“ஏன் அவங்க வீட்டு ஆளுங்க தானே வர்றாங்க. இதை அவங்க செய்ய மாட்டாங்கலா…சரி செய்ய தான் முடியாது. உங்களுக்கு கூட மாட ஒத்தாசையாவது செய்ய வரலாம்லே…?”
மணிமேகலைக்கு தன் அன்னையிடம் மட்டுமே வாய். மற்றவர்கள் முன் மிக மிக பதிவிசாக தான் நடந்துக் கொள்வாள். அது கூட வயது கூட கூட அன்னையுடனான பேச்சு குறைந்து விட்டது.
அவளின் பேச்சில் அன்னை போட்ட… “உஸ்ஸில்.” அமைதியானவள் பின் வாய் திறக்கவில்லை.
மகளின் அமைதியை பார்த்த வரலட்சுமி கையில் சூய்யத்தை ஒன்றை எடுத்து… “இத சாப்பிடுடா…இத சுட்டு முடிச்சதும் காபி தண்ணி கலக்குறேன்.” என்ற அன்னையின் பேச்சில் காதில் வாங்காது முகம் கசங்கலோடு தன் அறைக்கு சென்றவளுக்கு, தன் உடம்பில் தெரிந்த மாற்றங்களும், தன் பள்ளி ஆசிரியர் சொல்லிக் கொடுத்த சொல்லும் ஒத்து போக… தான் பெரிய மனிஷியாகி விட்டோம் என்று தெரிந்து விட்டது.
தெரிந்த விசயத்தை இதை நாமே அம்மா கிட்ட சொல்லனுமா…?இல்ல அவங்கலே கண்டு பிடிச்சி நம்ம கிட்ட கேட்கும் போது தெரியாத பிள்ளை போல நடந்துக்கனுமா…? அவள் மனதில் சிறு குழப்பம்.
இந்த குழப்பத்தை நீக்க என அங்கு வந்து சேர்ந்தாள் வசுந்தரா… “என்னடீ பரிச்சை முடிஞ்சதும் துள்ளி குதிச்சிட்டு என் வீட்டுக்கு ஓடி வருவ. இன்னைக்கு என்ன என்னை வர வழச்சிட்ட…?” என்று கேட்டுக் கொண்டு இருந்தவளுக்கு அப்போது தான் தன் தோழியின் மக மாறுதல் கண்ணில் பட்டது.
“என்ன மணி…என்ன ஆச்சு…?”என்று கலக்கத்துடன் கேட்டாள்.
“வயிறு வலி வசு.” என்று மணிமேகலை சொன்னதுமே… இதில் சீனியரான வசுந்தரா…
“ஏய் எழுந்துடு பார்க்கலாம்.”
இப்போதே அவளை எழுப்பி அவளிடம் கரையை பார்த்து விட்டால் போதும், என்ற சந்தோஷத்தோடு அவளை எழுப்ப முயற்ச்சித்தாள்.
பின் இருக்காதா…? தான் மட்டும் இரண்டு வருடம் முன்னவே பெரிய மனிஷியாகி, அதன் சட்டதிட்டங்கள், கஷ்ட நஷ்டங்களை தான் அனுபவித்துக் கொண்டு இருக்கும் போது, தன் வயதை ஒற்ற இவள் மட்டும் சுதந்திரமாய் இருந்தாள்.
[the_ad id=”6605″]
மணிமேலைக்கு வயிறு வலி என்றால், வசுந்தராவுக்கு வயிற்று எரிச்சலில்… “சனியனே எழுந்துடுடீ…” கொஞ்சம் பூசியவாகில் இருந்த மணிமேகலையை அவளால் எழுப்ப முடியாத எரிச்சலில் கத்தினாள்.
“ஏய் விடுடீ எனக்கே தெரியும்.” என்று அசால்ட்டாய் சொன்னவளின் பேச்சில்…
“என்ன தெரியும்…?” தான் நினைத்ததை தான் சொல்கிறாளா என்று பர பரத்து கேட்டாள்.
“நீ எத நினச்சி என்னை எழ சொன்னியோ…அது தான். நான் வயசுக்கு வந்துட்டேன்.” என்று அவள் காதில் கத்தினாள்.
