ஆதிரையை விட்டுகொடுக்க ஆகாஷிற்கு மனமேயில்லை.. பெற்றோரிடம் ஆதிரைதான் வேண்டும் என வாதாடினான். அவர்கள் ஒப்புகொள்ள மறுக்கவே இரண்டு நாள் கழித்து பேக்கரிக்கு வந்துவிட்டான்.
‘ரிஜிஸ்தர் மேரேஜ் செய்துக்கலாம்..” என்றான்.
‘ச்சி..” என முகம் சுழித்தவள்.. ‘எத்தனை தைரியம் இருந்தா என்னை வீட்டை விட்டு வரசொல்லுவ.? ஒழுங்கா போய்டு..” என ஆதிரை திட்டவே.. மீண்டும் மீண்டும் சொல்லிப் பார்த்தான்.
‘என்னம்மா பிரச்சனை.?” என மாணிக்கம் வந்தார்.
ஆகாஷின் விபரம் சொல்லி.. ‘நான் என்னவோ இவனை விரும்பினமாதிரி ரிஜிஸ்தர் மேரேஜ் செய்துக்கலாம்னு வம்பு பண்றான் சார்..” என்றாள்.
மாணிக்கம் தன் ஆள்பலம் சொல்லி.. ‘இன்னைக்குன்னு இல்ல.. என்னைக்கா இருந்தாலும் உன்னால ஆதிரைக்கு ஆபத்து வந்தா தொலைச்சிடுவேன்..” என ஆகாஷை எச்சரிக்கவே அங்கிருந்து அகன்றான்.
ஆகாஷ் சென்ற பின்னும் ஆதிரைக்கு மனமே ஆறவில்லை.. அன்று அரவிந்தன் பேசியதற்கு அவன் அடித்தான்.. இன்று ஆகாசிற்கு மாணிக்கம் சார்.. எல்லா இடங்களிலும் பிறரை சார்ந்தேதான் இருக்கனுமா.? ஆகாஷ் மீண்டும் வம்புக்கிளுத்தால் என்ன செய்வது.? என தளர்ந்துபோனாள்.
அன்றிரவு வீட்டிற்கு வந்தவள் அன்னையிடம் சொல்லி கண்ணீர் விட்டாள். ‘ப்ச்.. நீ எதுக்கு அழற ஆதி..? உனக்கு ஒன்னுனா மாணிக்கம் சார் சும்மா விடமாட்டார்.. மாணிக்கம் சார் பலம் தெரியாம அவன் அங்க வந்திட்டான்.. இனிமே வரமாட்டான் தைரியமா இரு.” என்றார் காஞ்சனா.
அந்த வாரம் ஞாயிற்று கிழமை அதிகாலை காஞ்சனாவிற்கு அழைப்பு வர.. ‘ஹலோ..” என்க.. ‘அத்தை.. நான் கர்ணன் பேசுறேன்.. எப்படியிருக்கிங்க.?” என்றான்.
‘கர்ணா..” என தழுதழுத்தவர்.. ‘எப்படியிருக்க கர்ணா.. அபி நல்லாயிருக்கானா.?” என்றார் பாசமாக.
கர்ணன்.. ‘இரண்டு பேரும் நல்லாயிருக்கோம்த்தை..”
‘எப்பவும் பத்து நாளைக்கு ஒரு முறைதான ஃபோன் செய்வ.. இந்த முறை என்ன சீக்கிரம் செய்திட்ட.? அபி ஏன் பேசல.? அபிக்கேது உடம்பு சரியில்லையா.?” என்றார் பதைப்பாக.
‘இரண்டு பேரும் நல்லாயிருக்கோம்த்தை.. ஆதிகிட்ட கொடுங்க..” என்றான்.
‘ஆதி.. மாமா பேசுறான்.. இந்தா..” என காதில் வைக்க.. ‘நான் யார்கிட்டயும் பேசல..” என போனை எடுத்து அன்னையிடமே நீட்டினாள்.
