‘வச்சிட்டுதான் இருக்கேன்.. சீக்கிரம் குளிச்சி வா..” என்றார்.
குளித்து வந்த ஆதிரை அங்கிருந்த மடக்கு கட்டிலை போட்டு ஷப்பாவென அமர்ந்தாள். காஞ்சனா டீ கொடுக்கவும் வாங்கியவள்.. ‘ம்மா கர்ணா மாமா குட்டிக்கு நாளைக்கு பர்த்டேன்னு கேக் வாங்கி வந்திருக்கேன்.. அத்த வந்ததும் கொடுத்தனுப்பு..” என்றாள்.
‘உங்கத்தைக்கு இன்னைக்கு அசதியா இருக்குன்னு என்னை அங்க வரசொன்னாங்க.. எப்பவும் நீ வர எட்டரை ஒன்பது பக்கம் ஆகிடுமேன்னு நானும் வரன்னு சொல்லியிருந்தேன்.. குட்டி பிறந்தநாளுக்காக முறுக்கு சுட்டு வச்சிருக்கேன்.. அத்தைக்கு ஃபோன் செய்.. கேக்கையும் முறுக்கையும் வாங்கிட்டு போகட்டும்..“ என்றார்.
‘அத்தைக்குதான் முடியலன்னு சொன்னாங்கன்னிங்களே.. நீங்களே போய் கொடுத்துட்டு வந்திடுங்கமா..” என்றாள்.
‘இப்படி நேரத்துல மட்டும்தான் நீ சீக்கிரம் வருவ.. நான் உன்னோட இருக்கேன்.. நீ அத்தைக்கு ஃபோன் செய்..” என்றார்.
‘நீ இருந்தாலும் உன்னோட நான் பேசிட்டிருக்க போறதில்ல.. தூங்கறனோ இல்லையோ.. கண்ணை மூடி கொஞ்ச நேரம் படுக்கனும்..” என்றவாறு டீ யை குடித்து முடித்து தலையிலிருந்த துண்டை அவிழ்த்து காயப்போட்டு.. கட்டிலின் அருகே டேபிள் பேனை ஓடவிட்டு படுத்தவள் முடியை கட்டிலின் வெளிப்புறம் விரிய விட்டு கண்மூடினாள்.
‘சரி அப்ப நானே போய் கொடுத்துட்டு வந்திடட்டா.? முறுக்கையும் கேக்கையும் பார்த்தா குட்டிங்க குஷியாகிடுவாங்க..” என்றார்.
‘சரி நான் போய் கொடுத்துட்டு முடிந்தவரை சீக்கிரம் வந்திடறேன்.. நீ எதுவும் சமைக்காத.. நான் வந்து பார்த்துக்கிறேன்.. நான் வரும்முன்ன எழுந்திட்டினா முறுக்கு சாப்பிடு..” என மகளிற்கு ஒரு பாத்திரத்தில் போட்டு கட்டிலருகே வைத்து.. மீதம் முறுக்கையும் கேக்கையும் எடுத்துக்கொண்டு ஆதிரை சொன்னவாறு கதவை சின்ன இடைவெளியோடு சாத்திவிட்டு கிளம்பினார்.
— —- —–
தெருவில் விளையாடிக்கொண்டிருந்த பையனிடம்.. ‘இங்க ஆதி வீடு எதுப்பா..?” என விசாரிக்க.. ‘அந்த வீடுதாண்ணா..” என தான் நிற்கும் நேரெதிர் வீட்டை சிறுவன் காண்பிக்க ஆதிரையின் வீட்டிற்கு வந்தவன் அழைப்பு மணியை தேடிவிட்டு இல்லையென்றதும் கதவை தட்டினான் அதிரூபன்.
