பொண்ணுங்களுக்கு பாதுகாப்பே இல்லப்பா இந்த ஊர்ல’ என்று யோசித்துக் கொண்டவள், ‘எந்த ஊரிலும் பாதுகாப்பும் இல்லை’ என்று நினைத்துக் கொண்டாள்.
பின்பு பத்திரமாக போக வேண்டும் என்றால்., ‘எவ்வளவு சாதாரணமாக கிளம்பி போகிறோமோ அவ்வளவுக்கு நல்லது’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.
அப்போது அவளே அவள் மனதிற்கு தைரியம் சொல்லிக் கொண்டாள்.
அவள் தோழிகள் ஏற்கனவே சொல்லி இருந்தபடி ‘தனக்கு எதுவும் தெரியாது என்பதை எங்கும் காட்டிக் கொள்ளக் கூடாது., அது மட்டும் அல்லாமல் ஓரளவு தமிழ் வாசிக்க தெரிந்ததால் அதை வைத்து என்ன இது என்பதை வாசித்து தெரிந்து கொள்ளலாம்., யாரிடமும் அது என்ன இது என்ன என்று கேட்டால் தான் பிரச்சினை வரும்’ என்று யோசித்துக் கொண்டிருந்தவர்களுக்கு தப்பிக்கும் மார்க்கம் கிடைக்க அன்றிலிருந்து முடிவு செய்தது தான் துணி எடுக்கும் இடத்திலிருந்து தப்பிப்பது.,
ஆனாலும் அவ்வப்போது அவள் தன்னை நினைத்தே சிரித்து கொள்வாள். ‘சினிமா பார்த்த உடனே மைண்ட் எப்படி எல்லாம் போகுது’ என்று யோசித்தவள்.
‘அத்தைக்கு இருக்கிறது பையனா பொண்ணா ன்னு கூட தெரியாம அத்தை பையன பத்தி எல்லாம் யோசிக்கிறோமே., அதுவும் நம்மள விட சின்ன பையன்.,
ஒருவேளை ஒன்றாக வளர்ந்திருந்தால்., அவனை தனது தம்பியாக கூட அவள் பார்த்திருக்க கூடும்., என்று நினைத்து சிரித்துக் கொண்டவளுக்கு., மனதில் அட்லீஸ்ட் ஒன்னா வளர்ந்திருந்தால் ஹெல்ப் பண்ணி தப்பிக்கவாது வைக்க ஒரு ஆள் இருந்திருக்கும்., அது நல்லா இருக்குமே’ என்று யோசித்துக் கொண்டே தனக்குள் புலம்பி கொண்டு இருந்தாள்.
இதையெல்லாம் இப்போது யோசித்துப் பார்த்தவளுக்கு ‘யார்கிட்டயும் ஹெல்ப் கேட்க முடியாது என்ன பண்ண’ என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.
மறுநாள் புடவை எடுக்க போவதாக இருக்க அன்று இரவு நண்பர்களுடன் தோழிகளிடம் பேசும்போது என்ன செய்யலாம் என்று கேட்டிருந்தாள்.
அவர்களோ “உன் கண்ணுல சின்ன பயம் கூட தெரியக்கூடாது., தப்பிச்சு போகும் போது ஏதோ பழகுன இடத்துல போற மாதிரி தான் நீ போகணும்., அப்படி போனா மட்டும் தான் நீ போறதில் அர்த்தம் இருக்கு., எங்கயாவது மாட்டிகிட்டா என்ன பிரச்சினை பெருசாயிடும்., அது மட்டும் இல்லாம உங்க அப்பாக்கு தெரியாத அளவுக்கு எப்படி போகனுமோ போ., நார்மலா கிளம்பாத கொஞ்சம் நல்லாவே கிளம்பி போ” என்று சொன்னார்கள்.
“நார்மலா கிளம்பினால் பாக்குறதுக்கு பயந்த பொண்ணு மாதிரி தெரியும்., கொஞ்சம் பாக்குறதுக்கு கெத்தா கிளம்பி போனா தான் தப்பிச்சு போகும் போது நல்லா இருக்கும்” என்று சொன்னாள்.
“லூசாடி நீ நல்லா கிளம்பி போகனும் னா., நகை அள்ளி போட்டுட்டு., பட்டு சாரியெல்லாம் கட்டிக்கிட்டு போக சொல்றியா., நான் தப்பிக்க போகவேன்டா., யாராவது என்னை கடத்திட்டு போயிடுவாங்க., இங்க உள்ள சிட்டுவேஷன் அப்படித்தான் இருக்கு”., என்று சொன்னாள்.
“இந்தியால இல்ல., நீ எந்த ஊர்ல நகை எல்லாம் அள்ளி போட்டு தனியா போனாலும் கடத்திட்டு போக தான் செய்வாங்க., அதை பத்தி எல்லாம் சொல்லல., டிரஸ் பண்றது நீட்டா பண்ணிட்டு போ., ரொம்ப சிம்பிளா போகாதே”., என்று சொன்னாள்.
“சரி சரி தப்பிக்க போறேன் அது எப்படி போனா என்ன” என்று சொன்னாள்.
