ஆதி சொன்னது போல மியூசிக் ப்ராக்டிசில் பிஸியாகிவிட, அவனை பார்க்கக்கூட முடியாது சோர்ந்துப்போனாள் தன்யா. மதிய இடைவெளியில் அவனை சந்திக்க ஆவலாய் ஆடிட்டோரியம் போனவளை முழுதாய் ஏமாற்றினான் ஆதி.
அவனை சுற்றி குறைந்தது முப்பது பேராவது ஆண் பெண் என்ற பாகுபாடின்றி சூழ்ந்து நிற்க, அவர்களிடம் என்னவோ பேசி சிரித்துக்கொண்டிருந்தான் ஆதி. அவன் முகமே இருவர் நகர்ந்த இடைவெளியில் சிறிதளவே தெரிய, இதில் எங்கே அவனிடம் பேசுவது?
சிறுது நேரம் நின்று நின்று பார்த்தவள், அவன் பார்வை தன் மீது விழப்போவதில்லை என அறிந்ததும் சோர்வுடன் திரும்பிவிட்டாள். அதேபோல இறுதி மணி ஒலித்ததும், அவனை பார்க்க வேகமாய் ஓடினால், அவளுக்கு முன்னே அவனை சூழ்ந்திருந்தனர் பலர்.
கடந்த பத்து நாட்களுக்கு மேலாய் அவனோடு கழித்த மாலை பொழுதுகள் இப்போது அவனில்லாமல் நகரவே மாட்டேன் என அடம் செய்தது.
‘அவனுக்கு என் நினைப்பே இல்லையா? நான் மட்டும் தான் அவனை நினைத்துக்கொண்டிருக்கிறேனா?’ என்ற எண்ணமே அவளை அதிகமாய் வாட்ட, எதிலும் பிடிப்பின்றி ஜடமென வலம் வந்தவளை, நண்பிகள் எத்தனை முறை காரணம் கேட்டும், சகஜமாக்க முயன்றும் எந்தவித பலனும் இன்றி போனது.
இதுவே தினமும் வாடிக்கையாக, அன்று மதிய உணவு நேரம் கேண்டீன் சென்ற பெண்கள் நால்வரும் வேண்டியதை வாங்கிக்கொண்டு அமர்ந்தனர். தன்யா மௌனமாய் உணவுண்ண, “ஏய் சீனியர்ஸ் எல்லாம் மியூசிக் ப்ராக்டிஸ் ஆரம்பிச்சுட்டாங்களாம் டி” என ஆரம்பித்தாள் நவ்யா.
அம்ருதா, “ஆமா, அப்டியே போனதும் ‘கப்’ வாங்கிட்டு வந்துடுற மாறிதான்”
அதை ஆமோதிப்பதை போல நகைத்த நவ்யாவும், “ஆனா, இந்தமுறை ‘அந்த சூப்பர்-சீனியர்’ தான் ட்ரெயின் பண்றாராம்! அவர் இந்த காலேஜ்ல இருந்த வரைக்கும் எல்லா வருஷமும் ‘ஓவரால் ட்ராப்பி’ நம்ம தான் வாங்குனோமாம்! தெரியுமா?” என அவள் சேகரித்த பொதுஅறிவு துணுக்கை அங்கே தூவிவிட,
எதையும் நினைக்க வேண்டாம் என நினைத்தாலும் இவர்களே நியாபகப்படுத்தி விடுகிறார்களே என நொந்துக்கொண்டாள் தன்யா. அவளால் அதையன்றி வேறு என்ன செய்ய முடியும்?!
தீப்தி, “யெஸ்! நானும் கேள்விப்பட்டேன்! இந்த வருஷம் அவர் இருக்குறதால கண்டிப்பா நம்ம தான் வின் பண்ணுவோம்ன்னு ரொம்ப கான்பிடென்ட்டா இருக்காங்களாம் எல்லாரும்!” என்றாள்.
அம்ருதா, “ஹே தீப்தி, நீ நல்லா பாடுவ தானே டி? வொய் டோன்ட் யூ ட்ரை?” என்றாள் தீப்தியிடம் ஆர்வமாய். ஆனால், முகம் சுளித்த தீப்தி, “அதுக்கெல்லாம் சான்ஸே இல்ல! ஏற்கனவே குரூப்ல இருக்க சீனியர்ஸ் தாண்டி வேற யாரையும் புதுசா சேர்த்துக்க மாட்டாங்க!” என வாட்டமாய் சொல்ல, அப்போது அவள் வகுப்பு தோழி ஒருத்தி அங்கே வந்து, “ஹே தன்யா, யுவர் டேட் இஸ் வெயிட்டிங் ஃபார் யூ!” என சொல்லிவிட்டு போனாள்.
“வாட்? என் டேட் ஆ?” என திகைத்த தன்யா, அடுத்த நிமிடமே விசிட்டர்ஸ் லாஞ்சை தேடி ஓடினாள். அங்கே அவள் தந்தை ராஜகோபால் ஒரு நாற்காலியில் அமர்ந்து சுற்றிலும் வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருக்க, “அப்பாஆஆ” என மொத்த மகிழ்ச்சியையும் குரலில் காட்டி அவரிடம் ஓடி சென்ற தன்யாவை தன் இரு கைக்கொண்டு ஆதூரமாய் அணைத்துக்கொண்டார் ராஜகோபால்.
ஆதியை பார்க்காததால் எழுந்த வாட்டம், தந்தையை பார்த்ததும் நொடியில் மறைந்திருந்தது.
“ப்பா! ஐ மிஸ் யூ” தந்தையின் நெஞ்சில் முகம் புதைத்து சொன்னவளுக்கு மெலிதாய் அழுகை கூட வந்தது.
“அட, என் தன்யாவா இது? காலேஜ் சேர்ந்து ஒரு வருஷத்துக்கு மேல ஆச்சு! என்னவோ இப்போதான் புதுசா எங்களை பிரிஞ்சுருக்க மாறி ‘மிஸ் யூ’ எல்லாம் சொல்ற? என்னடா விஷயம்?” என்றார் அவள் சிகையை வருடிக்கொடுத்தபடியே.