சத்தம் வராமல் போகவே.. ‘மிஸ்டர் ஆதி..” என சற்று பலமாய் தட்டினான். யாரோ அழைப்பது கேட்டாலும் அப்பொழுதான் ஆழந்த தூக்கத்திற்கு சென்ற ஆதிரையால் கண்ணை திறக்க முடியவில்லை.
லேசாய் சாத்தியிருந்த கதவை பாதியளவிற்கு திறந்து.. ‘மிஸ்டர் ஆதி..” என குரல் கொடுக்க.. தற்போது ஆதி என்பது காதில் நன்றாக விழ.. கண்மூடிய நிலையிலேயே எழ முற்பட்டு திரும்பவும் அவளின் முடி டேபிள் ஃபேனில் மாட்டும் அபாயம் நேர.. ‘ஹேய்..” என கொஞ்சமும் யோசியாமல் உள்ளே வந்தவன் அவளின் முடியினை கையிலேந்தி..
‘ஏங்க.. முடி ஃபேன்ல மாட்டப்போகுது..” என்ற அறிமுகமில்லாத குரலில் திடுமென விழித்தவள்.. ‘யார் நீங்க.? பர்மிசன் இல்லாம இப்படித்தான் உள்ள வருவிங்களா.?” என்றாள் தீயாய் முறைத்தபடி.
இதமான சில்லிப்போடு தன் கையில் தாங்கியிருந்த மென்மையான கேசம் நழுவியதில் சற்று ஏமாற்றமடைந்தவன்.. ‘வெளிலயிருந்து ரெண்டு மூனுமுறை கூப்பிட்டேன், பதிலேயில்ல.. எனக்கும் டைமாகுதுன்னு கதவை லேசா திறந்தா உங்க முடி பேன்ல மாட்டயிருந்தது.. மாட்டிடுச்சினா ஆபத்தாகிடுமேன்னு யோசிக்காம உள்ள வந்துட்டேன்.. சாரி..” என தானும் கடுப்பாய் சொல்லி சற்று தள்ளி நின்றவன்.. ‘மிஸ்டர் ஆதிங்கிறது உங்கண்ணனா.? நான் அவங்களை பார்க்கத்தான் வந்தேன்.. கொஞ்சம் கூப்பிடுங்க..” என்றான் சற்று உயர்ந்த குரலில்.
பரதன் இருக்கும்போதும் கூட சரத் தவிர்த்து ஆதிரையின் வீட்டிற்குள் இப்படி வெளி ஆண்கள் யாரும் உள்ளே வந்ததில்லை.. கர்ணனே வெளியில் திண்டில் அமர்ந்துதான் பேசுவான்.
இத்தனை தைரியமாய் உள்ளே வந்திருக்கிறான்.. தான் கேட்டதற்கும் மிரட்டலாய் பதில் கொடுக்கிறான் என அதிரூபனின் உயரம் உடல்வாகு முடித்திருத்தம் எல்லாம் கோபத்தோடு ஆராய்ந்தவளுக்கு சற்று பயம் வர.. ‘நீ.. நீங்க போலீசா.? அன்னைக்கு போல மஃப்டில வந்திருக்கிங்களா.?” என்றாள் சற்றே இறங்கிய குரலில்.
ம்.. அதிரூபனும் நாளை மறுநாள் போலீஸ் வேடமிடும் நாயகனிற்கு டூப் போடுவதற்காக இந்த கட்டிங்கில் இருந்தான். கடந்த ஒரு மாதமாக அந்த படப்பிடிப்புதான் போய்க்கொண்டிருக்கிறது.
ஆதிரையின் பயத்தை பார்த்தவன்.. வந்த வேலையை இதை வைத்தே சுலபமாய் முடிக்கலாம்.. இல்ல யாரை கேட்டு உள்ள வந்தன்னு திரும்பவும் ஆரம்பிப்பா என நினைத்து.. ‘ஆமாம் போலீஸ்தான்.. இங்க ஆதின்றது..” என்றான் சந்தேகமாய்.
