அத்தியாயம் 7
வாகனத்தை வெகு சிரத்தையாக ஓட்டிக் கொண்டு சென்றான் விஷ்னு. சுமிக்கோ பாட்டில்லாமால் வாகனப் பயணங்களே இல்லை. மதியிடம் “ஏய் இதென்ன சவம் கொண்டு போற வண்டியா ஒரு சோங் கூட இல்ல ரொம்ப போர் அடிக்குது” என்றாள் சுமி. “சும்மா இருடீ கோயிலுக்குப் போகும் போது பாட்டு போடக் கூடாதுங்கறது அண்ணனோட கட்டளை” என மதி கூற “உங்க நொண்ணனுக்கு எதுல எதுல கன்டிஷன் போடுறதென்ட வெவஸ்தயே இல்லாமப் போயிட்டுது ச்சே..” என்றவள் “ஏங’க போர் அடிக்குது கொஞ்சம் சோங்ஸ் போடுங்களே” என்றாள் சுமி. “கோவிலுக்குப் போகும் போது சோங்ஸ் போடக் கூடாது என்றத உன் பிரண்ட்கிட்ட சொல்ல இல்லையா மதி” என்றான் விஷ்வா.
“அது வந்து அண்ண… அது என்று மதி கூறி முடிப்பதற்குள் “அப்பிடின்னு ஏதாவது ரூல்ஸ் என்ட் ரெகு!லேஷன்ஸ் இருக்கா? ஏன் கோயிலுக்கு போகும் போது கேட்கக் கூடாத சோங்ஸ் அஹ் வச்சு இருக்கீங்களா? இல்ல பாட்டுப் போட்டா சாமி கண்ண குத்திடுமா? என்றாள் சுமி. மதி உட்பட அங்குள்ள அனைவருக்கும் பக் என்று இருந்தது.
அம்மா என்று அவனுக்கு நேரே உள்ள ஆசனத்தில் அமர்;ந்திருந்த லதாவைக் கோவமாகப் பார்த்தவனை கண்களால் கெஞ்சி பொறுமையை கடைபிடிக்கச் சொன்னார் லதா. சரி போட்டுத் தொலைக்கிறேன் என்று பாட்டைப் போட்டான்.
“மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ” என்ற வாணி அம்மை அவர்களின் தெய்வீகக் குரல் ஒலிக்க ஆரம்பித்தது. சுமிக்கு இடைக்காலப் பாட்டுக்கள் என்றாள் விருப்பமே தவிர பழைய பாட்டுக்கள் எல்லாம் சுத்தமாவவே பிடிக்காது. ஆனாலும் அவள் விஷ்வாவையும், தான் சூடியிருந்த மல்லிகையையும் நினைத்துக் கொண்டு வந்ததால் என்னவொரு அருமையான சிட்டுவேஷன் சோங் என்று விஷ்னுவை கடுப்பேத்துவதற்காக வேண்டி சத்தமாக கூறியது விஷ்வாவின் காதில் விழுந்து விட்டது. என்ன இவள் உளருகிறாள் என்று யோசித்தவனுக்கு, தான் அவளுக்கு மல்லிகையை எடுத்துக் கொடுத்தது ஞாபகம் வந்தது. திடீரென்று ஒரு பிரேக்ஐப் போட்டான்.
காரினுள் இருந்த அனைவரும் முன்னால் சென்று பின்னால் வந்தனர். திரும்பி அவளை முறைத்தவன் “ இனி வாய மூட இல்ல என்றாள் இறக்கி விட்டிடுவேன்” என்று மிரட்டினான் விஷ்வா லதாவின் முகத்தைப் பார்த்து. அது சுமிக்கு சொல்லப்பட்டது என்று அனைவருக்கும் தெரியும் சுமி உட்பட. ஆனால் சுமியோ அதை சற்றும் கவனத்தில் எடுக்காமல் “ ஏன்? அண்ட்டி என்ன பண்ணாங்க? அவங்கள ஏன் இறக்கி விடனும்” என்று கேட்டது தான் தாமதம் விஷ்வா கோபத்தின் எல்லைக்கே போய் விட்டான்.
