நண்பர்களுக்கு வணக்கம்!. சென்ற பதிவினை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி. இந்த பதிவினையும் படித்து விட்டு உங்கள் விருப்பங்களையும் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ஆறு மணி அளவில் வீட்டு அழைப்பு மணி ஒலிக்க சஞ்சனா திறந்தாள்.
நேடலி நின்றுகொண்டிருந்தாள்.
“Hai, I am Natalie, Suka’s colleague. (என் பெயர் நேடலி. நான் சுகந்தன் உடன் வேலை செய்பவள்,” என்று தன்னை தானே அறிமுகப்படுத்திக் கொண்டாள்.
“oh come in. (அப்படியா உள்ளே வாருங்கள்) என்று வரவேற்றாள் சஞ்சனா.
அவள் அந்த பூட்ஸ் அணிந்த காலுடன் உள்ளே நுழைந்தாள்.
“would you like some coffee?
(காபி குடிக்கிறீங்களா?) என்று கேட்டாள் சஞ்சனா.
“no thanks. I just had it. (வேண்டாம். கேட்டதற்கு நன்றி. நான் இப்போதுதான் அருந்தினேன்.)” என்றாள்.
கையுறையை கழட்டி அவள் அணிந்திருந்த பெரிய ஜாக்கெட் பாக்கெட்டில் போட்டுக் கொண்டாள்.
“By the way, I am here to get a file from him.
(நான் சுகந்தன்இடம் இருந்து ஒரு பைலை வாங்க வந்து இருக்கிறேன் என்றாள் லாட்டரிn)et.
“ya. Sure. Sukanthan is upstairs. (சுகந்தன் மாடியில் இருக்கிறார்) என்று சஞ்சனா சொல்ல
“thank you” என்று அவளுக்கு நன்றி சொல்லிவிட்டு மாடி ஏறினாள் நேடலி.
திறந்திருந்த அறைக்கதவை தட்டினாள்.
நிமிர்ந்து பார்த்த சுகந்தன்
“hai Natalie come. ( ஹாய் நேடலி உள்ளே வா.). என்றான்
அவள் உள்ளே வந்தாள்.
அவளுக்கு ஒரு நாற்காலியை காட்டிவிட்டு எதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்தான் சுகந்தன்.
“ Here you go. (இதோ பைல்.)” என்று அந்த நாற்காலி மீது வைத்திருந்த பைலை எடுத்து அவளிடம் நீட்டினான்.
“oh, thank you suka. (நன்றி சுகா) என்றுவிட்டு அதனை வாங்கி பிரித்து பார்த்தாள்.
“How is it going? (எப்படி போகிறது?) என்று பொதுவாக கேட்டான் சுகந்தன்.
“Do you know what happened today at work? we had a surprise Christmas party! (இன்று வேலையின் பொழுது என்ன நடந்தது தெரியுமா இன்ப அதிர்ச்சியாக கிறிஸ்மஸ் பார்ட்டி நடந்தது.) என்றாள் கண்களை விரித்து ஆச்சரியமாக.
“oh, that’s great. (ஓ அருமை)” என்று பல்லைக் காட்டினான் இவன்.
“we all had loads of fun with games and much more.( நாங்கள் எல்லோரும் சின்ன சின்ன விளையாட்டுகள் விளையாடி மகிழ்ந்தோம்).”
“Glad to know that. (கேட்பதற்கு சந்தோஷமாக இருக்கிறது)” என்றான் சுகந்தன்புன்னகையுடன்.
“But, we missed you so much!.( உன்னை மிஸ் பண்ணினோம்)” என்றாள் நேடலி சிறிது சோகத்துடன்
“me as well (நானும் கூட தான்)” என்றான் அவன்.
“ok. suka. See you later. (சரி சுகா. அப்புறம் பார்க்கலாம்.) என்று விட்டு எழுந்தாள் நேடலி.
அப்போது அவளுடைய பூட்ஸ் ஷூவின் ஹீல்ஸ் தரையில் இருந்த கார்பெட்டின் ஓரத்தில் மாட்டிக்கொள்ள நிலை தடுமாறி கீழே விழப்போனாள்.