‘நான்.. நான்தான்.. என் பேரு ஆதிரை.. சுருக்கமா ஆதின்னு கூப்பிடுவாங்க.” என்றாள்.
அந்த மாதவிம்மா ஆதின்னதும் ஆம்பிளைன்னு நாமதான் தப்பா நினைச்சிட்டோம் என நினைத்தவன்.. ‘நீங்கதான் கம்ப்ளைண்ட் கொடுத்திங்களா.?” என்றான். ஆதிரை ஆமாம் என்பதாய் தலையசைத்தாள்.
‘அரவிந்தன் இந்த கேசுக்கு சம்மதம் இல்லாம மாட்டிக்கிட்டான்.. ஒரு பையனோட ஃபியூச்சர் தேவையில்லாம வீணாக வேணாமே..” என்றான்.
இவன் என்ன போலீசுன்னான்.. இப்போ என்னவோ அந்த அரவிந்துக்கு வக்காலத்து பேசுறான்.. ஒரு வேளை அந்த மாதவிம்மா இந்த போலீசுக்கு லஞ்சம் கொடுத்திருக்குமோ..? ம்.. இருக்கும் இருக்கும்.. லேசுபட்ட பொம்பளையா அவங்க..? என மனதில் நொடித்தவள்..
‘நான் யார் ஃபியூச்சரையும் ப்ளான் போட்டு கெடுக்க நினைக்கல சார்.. நாலு பசங்க சேர்ந்து அந்த பொண்ணை நாசமாக்க பார்த்தாங்க.. பார்த்துட்டு கடந்து போக முடியாம போலீஸ்கு ஃபோன் செய்தேன்.. அதுல அவன் சிக்கிக்கிட்டான்.. நான் என்ன பண்றது.?” என்றாள்.
யார் வந்து கேசை வாபஸ் வாங்க சொன்னாலும் என்னால முடியாதுன்னு சொல்லிடு என தனது சித்தப்பாவும் இன்ஸ்பெக்டரும் சொல்லியிருந்ததால் இவன் போலீஸ் என்ற போதும் தைரியமாகவே பதில் கொடுத்தாள்.
பரவால்லையே போலீஸ்னு சொல்லியும் தைரியமா பேசுறதோட நல்ல மனசோட உதவி செய்ய நினைச்சிருக்காளே என மனதில் மெச்சியவன்.. ‘ஆக.. நீங்க கேசை வாபஸ் வாங்க போறதில்ல.?”
‘அவன் ஒருத்தனுக்காக பார்த்தா உண்மையா தப்பு செய்த அந்த நாலுபேரும் வெளில வந்திடுவாங்க.. அந்த பையன் மேல தப்பில்லன்னா தன்னால வெளில வரப்போறான்..” என்றாள் மெல்லிய குரலில்.
கண்களை சுழல விட்டவன்.. சிறிய கிச்சன்.. ஒரு தனியறை அதுவும் திறந்திருக்க.. ‘வீட்ல யாரெல்லாம் இருக்கிங்க.?” என்றான். ஏனோ தெரிந்துகொள்ளும் எண்ணம் வர கேட்டான்.
‘நானும் எங்கம்மாவும் மட்டும்தான்..” என்ற ஆதிரையின் குரல் சிறிதாகியிருக்க இமை தாழ்ந்திருந்தது. பிறகுதான் சுவற்றில் மாட்டியிருந்த இரு படங்களையும் பார்த்தான். இருவரின் இறப்பு தேதி ஒரே நாளில் இருக்கவும்.. ‘அது உங்கப்பாவும் அண்ணனுமா.? இரண்டு பேரும் ஒரே நாள்ல..?” என சிறு இடைவெளி விட்டவன்.. ‘ஆக்சிடன்ட்டா.?” என்றான்.
