிட்மென்ட் எதுவும் கிடையாது லைக் வீடு வாங்கனும்,கார் வாங்கனும் குழந்தை பெத்துக்கனும் ஸோ….. இதனால ப்ராப்ளம் எதுவும் பெருசா வர வாய்ப்பு இல்லை…..” என்றாள் லதா.
“எல்லாம் ஓகே தான் லதா ஆனால் insecure ஃபீல் வரும்ல ?” என்றான் கோபி.
“உண்மை தான். இந்த ரிலேஷன்ஷிப் எப்போ வேணும்னாலும் பிரிஞ்சிடும் அப்படிங்கிற பயம் இருக்கும்*- லதா.
அன்றைய இரவு அப்படியே கழிந்தது. மறுநாள் காலை பொழுது இனிதே விடிந்தது. எப்போதும் அன்றாட வேலையை பார்த்து விட்டு அசதி காரணமாக சற்று நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டு இருந்தாள் லதா.
‘என்னன்னு தெரியலை இன்னைக்கு ரொம்ப அசதி,கை கால் எல்லாம் வலிக்குது வாமிட் வர மாதிரி இருக்கு ‘ என்று நினைத்தவாறு படுத்தாள். அந்த நேரம் பார்த்து கனகா போன் செய்ய…
“ஐயோ அக்கா பயப்படாதீங்க இது குட் நியூஸா கூட இருக்கலாம். செக் பண்ணி பாருங்க” – கனகா.
“அப்படிங்கிற ? பட் நெகட்டிவ்னா மனசு வருத்தப்படும் னு யோசிக்கிறேன்”
“ஆமா நீங்க அப்படியே டாக்டர்” – கனகா.
“ஐயோ என்னோட உணர்வு உனக்கு புரியலை கனகா”- லதா.
“அக்கா ஒரு விஷயம் நடக்கிறதுக்கு முன்னாடியே நீங்க நெகட்டிவா யோசிச்சா எப்படி பாஸிட்டிவ் எண்ணத்தை முதல்ல உருவாக்குங்க . கன்சிவ் ஆயிருந்தா சந்தோஷம் தானே?” என்றாள் கனகா.
“நீ சொல்ற மாதிரி நடந்தா உனக்கு சக்கரை தான் போடனும் வாய்ல ” என்ற லதாவின் பேச்சை கேட்டு சிரித்தாள் கனகா.
“என்ன கனகா சிரிப்பு “
“இல்லை சக்கரையை கொரியர்ல அனுப்பி வைப்பிங்களோ “- கனகா.
“குசும்பு காரி” – லதா
இருவரும் சிரித்து பேசிவிட்டு போனை வைத்தனர். கனகா சொன்னது போல் நல்ல செய்தியாக இருக்கலாம் ஆனால் இதை எப்படி செக் பண்றது ? ஹாஸ்பிடல் போகனும் இல்லைனா ப்ரெக்னன்ஸி கார்டு வாங்கி செக் பண்ணனும்…ம்ம் இங்க யாரை கேட்கிறது என்று யோசித்தபடி அமர்ந்திருக்க…. பார்வதி வந்து கதவை தட்டினாள்.
“வாங்க பார்வதி…”
“என்ன லதா ஒரு மாதிரி டல்லாவே இருக்கீங்க உடம்புக்கு எதுவும் முடியலையா “?
“ஆங் அதெல்லாம் ஒன்றுமில்லை”என்றாள் லதா,தன் அசதியை முகத்தில் காட்டாதவாறு ஆனால் அதையும் மீறி பார்வதிக்கு புரிந்தது.
“இல்லை லதா சம்திங் ராங் ” – பார்வதி.
“அது வந்து நான் டாக்டரை பார்க்கனும்னு நினைக்கிறேன் ப்ரெக்னன்ஸி இருக்கும்ன்னு தோணுது கன்பார்ம் பண்ணனும் இங்க ஹாஸ்பிடல் எங்க இருக்கு. ” என்றாள் லதா.
“வாவ் தட்ஸ் குட், ஹாஸ்பிடல் தானே நம்ம கேட்டட் கம்யூனிட்டி ஹாஸ்பிடல் பக்கத்து கேம்பஸ்ல இருக்கே தெரியாதா உங்களுக்கு. அட வாங்க அழைச்சிட்டு போறேன் ” என்று அவளை அழைத்துக்கொண்டு ஹாஸ்பிடல் செல்ல…
அங்கு டாக்டரை மீட் பண்ண சில பார்மாலிட்டிஸ் முடித்துவிட்டு அமர்ந்தனர்.
“என்ன பார்வதி இவ்ளோ பார்மாலிட்டிஸ் இங்க”
“ஹாஹா பின்ன உங்க ஊர் மாதிரி நேரா டாக்டர் ரூமுக்கு எல்லாம் போக முடியும் நினைச்சிங்களா . எல்லாம் சிஸ்டமேட்டிக்கா நடக்கும். இதோ இப்போ நர்ஸ் வந்து உங்களை அந்த வார்டுக்கு அழைச்சிட்டு போவாங்க வெயிட் பண்ணுங்க”- பார்வதி.
நர்ஸ் உடனே புன் சிரிப்புடன் வந்து அனுசரிப்பு தந்து அவளை தோள் மீது கை வைத்து அழைத்து சென்று யூரின் டெஸ்ட் எடுப்பதற்காக அவளை அறிவுறுத்த அவளும் தன் சேம்பிள் பாட்டிலை எடுத்து நர்ஸிடம் தந்தாள்.
“டாக்டர் வந்து செக் பண்ணுவாங்க , இந்த ஹாஸ்பிடல் ட்ரஸ் போட்டுக்கங்க ” என்று அறிவுறுத்தினார் செவிலியர்.
அவளது யூரின் சேம்பிள் லேபுக்கு சென்றது.
“ஹலோ மிஸஸ் லதா ” என்று புன்னகையுடன் மருத்துவர் வந்தார் அவர் பெயர் டாக்டர் ஜேம்ஸ் .
கையில் அவர் க்ளவுஸ் அணியும் போதே லதாவுக்கு படபடப்பு அதிகமானது ….
திக் திக் திக் திக்…என்று இதயம் அடித்துக் கொண்டது. ஜென்ட்ஸ் டாக்டர் என்பதால் கூச்சம் ஒருபக்கம் அவளை தொற்றிக்கொண்டது. கண்களை இருக மூடினாள்.
இரண்டே நிமிடம் தான்….கண்களை திறந்தாள் லதா.
“இப்போ நீங்க உங்க உடைக்கு மாறிக்கலாம்” என்று ஆங்கிலத்தில் நர்ஸ் கூறியதும் அவளுடைய உடைகளுக்கு மாறினாள். அந்த வார்டு விட்டு வெளியே வந்து அமர்ந்தாள்.
“என்ன லதா டெஸ்ட் பண்ணாங்களா “- பார்வதி.
“ம்ம் பண்ணாங்க பார்வதி ஆனால் இன்னும் எதுவும் சொல்லலியே “
“வரும் வரும் வெயிட் பண்ணுங்க ” என்றாள் பார்வதி ஆனாலும் லதாவால் இயல்பாக இருக்க முடியவில்லை.
லதா கன்சிவ் ஆயிட்டாளா? அடுத்த எபிசோட் வரை காத்திருக்கவும்.
தொடரும்.