“நான் அத உனக்குத் தான் சொன்னேன், பாட்டு போட சொன்னாய் போட்டேன், தேவையில்லாம கொமன்ட்ஸ் பண்ணாத” என்று அதட்டி விட்டு காரை மீண்டும் எடுத்தான். லதா சுமியை பாவமாகப் பார்த்தார். சுமியோ அதெல்லாம் என்ன பெரிய விடயம் என்பது போல் கண்ணை சிமிட்டி அழகு காட்டினாள். லதாவின் மனது மலர்ந்தது. வந்த இரண்டு நாளிலும் எண்ணிப் பார்த்தால் ஏழெட்டு வாக்கியங்களே விஷ்வா சுமியிடம் பேசி இருப்பான், அதிலும் வாங்க போங்க என்ற மரியாதை வார்த்தை சுமிக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை, விஷ்வா கோபப்பட்டாலும் தன்னை வா போ என்று உரிமையுடன் அழைத்தது அவளுக்கு ஒரு வித சந்தோஷத்தைத் தந்தது. அத்தோடு தான் மனதில் எண்ணிய அதே விடயத்தை விஷ்வாவும் நினைத்திருக்கிறான் என்பதில் மனம் நிறைந்த நிம்மதி.
கோயில் திருவிழா என்றால் சொல்லவா வேண்டும்? ஆடை அலங்காரங்கள், வீதியோரக் கடைகள், அங்குமிங்கும் நதியாக ஓடிக் கொண்டிருக்கும் சின்னஞ்சிறுசுகள், கடைகளில் எல்லாம் பேரம் பேசிக் கொண்டிருக்கும் பெரிசுகள், பாவாடை தாவணி என்றும், பட்டுப் புடவை என்றும் ஒரு மலர்க் குவியலாக ”த்துக் குலுங்கும் மங்கையர், அவர்களை ஜொல்லு விடுவதற்கென கூடி நிற்கும் இளைஞர்கள் என திருவிழா ஒரு கலக்குக் கலக்கியது. அவர்களது கார் கோயிலை வந்தடைந்தது. அனைவரும் பயபக்தியுடன் இறங்கினர்.
பதுளையில் பிரசித்தி பெற்ற கோயில் எனில் அது ரொக்கில் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் தான், திருவிழா என்றாளே விஷேடம் தான், அதிலும் ஏப்ரல் விடுமுறையில் நடக்கும் திருவிழா எனில் சொல்லவா வேண்டும்? பள்ளி மாணவர்கள் முதல் பல்கலைக்கழக மாணவர்கள் என அனைவருக்கும் விடுமுறை என்பதால் திருவிழா கலை கட்டும். அருணாச்சலம் மகேஸ்வரி, சதீஸ், கந்தசாமி மற்றும் லதா என அவர்கள் அனைவரும் ஒன்றான சென்றனர். மதி வழமையாக எங்கு சென்றாலும் விஷ்வாவுடன் தான் செல்வாள்.
அதனால் சுமியும் மதியும் விஷ்வாவுடன் சென்றார்கள். அங்குள்ள இளைஞர்களில் ஒருவன் “யார்ரா இவங்க, இதுல ஒன்னு நம்ம ஊர் ”ந்தி, பக்கத்தில வாற செர்ரி யாருடா? என்றான். “டேய் அவங்கள பார்த்தியே, அவங்களுக்கு முன்னால நம்ம ஊர் காளை விஷ்வா வர்றான் பார்த்;தியா? நானும் அந்த பு; சாரிய இந்த ஊர்ல பார்த்ததில்ல” என்றான் இன்னொருவன்.
“டேய் நம்ம ஊர் ஆண்கள்ளயே ஒழுக்கத் திரவியம் என்றால் அது விஷ்வா தான், நம்ம ஊர்ல படிச்சதுல இருந்து, படிக்காது வரைக்கும், ஏன் கல்யாணம் முடிச்சு புருஷன பக்கத்துல வச்சிட்டே விஷ்வாவ சைட் அடிக்கிறவங்க எத்தின பேர்? ஏன் போன வருஷ திருவிழால கூட நம்ம சரஸ்வதி அத்தப் பொண்ணு அவன்கிட்ட வம்பிழுத்து கன்னத்தில வாங்கிக் கட்டிக்கிட்டாவே ஞாபகம் இருக்கா? நல்லா மூடிட்டு போறவங்களுக்கே மசியாத இவன், எப்ப பாரு ஊர்வலம் மாதிரி உடுப்புப் போட்டுட்டு திறந்து கொண்டு தெரியிறவள எப்பிடி பார்ப்பான்? அது தான் விட்ட அறைல அவள் ஊர விட்டே போயிட்டா, உங்களுக்குத் தெரியும் தானேடா? அப்பிடிப் பட்ட ஒருத்தன் பக்கத்தில அவனோட தங்கச்சிய தவிர இன்னொருத்தி வாறா என்றால் அது அவனோட பொஞ்சாதியாகப் போறவளாத் தான் இருக்கனும்” என்று கூறி முடித்தான்.
