அத்தியாயம் -5
மாலை நேரம் அது வானமெங்கும் மஞ்சள் பூசிக்கொண்டு அழகு தேவதை போல் காட்சி அளித்துக் கொண்டிருந்தது கோபி வருவதை எதிர் நோக்கியபடி காத்திருந்தாள் லதா.
“என்ன லதா அங்கேயும் இங்கேயும் நடந்துட்டு இருக்க அவன் வருவான் வெயிட் பண்ணு “என்று சொல்லிவிட்டு சிரித்தார் அவளுடைய மாமியார்.
“இல்ல அத்தை, வந்து எல்லாரையும் ஹோட்டல் கூட்டிட்டு போறேன்னு சொன்னாரு இன்னும் காணும் மேன்னு பார்த்துட்டு இருக்கேன்”என்றாள் லதா.
அவள் சொல்லுவதற்கும் பைக்கை வந்து நிப்பாட்டுவதற்கும் சரியாக இருந்தது.
“வாங்க வாங்க வந்துட்டீங்களா “என்று இன்புங்கத்தோடு அவனை அழைத்துக்கொண்டாள் லதா.
“எல்லாரும் ரெடியா இருக்கீங்களா நான் குளிச்சிட்டு வந்த உடனே ரெடி ஆயிட்டு கிளம்பலாம்” என்றான் கோபி.
வெளியே செல்வதற்கு என்று சில புடவைகளை எடுத்து வைத்திருந்த லதா அதிலிருந்து ஒரு பச்சை நிற புடவை ஒன்றை எடுத்தாள். அது மிகவும் கிராண்டாக இருக்கும் என்று சொல்லவும் முடியாது அதே சமயத்தில் சிம்பிளாகவும் இருக்காது, பச்சை நிறத்தில் ஒரு சிறிய கோல்டன் பார்டருடன் அழகாக இருக்கும். அதை எடுத்து அணிந்து கொண்டவள் அதற்கு மேட்ச் ஆக வளையளையும் போட்டுக் கொண்டாள்.
‘எல்லாம் ஓகே தான் இல்ல” என்றபடி கண்ணாடியை பார்த்து சரி செய்து கொண்டாள் லதா.
“என்ன லதா ரொம்ப நேரமா கண்ணாடி முன்னாடி நின்னுட்டு இருக்க போல இருக்கு”என்று பின்னாடி இருந்து கட்டி அணைத்தான் கோபி.
“விடுங்க…” என்று சிணிங்கிக் கொண்டே அவன் பிடியை விடுவித்துக் கொண்டாள் லதா.
“என்ன லதா புடவை எல்லாம் கலைஞ்சிரும் பார்க்கிறாயா என்று சிரித்தான்.
“ம்ம் ஆமாம் ” என்று அவளும் சிரித்தாள்.
“டேய் கோபி” இன்று தாய் மீனாட்சி குரல் கொடுத்த உடனே
“இதோ வரேன் மா” என்றபடி வெளியே கோபியும் லதாவும் வந்தனர்.
“சரி சரி வாங்க போவோம்” என்று ஒரு ஆட்டோவை பிடித்து அதில் மீனாட்சியும் அவர் கணவரும் ஏறிக்கொண்டனர். பைக்கில் லதாவுக்கு கோபியும் வந்தனர்.
தங்களுக்கு முன்னால் செல்லும் ஒரு காரை பார்த்த லதா “என்னங்க இந்த கார் எவ்வளவு விலை இருக்கும்”என்றாள்
“இது ஆரம்ப விலையே எட்டு லட்சம் லதா. ஏன் உனக்கு பிடிச்சிருக்கு” என்று வினவியதும்.
“அதுக்கு இல்லைங்க குடும்பத்தோட எங்கனா வெளியே போகணும் அப்படின்னா ஒரு கார் இருந்தா உதவியா இருக்கும் இல்ல அதான் கேட்டேன்” என்றதும்
பின்னாடி அமர்ந்திருக்கும் தன் மனைவியின் கையை தன் இடது கைகளால் கொண்டு அழுத்தினான்.
