ஆழ மூச்செடுத்தவன்.. ‘நான் வேலைக்கு போக ஆரம்பிச்சதுக்கப்புறம் தனியா ரூமெடுத்து தங்கியிருந்தேன். அவ காலேஜ் ஹாஸ்டல்ல தங்கியிருந்தா..
ஆனாலும் தினமும் ஈவ்னிங் அவளை போய் பார்ப்பேன்.. இல்லனா நான் திரும்ப பார்க்க வரும்வரை சாப்பிட மாட்டேன்னு சொல்லுவா. என் விசயத்துல கண்டிப்பா செய்வான்னு நானும் தினமும் மீட் பண்ணுவேன்.
அவ மூனாவது வருசம் படிச்சிட்டிருக்கும்போது இங்க டைரக்டர் ஒருத்தர் ஹார்ட் ப்ராப்ளம்னால ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆனார். என்னோட பாடிஃபிட்டிங் பர்சனாலிட்டு பார்த்து நடிக்க வரியான்னு கேட்டார்.
எனக்கும் விருப்பம் இருந்ததால சரின்னு சொன்னேன். என் மாமா பெரிய நடிகனா வரப்போறாங்கன்னு ப்ரியாவும் ரொம்ப சந்தோசப்பட்டா.. ஆனா நடிக்க போனதுக்கப்புறம் நாங்க நினைச்ச நேரம் மீட் பண்ண முடியாம ஆகிடுச்சி.
வெளியூர் சூட்டிங் போனா ஒரு சில டைம் வரதுக்கு ஒரு மாசம் கூட ஆகிடும்.. அவளுக்கு என்னை பார்க்காமலும் இருக்க முடியல.. அதேநேரம் எங்கே சொன்னா என் கரியர் வீணாகிடுமோன்னு சொல்லாம மேனேஜ் செய்தா.
ஃபோன்ல பேசலாம்னா அவளுக்கு ஃப்ரீ இருக்கும்போது நான் பிஸியா இருப்பேன். தினமும் பேச முடியலன்னாலும் வாரத்துல ஒரு இரண்டு இல்ல மூனுநாள் பேசுவோம்.
இப்படியே ஒரு வருசம் போனது. ஒரு மாசத்துக்கு எந்த சூட்டிங்கும் இல்ல.. சந்தோசத்தோட அவளை பார்க்க காலேஜ் போனேன். செமஸ்டர் லீவ் விட்டுருக்காங்க.. ஊருக்கு போயிருக்கான்னானங்க..
நாலு மாச கேப்புக்கு அப்புறம் வீட்டுக்கு போனேன்.. என்னை பார்த்ததும் கட்டிப்பிடிச்சிட்டு ஒரே அழுகை. அவ அழுததை பார்த்து இது காதல்தான்னு வீட்ல எல்லாரும் முடிவு செய்துட்டாங்க.
என்ன ப்ரியா.? கல்யாணத்துக்கு நாள் பார்த்துடலாமான்னு எங்கம்மா கேட்கவும் திருதிருன்னு விழிச்சா.. எங்கம்மா சொன்ன மாதிரியே நினைச்சிடுவாளோன்னு எனக்கும் பதறிடுச்சி.
என்ன இப்படி முழிக்கிற.? உன் மாமனை பார்க்காம ஒரு மாசம் கூட உன்னால இருக்க முடியல.. அப்போ இதுக்கு என்ன அர்த்தம்னு சிரிச்சிட்டே கேட்டாங்க.
என்னைவிட அவளுக்கு பதறிடுச்சி போல.. எங்கடா நானும் அப்படி நினைச்சிட்டனோன்னு.. உனக்கு அப்படியா மாமா.? நான் அப்படி நினைக்கலன்னு பயத்தோடவே சொன்னா.
ஐய்ய.. இந்த அழுமூஞ்சை போய் கல்யாணம் செய்துப்பனான்னு நான் சிரிக்கவும்தான் அவளும் சிரிச்சா.
அதுக்கப்புறம் அன்பு அதிகமாகும்போதெல்லாம் கடிக்கிறது.. ரொம்ப நாள் பார்க்க முடியாம ஆகிடுச்சினா திரும்ப மீட் பண்ணும்போது அடிக்கிறதுன்னு ரொம்ப சேட்டை செய்ய ஆரம்பிச்சிட்டா..