“ஏய் மெல்லடீ மெல்ல.” என்று மணிமேகலை அதட்டிய வசுந்தரா…
“அம்மா தான் உன்னை இங்க உட்கார சொன்னாங்கலா…?” என்று கேட்டுக் கொண்டே அவளை விட்டு கொஞ்சம் தள்ளி சென்றவள்…
‘அய்யோ இவளை தொட்டுட்டனே என்னையும் குளிக்க சொல்லுவாங்கலோ…’ தன் கவலை தனக்கு என்பது போல் இருந்தவளின் நினைவில்…
“இன்னும் யாருக்கும் தெரியாது.” என்ற மணிமேகலையின் பேச்சில்…
“ஏய் அப்போ ஏன்டி இங்க உட்கார்ந்து இருக்க வா…அம்மா கிட்ட சொல்லலாம்.” என்று சொல்லிக் கொண்டே அவளின் கை பற்ற சென்றவள் பின் தன் கையை இழுத்துக் கொண்டே…
“வாடி.” என்று அழைத்தவளை பார்த்து… “நீ போய் சொல்.” என்று சொன்னவள் பின் எதையோ நினைத்தவாறு…
“ஏய் இதை நானே கண்டு பிடிச்சி சொன்னேன் சொல்லாதே…நீ பார்த்ததா சொல்.” என்று கண்ணடித்து சொன்னவளின் திருட்டு தனம் அன்று அப்போது ஆராம்பித்தது..
பின் அவள் அத்தை சங்கரி பெத்த சீமந்த புத்திரன் வீரேந்திரன் சென்னையில் M.B.A படித்துக் கொண்டு இருப்பவனுக்கு அப்போது தேர்வு சமயம் என்பதால் ஊருக்கு வர இயலாது என்ற காரணத்தால் பக்கத்து ஊரில் அவளுக்கு மாமன் மகனாய் தூரத்து உறவாகும் ஒருவன் அவளுக்கு குச்சி கட்டி மாலை போட்டு சந்தனம் வைக்கும் வேளயில், அவள் கன்னத்தில் பட்ட ஜில் என்ற உணர்வில் அவனை மேல் நோக்கி பாராது கீழ் கண்ணோக்கி அவனை பார்த்து விட்டு மனதில் பையன் சும்மா நச்சுன்னு தான் இருக்கான்.
நினைத்ததை “அவன் என் கன்னத்துல கை வெச்சப்பா சும்மா ஜூல்லுன்னு இருந்ததுடீ… “ என்று வசுந்தாராவிடம் சொன்னாள்.
“அவன் இல்லடீ. இப்போ நான் சந்தனத்தை வெச்சி உன் கன்னத்த தொட்டா கூட ஜூல்லுன்னு தான் இருக்கும்.”
அப்போது அந்த வழியே போகும் ஒரு வயதானவரைய் காட்டி… “அந்த தாத்தா சந்தனம் பூசுனா கூட தான்டீ ஜூல்லுன்னு இருக்கும்.” என்று அன்று ஆராம்பித்த வசுந்தரா மணிமேகலையின் பேச்சு இதோ இன்றும் தொடர்கிறது.
மணிமேகலையின் இந்த வீர தீர செயல் எல்லாம் வெறும் பேச்சு அளவோடு மட்டும் தான். அதுவும் தான் பார்ப்பது பார்ப்பவருக்கு கூட தெரியாது தான் பார்ப்பாள்.
[the_ad id=”6605″]
வீட்டில் வேலை செய்ய துப்பு இல்லை என்று சித்திமார்கள் திட்டினாலும், இது போல் ஒழுக்க விசயத்தில் திட்டியது கிடையாது. ஊரிலும் அப்படியே தான். அம்மணிக்கு அவ்வளவு நல்ல பெயர்.
பழைய நினைவுகளில் இருந்து வெளியில் வந்தவர்கள் என்ன நினைத்தார்களோ இருவரும் ஒரு சேர சிரித்து விட்டனர்.
“என்னடி அதிசயமா காலையிலேயே உன் காத்து இந்த பக்கம் வீசுது. உங்க அம்மா எப்படி விட்டாங்க…?என்ன விசயம் என்பது போல் கண் சிமிட்டி வசுந்தாராவை பார்த்து மணிமேகலை கேட்டாள்.