“ஒன்னும் இல்லப்பா” என்றவள் அவரை விட்டு பிரியாமல் இருக்க, ‘மகள் எதற்கோ வருந்திக்கொண்டிருக்கிறாள்’ என உணர்ந்தவரும் அமைதியாய் அவள் தன்னை மீட்டுக்கொள்ள நேரம் கொடுத்து நின்றார்.
அவர் எதிர்ப்பார்த்ததை போல அடுத்த ஐந்து நிமிடத்தில் அவரை விட்டு பிரிந்து நின்றவள், “என்ன டேட் சொல்லாம வந்துட்டீங்க?” என கேட்க, அவளை பொய் கோவமாய் முறைத்த ராஜகோபால், “சொல்லலாம்ன்னு தான் போன் பண்ணேன்! என் பொண்ணு தான் ரெண்டு நாளா போனே அட்டென்ட் பண்ணலையே!” என்றார்.
‘ஷ்!!’ நுனி நாக்கை கடித்துக்கொண்ட தன்யா, இரு காதுகளையும் விரல்களால் பிடித்தபடி ‘சாரி’ என முகம் சுருக்கி மன்னிப்பு கேட்க, “ஹாஹா!” என வாய்விட்டு சிரித்த ராஜகோபால், “என் பொண்ணு இன்னமும் ஐஞ்சு வயசு பாப்பா தான்!!!” என செல்லமாய் சொல்லி, அவள் கைகளை பிடித்துக்கொண்டு, “என்ன கவலையா இருந்தாலும் மனசுல வச்சுக்காம தூக்கி போட்டுடுடா, எதை நினைச்சும் ஸ்ட்ரெஸ் ஆகாத! அப்பா பொதுவா தான் சொல்றேன், சரியா?” என்றார்.
அவரிடம், ‘ம்ம்ம்’ என மெல்ல தலையசைத்தவள், “நீங்க மட்டும் வந்துருக்கீங்க? அம்மாவும் அண்ணாவும் எங்கப்பா?” என்றிட, “ஹப்பா! இப்போவாது கேட்டியே?” என்றவர், “அம்மா வரல… சென்னைல தான் இருக்கா!” என்றார்.
“ஹோ! அப்போ நீங்க பிசினஸ் விஷயமா வந்தீங்களா?”
நெடிய மூச்செடுத்தவர், “இல்லடா! அண்ணன் விசயமா வந்தேன்!” என்றார். தந்தையை கண்டதும் வந்திருந்த மலர்ச்சி, இப்போது அப்படியே மாறிப்போனது.
அடுத்து அவரிடம் எதையும் கேட்காது அவள் நிற்க, அவரே “மும்பைல ஒரு டாக்டர் இருக்குறதா கேள்விப்பட்டேன்! நல்லா பார்ப்பாராம்! அதான் ஒரு கன்சல்டேஷன் எடுக்கலாம்ன்னு அண்ணனை கூட்டிட்டு வந்தேன்!” என்று சொன்னார்.
“அண்ணன் எங்கப்பா?”
“அவன் இங்க வரலடா! ரூம்ல இருக்கான்! எவ்வளவோ கூப்பிட்டு பார்த்தேன்! நீங்க போயிட்டு வாங்கன்னு சொல்லிட்டான்! சங்கடப்படுறான் வெளில வரவே!” என்றவரின் குரலில் வருத்தமே மிதமிஞ்சி இருந்தது.
தன்யாவின் தோழிகள் அவ்விடம் வந்ததும், பேச்சு திசை மாறியது. சிறிது நேரம் அவர்களுடன் மகிழ்ச்சியாய் பேசிக்கொண்டிருந்தவர் கிளம்புவதாய் சொல்லி விடைப்பெற்று சென்றார்.
[the_ad id=”6605″]
முன்வோ ஆதியால் வருத்தம், இப்போதோ அண்ணனின் நினைவால் வருத்தம், என தன்யாவின் வாடிய முகமே தொடர, “உனக்கு ஹோம் சிக்’ன்னு தான் நினைச்சோம், இப்போ உன் டேடியை பார்த்துட்டும் கூட நீ வருத்தாமாவே இருக்க? என்னதான் உன் ப்ராப்ளெம்?” அம்ருதா கேட்கையில், தன்யா பதில் சொல்லும் முன், அவர்கள் அருகே வந்து நின்று பளீரென புன்னகைத்தான் ஆதித்யா.
அவன், “ஹாய் கேர்ல்ஸ்” என பொதுவாய் சொன்னாலும் பார்வை தன்யாவிடமே இருந்தது.
அவனே தங்களிடம் வந்து ‘ஹாய்’ சொன்னதில் பரவசமான பெண்கள் பதிலுக்கு அவனை விட அதிகமாய் சிரித்து, ‘ஹாய்’ என கையசைக்க, தன்யாவுக்கு அவனை கண்டதும் தன்னால் ஒரு மலர்ச்சி எழுந்தாலும், வேண்டுமென்றே கோவம் போல முகத்தை திருப்பிக்கொண்டாள்.
“சீனியர் ஜி! அன்னைக்கு நீங்க ரொம்ப சூப்பரா பாடுனீங்க! லிரிக்ஸ் புரியல, பட் வீ லவ் தட் சாங்! எஸ்ஸ்பெஷலி இன் யுவர் வாய்ஸ்!”
அவர்கள் புகழ்ந்து சொல்ல, சிறு புன்னகையுடன் தலையசைத்து அதை ஏற்றவன், பார்வையை தன்யாவிடம் இருந்து மாற்றாது, “வாட் ஸ் ஈட்டிங் யூ?” என்றான்.
பெண்கள் மூவரும் ‘ங்கே’ என விழிக்க, கேள்வி தன்னிடம் தான் என தெரிந்த தன்யா, தன் முகம் வாட்டம் கூட அவனுக்கு தெரிகிறதே! என்ற உவகை உள்ளூர தோன்ற, “ஒன்னும் இல்லையே” என்றாள்.
“ப்ச்! இல்ல, உன் முகமே சரியில்ல! வந்தது யாரு? உன் அப்பா வா?”
“ம்ம்ம்”
“எதுவும் ப்ராப்ளமா?” அவன் கேட்டதும் தான் அண்ணனின் நிலை அவளுக்கு பூதாகரமாய் எழுந்து நின்று வாட்டம் கொடுக்க, “ம்ம்ம்” என்றாள்.