ஆமாம் என தலையசைத்தவளுக்கு கண்ணீர் வெளி வந்திருக்க.. ‘ஓ.. சாரி..” என்றவன்.. ஆதிரையை அறிந்து கொள்ளும் ஆவல் வர.. ‘நீங்க என்ன பண்றிங்க.?” என்றான்.
ஆதிரைக்கு பதில் சொல்ல பிடிக்கவில்லைதான்.. ஆனால் போலீஸ் என்பதால் வேறு வழியின்றி.. ‘பேக்கரில வேலை பார்க்கிறேன்..” என்றாள்.
‘நான் வெளில இருக்கேன்டா.. வர அரை மணிநேரத்துக்கு மேல ஆகுமே..” என்றார் பதட்டமாக.
‘சரி நீங்க பதட்டப்படாதிங்க.. நான் அம்மாவை கூப்பிட்டுக்கிறேன்..” என கட் செய்தவள் அடுத்ததாக தன் அன்னைக்கு அழைக்கவே.. ‘கட் பண்ணிட்டு மொபைலை கீழ வைங்க..” என்றான்.
இவள் அதிர்வாக.. ‘எனக்கு டைம் ஆகுது.. நீங்க பாட்டுக்கு மத்தவங்கள்ட்ட பேசிட்டிருந்தா அதை வேடிக்கை பார்க்கிறதுக்கா வந்திருக்கேன்..?” என்றான் முறைப்பாக.
‘இல்ல.. அம்மாக்குத்தான்..” என இழுத்தாள்.
‘உங்கம்மாகிட்ட பேச எனக்கு ஒன்னுமில்ல.. கம்ப்ளைண்ட் கொடுத்தது நீங்கதான.? உங்களை பார்க்கத்தான் வந்தேன்..”
தனியா இருக்க ஒரு மாதிரியிருக்குன்னுதான கூப்பிட்டேன்.. இதுக்கெதுக்கு இத்தனை வள்ளுன்னு விழறான் என கடுப்பாய் நினைத்தவள் என்ன கேட்கனுமோ கேளுங்க என்ற பாவனையில் நின்றாள்.
‘அரவிந்தனுக்காக எதாவது செய்ய முடியுமான்னு உங்களை கேட்க வந்தேன்.. எப்படியும் நீங்க கேசை வாபஸ் வாங்கப்போறதில்லன்னு தெரிஞ்சிகிட்டேன்.. நான் கிளம்பறேன்..” என்று கிளம்பினான்.
ம்.. கேசை வாபஸ் வாங்கினால், அந்த மிருக குணம் படைத்த நாய்கள் தப்பிவிடுவார்கள் என ஆதிரை சொல்வது சரிதான் என நினைத்தால் அரவிந்தன் வெளிவர வேறு எதாவது செய்யலாம் என நினைத்து கிளம்பினான்.
என்னவோ என்னைத்தான் பார்க்க வந்தேன்னான்.. இப்ப கிளம்பறன்றான்.. கேசை வாபஸ் வாங்க சொல்ல வந்தவன் முடியாதுன்னதும் எதுவும் சொல்லாம கிளம்புறான்..
முன்ன பின்ன தெரியாதவன், பௌர்ணமி நிலான்னு நம்மளைப் பார்த்து கவிதைலாம் சொல்றான், இவன் நிஜமாவே போலீஸ்தானா.? இல்ல தப்பானவன்கிட்ட தேவையில்லாம பேசிட்டிருந்துட்டோமா..? இப்போலாம் இப்படி டிப்டாப்பா இருக்கிறவனுங்கதான் பக்கா கிரிமினலா இருக்கானுங்க, என அவரசமாய் வெளியே வர.. ஆதிரையின் முகத்தை கண்ணாடியில் பார்த்தவாறு பைக்கை கிளப்பினான்.