அவர்கள் பேசியதை அங்கு ஒன்றாக வந்து கொண்டிருந்த லதாவும், மகேஷ்வரியும் கேட்டு விட்டார்கள். அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு விஷ்வா, மதி, சுமி ஆகிய மூவரையும் பார்த்தனர். விஷ்வாவிற்கும், சுமிக்கும் ஜோடிப் பொருத்தம் பிரமாதமாக இருந்தது. கண்கலங்கிய லதா அதை மகேஷ்வரி பார்க்கும் முன் துடைத்து விட்டு, “விஷ்வாவப் பொருத்தவரைக்கும் அவனோட கல்யாணம் ஒரு கனவு என்டு சொல்லிட்டான், நானும் எத்தின இடத்தில இருந்து பொண்ண பார்த்துட்டேன், யாரையும் வேணாம் என்டு சொல்லிட்டான், கண் மூடுறதுக்குள்ள அவனுக்கு ஒரு கல்யாணத்த பண்ணி வச்சிரலாம் என்றால் அவன் அதுக்கு அசைஞ்சு கொடுக்கவே மாட்டேங்கிறான்” என்று புலம்பித் தள்ளினார்.
“ஐயோ அக்கா என்ன இது சின்னக் குழந்தை மாதிரி அழுறிங்க, விஷ்வாக்கும் கல்யாணம் நடக்கும், கவலப் படாதீங்க, நம்ம எல்லோரோட முடிவையும் தாண்டி கடவுள் ஒருத்தர் இருக்காரு தானே, அவருக்குத் தெரியும் எந்த நேரத்தில எத எத செய்யனும் என்டு, நீங்க எதையும் யோசிக்காதீங்க அக்கா” என்று லதாவை அரவணைத்தார் மகேஸ்வரி. “நீ சொல்றதும் சரிதான், ஆனால் ஒன்னு மகேஸ், அந்த சுமியப் பார்த்த உடனேயே எனக்குள்ள ஒரு இனம் புரியாத உறவு, ரொம்ப நெருக்கமானவள் மாதிரி, அதை நான் அவர்கிட்ட கூட சொன்னேன், அவளோட சுட்டித்தனம், அன்பான பேச்சு, எல்லோரையும் ஆதரிக்கிற குணம் அப்பிடின்னு இன்னும் எவ்வளவோ? ம்ம்ம் (பெருமூச்சு விடுதல்) என்ன பண்றது இந்த மகராசியை மருமகளா எடுக்கிற அதிஷ்டம் யாருக்கு இருக்கோ?” என்று தனது மனக்கிடக்கையை கொட்டித் தீர்த்தார் லதா.
மதி, சுமி ஆகிய இருவரும் அங்குள்ள சாப்பாட்டுக் கடைகளை நோட்மிட்டவாறு வந்து கொண்டிருந்தனர். சுமிக்கோ அங்கிருந்த பஞ்சு முட்டாய், ”ந்தி, லட்டு என இனிப்பு ரகங்களை பார்த்ததில் அவளுடைய கால்கள் அந்தக் கடைகளை தாண்டிப் போக மறுத்து விட்டது. மதிக்கும் அந்த மாதிரியான ஆசைகள் தோன்றுவதில்லை என்றாலும், சுமியுடன் பழகிய கொஞ்ச நாளிலேயே சுமியுடைய சில செயல்களை பிடித்துக் கொண்டாள் மதி. அவளுக்கும் அங்குள்ள கடைகளைச் சுற்றிப் பார்த்து, சுமிக்குத் தோன்றிய அதே ஆசைகள் தோன்றினாலும் விஷ்வாவின் மேலுள்ள பயத்தினால் அடக்கிக் கொண்டு வந்தாள். ஏனெனில் விஷ்வாவிற்கோ பெண்கள் கடை வீதிகளிலெல்லம் திரிந்து பொருட்கள் வாங்குவது, வழி நெடுகிலும் சாப்பிட்டுக் கொண்டு வருவது என்றாலே பிடிக்காது. ஆக மொத்தத்தில் சுமியின் நடத்தைகளுக்கு எதிர்மறையானவன் விஷ்வா.