“சரி, இன்னைக்கு எவனிங் க்ரவுண்ட் வந்துடு!” என அவன் சொல்ல, “எதுக்கு? உங்களுக்கு தான் சிங்கிங் ப்ராக்டிஸ் இருக்குமே! உங்களை சுத்தி நூறு பேரு இருப்பாங்க! நான் எதுக்கு?” என முறுக்கிகொண்டாள் தன்யா.
அவள் கோபப்படுவதை விநோதமாய் பார்த்த ஆதி, “சீனியர் சொல்றேன்ல!? ஒழுங்கா வா” என்றான் மிரட்டல் போல…
“சீனியர் சொல்ற எல்லாத்தையும் கேட்கணும்ன்னு அவசியம் இல்லன்னு ஒரு சூப்பர் சீனியர் எனக்கு அட்வைஸ் பண்ணிருக்காரு” என சிரிப்பை அடக்கி தன்யா சொல்ல, உதடு கடித்து கண்கள் சிரிக்க அவளை ‘அப்படியா?’ என்ற பார்வை பார்த்தான் ஆதி.
இருவரும் பேசிக்கொண்டிருக்க, பேசுவது புரியாவிடினும், ஏதோ பலநாள் பழக்கம் போல அவர்கள் உரையாடுவதை கண்ட தோழிகள், “இங்க என்னடி நடக்குது?” என தங்களுக்குள் அதிசயித்துக்கொண்டனர்.
“எவனிங் வர்…ர…” என அழுத்தி சொன்ன ஆதி, உடனே அங்கிருந்து சென்றுவிட்டான். செல்பவனை திரும்பி பார்த்துக்கொண்டே தன்யா நிற்க, “ஹே! வாட்ஸ் ஹேப்பனிங்? அவர் என்ன ரொம்ப பழக்கமான மாறி பேசுறாரு உன்கிட்ட?” என தோழிகள் அவளை மொய்க்க, செல்பவன் ஒரு நொடி தன்னை திரும்பி பார்க்க மாட்டானா என ஆசையாய் அவன் போகும் வழியையே பார்த்தபடி நின்றாள் தன்யா.
“ஏய் சொல்லு! எங்களுக்கு ஒரே குழப்பமா இருக்கு!!!”
“சொல்லு தன்யா ப்ளீஸ்”
அவர்கள் அவளை உலுக்கிக்கொண்டிருக்க, தூரத்தில் சென்ற ஆதி, இவள் பக்கம் திரும்பி மிக மெலிதாய் புன்னகித்ததும் தான் தன்யா என்ற சிலை பேருவகையுடன் நடப்புக்கு வந்தது. அவள் முகத்தில் அது வெட்கமா? இல்ல வேறெதுவுமா? என சந்தேகம் கொள்ளும்படியான மென்னகை.
அவளை இப்போது நன்றாகவே அவர்கள் உலுக்க, தன் மோனநிலையை அவர்கள் கெடுப்பதில் கடுப்பானவள், “என்னடி வேணும் உங்களுக்கு?” என கத்தவே, “அவருக்கும் உனக்கும் என்ன லிங்க்?” என்றாள் தீப்தி.
முதலில் சொல்ல தயங்கியவள் அவர்களின் தொடர் மிரட்டலில் வேறுவழியின்றி அவர்களிடம் பொய் சொல்லிவிட்டு தினம் ஆதியை சந்திக்க சென்ற கதையை சொல்ல, “அப்போ தினம் நீ தொலைச்ச நோட்டு, புக்கு, பேனா, ஐ.டி கார்ட் எல்லாம் சீனியரை தேடி தான் போயிருக்கா?” என்றாள் நவ்யா.
அவர்கள் முகத்தை நேர்க்கொண்டு பார்க்க முடியாதபடி ஓர் உணர்வு எழ, “ம்ம்ம்…” என தலைகுனிந்தவளின் தாடையை பிடித்து நிமிர்த்திய அம்ருதா, “ஹேய்! ஆர் யூ இன் லவ் வித் ஹிம்?” என்றாள் நேராக.
“லவ்வா?” என வியந்த தன்யா உடனே, “லவ்வ்வ்….??? தெரியல! பட் பிடிச்சுருக்கு!” என்றாள் கன்னங்கள் செம்மையுற.
நவ்யா, “பிடிச்சுருக்குன்னாலே லவ் தானே?”
“தெரியலையே!”
அம்ருதா, “லவ் இல்லன்னா எங்கக்கிட்டையே பொய் சொல்லிட்டு எதுக்கு அவரை பார்க்க போன நீ?”
“தெரியலையே!”
தீப்தி, “சீனியருக்கு உன்மேல லவ் இருக்கா?”
[the_ad id=”6605″]
“தெரியலையே!”
அம்ருதா, “அதெல்லாம் இருக்கும்! நம்ம தன்யாவை அவருக்கு பிடிக்காம போய்டுமா?” என்றவள், “நீ சீக்கிரமா ப்ரொபோஸ் பண்ணிடு தன்யா… ஆல்ரெடி நிறைய பொண்ணுங்க அவர்கிட்ட வழிஞ்சுட்டு இருக்கு!” என சொல்ல,
வழமைப்போல, “தெரியலையே!” என சொன்னவளை, “ஏய்……!!!!!!!” என ரவுண்டு கட்டி முறைத்தனர் பெண்கள்.
அம்ருதா, “எவனிங் உன்னை வர சொல்லிருக்காரு தானே? நீ உங்க லவ்வை டெவலப் பண்ற கேப்ல அப்டியே நம்ம தீப்தி பத்தி சொல்லி காம்பட்டீஷன்ல சேர்த்துக்க வச்சுடு!!!” என ஐடியா சொல்ல,
“ஹே, ச்ச ச்ச!!! அதெல்லாம் என்னால கேட்க முடியாது!!!” என மறுத்த தன்யாவை அடுத்த மூன்று மணி நேரங்களுக்கு கிடைத்த கேப்பில் எல்லாம் ஐஸ் வைத்து, கெஞ்சி, மிரட்டி, சரியென சொல்ல வைத்திருந்தனர்.
மாலை கல்லூரி முடிந்ததும் நண்பிகளின் கிண்டலில் இருந்து தப்பித்து புட்பால் கிரவுண்டை நோக்கி ஓட்டமும் நடையுமாய் சென்றாள் தன்யா.