என் வேலை அப்படி.. ஏண்டி இப்படி பண்றன்னு கேட்டா.. நான் கல்யாணம் செய்துக்கிட்டாலும், என் பொண்டாட்டி குழந்தைங்க எல்லாரையும் விட அவதான் எனக்கு முக்கியமா இருக்கனுமாம்.
அவளும் அப்படித்தான் இருப்பாளாம். அவளை கட்டிக்கப்போறவன் என்கிட்ட பேசவேணாம்னு சொன்னா அவனை டைவர்ஸ் பண்ணிடுவேன்னு சொல்வா..
இப்படியே இரண்டு வருசம் போனது. அவ படிப்பு முடிஞ்சதும் கேம்பஸ்ல செலக்டாகி வேலைக்கு போக ஆரம்பிச்சா. எனக்கும் நிறைய பட வாய்ப்புகள்.. மாசத்துக்கு ஒருமுறை கூட பார்க்க முடியாம ஆகிடுச்சி.. அங்கதான் பிரச்சனை ஸ்டார்ட் ஆனது.
இரண்டு மாச கேப்புக்கு அப்புறம் அவளை பார்க்க போனேன். எதோ ஃபேஸ்புக்ல பழக்கமானாங்க.. அவனைத்தான் கல்யாணம் செய்துக்கலாம்னு இருக்கேன்னு என்கிட்ட அவ லவ்வர் போட்டோவை காட்டினா.
எனக்கு அவனை பார்த்ததுமே பிடிக்கல.. இதெல்லாம் நம்பாத.. நிறைய பொய் சொல்லுவானுங்கன்னு சொன்னேன். இல்ல மாமா இவன் பொய் சொல்லலை.. உண்மையாவே இவன் டாக்டர்தான். நேர்ல கூட மீட் பண்ணிருக்கேன்னு சொன்னா.
அவனை எனக்கு அறிமுகம் செய்து வைக்க வேலை செய்யிற ஹாஸ்பிட்டலுக்கு என்னை கூப்பிட்டா. நானும் போனேன். டாக்டர் இப்போதான் கிளம்பினார்னு நர்ஸ் சொன்னாங்க.
நாங்க வரோம்னு சொல்லியும் ஏன் கிளம்புனிங்கன்னு அவனுக்கு போன் செய்து சண்டை போட்டா. வேற ஒரு ஹாஸ்பிட்டல்ல எமர்ஜென்சின்னு கிளம்பிட்டன்னு சொன்னானாம். அதுக்கப்புறம் சூட்டிங்க்காக நான் சிங்கப்பூர் கிளம்பிட்டேன்.
இவளுக்கு பிடிச்ச டாக்டர் தொழில்தான் அவன்கிட்ட இவளை கட்டி போட்டுடுச்சி போல. பீச் பார்க்ன்னு அவனோட டைம் ஸ்பெண்ட் பண்ண ஆரம்பிச்சிட்டா.
இந்த முறை ஊருக்கு வரும்போது உன் கல்யாணத்தை பத்தி அத்தைகிட்ட பேசுறேன்.. அதுவரை இந்த தனியா மீட் பண்றதெல்லாம் செய்யாதன்னு கண்டிச்சேன். சரின்னுதான் சொன்னா.
இரண்டு மாசம் கழிச்சி ப்ரியாவை பார்க்க போனேன். எதோ ப்ராஜக்ட் விசயமா வெளில போயிருக்கான்னு அவ ஃப்ரெண்ட் சொன்னாங்க. ஆனா அப்படியெதுவும் இல்லைன்னு எனக்கு அப்போ தெரியல.
வழக்கம்போல வாரம் ஒருமுறையோ இரண்டு முறையோ போன்ல பேசிட்டுதான் இருந்தேன்.. ஆனா அந்த டாக்டர் பையனைப் பத்தி எதுவும் பேசமாட்டா. நான் சொன்னதாலயா இருக்கும்.. இதுவும் நல்லதுக்குதான்னு நினைச்சி நானும் எதுவும் கேட்கல.
அடுத்து நாலஞ்சி மாசம் எனக்கு நிறைய பட வாய்ப்பு.. வீட்டுக்கு ப்ரியாக்கு எல்லாரோடவும் ஃபோன்ல பேசுறதோட சரி.