‘ப்ச்.. ஆதி.. கர்ணா என்னவோ ஏதோன்னு நினைப்பான்.. அவ்வளோ தூரத்துலயிருந்து பேசுறான்.. தப்பா நினைக்க போறான் பேசு..” என அதட்டி கொடுக்க..
‘எல்லாருக்கும் பணம் சம்பாதிக்கிறதுதான் முக்கியமா போச்சு.. இங்க யார் எக்கேடு கெட்டா என்னன்னு போய்ட்டாங்கள்ல.? நான் யார்கிட்டயும் பேசமாட்டேன்..” என கத்தினாள்.
ஆதிரைக்கு கர்ணனிடம் எப்பொழுதும் ஒரு பயம் இருக்கும்.. இன்று இப்படி கத்துவது காஞ்சனாவிற்கு பதட்டத்தை தர.. ‘ஆதி என்னாச்சு உனக்கு..? கர்ணா லைன்ல இருக்கான்..” என்றார் கெஞ்சலாக.
‘இருக்கட்டும்மா.. நீ பேசு, நான் பேசல..” என்றாள் மீண்டும்.
‘பெரியம்மா.. நான் அபி பேசுறேன்.. ஆதிகிட்ட கொடுங்க..” என்றான். அபிமன்யு அதிகம் பேசமாட்டான்.. தங்கை தாய் தந்தையிடமே நலம் விசாரிப்பதோடு சரி.. இன்று ஆதிரை இப்படி பேசவும் கர்ணன் அபியிடம் கொடுத்து பேச சொன்னான்.
‘அவன்கிட்ட முக்கியமா பேசமாட்டேன்..” என்றாள்.
‘சரி நாங்க அப்போ பிளைட் டிக்கட்டை கேன்சல் பண்றோம்..” என்றான் அபிமன்யு.
இப்படி உரிமையாய் அன்பாய் பேசியிராத அபிமன்யுவிடமும் பேசவில்லை ஆதிரை. ‘என்னாச்சு அத்தை.?” என கர்ணன் விசாரிக்க.. ஆகாஷ் விசயத்தை சொல்லி.. ‘மாணிக்கம் சார் சரி செய்துட்டார் கர்ணா.. இவதான் அதையே நினைச்சி நினைச்சி அழுதிட்டிருக்கா..”
‘அந்த அதிரூபன் கூடத்தான் விருப்பத்தை சொன்னான்.. அவனை வேணாம்னு சொல்லி மறந்த மாதிரி இவன் பேச்சையும் மறக்க வேண்டியதுதான.?” என்றான் கோபமாக.
அதிரூபன் பெயர் சொன்னதும் ஏனோ இன்னும் அழுதாள் ஆதிரை. இவளின் அழுகை சத்தம் கர்ணனை கலங்கச் செய்ய.. ‘ப்ச்.. ஆதி.. அழாத.. அதான் நாங்க வரோம்ல.? பார்த்துக்கலாம் விடு..” என்றான் கெஞ்சலாக.
‘ம்..” என்றாள் சன்னக்குரலில்.
—- —— —— ——-
மூன்று நாள் கழித்து கர்ணனும் அபிமன்யுவும் வந்திருந்தனர். எதற்கு அப்படி அழுதாய் என அத்தனை முறை கேட்டும் ஆதிரையிடம் பதிலில்லை. ம்.. அப்பா அண்ணன் இருந்திருந்தா இப்படி ஆளாளிற்கு திருமணம் செய்ய வற்புறுத்துவார்களா என்ற எண்ணம் இருந்தபோதும்.. வெளிப்படுத்தினால் நான் அப்படி விட்ருவேனா என அன்னை வருந்துவார்.. நான் உன் அப்பா இல்லையா.? என சித்தப்பா கோபிப்பார் என அமைதியாகவே இருந்தாள்.
காஞ்சனாவின் அம்மா நகை ஐம்பது பவுனும்.. ராமசாமியின் அம்மாவின் நகையில் சரிபாதியாக பிரித்ததில் நாற்பது பவுனும் வக்கில் காஞ்சனாவிடம் ஒப்படைத்திருக்க.. அதை கர்ணனிடமும் அபிமன்யுவிடமும் காட்டினார்.