இப்படி சந்தித்தே எத்தனை நாட்கள் ஆகிவிட்டன!? இன்று அவனே ‘வா’ என அழைத்திருக்க, அவள் கால்கள் தரையில் படாமல் பறந்தன.
அவளுக்கு முன்னே அந்த கல்பெஞ்சில் அமர்ந்திருந்தான் ஆதி!
மூச்சு வாங்க அவள் வந்து நின்றதும், “சீனியர் சொல்றதைக்கேட்க மாட்டோம்ன்னு யாரோ சொன்னாங்களே?” என நக்கல் செய்ய, வெட்கத்தோடு உதடு சுளித்தவள் அவன் சொல்லாமலே அவன் அருகே சின்ன இடைவெளிவிட்டு அமர்ந்துக்கொண்டாள்.
சிறு இடைவெளியை பெரிதாக்கி, அவளை நன்றாக பார்க்கும்படி நகர்ந்து அமர்ந்தவன், “சொல்லு! என்ன பிரச்சனை?” என்றான் தீவிரமான குரலில்.
அதுவரை அவன் மட்டுமே அவள் நினைவில் இருக்க, இப்போது அவன் ‘என்ன பிரச்சனை?’ என்றதும் தான் அவளது உள்ளூர வருத்தம் மேலெழுந்தது.
“யார்க்கிட்டயாவது ஷேர் பண்ணா மனசு ரிலேக்ஸா இருக்கும்! என்னால முடிஞ்ச ‘மாரல் சப்போர்ட்’ உனக்கு கிடைக்கும்ல! ஏன்னா நான் உன்னை விட ‘பிக் பாய்’!” என ஆதி சொல்ல, தன்னை மீறி புன்னகை சிந்தினாள் தன்யா.
அப்போதும் அவள் தயங்க, “நான் வீட்டுக்கு ரெண்டாவது பையன். அண்ணன் ஒருத்தன், தங்கச்சி ஒருத்தி! நான் அம்மாக்கு ரொம்ப செல்லம். அப்பாக்கு என் அண்ணா செல்லம்! தங்கச்சி, வீட்ல எல்லாருக்குமே செல்லம்!” என தன் சுயவிவரத்தை விவரிக்க ஆரம்பித்தான்.
“அப்பாக்கு என்னை திட்டினா தான் அந்த பொழுதே புல்பில் ஆகும், எனக்கும் அவரை ஏதாவது சொல்லலன்னா அந்த நாளே ஏதோ இன்கம்ப்லீட் ஆன மாதிரி இருக்கும்! அம்மா தான் எப்பவும் எங்க ரெண்டு பேருக்கும் நடுல ரெப்ரீ! ஆனா, தீர்ப்பு என்னவோ எனக்கு சாதகமா மட்டும் தான் வரும்” என அவன் சிரிக்க, அவளுக்குமே அவன் விவரங்களை தெரிந்துக்கொள்வது ஆர்வமாய் இருந்தது.
“தங்கச்சி இப்போதான் டுவல்த் படிக்குறா! கண்டிப்பா அவளும் இஞ்சினியரிங் தான் சேருவா! படிச்சு முடிச்சதும் ஒரு இளிச்சவாயா பார்த்து தேடனும் அவளுக்கு… பாவம் எங்க குடும்பத்துல வந்து சிக்கி, என்ன ஆகப்போறானோ?” என வீட்டின் வருங்கால மாப்பிள்ளையை நினைத்து அவன் வருத்தமாய் சொல்ல,
“நீங்க ரொம்ப வாலா? பார்த்தா அப்டி தெரியலையே?” என்றாள் தன்யா.
“நானும் என் அண்ணனும் கிட்டத்தட்ட ஒரேமாறி தான்! நான் வீட்ல பயங்கர வாலு, அதேசமயம் வெளில வந்துட்டா இடத்துக்கு ஏத்தமாறி மாறிப்பேன்! இதுனாலேயே வீட்ல எந்நேரமும் என்னால ஒரு பஞ்சாயத்து நடக்கும்” என்றவன்,
“என் அண்ணா வீட்டுக்கு சமத்துப்புள்ள. அப்பா பேச்சுக்கு மறுபேச்சு பேச மாட்டான். ‘வெள்ளைக்காக்கா வீட்டுக்கு வந்து வெள்ளரிக்கா’ குடுத்துச்சுன்னு எங்கப்பா சொன்னாக்கூட, ‘எத்தனை வெள்ளரிக்கா குடுத்துச்சுப்பா?’ன்னு கதை கேட்குற அளவுக்கு நல்லவனா ஸீன் போடுவான். ஆனா, வெளில அப்படியே ஆப்போசிட்! செம்ம அராத்து. அது எங்கப்பாக்கு தெரியாது! அவன்தான் உத்தமன்னு என்னை திட்டுவாரு!” என சொல்ல,
“அவர் இப்போ என்ன பண்றாரு சீனியர்?” என கதை கேட்டாள் தன்யா.
“கழுதை கெட்டா குட்டிசுவரு!”
“புரியலையே…”
“வேறென்ன? பி.இ தான்!!! இஞ்சினியரிங் முடிச்சுட்டு, கூடவே எம்.பி.ஏ வும் படிச்சுட்டு இப்போ அமெரிக்கா போய், கீபோர்ட்ல ஈ ஓட்டிட்டு இருக்கான்!” என சொல்ல, அவன் சொன்ன விதத்தில், ‘களுக்’ என சிரித்துவிட்டாள் தன்யா.
“அவன் சரியான ‘மண்டையாட்டி’… எதுக்குடா எனக்கு அண்ணனா இருக்கன்னு கடுப்பா இருக்கும்! இப்ப அவனால புது பிரச்சனை வேற!” என ‘திருமண’ பேச்சை நினைத்து ஆதி சொல்ல,
“என்ன பிரச்சனை?” என தன்யா கேட்டதும், “ம்ச்! அண்ணன் இருக்குறதே பிரச்சனை தானே? விடு” என்றான் சலிப்பாய்.