அந்த பையன்கிட்ட என்னதான்னாலும் கல்யாணம் ஆகாம எவ்வளோ நாள்தான் இப்படி ரிலேசன்சிப்ல இருக்கிறதுனு கல்யாணம் செய்துக்கலாம்னு கேட்டிருக்கா. கல்யாணத்துக்கு என்ன அவசரம்னு கேட்டுருக்கான்.. இவளுக்கு சந்தேகம் வந்ததால இந்த மாசத்திலயே கல்யாணம் செய்துக்கலாம்னு வற்புறுத்தியிருக்கா.
பிடிக்காத கல்யாணம்னாலும் குழந்தைக்காகவாவது என் பொண்டாட்டியை டைவர்ஸ் செய்ய முடியாது. டைவர்ஸ் பண்ணாம கல்யாணம் செய்துக்க முடியாதுன்னு உனக்கு தெரியாதான்னு கூலா கேட்டானாம்.
கல்யாணம் ஆனதை மறைச்சி என்னோட எதுக்கு பழகுனிங்கனு ஆத்திரப்பட்டிருக்கா.. பணத்துக்காக அவங்கப்பா அவனுக்கு பிடிக்காத கல்யாணம் செய்து வச்சிட்டாங்கன்னும்.. அவனுக்கு அவளை பிடிக்கலன்னும்.. உன்னைதான் பிடிச்சிருக்குனு சொல்லிருக்கான்.
தான் அவசரப்பட்டதுக்கு அவனை ஏன் குறை சொல்லனும்னு குட் பை சொல்லிட்டு வந்திட்டா. அதுக்கப்புறமும் அவன் தொல்லை செய்தானாம்.
உன் பொண்டாட்டிகிட்ட சொல்லுவேன்னும்.. என்னைப்பத்தி சொல்லி என் மாமா உன்னை சும்மா விடமாட்டாங்கனும் மிரட்டியிருக்கா.. அதுக்கப்புறம்தான் விலகியிருக்கான்.
இந்த நிலையில கன்சீவ்னு தெரிய வந்திருக்கு. கருவை கலைக்க மனசில்ல.. நான் ஃப்ரீயா இருந்து கால் செய்தாலும் கம்பெனியில இருக்கேன் மாமா.. முக்கியமான ப்ராஜக்ட் ஒர்க் போய்ட்டிருக்குன்னு என்னை அவாய்ட் செய்திடுவா.
ஒருநாள் நைட் போன் செய்து ஹாஸ்பிடலுக்கு வாங்க மாமான்னா.. என்ன ஆச்சுன்னு கேட்டேன்.. வலி தாங்க முடியல.. சீக்கிரம் வாங்க மாமான்னா.. வீட்டுக்கும் போன் செய்ய வேணாம்னுட்டா.. எனக்கு கேரளால சூட்டிங் போய்ட்டிருந்தது..
அடிச்சி பிடிச்சி கிளம்பி வந்தேன். குழந்தையோட பெட்ல படுத்திருந்தா.. என்கிட்ட பொய் சொல்வான்னு நினைச்சே பார்க்கல.. அப்போதான் அவன் ஏமாத்தினதெல்லாம் சொல்லி ரொம்ப அழுதா.. அந்த நிலையில அவளை திட்டவும் முடியல..
நடந்தது நடந்திருச்சி.. இனி நடக்கப் போறதை யோசிப்போம்.. அவன் இல்லனா வாழ முடியாதா என்ன.? குழந்தையை நான் பார்த்துக்கிறேன்.. ஆனா நீ தப்பான முடிவுக்கு வரக்கூடாதுன்னு மிரட்டியும்.. நான் இருக்கேன் கவலைப்படாதன்னு தைரியம் கொடுத்தும் பத்து நாள் கழிச்சி வீட்டிக்கு கூட்டிட்டு வந்தேன்.
( அன்று குழந்தையை முதன்முதலில் வீட்டிற்கு அழைத்து வந்தபோது நடந்தது அனைத்தும் கூறி..) ‘ஆனாலும் என்னை ஏமாத்திட்டா.. உயிரோட இருந்தா கல்யாணம் செய்துக்க சொல்வாங்கனு பயந்தாளோ என்னவோ.? மிஸ் மை பேபி.. ஐ மிஸ் யு மாமா.. மிஸ் யு ஆல் னு எனக்கு மெசேஜ் அனுப்பிட்டு அவளை முடிச்சிக்கிட்டா.