“கண்டிப்பா நாமளும் ஒரு கார் வாங்கலாம் கவலைப்படாத. வசதியா இருக்கிறவங்க எல்லாருமே சந்தோஷமா இருக்காங்கன்னு நீ நினைக்கிறாயா லதா” என்று கேள்வி எழுப்பினான் கோபி.
“சந்தோஷமா இருக்காங்களோ இல்லையோ ஆனா கௌரவமா இருக்குற மாதிரி தெரியுது இல்லையா வெளியுலகத்துக்கு, அதுதாங்க வசதியா இருக்கிறவங்களோட ஹைலைட்ஸ்” என்று புன்னகைத்தாள் லதா.
“அது கரெக்ட்டு தான் ஆனா வசதி அப்படிங்கறது நாமளே சம்பாதிச்சு நாமளே வசதியை உண்டாக்கணும் அப்படின்னா அதுக்கு பல வருஷம் ஆகும் ஏற்கனவே நம்ம அப்பாவோ இல்ல நம்ம மாமனாரோ லட்ச கணக்கில் சேர்த்து வைத்திருந்தார்கள் என்றால் அதை அனுபவிக்கிறது ரொம்ப ஈஸி. இங்க பணக்காரனா இருக்குற பல பேரு அப்பன் சொத்தையோ மாமனார் சொத்தையோ அனுபவிக்கிறவன் தான் புரியுதா?” என்றான் கோபி.
“உண்மை தான் “என்று தலையசைத்தாள் லதா.
லதாவும் கோபியும் ஹோட்டல் வந்து சேர்ந்தனர். அவரவருக்கு என்னென்ன பிடிக்கும் என்பதை கேட்டு அறிந்து ஆர்டர் செய்து சாப்பிட துவங்கினர். திருமணத்திற்கு முன்பில் இருந்தே கோபி இதை வழக்கமாகக் கொண்டிருந்தான் முதல் நாள் சம்பளம் வாங்கிய அன்று குடும்பத்துடன் சென்று ஹோட்டலில் சாப்பிட வேண்டும் என்று. அந்த ஒரு நாளாவது மனைவிக்கோ அம்மாவுக்கு சமைக்கும் வேலையை தராமல் இருக்க முடியும் அதே சமயம் குடும்பத்துடன் சேர்ந்து பேசிக் கொண்டே பிடித்த உணவை சுவைக்கவும் முடியும் என்பதனால்.
“உனக்கு ப்ரைட் ரைஸ்னா ரொம்ப பிடிக்குமா லதா” என்றதும்.
“அப்படின்னு இல்லை மத்தது எல்லாம் ஓவர் ஸ்பைஸியா இருக்கும் இது மட்டும் தான் நார்மலா இருக்கும் அதனால தான்” என்றாள் லதா,தன் தட்டில் இருப்பதை சுவைத்துப்படி.
லதாவும் கோபியும் பேசட்டும் என்று ப்ரைவேசி தந்தபடி மீனாட்சியும் அவர் கணவரும் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தனர்.
“அத்தை ப்ரைட் ரைஸ் டேஸ்ட் பண்றீங்களா”என்று மருமகள் கேட்டதும்,மீனாட்சியின் மனது சற்று குளிர்ந்து போனது.
‘ஆஹா என் மருமகளுக்கு என் மீது ஏதோ கொஞ்சம் அக்கறை இருக்கத்தான் செய்து. ‘ என்று சந்தோஷம் கொண்டு. அவள் தட்டில் இருப்பதை கொஞ்சம் அவள் தட்டிற்கு மாற்றி பரிமாறிக் கொண்டனர்.
மறுநாள் காலை எப்போது போதும் கோபி அலுவலகத்திற்கு சென்றான் அவன் வேலை புரிவது ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி அங்கு மேனேஜராக இருக்கிறான். தன் முதலாளி , சிங்கப்பூரில் இருக்கும் ஒரு நிறுவனத்தோடு ஜாயின்ட் வென்ச்யுவராக இருப்பதால் அங்கு இருக்கும் ஒரு காலி பணியிடத்திற்கு கோபியை முதலில் தேர்ந்தெடுத்தார். ஆனால்..
“சார் எனக்கு இப்போ தான் புதுசா கல்யாணம் ஆயிருக்கு” என்று காரணம் சொன்னதால் பிறகு யோசிக்கலாம் என்று கிடப்பில் போட்டு வைத்தார்.