“அதெல்லாம் ஒன்னும் இல்லடீ.” என்று சொன்னவளின் கன்னக்கதுப்பு சிவப்பில்… “ஒன்னும் இல்லேன்னு சொல்லும் போதே ஓராயிரம் இருப்பது போல இருக்கேடீ…சொல்லு உங்க அம்ம கண்ணுல மண்ணை தூவிட்டு எப்படி வந்த…?” என்ரறு கேட்டாள்.
வசுந்தாராவும் மணிமேகலையும் சிறுவயது முதலே எப்போதும் ஜோடி போட்டுக் கொண்டு தான் சுற்றுவார்கள். சிறுவயதில் அவள் இவள் வீட்டுக்கு போவதும், அவள் இவள் வீட்டுக்கு வருவதும் எப்போதும் நடப்பது தான்.
ஆனால் அந்த எப்போதும் நடக்கும் விசத்தில், இரண்டு வருடம் முன் ஒரு சில மாற்றங்களை கொண்டு வந்தாள் வசுந்தாராவின் அம்மா சுந்தரி…
“மணி நீ எப்போன்னாலும் இங்கு வாம்மா…ஆனா இனி வசு அங்க வர்றது அவ்வளவு நல்லா இருக்காது.”
இதை ஒரே தடவை தான் சுந்தரி சொன்னாள். “ஏன்…?எதுக்கு…?” என்று கேளாது … “சரி அத்தை.” என்று சமத்து பிள்ளையாய் ஒத்துக் கொண்டாள்.
“ஏன்டி நீ மட்டும் என் வீட்டுக்கு வரலாம். நான் போக கூடாதுன்னு சொல்றாங்க… இது எந்த வகையில் நியாயம்…”
பன்னிரெண்டாம் தேர்வு எழுதிவிட்டு வீட்டில் சும்மா இருக்க முடியாது, மார்க்கெட் ரோடில் இருக்கும் கணினி வகுப்புக்கு செல்லும் போது, மணிமேலையிடம் வசுந்தரா நியாயம் கேட்டாள்.
“அது என்ன நியாயம் என்றால் உன் வீட்டில் இருக்கும் ஆண்பிள்ளை உன்னோட தம்பி. அதாவது என்னோட சின்னவன். என் வீட்டில் இருக்கும் ஆண்பிள்ளைகள் என் சித்தி மகன்கள் என்னோட அண்ணன். அதாவது உன்னோட பெரியவன். புரியுதா…இப்போ உங்க அம்மாவோட நியாயம்.”
சும்மா நம்ம மணிமேகலை கோடு போட்டால் போதும். அதில் ரோடு போட்டதோடு மட்டும் இல்லாம அதில் வண்டியே ஒட்ட விட்டுடுவா….
அதற்க்கு வசுந்தரா…. “ஓ…” என்று புரிவது போல் தலையாட்டியவளின் முகம் திரும்பவும் குழம்ப…
“இப்போ என்னடி உனக்கு நியாயம் தெரியனும்…? கொஞ்சம் கொஞ்சுனுடு அறிவாளியா பிறந்தது என் குத்தமா…? கேளு கேளு….உன் சந்தேகத்தை மொத்தமும் நான் தீர்த்து வைக்கிறேன்.”
“இல்ல உங்க அப்பா தான் பெரியவர். ஆனா உங்க சித்தப்பா பசங்க உன்னோட எட்டு ஏழு வயசு பெரியவங்கலா இருக்காங்க…?” என்று வசுந்தரா கேட்டது நியாயமான கேள்வி தான்.
ஆனால் அனைத்திற்க்கும் சட்டென்று பதில் சொல்லும் நம் மணிமேகலை, இதற்க்கு மட்டும் பதில் சொல்ல முடியாது அமைதியாகி விட்டாள்.
[the_ad id=”6605″]
ஆம் வசுந்தரா கேட்ட இந்த கேள்வி…மணிமேகலையின் மூளை தன் பன்னிரென்டாம் வயதில் இருந்தே கேட்க ஆராம்பித்து விட்டது.