உடனே மறுப்பாய் தலையசைத்த தன்யா, “அண்ணன் இருக்கிறது பிரச்சனை இல்லை, ப்ளெஸ்ஸிங்! எனக்கு என் அண்ணனை ரொம்ப ரொம்ப பிடிக்கும் தெரியுமா?” என்றாள் கண்கள் மின்ன.
“பார்ரா! உனக்கு அண்ணன் இருக்கானா?” என ஆதி கேட்க, “ம்ம்ம்… சுரேந்தர்! அவன் எனக்கு அண்ணன் மட்டும் இல்ல, என்னோட பெஸ்…..ட் பிரண்ட் அவன்தான்! நான் எது செஞ்சாலும் அவன்க்கிட்ட சொல்லிட்டு தான் செய்வேன்! அவனுமே அப்டிதான்” என்றாள் உற்சாகமாய்.
“என்ன பண்றாரு அவரு?”
தன்யா, “ஆர்க்கிடெக்ச்சர் படிச்சான்… இப்போ வீட்ல தான் இருக்கான்!” என்றவளின் குரலில் சுருதி குறைந்து போனது.
பிரச்சனை அங்கே தானோ? என ஆதி யூகிக்க பெரிதாய் நேரம் எடுக்கவில்லை. மேற்கொண்டு அதை ஒட்டியே பேச்சை தொடர்ந்தான். அவள் கவலைகளை இவனிடம் எதற்க்காக அவள் பகிர்ந்துக்கொள்ள வேண்டும் என அவன் நினைக்கிறான் என அவனுக்கே புரியவில்லை.
“ஏன் வீட்ல இருக்காரு? வேலை எதுவும் கிடைக்கலையா?”
தன்யா, “நாங்களே பிசினஸ் பண்றோம்! சென்னைல ‘தன்யா பில்டர்ஸ்’ ரொம்ப பேமஸ்… தெரியுமா?” என அவள் சொன்ன விதத்தில், ‘என் அண்ணன் எதுக்கு வெளில வேலைக்கு போகணும்? நாங்களே பெரிய ஆளுங்க தான்’ என்ற அர்த்தம் ஒளிந்திருக்க, அதை புரிந்துக்கொண்டவன், ‘சரிதான்’ என நகைத்தபடி,
“அப்போ உன் அண்ணனுக்கு தான் வேலை செய்யவே இஷ்டம் இல்லையோ?” என்றான் ஆதி.
“அப்டி எல்லாம் இல்ல! அவனுக்கு எங்க கம்பெனியை டேக் ஓவர் பண்ணணும், நிறைய ப்ரோஜெக்ட்ஸ் ரிலீஸ் பண்ணணும்ன்னு ரொம்ப ஆசை இருந்துச்சு! ஆனா, கொஞ்ச நாள் முன்னாடி நடந்த ஒரு ஆக்ஸிடென்ட், அவனை இப்படி வீட்ல உட்கார வச்சுடுச்சு!!!”
ஆதி எதுவும் பேசாமல் அவளே சொல்லட்டும் எனும்படி அமைதியாய் இருந்தான்.
“கிட்டத்தட்ட மூணு வருஷம் ஆச்சு இது நடந்து! அண்ணாக்கு கிரிக்கெட்ல ரொம்ப இன்ட்ரஸ்ட்! காலேஜ் டீம்ல இருந்தான். அவன் பைனல் இயர் படிக்குறப்போ ஒரு பெரிய ‘ஸ்போர்ட்ஸ் ஈவன்ட்’ வந்துச்சு! அதுக்காக காலேஜ் டீமோட கோயம்பத்தூர் போயிருந்தான்! அங்க தான் அவனுக்கு அந்த ஆக்ஸிடென்ட் ஆச்சு” என்றாள் தன்யா.
அடுத்து பேச, அவள் சில நொடிகளை தாராளாமாய் எடுத்துக்கொள்ள, அவளுக்கு நேரம் கொடுத்து பொறுமையாய் அமர்ந்திருந்தான் ஆதி.
[the_ad id=”6605″]
அவளே தொடர்ந்தாள்…
“என் அண்ணா டீம் வரிசையா வின் பண்ணிட்டே இருந்துருக்காங்க! செமி பைனல் ஜெயிச்சு பைனல் ரவுண்டுக்கு அவங்க செலக்ட் ஆக, அவங்ககூட மோதி தோத்துப்போன வேற காலேஜ் டீமுக்கும் இவங்களுக்கும் சின்ன வாக்குவாதத்துல ஆரம்பிச்சது, பெரிய சண்டைல போய் முடிஞ்சுடுச்சு! அங்கிருந்த கமிட்டி மெம்பர்ஸ் ரெண்டு டீமுக்கும் வார்னிங் குடுத்து அனுப்பி வச்சுருக்காங்க!
ஆனாலும், அன்னைக்கு ஈவனிங் என் அண்ணா டீம் சும்மா இல்லாம, தோத்துப்போன டீம் ஆளுங்களை பார்த்து கிண்டல் பண்ண, சண்டை ரொம்ப பெருசாகி அடிதடி அளவுக்கு போய்டுச்சு! தடுக்க யாரும் இல்லாம, ஒருத்தருக்கொருத்தர் ரொம்ப அடிச்சுக்க, அதுல ஒருத்தன் என் அண்ணாவை ஸ்டெம்ப்பால அடிக்க வந்துருக்கான்!
அவன்க்கிட்ட இருந்த ஸ்டெம்பை வாங்கி உடைச்சு போட்ட சுரேன், திருப்பி அவனை அடிக்க போறப்போ கமிட்டி ஆளுங்க சரியா அங்க வந்துட்டாங்க! அவங்க வந்து மிரட்டுனதும் சண்டை கண்ட்ரோல் ஆனாலும், என் அண்ணனை அடிச்சவனுக்கு கோவம் போகல போல!
அவன் உடைச்சு போட்ட ஸ்டம்ப்பை எடுத்து என் அண்ணன் மேல கோவமா வீசிருக்கான். அந்த நேரம் பார்த்து என் அண்ணன் அவன் பக்கம் திரும்ப அந்த ஸ்டம்ப், அவனோட கண்ணுல பட்டுச்சு!” என்ற தன்யா கைகளால் முகத்தை மூடிக்கொண்டு அமர்ந்துவிட்டாள்.