மெசேஜ் பார்த்து அத்தை வீட்டுக்கு போறதுக்குள்ள எல்லாம் முடிஞ்சிடுச்சி.. என்னை விட்டுட்டு போக எப்படித்தான் அவளுக்கு மனசு வந்ததோ.? உயிர்போகும் கடைசி நேரத்துல என்ன நினைச்சாளோ.. எப்படி துடிச்சாளோ..” என கண்ணீர் விட்டவன்.. தன் கைகளை சுவற்றில் குத்தி தன் மனவலியை போக்க முனைந்தான் அதிரூபன்.
அவனின் கையை தடுத்து.. ‘அப்போ பட்டு..” என கண் கலங்கினாள் ஆதிரை.
‘பட்டுவை நான் பார்த்துப்பேன்னு நம்பி உயிரை விட்டுட்டா..” என ப்ரியாவின் நினைவில் கண்ணீர் விட்டவனை அணைக்க முயன்று தயங்கி நின்றாள் ஆதிரை..
தன் கணவன் தனக்கே தனக்கானவன் என்ற ஆசுவாசத்திலும்.. இத்தனை பாசமுடையவளை பிரிந்த துயரத்தோடு எத்தனை அவமானத்திற்கு ஆளாகியிருப்பான் என்றும் ரூபனை நினைத்து கண்ணீரில் கரைந்தாள் ஆதிரை.
பத்து நிமிடம் மௌனத்தில் கரைய.. தன்னை தேற்றியவன்.. ‘ப்ச்.. நீ அழாத..” என கடிந்தான்.
ராதாவின் நினைவில் ‘மகளையும் இழந்து பேத்திகிட்டயும் தள்ளியிருக்கிறது ரொம்ப கொடுமைதான.? நீங்க ஏன் பட்டுவ அவங்ககிட்டயிருந்து பிரிக்கிறிங்க..?” என்றாள் பாவமாக.
‘அத்தைகிட்ட விட்ட நல்லா பார்த்துப்பாங்க.. ப்ரியாவோட அண்ணனால குழந்தையை அப்பான்னு கூப்பிட வைக்க முடியுமா.? சுதாக்கு கல்யாணம் ஆகிட்டா வரப்போற பொண்ணு பட்டுவை பார்த்துப்பாளா.?
எத்தனை பேர் இருந்தாலும் என்னை நம்பித்தான் ப்ரியா போனா.. குழந்தை விசயம் வெளில தெரிஞ்சா ப்ரியாக்கும் அசிங்கம்.. இது எதுவும் வெளில வராம நான் பார்த்துப்பேன்னு என்னை நம்பித்தான் ப்ரியா போயிருப்பா. அவ நம்பிக்கையை என் உயிருள்ளவரை காப்பாத்துவேன்.” என தீர்க்கமாய் சொன்னவன்..
“குழந்தையை வளர்த்தினா போதுமா.? எத்தனை உறவுகள் இருந்தாலும் ஒரு குழந்தைக்கு அப்பாம்மா உறவுபோல வருமா.? என் பட்டுக்கு அப்பாவா என்னால மட்டும்தான் இருக்க முடியும்..
பட்டு அத்தை வீட்டுல வளருறதை விடு, போக வர இருந்தா கூட.. கல்யாணம் பண்ணாம அதிரூபன் அவசரத்துக்கு பெத்த பிள்ளையை இவங்க ஏன் கொஞ்சறாங்கன்னு எல்லாருக்கும் சந்தேகம் வரும். அது என்னை பாதிச்சா பரவால்ல..
என் பட்டு பெரியவளானதுக்கப்புறம் நம்ம அம்மா இருந்திருந்தா நம்மளை அடுத்தவங்க வீட்ல விட்ருப்பாங்களான்னு மனசொடைஞ்சிடுவால்ல.. அதான் என் பட்டுவை நானே வச்சிக்கிட்டேன்.” என்றான் நெகிழ்வாக.
‘என்கிட்ட ஏன் உண்மையை சொல்லல..? நான் அவ்வளோ மோசமானவளா.?” என ஆதிரை கண்ணீர் விடவும்.. அணைத்துக்கொண்டவன்.. ‘கல்யாணத்துக்கு முன்ன உன்கிட்ட சொல்லாததுக்கு எதாவது காரணம் இருக்கும்னு இப்போ கூடவா உனக்கு தோணல..?” என்றான் கனிவாக.