ஆனால் கோபிக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை திடீரென்று அந்த வாய்ப்பை மீண்டும் முதலாளியிடம் கேட்டான்.
“சார் நான் சிங்கப்பூர் போறத பத்தி சொல்லி இருந்தீங்களே மறுபடியும் அத பரிசீலனை பண்ணலாம்னு இருக்கேன்” என்றான் கோபி.
“என்ன இந்த திடீர் முடிவு ஏற்கனவே வேண்டாம்னு சொல்லி தானே நிராகரிச்சீங்க மறுபடியும் என்ன திடீர்னு”என்றார் முதலாளி.
“இல்ல சார் எனக்கு சிங்கப்பூர் போக்குவதற்கான நீடு இருக்கு. அதனால கண்டிப்பா நான் போய் தான் ஆகணும். எங்க வீட்ல கூட பேசிட்டேன் ஓகே ன்னு சொல்லிட்டாங்க சோ விசா பிராசஸ் ஆரம்பிச்சுடலாம் சார்” என்றான் கோபி.
“ஓகே கோபி அப்படின்னா நான் கண்டிப்பா ப்ரோசீட் பண்றேன்” என்றார் முதலாளி.
ஆனால் அவனுக்கு மனதிற்குள் திக் திக் என்று இருந்தது. இன்னும் வீட்டில் இத பத்தி சொல்லவில்லையே சொன்னால் என்ன ஆகும் லதா இதை புரிந்து கொள்வாளா என்று மனதிற்குள் குழப்பிக் கொண்டிருந்தான் கோபி. ஆனால் எப்படி எனும் வீட்டில் சொல்லித்தானே ஆகணும் சரி பார்த்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் வீடு வந்து சேர்ந்தான்.
லதாவிடம் உடனே சொல்லலாமா வேண்டாமா என்ற கேள்வி அவனுக்குள் இருந்தது. நேத்து போகும்போது கூட கார் பத்தி பேசிக் கொண்டிருந்தாளே அப்படி என்றால் ஆடம்பர வாழ்க்கை அவளுக்கு பிடிக்கும் தான் அப்படி என்றால் நிச்சயம் இந்த வேலைக்கு சம்மதம் சொல்வாள் என்ற நம்பிக்கை இருந்தது அவனுக்கு.
இதே மாதிரியான ஒரு குழப்பம் கார்த்திக்கிற்கும் இருந்தது. இப்போதைக்கு இந்த வேலை இந்த சம்பளம் எல்லாம் போதும் தான் ஆனால் கனகாவை திருமணம் செய்து கொண்ட பின்பு இந்த வேலையும் இந்த சம்பளமும் போதாது தான் இதற்கு எதையாவது செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தான் கார்த்திக். இத பத்தி கனகா கிட்ட டிஸ்கஸ் பண்ணுவோமா? என்றபடி போனில் உரையாடினான்.
“ஹாய்…”என்ற அழைப்புக்கு பதிலுக்கு ஹாய் என்று வந்தது.
“உன்கிட்ட ஒன்னு கேட்கணும்” என்றான்
“என்ன கேட்கணும் ஏதாவது முக்கியமான விஷயமா” என்றாள் கனகா.
“நம்ம ப்யூச்சர் பத்தி தான் பேசணும்”
“ஓஹோ “
“என்ன ஓஹோ”என்று கேட்டான் கார்த்திக்
” நம்ம ரெண்டு பேருக்கும் இன்னும் கல்யாணமே ஆகல அதுக்குள்ள பியூச்சர் பற்றி எல்லாம் பேச என்ன இருக்கு.” என்று சிரித்தாள் கனகா.
“இல்ல இப்பவே டிஸ்கஸ் பண்ணிட்டா நல்லா இருக்கும்ல”என்றான் கார்த்திக்.