ஆதிக்கு, இதில் என்ன இருக்கிறது? எப்போதும் எல்லா கல்லூரிகளிலும் பொதுவாய் நடப்பது தானே? சண்டைல கிழியாத சட்டை எங்க இருக்கு? என்ற எண்ணத்தில் இருக்க, “சுரேனால கண்ணே திறக்க முடியல! அந்த உடைஞ்ச ஸ்டெம்ப்ல இருந்த மரத்துகள் அவன் கண்ணுல விழுந்துடுச்சுன்னு நினைச்சு, ரொம்ப நேரம் வலியை பொறுத்துக்கிட்டு இருந்துருக்கான்! ஆனாலும் அதுக்கு மேல முடியாம போக, அன்னைக்கு நைட்டே பக்கத்துல இருக்க ஹாஸ்பிடல்ல போய் காட்டினதுக்கு, ‘ஒன்னும் பெருசா இல்ல, ட்ராப்ஸ் போடுங்க’ன்னு சொல்லிட்டாங்க” என்றாள்.
“அவனால பைனல் மேட்ச் விளையாட முடியல! கண்ணு ரொம்ப தொந்தரவா இருந்துச்சுன்னு சென்னை கிளம்பி வந்துட்டான்! இங்க வந்த பிறகு ஒரு ‘ஐ’ டாக்டரை கன்சல்ட் பண்ணும்போது தான் தெரிஞ்சுது, அவன் கருவிழிக்குள்ள ஒரு சின்ன ‘முடியளவு’ மரக்குச்சி குத்திருக்குன்னு! உடனே வந்துருந்தா ஈசியா எடுத்திருக்கலாம், இப்போ ‘இட்ஸ் டூ லேட்’ ஆப்பரேட் பண்ணித்தான் ஆகணும்ன்னு சொல்லிட்டாங்க! இப்படியே கவனிக்காம விட்டுருந்தா பார்வையே கூட போயிருக்கும்ன்னு அவர் சொன்னப்போ தான் எங்களுக்கு பயமே வந்துச்சு!!!”
“உடனே அவனுக்கு ஆப்ரேஷன் ரெடி பண்ணாங்க! பார்வைக்கு எந்த பாதிப்பும் இல்லாம உள்ளே சிக்கியிருந்ததை எடுத்துட்டாங்க! ஆனா, ரெண்டு நாளுக்கு பிறகு கண் கட்டை பிரிச்சப்போ தான் தெரிஞ்சுது! அவன் கருவிழி வித்தியாசமா இருக்குன்னு!!!”
“அவனோட ஒரு கருவிழி நேரே பார்க்க, ஆப்பரேட் பண்ணுன கண்ணோட கருவிழி வேற பக்கம் பார்த்துச்சு!” என அவள் சொன்னபோது,
“யூ மீன்?” என இழுத்த ஆதி, “மாறு கண்….” என தயங்கி தயங்கி சொல்ல, “யெஸ்” என்றாள் தன்யா.
அவள் ‘ஆம்’ என்றதும், “அட லூசு! நீ குடுத்த பில்டப்புக்கு நான் ரொம்ப பெருசா எதிர்ப்பார்த்தேன்! இந்த ‘கிராஸ்ட் ஐ’ எல்லாம் ஒரு வியாதியே இல்லை! முறையா எக்ஸ்சர்சைஸ் பண்ணா வித்தின் டூ மந்த்ஸ், இட் கேன் பி க்யூர்ட்! இதுக்கா உன் அண்ணன் மூணு வருஷமா வீட்ல இருக்கான்?” என ஆச்சர்யமாய் வினவினான் ஆதி.
வருத்தமாய் உதடு சுளித்தவள், “நாங்க இப்போ வரைக்கும் எத்தனை டாக்டர்ஸ கன்சல்ட் பண்ணிருப்போன்னு கணக்கே இல்லை! இன்னைக்கு கூட ஒரு டாக்டரை பார்க்க தான் அப்பா மும்பை வந்துருக்காரு! ஆனா, எல்லாருமே ஒரே விஷயம் தான் சொல்றாங்க! பிறவிலேயே ‘மாறுகண்’ இருக்கவங்களுக்கு ட்ரீட்மென்ட் பண்றது ஈசி! இப்படி நடுல ஒரு விபத்துனால அதுக்கு எடுத்த ட்ரீட்மென்ட் மூலமா ‘கிராஸ்ட் ஐ’ ப்ரோப்ளம் வந்தவங்களுக்கு அதை குணப்படுத்துற பாசிபிளிட்டி பர்சென்டேஜ் ஒருத்தருக்கு ஒருத்தர் மாறுப்படும்ன்னு சொல்றாங்க…” என்றாள்.
ஆதி, “உங்க அண்ணாக்கு இதை சரி பண்றது கஷ்டம்ன்னு சொல்றாங்களா?”
“ம்ம்ம்!!! அவனுக்கு பார்வை, குறைப்பாடு இல்லாம நல்லவிதமா கிடைச்சதே பெரிய விஷயமாம்! ட்ரீட்மென்ட் கொஞ்சம் டிலே ஆகிருந்தா கூட கண்ணுல சீல் வைக்குற நிலைக்கு போயிருக்கும்ன்னு சொன்னாங்க! இருந்தாலும் முயற்சியை விடாம, கண் பயிற்சிகள் செஞ்சுட்டு தான் இருக்கான்” என்றாள் தன்யா.
ஆதிக்கு இது ஒன்றும் வீட்டிற்க்குள் முடங்கிக்கொள்ளும் அளவிற்கு பெரிய விஷயமாய் படவில்லை. வருத்தம் இருக்கத்தான் செய்யும்! பிறவிக்குறைபாடை விட, நடுவில் நிகழும் இதுபோன்ற சில அசம்பாவிதங்கள் தான் பெரிதாய் மனதளவில் ஒடிந்துப்போக செய்யும் என அவனுக்கு புரிந்தது. ஆயினும், மூணு வருடங்கள்?! இன்னுமா அதன் தாக்கம் அவனுக்கு போகவில்லை? என்ற சந்தேகம்!!!
ஆதி பேசும் முன் தன்யாவே ஆரம்பித்தாள்.
“இதோட போச்சேன்னு நாங்க மனசை தேத்திக்கும்போது தான் அடுத்தது ஒரு பிரச்சனை வந்தது!