ஆதிரையின் அந்த பார்வை.. அரவிந்துக்காக லஞ்சம் வாங்கின போலீசுன்னு நம்மளை தப்பா நினைச்சிருப்பாளோ என யோசித்தபடி வளைவை கடந்தவனுக்கு.. நான் அப்படியில்லை என அவளிடம் சொல்லியே ஆக வேண்டும் என தோன்ற பைக்கை சடர்னாக நிறுத்தினான்.
பிறகு யோசித்து அவளுக்கு விளக்கம் கொடுக்க தேவையில்லாம நம்ம நேரத்தை எதுக்கு வீண் செய்யனும் என மீண்டும் பைக்கை ஸ்டார்ட் செய்ய.. சற்று தூரம் சென்றதும் இன்னும் ஒரே முறை அவளின் முகம் பார்க்கும் ஆசை வர மீண்டும் பைக் நின்றது..
ச்ச.. என்ன இது.? நினைப்பு கன்னாபின்னான்னு போகுது.. என தன்னை தானே கடிந்து பைக்கை ஸ்டார்ட் செய்ய.. அவளின் கூந்தலை தொட்டதற்காக ஆதிரை திட்டியதுதான் மீண்டும் நினைவில் வந்தது.. முடியை தொட்டதுக்கே அப்படி கத்துவியா.? அதுவும் ஃபேன்ல மாட்டிக்க இருந்த முடியைதான தொட்டேன்.? அப்படியே விட்டிருந்தா தெரிஞ்சிருக்கும் என கோபமாய் முனுமுனுத்து.. பிறகு ச்ச ச்ச.. அதெப்படி விடமுடியும் என்ற நினைப்பும் வர பைக்கை ஒரு மரத்தடியில் நிறுத்தினான்.
சினிஃபீல்டுல பார்க்காத பொண்ணுங்களா.? இவ என்ன இப்படி படுத்துறா..? இதற்கும் அரைமணி நேரம் கூட பேசியிருக்கமாட்டேன் என தனக்குள் பேசியவன்.. ஒரே ஒருமுறை நான் தப்பானவன் இல்லையென அவளுக்கு சொல்லிட்டு கிளம்பிடலாம்.. அவ தப்பா பார்த்ததுதான் நம்மளை படுத்துபோல என மீண்டும் ஆதிரை வீட்டிற்கு பைக்கை திருப்பினான்.
வெளியிலிருந்த திண்ணையில் அமர்ந்திருந்த ஆதிரை தன் முடியை இரண்டாய் பிரித்து சிக்கெடுத்துக்கொண்டிருந்தாள். அவளின் முகம் தெரியாததில் ஏமாற்றமடைந்த மனதை நினைத்து வியந்தவன் வேலிக்குள்ளேயும் பைக்கிலேயே வந்தான்.
பைக் சத்தத்தில் தன் கேசம் ஒதுக்கி ஆதிரை நிமிர.. அவளின் தரிசனம் கிடைத்ததும் இத்தனை நாளாய் தன் குழந்தைக்கு அம்மாவை தேடியது போய், தனக்கானவளை பார்த்த சந்தோசம் ஊற்றெடுக்க அதிரூபனின் முகம் தானாய் புன்னகைத்தது.
அச்சோ திரும்ப எதுக்கு வந்திருக்கான் என யோசித்த ஆதிரையின் முகம் அதிர்வை காட்ட.. அதிராதே.. நான் உன்னவன் என காதலை சொல்ல நினைத்தாலும், சொல்ல முடியாமல் ஆதிரையையே பார்த்திருந்தான். ம்.. இவள்தான் தன்னவள் என உறுதியாய் உணர்ந்தபோதும் அதை உடனே வெளிப்படுத்த இந்த அதிரூபன் தனியாள் கிடையாதே.. ஒரு குழந்தைக்கு தகப்பனாயிற்றே.. இன்னொருநாள் வந்து பொறுமையாய் என் மனதை வெளிப்படுத்துகிறேன் என தனக்குள் பேசிக்கொண்டே ஆதிரையை மிக உரிமையோடு பார்த்திருந்தான்.