“என்ன பொறுத்த வரைக்கும் ப்யூச்சர பத்தி யோசிக்கிறது வேஸ்ட் என்று சொல்ல மாட்டேன் அதே சமயம் பிளான் பண்ணாம இருக்கவும் கூடாது தான். ஆனா பிரசண்ட்ல இருக்கிற விஷயத்தை கொஞ்சம் மாதிரி அனுபவிச்சிட்டு அதுக்கு தகுந்த மாதிரி தான் பியூச்சர பிளான் பண்ணனும். நம்ம ரெண்டு பேரும் விஷயத்துல கல்யாணம் ஆகுமா ஆகாதா அப்படின்னு ஒரு கேள்விக்குறியா இருக்கு இதுல பெருசா பியூச்சர் பற்றி யோசிக்க என்ன இருக்கு” என்று எதார்த்தமாக அவள் கூறியதை கேட்டவன் சரி என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டு உறங்கினான்.
ஆனால் அங்கு கோபி அவனது அறையில் அமர்ந்தபடி இந்த பேச்சை எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் அமைதியாக இருந்தான். பெரும்பாலும் மனைவிமார்களுக்கு கணவனுடைய மௌனம் நன்றாகவே புரியும் எதுக்கு எப்போதும் மௌனமாக இருப்பார் என்று நன்றாகவே தெரிந்து கொள்வார்.
“என்னங்க என்ன ஆச்சு ரொம்ப அமைதியா இருக்கீங்க ஏதாவது என்கிட்ட பேசணுமா” இன்று அவளே ஆரம்பித்தாள்.
தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவனை பேச்சை துவங்கினான்.
“லதா நேத்து கூட நம்ப கார் வாங்குவதை பற்றி எல்லாம் பேசிட்டு இருந்தோமே உனக்கு ஞாபகம் இருக்கா?” என்றான்.
“ஆங் நல்லாவே ஞாபகம் இருக்கு இப்போ எதுக்கு அத பத்தி பேசணும்”
“இல்ல பொதுவாவே இந்த ஆடம்பர வாழ்க்கை உனக்கு பிடிக்கும் தானே” என்றதும் சிரித்தாள் லதா.
“இப்ப இருக்கிற பெரும்பாலான பெண்களுக்கு ஆடம்பர வாழ்க்கை பிடிக்கும் தான் யார் இல்லை என்று சொன்னா? ” என்றதும் ஆஹா விஷயத்தை ஓபனா சொல்லிருவோம் என்று…
குரலை இரும்பி சரி செய்துக்கொண்டு..
“லதா எனக்கு வெளிநாடு போக வாய்ப்பு கிடைச்சிருக்கு. நல்ல வேளை நல்ல சம்பளம். என்னோட முதலாளி ஏற்பாடு தான்.”என்றதும் சட்டென்று திரும்பி அவனை பார்த்தாள்.
“ஏன் அப்படி பாக்குற லதா”
“எனக்கு இதுல சம்மதமான்னு கேட்கிறீங்க அப்படிதானே “என்றாள்.
“ம்ம் “
“இப்பதானே புதுசா கல்யாணம் ஆயிருக்கு அதுக்குள்ள பிரியனுமா”? என்று அவனிடமே கேள்வியை திருப்பி போட்டாள்.
‘ஆண்டவா இதுக்கு நான் என்ன பதில் சொல்லுவேன் பிரியனும்னு சொன்னாலும் தப்பா ஆயிடும் பிரிய கூடாதுன்னு சொன்னாலும் தப்பா ஆயிடும். ஸோ என்ன சொல்லலாம் என்று மனதுக்குள் பதிலை தேடிக் கொண்டிருந்தான்’
“என்ன இன்னும் பதிலே காணோம்”என்றாள் லதா.
“பதில்….அது வந்து “என்ற ஜவ்வு மிட்டாய் போல் பேச்சை இழுத்தான் கோபி.
“இதுக்கு நீங்க பதில் சொல்லாத வரைக்கும் நீங்க சொன்னதுக்கு சம்மதமா இல்லையான்னு நான் சொல்ல மாட்டேன்” என்றாள் லதா.
‘ஐயோ கடவுளே என்ன சொல்றது. என்று யோசித்துக் கொண்டிருந்தான் ஒரு வழியாக ஒரு பதிலை கண்டுபிடித்து அவளிடம் சொல்லலாம் என்ற எத்தனிக்கும்போது அவள் கண் மூடி உறக்கத்திற்கே சென்று விட்டாள்’
தொடரும்