சுகந்தன் அவளின் தோளைப் பற்றி கீழே விழாமல் நிறுத்தினான். அவளும் அவனது தோளை பற்றிக்கொண்டு தன் பூட்ஸ் ஷூவை அந்த கார்பெட்டில் இருந்து எடுத்து நின்றாள்.
“Are you ok? (நன்றாக இருக்கிறாயா?)” என்று அக்கறையாக கேட்டான் கந்தன்.
“I am alright. (நான் நன்றாக இருக்கிறேன்).” என்றாள் நேடலி சமாளித்துக்கொண்டு.
நிமிர்ந்து பார்த்தான் கந்தன்.
அங்கு சாதனா நின்று கொண்டு இருவரையும் முறைத்துக் கொண்டிருந்தாள். அப்போதுதான் அவனது கை அவள் தோளிலும் அவளது கை இவன் தோளிலும் இருப்பதை உணர்ந்தான் கந்தன்.
எனினும் அவளை சட்டென்று விடமுடியாமல் சாதனாவை பார்த்துக்கொண்டிருந்தான்.
‘அய்யய்யோ இவள் இங்க தான் இருக்கிறாளா? நம்ம கிரைம் ரேட் கூடிட்டே போகுது.’ என்று தன்னைத்தானே நொந்து கொண்டான் கந்தன்.
சாதனா வைத்த கண் வாங்காமல் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தாள். நேடலி காலை ஊன்றி தனியாக நின்றாள்.
அவன் அவள் மீது இருந்து கையை எடுத்தான். அவளும் அவன் மீது இருந்த கையை எடுத்தாள்.
“Thank you suka. wherever I need help, you are there to help me!
(நன்றி சுகந்தன். எங்கெல்லாம் எனக்கு உதவி தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் நீ இருந்து எனக்கு உதவுகிறாய்.” என்றாள் நட்புடன் சிரித்தபடி.
அவள் அவனை பார்த்து சொல்லிக் கொண்டிருக்க அவனோ சாதனாவை பார்த்துக்கொண்டிருந்தான்.
“சுகா” என்று மீண்டும் நேடலி அவன் தோள் தொட்டு அழைக்க அவன் நேடலி பக்கம் திரும்பினான்.
“ok. see you later (சரி அப்புறம் பார்க்கலாம்.) என்றான் சுகந்தன்.
அவள்
“Sure!” (நிச்சயமாக) என்று விட்டு சென்றாள்.
சாதனாவின் பக்கம் இருந்து பார்ப்பதற்கு நெடுநேரம் இருவரும் ஒருவர் தோள் மீது ஒருவர் கை போட்டபடி நின்று கொண்டிருப்பது போல தெரிந்தது. ‘எதுக்காக இவங்க ரெண்டு பேரும் இப்படி நிக்கிறாங்க?’ என்று கண்ணில் பொறாமையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
நிமிர்ந்து அவர்கள் முகத்தை பார்த்துக்கொண்டு இருந்தவளுக்கு நேடலியின் கால் ஷூவின் ஹீல்ஸ் கார்ப்பெட்டில் மாட்டிக் கொண்டிருந்தது தெரியவில்லை.
இவளை கவனித்த சுகந்தன்அவளிடம் வந்தான்.
“சாது…. அது…. என்ன ஆச்சுன்னா….” என்று தயங்கி தயங்கி ஆரம்பித்தான்.
“எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. எந்த விளக்கமும் எனக்கு கொடுக்க வேண்டாம். யார் எப்படி போனால் எனக்கென்ன?” என்று வேகவேகமாக சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு வந்தாள் சாதனா.
‘எப்பவுமே இப்படித்தான். ஏதாவது சொல்ல வந்தால் கேட்கிறாளா? சரியான அவசரக்குடுக்கை.