“சத்தம் போட்டு சொல்லாதடி உங்க அப்பா காதுக்கு கேட்டுச்சுனா., இதுதான் வாய்ப்பு ன்னு நாளைக்கு கடைக்கு கூட்டிட்டு போக மாட்டார்”., என்றனர்.
“அவர் கடை கூட்டிட்டு போகலை னா நான் இங்கிருந்து இப்படியே போய்டுவேன்”., என்று சொன்னாள்.
“அடிப்பாவி ஒரு முடிவோட தான் இருக்க., என்று கேட்டனர்.
“நான் கண்டிப்பா நாளைக்கு தப்பிச்சுட்டு உனக்கு போன் பண்றேன்”., என்று சொன்னாள்.
“ஏன் என்னைய மாட்டி விடறதுக்கா” என்று கேட்டாள்.
“ஏன்டி நீ எப்படி மாட்டுவ., உன்னை வந்து பிடிக்கவா போறாங்க., அவங்க உன்கிட்ட கேட்டா., எனக்கு தெரியாது அப்படின்னு சொல்லு” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே,
வெளியே லைட் போடும் ஸ்வீச் சத்தம் கேட்டவுடன்.,
“யாரோ வர்ற மாதிரி இருக்கு போனவை” என்று சொல்லி விட்டு அவசரமாக போனை கட் செய்து விட்டு ஃபோனை ஆஃப் பண்ணி தலையணைக்கடியில் வைத்து அமைதியாக கண்ணை மூடி படுத்தாள்.
அவள் அறையைத் திறந்து அவள் அம்மா எட்டிப் பார்ப்பது தெரிந்தது. ‘அடப்பாவிகளா என்னை இன்னும் சுத்தி சுத்தி வரீங்களா., இருங்க நாளைக்கு நான் தப்பிக்கல நான் துளசி இல்லை’ என்று அவளுக்குள் சபதம் எடுத்துக் கொண்டிருந்தாள்.
மறுநாள் காலை குளித்து விட்டு சாதாரண உடை அணிந்து வந்தவள் உணவருந்திக் கொண்டிருக்கும் போதே அம்மாவும் அப்பாவும் கிளம்பி இருப்பதை ஓர கண்ணால் பார்த்துக் கொண்டே அமைதியாக இருந்து கொண்டாள்.
அதே நேரம் பாட்டியும் தாத்தாவும் கிளம்பி வந்து உணவு அருந்த அமர அனைவரும் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அவள் அம்மாவோ ‘துளசி கிளம்பலையா’ என்று கேட்க.
“சாப்பிட்டு கிளம்பறேன்” என்று சொன்னாள்.
அவள் அப்பாவோ “நல்ல நேரம் முடியறதுக்குள்ள கடைக்குப் போய்விடனும்” என்று சொன்னார்.
“நல்ல நேரம் தொடங்கும் போதே கடையில இருக்கணும், நல்ல நேரம் முடியறதுக்குள்ள துணி எடுக்கணும்” என்று மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தார்.
‘நல்ல நேரம் பாக்குறாங்க., நல்ல நேரம்., தப்பிக்க நல்ல நேரம் எல்லாம் பார்க்கலாமா., நான் எஸ்கேப் ஆனா அது தான் எனக்கு நல்ல நேரம்., எப்படியாவது தப்பிச்சிடனும் துளசி’., என்று திரும்பத் திரும்ப உரு போட்டுக் கொண்டவளுக்கு மனதிற்குள் சற்று மகிழ்வாகவே உணர்ந்தாள்.
அந்த மகிழ்ச்சி முகத்தில் தெரிந்ததோ என்னவோ அவள் அம்மாவும் அப்பாவும் ஜாடையாக பார்த்து பேசிக்கொள்ள., பாட்டியும் தாத்தாவும் ஏனோ ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
இவளுக்கோ ‘ஏன் எல்லாரும் ஒரு மார்க்கமாகவே பாத்துட்டு இருக்காங்க’ என்று யோசித்தாலும் கிளம்பி உடை அணிந்து வெளியே வர தாத்தாவும் பாட்டியும் தோட்டத்தில் நின்று யாருக்கோ அலைபேசியில் அழைத்து பேசிக் கொண்டிருப்பதை பார்த்ததும்., “இவங்க யார்கிட்ட பேசிட்டு இருக்காங்க” என்று மெதுவாக எட்டிப் பார்த்தாள்.
அவர்களோ “ஆமா அந்த கடை தான்” என்று சொல்வதும்., “சரி சரி நாங்க போறோம்., நான் போன் பேசுவதை பார்த்தால் உங்க அண்ணன்காரன் திட்டுவான்” என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
‘இன்பர்மேஷன் போகுதா, ஐயையோ கொஞ்சம் முன்னாடி வந்திருந்தா வாங்கி பேசியிருக்கலாமோ, தப்பிக்க ஏதாவது வழி கிடைச்சிருக்குமோ’ என்று யோசித்த நிமிடம் ‘வேண்டாம் தப்பிக்கலாம்’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டே., அமைதியாக வந்த இடம் தெரியாமல் போய் ஹாலில் அமர்ந்து கொண்டாள்.