“ஐயய்யோ வொலட் அஹ் வேற வீட்டிலயே வச்சிட்டு வந்திட்டோமே என்ன பண்றது? என்று யோசித்தவள் “ ஏய் மதி உன்கிட்ட ஒரு பை ஹன்ரட் ருபீஸ் இருந்தா கொடுடீ” என்று கோட்டாள் சுமி. “ சோரிடீ நான் பேர்ஸ் கொண்டு வர இல்லடீ” என்றவளை செல்லமாக முறைத்து விட்டு “ஆபத்துக்கு பாவமில்ல, நம்ம ஹிட்லர்டயே கேட்டிட வேண்டியது தான் என்றவள் விஷ்வாவிடம் “ஏங்க எனக்கொரு ஹெல்ப் பண்ணுவிங்களா? என்று கேட்டாள். என்ன என்பது போல அவளை நோக்கி அவனது புருவ அம்புகள் உயர்த்தப்பட்டன. “இவரு பெரிய ஐயனாரரு, அருவாக்கத்தி போல புருவத்தத் தூக்கிட்டாரு என்று தனக்குள் நினைது விட்டு “இங்க நிறை சாப்பாட்டு ஐடம் எல்லாம் கண்ணுக்கு தெரியுது இல்லையா? அத சாப்பிடனும் போல இருக்கு, சாப்பிடட்டா? என்றாள் சுமி.
“யுவர் விஷ் ” என்று சொல்லிவிட்டு திரும்பிச் செல்ல முயன்றவனை “அது தெரியும்க, உங்ககிட்ட சாப்பிடுறதுக்கு நான் பெர்மிஷன் கேட்க இல்ல, நீங்க என்ன கன்சி!மர் கெயார்லயா வேலை செய்றீங்க உங்ககிட்ட பெர்மிஸன் வாங்கிட்டு சாப்பிடுறதுக்கு” என்றாள் சுமி. விஷ்வா இடுப்பில் கைவைத்து விட்டு மூச்சொன்றை தனது கன்னங்கள் ஊதிப் போகும் வண்ணம் வெளியிட்டு கோபத்தை எதில் காட்டுவது தெரியாமல் தனது கரிய கேசத்தை கைகளால் இறுகப் பிடித்தான், சுமிக்கோ அவன் எரிச்சல் படும் போது உள்ள அழகு கூட பிடித்திருந்தது. மதி சுமியைக் கிள்ளிவிட்டு கொஞ்சம் அடக்கி வாசிடீ என்றாள்.
“சோ… ஏன் என்ன கூப்பிட்டீங்க? உங்களுக்கு பிடிச்சா வாங்கி சாப்பிடுங்க” என்றான் விஷ்வா. ஐயோ திரும்பவும் வேதாளம் மரியாதை முருங்கை மரம் ஏறிவிட்டதே என்று யோசித்தவள் “காசு யாரு கொடுப்பாங்க? உங்க வீட்டுக்கு வந்தவங்கள நீங்க தானே கவனிச்சுக்கனும், மதி வேற சொன்னாள் கடையேழு வள்ளல்களில ஆறு பேர் சங்க காலத்திலேயும், 7வது ஆள் 21ம் நூற்றாண’டுல எங்க அண்ணன் வடிவிலயும் இருக்கார் என்டு, (அவள் கூறியதும் விஷ்வா மதியைப் பார்க்க இல்லை அண்ணா என்பது போல் குழந்தையாக தலையாட்ட, பரவாயில்லை என்று மெல்லியதாக புன்னகையை உதிர்த்து விட்டான் விஷ்வா) அத நம்பி ஒத்த ரூபா கொண்டு வர இல்ல… சோ நீங்க தான் காசு தரனும்” என்றாள் சுமி.
“எதையுமே ஸ்ரைட் ஆஹ் கேட்டு உங்களுக்கு பழக்கம் இல்லையா, ஓ மை கோட் இந்தாங்க” என்று ஆயிரம் ரூபா நோட்டை அவளிடம் நீட்டினான் முறைத்துக் கொண்டே. “ஏங்க முறைக்காம தாங்க, இதுல இருந்து ஏதாவது வாங்கி சாப்பிட்டா பின்ன சமிபாடடையாமப் போயிடும்” என்றாள் சுமி. “எக்ஸ்கி!ஸ் மீ பிளிஸ்” என்று கையெழுத்துக் கும்பிட்டவன் வேண்டா வெறுப்பாக சிரித்து விட்டு “இந்தாங்க” என்றான். “தாங்ஸ்க கவலப் படாதீங்க வீட்ட போன உடனே தந்திடுவேன்” என்றாள் சுமி. இவளுடன் கதைத்தால் தான் பைத்தியமாத்தான் ஆகி விடுவோம் என்று எண்ணியவன், அவளிடம் கதையை வளர்க்காமல் ஆளை விட்டால் போதும் என்று கிளம்பி விட்டான். இதைப் பார்த்த அங்கு கூடி இருந்த இளைஞர்களில் ஒருவன் “பார்த்தியா அப்பவே நான் சொன்னேன் தானே பொண்டாட்டியாகக் போறவ என்று, யாருக்குமே அடங்காத விஷ்வா அடங்கிப் போறான் அவகிட்ட பாருங்கடா என்று சொல்ல ஆமாம் என்பது போல அங்குள்ளவர்களும் தலையாட்டினார்கள்.