ஆனால் தன் சந்தேகத்தை கேட்க தான் அந்த வீட்டில் ஆள் இல்லை. ஒரு சில ஆண்கள் வெளியில் வீரமாய் நடந்துக் கொள்வார்கள். வீட்டில் அமைதியின் சொரூபமாய் காட்சி தருவார்கள்.
அது தான் வெளியில் புலி. வீட்டில் எலி என்பது. ஒரு சில ஆண்கள் வீட்டில் தான் தன் தைரியம் எல்லாம். வெளியில் சும்மா பம்மிக் கொண்டு இருப்பார்கள்.
அப்போ அந்த ஆண்களின் உண்மையான சுயரூபம் என்ன…? யாரும் இது தான் என்று சொல்ல முடியாது. அது போல் தான் நம் மணிமேகலையும்.
வீட்டில் எதுவும் வாய் திறக்க மாட்டாள். யார் என்ன சொன்னாலும் பேசாது போய் விடுவாள். இந்த குணம் சின்ன வயதில் தன் சித்தியின் மகன்கள் இவளிடம் இருக்கும் ஏதாவது ஒரு பொருளை பறித்துக் கொள்ளும் போது…
இவள் அவர்களிடம்… “தா…” என்று அவர்கள் பின்னே ஓடும் போது தன் அன்னை தன்னை பிடித்துக் கொண்டு… “அவர்கள் எதை எடுத்தாலும் கேட்காதே…” என்று தன்னை அடக்கியதாலோ…
அல்லது சித்திமார்களும், சித்தப்பாமார்களும் ஒரு சின்ன விசயதுக்கு எல்லாம் தன்னை திட்டும் போது… “நான் ஒன்னும் செய்யல…” என்று கோபத்தோடு சொல்ல வாய் எடுக்கும் போது எல்லாம் தன் அன்னை… “மணி பெரியவர்கள் எது சொன்னாலும் பதில் பேச்சு பேசாதே…” என்று அடக்கியதோ…
அப்பாத்தா பேரன்களை ஒரு மாதிரியாகவும், தன்னை வேறு ஒரு மாதிரியாக நடத்தும் போது… “அந்த காலத்து ஆளுங்களுக்கு ஆம்பிளை பசங்க தான் உசத்தி.” பாட்டியை நான் ஏதாவது கேட்டு விடுவேனோ என்று பயந்து தன் வாயை அன்னை அடைத்ததோ …என்னவோ… மணிமேகலை வீட்டில் வெளிப்படையாக என்ன வாய் திறந்தே பேச மாட்டாள்.
அடக்கி அடக்கி தன் அன்னையிடம் கூட ஏதாவது கேட்பதற்க்கு மட்டுமே பேசுவாள். அதே போல் தன் அன்னை தன்னிடம் ஏதாவது கேட்டால் ஆம் இல்லை என்று ஒரிரு வார்த்தையில் முடித்துக் கொள்வாள்.
அப்படி பட்ட மணிமேகலை இது போல் பெரிய விசயமான சித்தப்பாக்கு பிள்ளைகள் என்னோடு ஏன் பெரியவங்கலா இருக்காங்க…? என்று யாரிடம் கேட்பாள்.
அவள் வாய் திறப்பதும் மனம் திறப்பதும் அவள் அவளாய் இருப்பதும் வசுந்தராவிடம் மட்டுமே…
மனஅழுத்ததிற்க்கு ஒரு சிலர் தம் அடிப்பாங்க. தண்ணி அடிப்பாங்க. நம்ம மணி சைட் அடிக்கிறா அவ்வளவு தான். ஆனாலும் நம்ம மணி நல்ல மணி தான்.
இக்கதை உங்களுக்கு பிடித்து இருக்கா…?மணிமேகலையின் கேரைக்ட்டர் பிடித்து இருக்கா…? ஏதாவது பிடித்தம் இல்லை என்றால் தாரளமாய் சொல்லுங்க அடுத்த அத்தியாயத்தில் திருத்தி கொள்கிறேன். அடுத்து அடுத்த அத்தியாயம் எழுதுவது உங்கள் கருத்தில் தான் உள்ளது.