அடிப்பட்ட அவன் கண்ணுக்கு கொஞ்சம் மேல புருவத்துக்கிட்ட சின்னதா சதை மாறி வளர ஆரம்பிச்சுது! ஆரம்பத்துல பெருசா நாங்க கண்டுக்கல! ஆனா, ஒரு மூணே மாசத்துல அது ஒரு இன்ச் அளவுக்கு பெருசா வளர்ந்து நின்னப்போ தான் ரொம்ப பயந்துட்டோம்!
டாக்டர் கிட்ட காட்டுனப்போ, அவருக்கே அது எதனால வருதுன்னு சரியா சொல்லத்தெரியல! அடிபட்டப்போ அந்த ஸ்டெம்ப்ல இருந்த ஏதோ ஒரு முள்ளோ, பூச்சியோ கூட இதுக்கு காரணமா இருக்கலாம், இல்லன்னா இது ஹார்மோன் குறைபாடா கூட இருக்கலாம்ன்னு அனுமானிச்சு சொன்னாங்க!
என்ன என்னவோ டெஸ்ட் எடுத்தும் அது எதனால வந்துச்சுங்குற காரணத்தை கண்டுப்பிடிக்க முடியல! ஆப்பரேட் செஞ்சு அந்த சதையை கட் பண்ணி எடுத்துடலாம்ன்னு முடிவு செஞ்சு அப்படியே பண்ணாங்க! ஆனா, அதுவும் ஒரு மாசம் கூட நீடிக்கல! முன்னாடி சதை வளர்ந்த இடத்துக்கு பக்கத்துலயே மறுபடி இன்னொரு கட்டி வர ஆரம்பிச்சுது!!!” என்றாள்.
ஆதிக்கு ‘இது என்னடா புதுசு புதுசா சொல்றா?’ என்றே ஆச்சர்யமாய் தோன்றியது.
“கண்டுப்பிடிக்க முடியாத எத்தனையோ குறைபாடுகள்ள இதுவும் ஒன்னுன்னு சொல்லிட்டாங்க! எத்தனை முறை ஆப்பரேட் பண்ணாலும், சதை வளர்ந்துட்டே தான் இருக்கும், ஆனா, ஒரு இன்ச்க்கு மேல அது பெருசாகல! ஒரு பக்க கண்ணே பார்க்குறதுக்கு விகாரமா போச்சு! புதுசா பார்க்குறவங்க கொஞ்சம் முகம் சுளிப்பாங்க! அந்த அளவுக்கு இருக்கும்!
ஏற்கனவே பழகுனவங்க அவனை ரொம்ப பரிதாபமா நலம் விசாரிக்குறமாறி, ஹர்ட் பண்ணுவாங்க! ஏற்கனவே ரொம்ப காம்ப்ளெக்ஸ்ல இருந்தவன், இதுல ரொம்ப அஃப்பெக்ட் ஆகிட்டான்! யாரையும் பார்க்காம, வீட்டுக்குள்ளையே இருந்தான்… அப்பா எவ்வளவோ சொல்லியும் அவன் ஆபிஸ் வரல… இப்போவரைக்கும் ஏதாவது ட்ரீட்மென்ட் இருக்குமான்னு பார்த்துட்டே தான் இருக்காங்க!” என்றாள்.
அத்தோடு முடிந்தது என அவன் நினைக்க, ‘இல்லை’ என்பதை போல மேலும் தொடர்ந்தாள் தன்யா.
“சுரேனுக்கு தான் என் பொண்ணு’ன்னு எங்க மாமா ஒருத்தர் சொல்லிட்டே இருப்பாரு! எங்க அப்பாக்கும் சொந்தத்துல பொண்ணெடுக்க விருப்பம் இருந்ததால ‘சரின்னு’ சொல்லிருந்தாரு! அண்ணாக்கு இப்படி ஆனதும், அவன் வீட்டுக்குள்ளயே இருக்கிறது பிடிக்காம, ஒரு கல்யாணம் செஞ்சு வச்சாலாவது அவன் மைன்ட் ப்ரீ ஆகும்ன்னு முடிவு செஞ்சு, அந்த மாமா கிட்ட பொண்ணு கேட்டாரு! மாமாவும் சந்தோசமா சரின்னு சொன்னவரு, அடுத்த முகூர்த்தத்துலையே சொந்தக்காரங்க முன்னாடி ஒரு நிச்சயம் செஞ்சுடலாம்ன்னு சொல்லி ஏற்ப்பாடு பண்ணாரு!”
“அண்ணனுக்கு இதுல விருப்பமே இல்லை. இப்போதைக்கு கல்யாணமே வேண்டாம்ன்னு தான் சொன்னான், அப்பா தான் கேட்கல!!” என்றவள், முகத்தை கைகளால் தேய்த்துக்கொண்டு, பேச்சை தொடர்ந்தாள்.
“நிட்சயத்தப்போ அந்த பொண்ணு அண்ணனை பார்த்து ஒரே கலாட்டா! பழைய போட்டோவை காட்டி ஏமாத்திட்டீங்க! கண்ணுல ஆப்பரேஷன் பண்ணிருக்குன்னு மட்டும் தானே சொன்னீங்க?ன்னு…!!! நாங்க எல்லாம் தான் சொன்னோம், பொண்ணோட அப்பா முழுசா சொல்லாம விட்டுட்டாரு போல! அத்தனை பேரு முன்னாடியும் ஒரே அசிங்கமா போச்சு அண்ணனுக்கு!
அதைவிட மோசம், எங்க கம்பெனிய சுரேன் பேருல எழுதி குடுத்தா என் பொண்ணை கட்டிக்குடுக்குறேன்னு அவர் பேரம் பேசினது! அது அவனுக்கு ரொம்ப அவமானமா இருந்துருக்கும்! ரொம்ப டென்ஷன் ஆகிட்டான்… எல்லாரையும் அங்கிருந்து போக சொல்லிட்டு, ‘கல்யாண பேச்சே யாரும் எடுக்க கூடாது’ன்னு சொன்னவன், இன்னமும் அப்டியே தான் இருக்கான்!” என்றாள்.