அதற்குள் எல்லோரும் வர அவள் சுடிதாரில் அமர்ந்திருப்பதை பார்த்த அவள் அம்மா “துளசி சேலை கட்டி இருக்கலாம் இல்ல” என்று கேட்டார்.
அப்போது அங்கு வந்த பாட்டியோ” வெளியூர்லே வளர்ந்த பிள்ளைமா அவள போய் சேலை கட்ட சொன்னா” என்று சொன்னார்.
“அதெல்லாம் இல்லைங்க அத்தை அவளுக்கு சேலை கட்ட தான் பிடிக்கும்., இங்கு வரும் போது கூட நிறைய சாரி கூட எடுத்துட்டு தான் வந்திருக்கா., ஆனா சேலை கட்டாம சுடிதார் போட்டுட்டு இருந்தா என்ன அர்த்தம்”., என்றார்.
“எனக்கு இதுதான் கம்பேர்ட்டா இருக்கும் இன்னைக்கு இதுவே இருக்கட்டும்” என்று சொன்னாள்.
பாட்டியோ “சேலை மாற்றனும் னா மாத்திக்கோ மா” என்றார்.
அவளும் மனதிற்குள் ‘பாட்டி ஓடி போறதுக்கு இதுதான் பாட்டி வசதியாக இருக்கும்., சேலை கட்டிட்டு எல்லாம் ஓட முடியாது”., என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.
எப்படி ஓடுவது என்று யோசனையோடு காரில் செல்லும் போது அங்கிருந்த டிராபிக்கை பார்த்தவள்., ‘நான் எப்படிடா தப்பிக்க’ என்று யோசித்தாலும்., அடுத்த நிமிடம் ‘ஆகா நல்ல கூட்டமா இருக்கு., இந்த கூட்டத்துக்குள் நுழைந்து தப்பிச்சுட்டோம்னா வெளியே தெரிய மாட்டோம்’ என்று நினைத்துக் கொண்டாள்.
தன் உடையையும் குனிந்து பார்த்துக் கொண்டாள் நல்லவேளை அழகு கலர் தான்., பளிச் ன்னு உள்ள கலர் போட்டு இருந்தா தான் காட்டிக் கொடுக்கும்’ என்று நினைத்துக் கொண்டவளுக்கு துணிக்கடையில் நுழையும் போதே மனம் லேசானது போல உணர்ந்தாள்.
அவர்கள் உள்ளே செல்லவும் மாப்பிள்ளை வீட்டினரைத் தேடி அப்பா சென்றார். அம்மாவும் அப்பா பின்னே செல்ல., இவள் மெதுவாக நடந்து கொண்டிருக்கும் போது தாத்தாவும் பாட்டியும் ரகசியம் பேசியபடி சுற்றுமற்றும் பார்த்தபடியே வந்தனர்.
அம்மா போன திசையும் பார்த்துக் கொண்டவள்., ‘இப்படியே ஓடிடலாமா’., என்று யோசித்தது ‘வேண்டாம் சந்தேகம் வந்துடும்., உள்ளே போயிட்டு அதுக்கப்புறம் அப்படியே ஓடிவிடலாம்’ என்று யோசித்தவள் ‘பாதையை நன்றாக பார்த்து வைத்துக்கொள்ள வேண்டும்’ என்று நினைத்தவளுக்கு, சிறு வயதில் கேட்ட பழைய கதைகள் எல்லாம் நினைவுக்கு வந்தது.,
அது போல எல்லாம் இப்ப செய்ய வாய்ப்பில்லை என அவளுக்கு அவளே சமாதானம் சொல்லிக் கொண்டு ‘தப்பி ஓடிரு துளசி அதிகமா ஒரு நிமிஷம் கூட இருக்கக் கூடாது’ என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள்.
அதே நேரம் பாட்டியும் தாத்தாவும் அவளை பார்க்க., அவள் எங்கோ பார்த்த படி நிற்பதை பார்த்தவர்கள்.,
“என்னம்மா அங்கேயே நிக்கிற வா” என்று அழைத்தனர்.
பாட்டி என்று லேசாக சிரித்துக் கொண்டவளுக்கு ‘பாதை மறக்காது தானே’ என்று திரும்பி பார்த்துக் கொண்டவள்., பின்பு அவர்கள் பட்டுச்செக்க்ஷனுக்கு போவதற்காக பேசிக்கொண்டே அழைத்து சென்றார்.
அங்கு மாப்பிள்ளை வீட்டினரும் இருக்க., இவளோ எரிச்சலோடு அங்கு செல்லும் போதே., பாட்டியும் தாத்தாவும் அவளோடு சேர்ந்து வருவதை பார்த்தவள்., அவர்களுக்கு நடுவில் நின்று கொண்டாள்.
அனைவரும் எப்படி சேலை தேவை என்று தங்களுக்குள் கலந்து பேச., அதை பற்றி சிந்திக்க வேண்டியவளோ அருகில் நின்ற பாட்டி தாத்தா திடீரென காணாமல் போனதால் அதிர்ந்து நின்றாள்.