‘ம்.. ஃபோன்ல சொன்னிங்கதானத்த..” என சந்தோசித்தவன்.. ‘இவ்வளோ நகையிருக்கு.. சொத்தும் இருக்கு.. ஆதிம்மா நல்லா படிச்சும் இருக்கு.. இன்னும் கொஞ்சம் பெரிய இடமா பார்க்கலாம்த்தை..” என கர்ணன் சொல்ல..
காஞ்சனா.. ‘பெரிய இடம்னாலே பயமாயிருக்கு கர்ணா.. நீங்க பாட்டுக்கு கொஞ்ச நாள் கழிச்சி வெளிநாடு போய்டுவிங்க..” என கோபித்து.. ‘நம்ம வசதிக்கே பார்க்கலாம்.. கல்யாணத்துக்கு அப்புறம் அனுபவிச்சிக்கட்டுமே..” என்றார்.
திருமணம் குறித்து இவர்கள் பேசிக்கொண்டிருக்க.. மருத்துவமனையில் அதிரூபன் தன்னிடம் காதல் சொன்னது கண்முன் வந்தது. ஆகாஷ் பெண் பார்க்க வரும்வரை அதிரூபனின் நினைவை முயன்று தள்ளி வைத்திருந்தாள்..
ஆனால் ஆகாஷ் திருமணத்திற்கு வற்புறுத்தியதிலிருந்து.. அதிரூபன் காதலை யாசித்ததும் அதன் பின் பிடித்தமில்லை என சொன்ன பின்னே.. அவன் சொன்னதை போல் ஒருமாதத்திற்கும் மேலாக தன்னை தொல்லை செய்யாமல் விட்டதுமே மனம் முழுவதும் ஆட்சி செய்ய பெரும் அவஸ்த்தைக்குள்ளானாள் ஆதிரை.
அதிரூபனின் மேல் காதல் வந்துவிட்டதா என யோசிக்க.. ம்ஹூம்.. மற்றொரு பெண் இருந்த இடத்தில் தன்னால் முடியவே முடியாது என்றே மனம் முரண்டியது.
பேக்கரி வரை வந்து தரக்குறைவாய் நடந்து கொண்ட ஆகாஷை விட அதிரூபனின் மேல் ஏனோ கோபம் கோபமாய் வந்தது ஆதிரைக்கு. ம்.. நிறைய பணமும்.. கம்பீரமும் இருந்தா என்னை கேப்பியா.? உன்னைய விட அழகும் கலரும் கொஞ்சம் கம்மிதான்.. அதுக்காக.. என திட்டியபடி அவனையே நினைத்திருந்தாள்.
பத்து நாட்கள் கடந்திருக்க.. காஞ்சனாவிற்கு புது எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. யாரா இருக்கும் என யோசித்தவாறு அழைப்பை ஏற்கவும்.. ‘உங்கப்பா போய் சேர்ந்துட்டாங்க.. சொத்து கிடைச்சிடுச்சேன்னு வராம இருந்துடாத.. உன் புள்ளைய கூட்டிட்டு வந்து சேரு.. இல்ல.. ஊர் உலகம் என்னைத்தான் மெண்ணு முழுங்குவாங்க..” என இணைப்பை துண்டித்திருந்தார் மாதவி.
ஐந்து வயதிற்கு பிறகு பாசம் காட்டாத தந்தைதான்.. ஆனால் மனம் பெரிதாய் விம்மியது.. கண்ணீர் ஊற்றெடுக்க.. ‘என்னம்மா ஆச்சு..? யார் ஃபோன்ல.?” என பதறினாள் ஆதிரை.
காஞ்சனா விசயத்தை சொல்லவும்.. ‘அழாதம்மா.. அழாதம்மா.. “ என ஆறுதல் படுத்தினாள் ஆதிரை. அன்று சொத்து பற்றி பேசி காஞ்சனாவிற்கும் தனக்கும் மனச்சுணக்கம் ஆனதிலிருந்து காஞ்சனாவின் மனமறிந்து நடந்துகொள்ள ஆரம்பித்த ஆதிரைக்கு..