இவளை எப்படி சமாதானம் பண்றதுன்னு முழிச்சிட்டு இருந்தா, நடுவுல இந்த பிரச்சனை வேற. கடவுளே என்னை நீதான் காப்பாத்தணும்.’ என்று கைகூப்பி மேலே பார்த்து வேண்டிக்கொண்டான் கந்தன்
‘எப்படி சிரிச்சு சிரிச்சு பேசிட்டு இருந்தான். இந்த காய்ச்சலில் இவனுக்கு எப்படி தான் அப்படி சிரிப்பு வருதோ தெரியல! இந்த இரண்டு நாளில் இப்ப தான் இவன் இப்படி சிரிச்சி பார்க்கிறேன். எப்பவுமே சோகமா இருக்கிற மூஞ்சி இவளைப் பார்த்ததும் எப்படி பிரைட் ஆப் ஆயிடுச்சு ?’ என்று அவன் மீது கோபம் கொண்டது மனது.
அடுத்து வந்த இரண்டு நாட்களில் நன்கு தெளிந்து இருந்தான் சுகந்தன்.
அன்று வந்து பார்த்த விக்ரம்
“இப்பதான் உங்க முகம் கொஞ்சம் தெளியர மாதிரி இருக்கு.”
“ஆமாம் விக்ரம். எனக்கு உடம்பு சரி ஆயிடுச்சு. இனி மெடிசன் எதுவும் தேவை இல்லை. I am alright now. (நான் நன்றாக இருக்கிறேன்).” என்றான் மலர்ந்த முகத்துடன்.
“சரி நான் வீட்டுக்கு போகட்டுமா? இனிமேல் நான் பார்த்துக்கிறேன்.”. என்றான் சுகந்தன்.
“இருங்க கந்தன். இப்போ கிறிஸ்மஸ் ஹாலிடேஸ் ஆரம்பிச்சிடுச்சு. கார்த்திக் வந்த அப்புறம் போகலாம். அங்க போய் தனியா என்ன பண்ண போறீங்க? கிறிஸ்மஸ் ஹாலிடேஸ் முடியட்டும். போகலாம்.” என்றான்.
கந்தனுக்கும் அந்த வீட்டில் இருப்பது பிடித்திருந்தது. முக்கியமாக சாதனா இருக்கும் இடத்தில் இருப்பது இதமாக இருந்தது. (verticalresponse.com)
எனவே “சரி” என்றான் மறுப்பேதும் சொல்லாமல்
அன்று ஜோதி விஜயா இருவரும் வந்திருந்தனர்.
விஜயா சஞ்சனா மூலம் சாதனா, சுகந்தன்கணவன்-மனைவி இப்போது பிரிந்து இருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டாள். எனினும் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை.
சாதனா, சஞ்சனா, விஜயா மூவரும் சேர்ந்து கேக் செய்து கொண்டிருந்தனர். ஜோதி “ஆன்ட்டி நான் என்ன பண்ணனும் சொல்லுங்க.” என்று கேட்டு கேட்டு அவர்களுக்கு உதவிக் கொண்டு இருந்தாள்.
மூன்று பெண்கள் ஒரு குழந்தை ஆகிய நால்வரும் சேர்ந்து செய்து கொண்டிருந்ததை பார்த்த விக்ரம்
“இத்தனை பேரும் சேர்ந்து கேக் பண்றேன்னு எதையோ போட்டு கலக்கிட்டு இருக்கீங்க. பார்த்து கேக்கு பதில் சப்பாத்தி வந்திட போகுது.” என்றுவிட்டு சிரித்தான் விக்ரம்.
“எங்களை எல்லாம் பார்த்தா உங்களுக்கு சிரிப்பா இருக்கா? எப்படி கேக் செஞ்சு அசத்துகிறோம் பாருங்க.” என்றாள் சஞ்சனா.
“பார்க்கலாம் பார்க்கலாம் அதுக்கு முன்னாடி ஒரு பீஸ் கேக் நீங்க சாப்பிட்டுட்டு அதுக்கப்புறம் எனக்கு கொடுங்க. என்னால ரிஸ்க் எல்லாம் எடுக்க முடியாது.”. என்றான் விக்ரம்
“நீங்க ரொம்ப பேசுறீங்க.” என்று சஞ்சனா கையில் இருந்த கேக் மாவினை எடுத்து வந்து கிண்டலடித்துக் கொண்டிருந்த கணவன் முகத்தில் பூசி விட்டாள்.
அவன் அவளை பிடித்து அவள் முகத்தில் தன் முகத்தால் அவன் முகத்தில் இருந்த மாவினை பூசினான்.