கோயிலுக்கு வந்தவர்களை இன்னும் காணவில்லை என்று தேடி வந்த மதியின் குடும்பத்தினருக்கு விஷ்னுவிடம் சுமி செய்யும் அரட்டைகள் சிரிப்பை வரவழைத்தது. அதை இரசித்துக் கொண்டிருக்கும் போது “ பெரியம்மா விஸ்னு அண்ணன் சுமி அக்காக்கு ரொம்ப பயப்பிடுறாங்க இல்லையா? பேசாம சுமி அக்காவையே விஷ்னு அண்ணனுக்கு தள்ளி விட்டிடுங்க” என்றான் சதீஸ்.
அதைக் கேட்ட கந்தசுவாமி “டேய் இது மட்டும் அவன்ட காதுல கேட்டிச்சு உண்டு இல்லன்டு பண்ணிடுவான், நீ சொல்றது உண்மையா இருந்தாலும், அந்த சுமியக் கண்டாலே அவனுக்கு பிடிக்க மாட்டேங்குது, அந்தப் பொண்ணு வேற அவன வம்பிழுத்துக்கிட்டே இருக்கிறாள், இந்த லட்சணத்தில எங்கன்டு போய் நான் அவனுக்கு சுமியக் கட்டி வைக்கிறது என்றவனை அதிசயமாகப் பார்த்த அருணாச்சலம் “அண்ணே அவன் தான் விளையாட்டுக்குச் சொல்றான் என்றா நீங்களும் அத சீரியஸா எடுத்துக்கிட்டீங்க” என்றார். “இல்ல தம்பி அந்தப் பொண்ண முதல் முதல்ல பார்தப்பவே எனக்கும், லதாக்கும் அப்பிடியொரு யோசின வந்திச்சு” என்று சோகமாகக் கூறினார் கந்தசுவாமி.
“ஐயோ பெரியப்பா இகுக்கு ஏன் பீல் பண்றிங்க, ஊன்னு ஒரு வார்த்தை சொல்லுங்க இப்பவே ரெண்டு பேரையும் சேர்த்து வச்சு, கெமிஸ்ரியக் கிரியேட் பண்ணி விடுறேன்” என்று சதீஸ’ கூற அவனைக் கலாய்ககவென “ஊ” என்றார் கந்தசுவாமி. “அப்பி…டி எல்..லாம் உடனே சொல்லிடக் கூடாது. கொஞ்சம் டைம் கொடுங்க” என்றான் சதீஸ்.
கந்தசுவாமியின் பேச்சை கேட்டு சிரித்த மகேஸ்வரி “படிப்பை தவிர மற்ற எல்லாமே உனக்குத் தெரியும், இதுக்குத்தான் சொல்றேன் உன்ன, இந்த ஊருகுல்ல இருக்கிற தருதலைகளோட எல்லாம் சேராத என்டு, அண்;ணே இத நீங்க பெருசா எடுக்காதீங்க, உங்களோட மனசிலயும், அக்காட மனசிலயும் இப்பிடி ஒரு எண்ணம் இருக்கிறது ஓகே தான், பட் கட்டிக்கப் போற அவங்களுக்கு அதுல விருப்பம் இருக்கனுமே அண்ணே, காலம் பதில் சொல்லுற வரைக்கும் வெயிட் பண்ணுவோம் என்று மமேஷ்வரி கூற அதுவும் சரிதான் என்று ஏற்ற அனைவரும் காலத்தின் மீது பாரத்தைப் போட்டார்கள்.
திருவிழாவில் சுமி குழந்தையாகவே மாறினாள், அங்குமிங்கும் சுற்றித் திரிந்தாள். மதியும் அவளுடன் சேர்ந்து கொண்டாள். “அவளுக்கு அடக்கம்டா என்னன்னே தெரியாது போலயே என்று மனதிற்குள் எண்ணிக் கொண்ட விஷ்வா மதிக்கு பாதுகாப்பாக அவளுடனேயே இருந்தான்.