தற்போது ராமசாமி இறந்ததில் பெரிதாய் கண்ணீர் வரவில்லையென்றாலும்.. இந்த சொத்து வந்ததற்கு பிறகுதானே நாம் திருமணம் ஆகி சென்றாலும் அன்னையின் வருமானத்திற்கு குறைவில்லை என்ற நிம்மதி பிறந்ததை நினைத்தவளாய், அன்னையின் துக்கத்தில் தானும் பங்கேற்று.. ‘நாம போலாம், அழாத ம்மா.. ” என தேற்றினாள்.
ராஜாத்திக்கும் இளங்கோவிற்கு ஆதிரையே போன் செய்து விசயத்தை சொல்லவும் அவர்களோடு கர்ணனும் அபிமன்யுவும் வந்திருந்தனர். காஞ்சனா உடனே கிளம்ப தயாராகவும்.. ‘இப்போ மணி எட்டாகுதுமா.. அங்க போய் நைட் எங்க இருக்கிறது..?”என்றாள் தயக்கத்தோடு.
‘நீ இங்கையே இருந்துக்கோ நான் போறேன்..” என்றார் அழுகையோடே.
‘நீ போறதுனா நானும் வரேன்மா..” என உள்ளே சென்று துப்பட்டா அணிந்து வந்தாள் ஆதிரை.
‘ஆதிரையும் கிளம்பவும், மாதவி கவிதா அரவிந்தனை நினைத்து.. ‘நானும் வரேன் என்றார் இளங்கோ.
‘இல்ல மாமா நீங்க காலைல வாங்க.. நானும் அபியும் அத்தையோட போறோம்..” என கர்ணன் சொல்ல.. கர்ணன் வர சம்மதித்த்து சற்று தெம்பை கொடுக்க.. ‘நாளைக்கு எந்நேரம் ஆகுமோ…. கர்ணாக்கும் அபிக்கும் சாப்பிட கொடுத்து.. நீயும் கொஞ்சம் சாப்பிட்டுக்கோ ஆதி சாப்பிட்டதும் கிளம்பலாம்..” என்றார் காஞ்சனா.
‘இப்போ பசியில்லத்த.. பசிச்சா அங்க கடையில பார்த்துக்கலாம்.. கிளம்புங்க..” என கர்ணன் சொல்ல.. நால்வரும் கிளம்பினர்.
பஸ்ஸில் பயணிக்கும்போது.. அம்மாவோட அப்பாவை அவன் தாத்தாகிட்ட ரொம்ப பாசமா அன்னைக்கு ஹாஸ்பிட்டல்ல விசாரிச்சானே, அவரின் இறப்பிற்கு வருவானா..? நான் இங்க வருவதை தெரிந்திருப்பானா.? பிடிக்கலைன்னு சொன்னதால, ரொம்ப ரோசமா ஃபோன், மெசேஜ்ன்னு எதுவும் பண்ணல, என்மேல உள்ள கோபத்துல வராம கூட இருப்பான் என நினைத்தவள்.. ம்.. அவன் வந்தா என்ன.? வராட்டி என்ன.? அந்த அரவிந்தன் எதாவது சொன்னா அன்னைக்கு மாதிரி சண்டை போட வல்லவன்தான் வரனும்னு இல்லை, என் மாமாவும் தம்பியும் இருக்காங்க என ரோசத்தோடு நினைத்தவளிற்கு, அவனின் குழந்தை நியாபகம் வர.. தயவுசெய்து வந்திடாத என வேண்டி, கலங்கிய மனதை முயன்று திடப்படுத்தி, நீ வேணாம் எனக்கு.. என்ற மந்திரத்தை மீண்டும் மீண்டும் மனதில் சொல்லி அதிரூபனின் நினைவோடே பயணித்தாள்.