“இப்போ வீட்லயே இருந்து ஆபிஸ் வொர்க் முடிஞ்சவரை பார்ப்பான்! ரொம்ப அவசியம்ன்னா எங்கயாது வெளில போவான், அப்பவும் அவனுக்கு தெரிஞ்சவங்க யாராது பார்த்து பரிதாபமா பேசிட்டா அடுத்து ஒரு மாசத்துக்கு வீட்டை விட்டு வர மாட்டான்!” என வருத்ததுடன் முடித்தாள் தன்யா.
முழுதாய் கேட்டு முடித்த ஆதி, “ப்ரோப்ளம் அவருக்கு தானே? உங்களுக்கெல்லாம் இல்லையே?” என்றான் சந்தேகமாய்.
அவள் புரியாமல், “சீனியர்?” என கேட்க, “இப்படி நாலு பக்கத்துக்கு ப்ளாஷ் பேக் சொன்னியே! அதுல பாதியாவது உங்க அண்ணனுக்கு ஆறுதலா பேசிருக்கியா நீ?” என்றவன், “கண்டிப்பா பேசிருக்க மாட்ட! அவனோட சேர்ந்து நீயும் மூஞ்சை உம்முன்னு வச்சுட்டு தான் உட்காந்துருப்ப! நீ மட்டும் இல்ல! உன் அப்பா அம்மாவும் தான்” என்றான் சரியாய்.
“கண்டிப்பா யாருக்கா இருந்தாலும் இது ஸ்ட்ரெஸ் ஆகுற விஷயம் தான்! அதுக்காக அப்படியே வீட்டுக்குள்ள அடைஞ்சு கிடக்கட்டும்ன்னு விட்டுடுவீங்களா?” என்ற ஆதி, “முதல்ல அவரை பரிதாபமா பார்க்குறதை நீங்க நிறுத்துங்க! அதுவே அவரை சகஜமாக்கிடும்!” என்றான் சிறுது கோவத்துடன்.
“நாங்க அப்படி ஒன்னும்….” என மறுத்து சொல்ல வந்தவளை,
“அப்படி நாங்க பார்க்குறதில்லைன்னு பொய் சொல்லாத! ஊருல பல பேர் நல்லா இருந்த கை காலை கூட இழந்துட்டு தன்னம்பிக்கையோட வாழ்ந்துட்டு இருக்கான்! உன் அண்ணனுக்கு என்ன? அழகு தானே போச்சு? போனா போகட்டும்! அதுக்காக சீரியல் ஹீரோயின் மாறி அழுதுட்டு இருக்கனுமா?” என்றான்.
“பார்வை போகாம, அழகு மட்டும் போச்சேன்னு முதல்ல கடவுளுக்கு நன்றி சொல்ல சொல்லு உன் அண்ணனை! வீட்டுக்குள்ளையே ‘படையப்பா நீலாம்பரி’ மாறி தலை நறைக்குற வரைக்கும் உட்காந்துருக்காம, அடுத்து என்ன செய்யலாம், நம்ம தன்னம்பிக்கையை எப்படி வளர்த்துக்கலாம்ன்னு யோசிக்க சொல்லு!!!” என்ற ஆதி அங்கிருந்து எழுந்து,
“நீ சொல்லு, உன்னால முடியலன்னா, நான் சொல்றேன்” என்றவன், “உனக்கு லேட் ஆச்சு… ஹாஸ்டல் கிளம்பு, நானும் கிளம்புறேன்….” என அங்கிருந்து நகர்ந்தான்.
‘எவ்ளோ பெரிய விஷயம் சொல்லிருக்கேன், இப்படி ரெண்டே நிமிசத்துல அதை ‘சப்ப மேட்டர்’ங்குற மாறி முடிச்சுட்டு போறாரு’ என தன்யா சிந்தித்தபடி செல்பவனை பார்த்துக்கொண்டிருக்க, “சார்……சாஆர்ர்ர்….. சாஆர்ர்ர்ர்ர்ர்ர்” என்ற சத்தம் கோகுலின் காதை பிளந்தது.
எரிச்சலாய் திரும்பி, “என்னய்யா?” என அறை வாயிலில் நிற்ப்பவனிடம் அவன் கேட்க,
“ஆதி சாரை, எம்.டி உடனே வர சொன்னார் சார்” என்றான் அவன்.
கோகுல், “சரி போ!” என சொல்ல, “சார்….” என்றான் மீண்டும்.
பிளாஷ்பேக் தடைப்பட்ட கடுப்பு மேலும் ஏற, “என்னய்யா? ஆதி சாரை இடுப்புல தூக்கி வச்சுக்கிட்டு வான்னு சொன்னாரா?” என்றான் கோகுல்.
“ஐயோ, இல்ல சார்! எந்த வேலையா இருந்தாலும் பரவால்ல! உடனே வர சொல்லுன்னு சொன்னாரு சார்” என்றான் அவன்.
“சரிய்யா! கிளம்பு! வருவாரு” என அவனை துரத்தி விட்டு, ரோல்லிங் சேரில் ஆடிக்கொண்டு விட்டதை பார்த்தபடி கனவு லோகத்தில் இருந்த ஆதியை உலுக்கி, “உன்னை எம்.டி கூப்பிட்டாராம்!” என்றான் கோகுல்.
ஆதி, “யூ மீன், மை மாமனார்?” என எள்ளலாய் கேட்ட ஆதியை முறைத்து, “இன்னும் நீங்க ப்ரொபோஸ் பண்ண ஸீன் கூட வரலை, கேண்டீனு கல்பெஞ்சுன்னு மொக்க போட்டுட்டு இருக்கீங்க! இதுல ‘கதைக்குள் கதை’ன்னு உன் மச்சான் கதை வேற… நானே கடுப்புல இருக்கேன், பேசாம கிளம்பு” என்றான் கோகுல்.
“ஓகே ஓகே கூல் மச்சி! இப்ப நான் நேரா போறேன்! என் மாமனார் கிட்ட பொண்ணு கேட்குறேன்! என் தனுவை தூக்கிக்கிட்டு ஹனிமூன் போறேன்” என்ற ஆதி ஸ்டைலாய் சிகையை கலைத்துவிட்டு வீர நடைப்போட்டு இராஜகோபாலை பார்க்க செல்ல, அங்கே அவனுக்கு ‘ஷாக்’ கொடுக்க காத்திருந்தார் அவர்.